வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இரா.வில்வநாதன் - கா.வளர்மதி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (287)

பிப்ரவரி 16-28,2022

ஈரோடு சமூகநீதி இளைஞரணி மாநாடு

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி....


தென்சென்னை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவரும், சென்னை கு.இராமசாமி_ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.வில்வநாதனுக்கும், மு.காளியப்பன் _ ருக்மணி ஆகியோரின் செல்வி கா.வளர்மதிக்கும் 19.4.1998 அன்று மயிலையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவையொட்டி மண்டப பகுதி முழுவதும் கழகக் கொடி மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரை நிகழ்த்துகையில், “வில்வநாதன் அவர்கள் இந்த இயக்கத்தில் கட்டுப்பாடு மிக்க இராணுவத் தொண்டர் போல பணியாற்றக் கூடியவர், ‘அடக்கமானவர், அமைதியானவர்’. அந்தப் பெருமையின் காரணமாகத்தான் இந்த மணவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறினேன். மணவிழாவிற்கு சென்னையைச் சேர்ந்த பல்வேறு கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தஞ்சை மன்னார்குடி குமாரசாமி திருமண அரங்கில் 24.4.1998 அன்று இராயபுரம் திராவிடர் கழக இளைஞர் அணித் தோழர் இரா.சேதுராமனுக்கும், சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் வி.பியூலா சுகந்திக்கும் வாழ்க்கை ஒப்பந்த ஏற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். இவ்விழாவில் கனடா கேபோட் பல்கலைக்கழக பன்னாட்டுத் தொடர்பாளர் எலைன் ஹாட் கலந்துகொண்டு, பெரிதும் வியந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். விழாவில் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணங்களின் தேவையைப் பற்றி எடுத்துக் கூறி உரையாற்றினேன். பல்வேறு கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக