தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

வியாழன், 29 டிசம்பர், 2022

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம்



November 30, 2022 • Viduthalai

"சமூக நீதி - நேற்று, இன்று, நாளை"

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி  விளக்கவுரை

சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை சார்பில் 29.11.2022 அன்று கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. ‘சமூகநீதி - நேற்று, இன்று, நாளை' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். பொருளாதாரப் பேராசிரியர் மு.நாகநாதன், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் கோ.கருணாநிதி ஆகியோர் பங்கேற்று சமூகநீதி வரலாற்று கருத்துகளை வழங்கினர்.

-------------------
கருத்தரங்கில் தமிழர் தலைவருக்கு 
90ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து

கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்  - டிசம்பர் 2ஆம் நாள் என கருத்தரங்கினை ஏற்பாடு செய்த வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் அறிவித்ததும் கருத்தரங்கமே மகிழ்ச்சிப் பெருவெள்ளம் கண்டது. 
90 ஆண்டு வாழ்வில் தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையினை சமூகத்திற்கு, மனிதகுலத்திற்கு - ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு வழங்கிய தமிழர் தலைவருக்கு, வருகை தந்த பேராசிரியப் பெருமக்கள், கல்வியாளர்கள், சமூகநீதி செயல்பாட்டாளர்கள், மாணவ - மாணவியர் என அனைவரும் எழுந்து நின்று பெரும் கரவொலி எழுப்பி தங்களது வாழ்த்தினைத் தெரிவித்தனர். தமிழர் தலைவர் உரை வீச்சுக்குப் பின்னர் அரங்கமே கரவொலியில் எழுச்சி வெள்ளத்தில் திளைத்தது. ஒப்பில்லா சமுதாயப் பணியாற்றி வரும் தமிழர் தலைவருக்கு நன்றிப் பெருக்கினை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துகளை வெளிப்படுத்தி அனைவரும் மகிழ்ந்தனர்.
--------------

பல்கலைக்கழக குற்றவியல் துறை கருத்தரங்கக் கூடத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பல துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மேனாள் கல்விப் பணி ஆற்றிய அறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அளவில் பங்கேற்றுச் சமூகநீதிக் கருத்து உரை வெள்ளத்தில் தோய்ந்து மகிழ்ந்து நல் ஆக்கம் பெற்றனர்.

கருத்தரங்கிற்கு வருகை தந்தோரை வரவேற்று தனது முகப்புரையினை பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் வழங்கினார். 

பேராசிரியர் மு.நாகநாதன்


பொருளாதார வல்லுநரும், தமிழ்நாடு அரசின் திட்டக் குழு மேனாள் துணைத் தலைவருமான பேராசிரியர் மு.நாகநாதன் தமது உரையில் சமூக நீதி வரலாற்றுப் போரில நேர் கொண்ட அறைகூவல்கள், விளைவுகள், சமூகம் அடைந்த மேம்பாடு என பல செய்திகளை, பல தரவுகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் வழங்கப்பட்ட வகுப்புரிமை ஆணை செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய நிலையில், தந்தை பெரியார் மக்கள் மன்றத்தில் வகுப்புரிமை தொடர்வதற்குப்  அனைவரையும் ஒன்று திரட்டி, ஒருங்கிணைத்து பெரும் போராட்டத்தினை நடத்தினார். டில்லி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து, முதல் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு புதிய விதி 15(4) சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழிமுறை தொடர்ந்திடச் செய்தார். இதுகுறித்த முழுமையான வரலாற்றுச் செய்திகளை பொதுவெளியில் சமூகநீதியால் பயன்பெறுபவர்கள் கூட அறிந்திடாத நிலைமைகள் நிலவுகின்றன.

சிள்தன் சந்திரசூட் எழுதிய "The Cases that India forgot"  (இந்தியா மறந்துவிட்ட நீதிமன்ற வழக்குகள்) எனும் நூலில் அரிய பல செய்திகள் உள்ளன.

கடந்த கால சமூகநீதி வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டால்தான் வருங்கால அறைகூவல்களை நேர்கொண்டு இடஒதுக்கீடு தொடர்ந்திட, உரியவர்க ளுக்கு சமூகநீதி கிடைத்திட வழி ஏற்படும்.

சமூக நீதி எதிர்ப்பாளர்கள் விழிப்பாக உள்ளனர், சமூக நீதியால் பயன்பெறுபவர்களைவிட, சமூக நீதி பற்றிய சரியான புரிதலை உரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். திரிபுவாத, திசை திருப்பல் நடவடிக்கைகளை அப்பொழுதுதான் முறியடிக்க முடியும்.

இடஒதுக்கீடு மக்களை பிளவுபடுத்துவதாக எதிர்ப் பாளர்கள் பேசி வருகின்றனர். ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தியவர்களால் உருவாக்கப்பட்ட ஏற்றத் தாழ்வு களை, பாகுபாட்டினை போக்குவதற்குத்தான் "இடஒதுக் கீடு" தொடர வேண்டும் என்பது பரவலாக அறியப்பட வேண்டும்‘ இது பற்றிய கருத்துப் பரவலை சமூக அறிஞர்கள் பலர் எளிதாக எடுத்துரைத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த் தியா சென், இடஒதுக்கீடு பற்றிய புரிதலை, விளக்கத்தினை எளிதாகக் கூறுகிறார். அனைவருக்கும் விளங்கிடும் வகையில் கூறுகிறார். 

"இடஒதுக்கீட்டை ஓடும் நதியில் உள்ள ஒரு வளைவை மட்டும் வைத்து புரிந்து கொள்ளக்கூடாது. நதியின் தொடக்கம் முதல், கடலில் கலக்கும் வரை உள்ள நதியின் போக்கு - பலவித நிலைகளைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்".

கோ.கருணாநிதி

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தமது உரையில் நாடு தழுவிய அளவில் சமூக நீதி வளர்ச்சி பெற்ற நிலைகளை எடுத்துரைத்தார்.

1800களின் மத்தியில் மராட்டிய மாநிலத்தில் ஜோதிபா பூலே சமூகநீதிக்கு அழுத்தமான குரல் எழுப்பி, களம் இறங்கிச் செயல்பட்டார். சமூகத்தின் பல்வேறு எதிர்ப்பு களைச் சந்தித்து பெண்கள் கல்வி கற்க தனிப்பள்ளிக் கூடங்களைத் தொடங்கியவர். தனது மனைவி சாவித் திரிபா பூலே அவர்களுக்கு கற்பித்து அவரையே ஆசிரி யராகக் கொண்டு பெண்கல்விக்கு புரட்சி கண்டார்.

1902அம் ஆண்டில் மராட்டிய மாநில கோல்காபூர் சமஸ்தானத்தில் மன்னர் சத்ரபதி சாகுமகாராஜ் சமூகநீதி பற்றிய முதல் அரசாணையை வெளியிட்டார். அரசுப் பணிகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு வழங்கிய முதல் சமூகநீதிப் போராளி சாகுமகாரஜ் ஆவார்.

1918இல் மைசூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்கு, சமூகநீதி கிடைக்க மில்லர் குழு முன்மாதிரியாக அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரத் தொடங்கின.

பிரிட்டிஷ் ஆட்சியில் அலெக்சாண்டர் கார்டியூ மக்கள் தொகை கணக்கு பற்றிய தனது அறிக்கையில் சென்னை மாகாணத்தில் பெரும்பாலான அரசுப் பணி களில் பார்ப்பனர்களே உள்ளனர்; ஒரே குடும்பத்தைச் சார்ந்தோரே உள்ளனர். அனைவருக்கும் - அனைத்துப் பிரிவினருக்கும் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தார்.

அவர்தம் பரிந்துரைகளை உள்வாங்கி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் 1920இல் ஆட்சிக்கு வந்து, 1921லும், 1922லும் வகுப்புரிமைக்கான ஆணைகளைப் பிறப்பித்தது, ஆனால் ஆணைகள் நடைமுறைக்கு வராமல் ஆதிக்க வாதிகள் முட்டுக்கட்டையாக இருந்த னர். பின்னர் 1928ஆம் ஆண்டில்தான் வகுப்புரிமை ஆணை நடை முறைக்கு வந்தது. அன்று முதல் நடைமுறையில் இருந்த ஆணை, 1950ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, ‘வகுப்புரிமை ஆணை செல்லாது' என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. தந்தை பெரியார் மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தினை நடத்தி அரசமைப்புச் சட்டத்தினை திருத்த வைத்து சமூகநீதி - இடஒதுக்கீடு தொடர்ந்திட காரணமாக இருந்தார்.

பின்னர் படிப்படியாக இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டு மொத்த இடஒதுக்கீடு 69 விழுக்காடு என வந்த நிலையில் - அதற்கு ஆபத்து வந்த நிலையில் அதனைப் பாதுகாக்க உரிய ஆலோசனை சட்ட வடிவினை வழங்கி, முதன்முறையில் சட்டம் இயற்றி, அரசமைப்புச் சட்டத்தினை திருத்தி, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார்.

1992 மய்ய அரசிலே பிற்படுத்தப்பட்டவர் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மண்டல் பரிந்துரை மூலம் நடைமுறையானது. 

2006ஆம் ஆண்டு மத்திய பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு என அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் 9 விழுக்காடு என மூன்று ஆண்டு களில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய இடஒதுக்கீடு 5, 6 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

ஆனால் 2019ஆம் ஆண்டில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த உயர் ஜாதியினரில் ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு, ஒரு வார காலத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலை வர் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப் பட்டது. நடைமுறைக்கும் வந்தது.

அதுவரை இடஒதுக்கீடு நடைமுறைக்கு இருந்த வந்த தடைக் கற்கள், 10 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு இல்லாத நிலை சமூகநீதியின் உண்மையான புரிதலை மடை மாற்றும் விதமாக உள்ளதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நேற்றைய வரலாற்றை உணர்ந்ததால்தான் வருங்கால சமூகநீதிப் பயணம் சரியாக இருக்க முடியும். சமூக நீதியில் பயன்பெறுவோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தமிழர் தலைவர்

கருத்தரங்கில் நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எளிமையாக மாணவ - மாணவியர் சமூகநீதிக் கருத்துகளை புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுப்பது போல விளக்கமளித்துப் பேசினார். கருத்துகளை எளிமைப்படுத்திச் சொல்வது கடினமானது. எளிமைப்படுத்திச் சொல்லும் கடினக் கலையில் வல்லவரான ஆசிரியர் அவர்கள் மாணவ மாணவியரை கேள்வி கேட்டு பதில் பெற்று கருத்து வழங்கிடும் வகையில் உரையாற்றினார்.

தொடக்கத்தில், தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்ட மாணவனாக பயின்ற காலத்தில் தேர்வில் முதல் இடம் பெற்று சர் வில்லியம் மெயர் அறக்கட்டளை வழங்கிய தங்கப்பதக் கத்தை பெற்றதை நினைவு கூர்ந்தார். அவர் பெயரிலான சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை கருத்தரங்கில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சியான தருணம் - பெருமையாகக் கருதுகிறேன்.

இதே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு போராடிய ஆசிரியப் பெருமக்களிடம் நான் ஆற்றிய உரையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகநீதி பற்றி ஆற்றிய உரையும் சேர்த்து ‘சமூகநீதி‘ எனும் தலைப்பில் புத்தகமாக வெளி வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு சமூகநீதி பற்றிய கூட்டத்தில் பங்கேற்க  நேர்ந்தது. அதில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும் பங்கேற்று உரையாற்றினார். அந்த நீதிபதி இடஒதுக்கீடு வழங்கிட பொருளாதார அளவு கோல் கூடாதென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தவர். அவர் உரை யாற்றும் பொழுது தன்னிடம் இடஒதுக்கீடு வழக்கு விசா ரித்திட வந்த நிலையில் சமூகநீதி பற்றிய முழுமையான புரிதலை தான் அறிந்து கொள்ள கி.வீரமணி எழுதிய ‘சமூகநீதி‘ புத்தகம் பெரிதும் உதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார். இன்று கூட நானும் கருத்தரங்கில் அறிஞர்கள் ஆற்றிய உரைகளும் புத்தகமாக வெளிவந்து பலரும் படித்துப் பயன் பெற விரும்புகிறேன்.

இப்படியாகக் கூறி தமிழர் தலைவர் மாணவ மாணவி யரைப் பார்த்து "உங்களில் எத்தனைக் குடும்பத்தில் தாத்தாமார்கள் பட்டதாரியாக இருந்தனர்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

5 பேர் கை உயர்த்தினர். பின்னர் "எத்தனை குடும்ப பாட்டிமார்கள் பட்டதாரிகள்?" என்றபொழுது ஒருவர் மட்டும் கை தூக்கினார்.

இன்று நீங்கள் பட்டப்படிப்பு, முதுநிலை படிக்க வந்துள்ளீர்கள். இதுதான் சமூகநீதி நேற்று - இன்று என்பது கல்விக்கு கடவுளான சரஸ்வதியின் பெயரைக் கொண்ட பல பாட்டிமார்கள் எழுதப் படிக்கத் தெரியாத வர்களாக இருந்தனர் என்பதுதான் கடந்த கால நிலை. கல்வி கற்காமல் தடுத்தது எது? இதுதான் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.

தான் சொல்லிக் கொடுக்காமலே வில்வித்தையை கற்றுக் கொண்ட நிபுணத்துவம் பெற்ற ஏகலைவனிடம் "குருதட்சணை" அவனது கட்டை விரலைக் கேட்ட துரோணாச்சாரியார் இன்றும் பெருமையாகக் கருதப்படு கின்றார்.  விளையாட்டுக் கலை கற்பித்தலில் சிறந்தோ ருக்கு "துரோணாச்சாரியார் விருது" பல ஆண்டுகாலமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விருது வழங் கப்படலாம். விருதின் பெயர் சமூகநீதியைச் சிதைக்கும் வெளிப்பாடுதான்.

இளைய தலைமுறையினர் சமூக நீதி பற்றிய உரிய கருத்ததுகளை அறிந்து கொள்ள முன் வர வேண்டும். 

தொடர்ந்து, கல்விக்கென போராடி ஒடுக்கப்பட்ட வர்களுக்கான சமூகநீதியினை இடஒதுக்கீடு அளவு உயர்வின் மூலம் பெற்று வந்துள்ளோம். அதன் நடை முறை இன்னும் முழுமையாகவில்லை. ஆனால் சமூக நிதியின் முறையான பயணத்தை திசை திருப்பிடும் வகையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடஒதுக்கீடு சமூகநீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய வர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. பொருளாதார அளவு கோள் கூடாது. துணிக் கடையில் வேண்டப்படும் துணியின் அளவினை உலோக, மர அளவுகோலால் அளந்து வாங்க வேண்டும்; விற்க வேண்டும். ரப்பர் அளவுகோல் பயன்படுத்தினால் சரியாக இருக்காது. ரப்பர் அளவு நிலையானது அல்லவே. நிலையில்லாத பொருளாதார அளவுகோல் கொண்டு சமூகத்தில் நிலைத் திருக்கும் ஏற்றத் தாழ்வுகளை அளந்திட வேண்டும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.9000 என உத்தரவு பிறப் பித்தார். அதனை எதிர்த்து ஒராண்டு காலம் போராட்டம் நடத்தினோம். அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை அவரது கட்சி தழுவியது. அனைத்துக் கட்சியைக் கூட்டினார். அதில் பங்கேற்றிட திராவிடர் கழகத்திற்கு அழைப்பு வந்தது. கூட்டத்தில் முதல்வர் தொடர்ந்து எதிர்த்து வரும் கி.வீரமணி அவர்கள் பேசட்டும் என கூறினார். புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அறிக்கையும் கொடுத்தோம். கூட்டத்தில் விளக்கமும் அளித்தோம். வருமான வரம்பு எனும் பொருளாதார அளவீடு சமூக நீதிக்கு எதிரானது. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு - அதாவது வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற வந்ததே இடஒதுக்கீடு வழி முறை. பொருளாதார நிலை என்பது நிலையில்லாதது எனக் கூறி ஓர் எடுத்துக்காட்டைச் சுட்டிக் காட்டினோம்.

அரசு பணிபுரியும் ஒருவர் செங்கல்பட்டு அல்லது அடுத்த கிராமத்தில் பணிபுரியும் பொழுது வீட்டு வாடகை படி குறைவு. ஒட்டுமொத்தமாக ஆண்டு வருமானம் ரூ.9000க்குள் வரும். அவரது ஒரு பிள்ளைக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். அதே பணியாளர் சென்னைக்கு மாற்றலாகி வந்தால் வீட்டு வருமானப்படி, நகர குடியிருப்புப் படி என கூடுதலாக வருமானம் கிடைத்து ஆண்டு வருமானம் ரூ.9000க்கு மேலே அதிகரிக்கக் கூடும். சென்னைக்கு பணி மாறுதலில் வந்த பணியாளர் தனது அடுத்த பிள்ளைக்கு இடஒதுக்கீட்டுப் பலன் மறுக்கப்படுவார். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு இடஒதுக்கீடு, சில காலம் கழித்து அடுத்தவருக்கு இடஒதுக்கீடு மறுப்பது. இது நியாயமா? பொருளாதார அளவு கோலை இடஒதுக்கீடடில் திணித்ததால் விளை வது அநியாயமல்லவா? இடஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு சரியாகாது. நாம் சொன்னதும் ‘பளிச்‘ என்று எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். ஒரு சில நாள்களில் இடஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு ஆணை திரும்பப் பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 31 லிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பொருளாதார அளவுகோலிலான இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு விரைவில் மக்கள் மன்றத்தில் தனிக் கவனத்துடன் எடுத்துச் செல்லப்படும். சமூகநீதிப் பயணத்தைத் திசை திருப்பிடும் வேலைகள் முறியடிக்கப்படும். அத்தகைய சவால்களை இளைய தலைமுறை சந்திக்க வேண்டும். பாடுபட வேண்டும். சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார். (முழுப் பேச்சு விரைவில் ‘விடுதலை'யில் வெளிவரும்).

கருத்தரங்கின் நடவடிக்கைகளை பேராசிரியர் தினேஷ் வெகு நேர்த்தியாக தொகுத்தளித்தார். நிறை வாக பேராசிரியர் லட்சமணன் நன்றி கூறினார்.

கருத்தரங்க நிகழ்விற்கு, தமிழ்நாடு மாநில தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினர் குழுவின் உறுப்பினர் முனை வர் ச.தேவதாஸ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமைப் பேராசிரியர் பெ.ஜெகதீசன், செயலாளர் அ.கருணானந்தன், திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகத் தோழர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்வியா ளர்கள், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலக் கூட்டமைப்பின் தோழர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் - செயல்பாட்டாளர்கள் மாணவப் பெருந்திரள் என பலரும் வருகை தந்திருந்தனர். கருத்தரங்க நிகழ்வு சமூகநீதி பற்றிய கருத்து விருந்தாக, கருத்துக் களஞ்சிய விளக்கமாக சிறப்பாக நடந்தேறியது.

- தொகுப்பு: வீ.குமரேசன்



இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:09 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சமூக நீதி, சென்னை பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ▼  டிசம்பர் (28)
      • கவிஞர் கண்மதியன் அன்னையார் மறைவு! கழகத் தலைவர் இறு...
      • சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் ச...
      • தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேர...
      • டிச. 24: தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் தமிழ்நா...
      • கழக மணம் வீசிய திருப்பத்தூர்!
      • தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் 'விடுதலை' சந்தா...
      • கழகப் பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா ரூ.1 லட்சம் ...
      • விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி ...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிற...
      • மயிலாப்பூர் திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப...
      • சென்னை மண்டலத்தில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம...
      • திசை' புத்தக நிலையம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழ...
      • சென்னை சூளைமேடு இரா.கோமளா (WCS) 17ஆம் ஆண்டு (8.12....
      • பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வ...
      • தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி...
      • தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - க...
      • தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - ...
      • தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வட...
      • அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்ப...
      • தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் பெர...
      • வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர்...
      • தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெர...
      • ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளி...
      • 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆச...
      • தமிழர் தலைவர் 90 வது பிறந்த நாள் விழாவில் சமூகநீதி...
      • சூளைமேடு கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.1...
      • ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுந...
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.