தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

சனி, 3 டிசம்பர், 2022

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை


கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
  December 02, 2022 • Viduthalai

 ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்?

அறவழிக் குரலுக்கு அனுமதி மறுத்தால் - ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் நிலை ஏற்படும்!

சென்னை, டிச.2 ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத் துக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்தால், அறவழியில் கருப்புக்கொடி காட்டும் நிலை உருவாகும் என்று எச் சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (1.12.2022) முற்பகல் 11 மணியளவில்  ஆன் லைன் ரம்மி சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே (கலைஞர் பொன்விழா வளைவு) நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட் டத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் 

இரா.வில்வநாதன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டப் பொறுப்பாளர்களே, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே-ஆளுநரு டைய அடாத செயலுக்குக் கண்டனம் தெரி விக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறப் போராளிகளாக நின்று கொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, ஊடகவியலாளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தினுடைய முக்கியத்துவம் என்பது முழுக்க முழுக்க நாளும் ஆன்லைன் சூதாட் டம் நாட்டில் பெருகி, அதன்மூலமாக தற்கொலைகள் ஏராளம் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டத்தால் 32 பேர் மரணம்

தமிழ்நாட்டின் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு காலாவதியாகிவிட்டது. நிரந்தர சட்டத்தை, சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அம்மசோதா ஆளுநருடைய ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தக் குறுகிய காலத்தில்கூட 32 பேர் பணம் இழந்த காரணத்திற்காக தற்கொலை செய்துகொண் டிருக்கிறார்கள்.

நேற்றுமுன்தினம்கூட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின; நேற்றுகூட ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீண்ட காலமாக இதனைத் தடை செய்திட ஒரு கோரிக்கை வைக்கப் படுகிறது; இந்த ஆன்லைன் சூதாட்டம் என்பது சட்டப்படி அனுமதிக்கப்படக் கூடாதது. அதனால், பல குடும்பங்கள் சீரழிக்கப்படுகின்றன. பல உயிர்கள் தற்கொலைக்கு  ஆளாகின்றன.

அ.தி.மு.க. - தி.மு.க. ஆட்சிக்காலத்தில்...

மனிதநேயமற்ற இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - சட்டப்படி என்கிற கோரிக்கை - அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே இந்தக் கோரிக்கை பலமாக வந்தபொழுது, திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள், ஏனைய பல்வேறு அரசியல் கட்சிகள், தி.மு.க. உள்பட எதிர்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தின.

ஆனால், அன்றைக்கு இருந்த ஆட்சி, ‘‘அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல்'' என்று சொல்வதுபோல, அவர்கள் நிறைவேற்றிய சட்டம் இருக்கிறதே, அந்த சட்டம் முழுக்க முழுக்க அவ சரத்திற்காக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தினாலே,  உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது.

அதற்குப் பிறகு, நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - திராவிடர் இயக்க நீதிக்கட்சியி னுடைய நீட்சியாக இருக்கக் கூடிய இன்றைய ஆட்சி,திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி -அதனுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர் களுடைய தலைமையில், கடந்த ஒன்றரை ஆண்டு களாக நடந்துகொண்டிருக்கின்றபோது, இந்தக் கோரிக்கை, மீண்டும் சரியானபடி, சட்டத்தினுடைய சந்து பொந்துகள் எல்லாம் அடைக்கப்பட்டு,முழுமை யாக ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் நிறை வேற்றப்படவேண்டும் என்று எல்லா தரப்புகளும் வலியுறுத்தியதற்கு ஏற்ப, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களுடைய தலைமையில், அய்ந்து பேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவும் மக்களையெல்லாம் விசாரித்து, அந்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சட்டப்படியாகவும், சமூகநீதிப்படியும் சொன்னார்களே, அவற்றையெல்லாம் களைந்து, ஒரு புதிய மசோதாவை உருவாக்கி, வேகமாக செய்துகொண்டிருந்த வேளையில்கூட, இடையில், பல உயிர்கள் பறிபோவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான், (அன்றைக்குச் சட்டமன்றம் நடைமுறையில் இல்லை) சட்டமன்றத்தைக் கூட்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக - ஒரு அவசரச் சட்டத்தின் (ஆர்டினன்ஸ்)மூலமாக இதை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான், அந்த அவசர சட்டத்திற்கு முறைப்படி ஆளுநருடைய அனுமதியைப் பெற்றுத்தான் தி.மு.க. அரசு செய்தது.

நீதிபதி சந்துரு தலைமையில் குழு

ஆளுநர் அதற்கு அனுமதி கொடுத்த பிறகு, அந்தஅவசரசட்டம்சிலவாரங்கள்தான் அதுநடை முறையில்இருக்கும்.சட்டமன்றத்தில்அந்தச்சட் டம் மசோதாவாக நிறைவேற்றப்பட்டாக வேண் டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு குறுகிய கால சட்டமன்றக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நீதிபதி சந்துரு அவர்களின் குழு அளித்த பரிந்துரை களை ஏற்று, ஏற்கெனவே இருந்த சட்டத்தில் இருந்த தவறுகளையெல்லாம் களைந்து, சந்து பொந்துகளை அடைத்து, மிகப்பெரிய அளவிற்கு ஒரு சரியான மசோதாவை உருவாக்கி, அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, முறைப்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்கள்.

ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஏறத்தாழ ஒன்றரை மாத காலம் ஆகிறது. அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர்.

ஏற்கெனவே ஜனநாயகப்படி மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கின்ற ஓர் ஆட்சி - மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பல சட்டங் களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 20 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல நடந்துகொள்ளலாமா ஆளுநர்?

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர் முழுக்க முழுக்க ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல, சனாதனத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு, சம்பந்தமில் லாமல், திராவிடம்பற்றி தேவையில்லாத ஆராய்ச்சி செய்துகொண்டு, தம்முடைய கடமையிலிருந்து அவர் தவறி - அரசமைப்புச் சட்ட கடமையாக இருக்கக்கூடிய தன்னுடைய அன்றாடப் பணிகளை மறந்து - இந்த மசோதாக்களாலே - எங்கே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ - மக்கள் மத்தியில் சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் சட்டமாக ஆக்குகின்றார்களே, அதன்மூலமாக அவர் களுக்குப் பெருமை வந்துவிடுமோ என்பதற்காகத்தான் - அதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகத்தான், மற்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் எல்லாம், ஆளுநர்களை வைத்துக் கொண்டு எப்படி முட்டுக்கட்டை போடுகிறார்களோ - அதே பாணியை, இங்கே தமிழ்நாட்டில் ஆர்.என்.இரவி என்று சொல்லக்கூடிய ஓர் அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று, ஆளுநராக இருக்கக்கூடியவர் முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக, அவர் எடுத்த உறுதிமொழிகளுக்கு விரோதமாக, இதுபோன்ற மசோதாக்களை கீழே போட்டு அழுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவசர சட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஆளுநர் - நிரந்தரச் சட்டத்துக்கு அனுமதியளிக்க மறுப்பது ஏன்?

இன்னுங்கேட்டால், இதோ தமிழ்நாடு அரசாங்கத் தைப் பொறுத்தவரை கெசட் செய்து விட்டார்கள். அடுத்தபடியாக நடைமுறை வருவதற்கு முன்பே வழக்குப் போட ஆரம்பித்தார்கள் - சூதாட்டக் கம் பெனிக்காரர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநர் அவர்கள் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித் திருக்கலாம். விவரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், அவசரச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதனுடைய கருத்தாக்கம்தான் சட்டமாக வரும் எப்பொழுதுமே! அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருக்கின்ற ஆளுநர், இந்த நிரந்தரச் சட்டத்திற்கு ஏன் குறுக்கே நந்திபோன்று படுத்திருக்கவேண்டும்? ஏனென்றால், இந்த ஆட்சிக்குப் பெருமை வந்துவிடும் என்பதினால்தான்!

ஆட்சிக்குப் பெருமையா? இல்லையா? என்று அரசியல் போராட்டமா நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது நாட்டிலே? அதுவல்ல. பல உயிர்கள் பறி போவதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். அந்தச் சட்டம் நிறைவேறாத காரணத்தினால், அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு ஆன் லைன் சூதாட்டத்தின்மூலமாக, நேற்று முன்தினமும், நேற்றும்- உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

‘நீட்' சட்டத்திலும் ஆளுநர் முட்டுக்கட்டை

மனித உயிர்களை இவர்கள் காப்பாற்றாவிட்டாலும், தற்கொலைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கிறபொழுது, இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - அதை செய்வதில் அக்கறை காட்டும்பொழுது, அதற்குக் குறுக்கே தடுப்புப் போட்டுக் கொண்டிருக்கலாமா? என்பதுதான் நம்முடைய கேள்வி.

எனவேதான், இதுமட்டுமல்ல, இங்கே ஆதாரப் பூர்வமாக சொல்லிக் கொண்டே போகலாம்; ஆனால், இது ஒரு தனிப் பொதுக்கூட்டமல்ல.

ஆகவே, எங்களுடைய வேண்டுகோள் இங்கே சொன்னதைப்போல, முழுக்க முழுக்க தமிழ்நாடு ஆளுநர், இந்தப் பிரச்சினையில் மட்டுமல்ல, ‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண் டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை, தமிழ்நாடு ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

எப்படி ஒரு தபால்காரர், ஒரு கடிதத்தை உரியவரிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டுமோ, அதுபோல செய்யவேண்டிய நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் இருக்கிறார்.

22 மசோதாக்களைக் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் 

அப்படிப்பட்ட சூழ்நிலையில், 22 மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நிலுவையில் இருக்கின்றன.

அதன் விவரம் வருமாறு:

1. 2020 ஜனவரி 13, 18 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.

2.  2022 ஜனவரி 12 இல் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது.

3.  ஏப்ரல் 28 இல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல் கலைக் கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக் கழ கத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா. 

4.  மே 5 இல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா. 

5.  மே 12 இல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன.

6.  மே 16 இல் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.

7. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா. 

8. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதைத் தடுக்கும் சட்டத்தை திருத்துதல்.

9.  தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்.

10. மே 16 இல் நிறைவேற்றப்பட்ட, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா. 

11.  டாஸ்மாக் நிறுவன விற்று - முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா, 

12. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம்.

13. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3 ஆவது சட்டத்திருத்தம்.

14. 4 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பான மசோ தாக்கள்.

15.   தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் - சட்டத் திருத்த மசோதா. 

16.  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத் திருத்த மசோதா. 

17. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந் தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.

18.   பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா. 

19.   மே 24 இல் நிறைவேற்றப்பட்ட, போதைப் பொருள் மற்றும் -

20.  வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா. 

21. தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர் பான மசோதா என மொத்தம் 21 சட்ட மசோதக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

22.  அக்.28 இல் ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா.

அதுமட்டுமல்ல, இன்னொரு கொடுமை என்ன வென்றால், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், அரசியல்வாதி போன்று நடந்துகொள்கிறார்.

பேரறிவாளன் விடுதலை வழக்கில் நடந்தது என்ன? ஓர் ஆளுநருக்கு இருக்கின்ற அடையாளம் என்பது எல்லையற்ற அடையாளமெல்லாம் கிடையாது.

ஆளுநருக்குத் தனி அதிகாரம் கிடையாது

ஆளுநர் என்பது ஓர் அடையாளம். தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய ஒரு பகுதி. தமிழ்நாடு அமைச் சரவை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு மாறாக முடிவெடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆளுநருடைய அதிகாரம் என்பது தனி அதிகாரம் கிடையாது. இதை வரையறுத்து உச்சநீதிமன்றம் சொல் லிற்று. அந்த அதிகாரத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி, வைத்திருக்கின்ற காரணத்தினால்தான், பேரறிவாளன் உள்ளிட்டோர் நீண்ட காலத்திற்கு முன்பாகவே விடு தலையாகி இருக்கவேண்டியவர்கள். அப்படி விடு தலையாகாமல் சிறையில் இருப்பது எப்படி என்று ஓங்கித் தலையில் அடிப்பது போன்று உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இருந்தும்கூட, அதையெல்லாம் ஆளுநர் அவர்கள் பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் இந்த விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு செய்தியை செய்தியாளர்களின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

எதிர்க்கட்சிக்காரர்கள் சந்திப்புக்குத்தான் 

ஆளுநர் உடன் நேரம் அளிப்பாரா?

இந்தச் சட்டத்தில் ஆளுநருக்குச் சந்தேகம் இருந்தால், உடனே கண்ணைமூடிக் கொண்டு அதை அனுப்ப முடியுமா? என்று அரைவேக்காடு அண்ணாமலைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம், அந்தச் சட்டத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? அதை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் - ஆளுநரின் கடிதத்திற்கு, தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள், 24 மணிநேரத்தில் அந்தக் கடிதத்திற்குப் பதில் அளித் திருக்கிறார். ஆளுநர் மாளிகைக்கும் அந்தத் தகவலை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆளுநருக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் சுமூகமான உறவு இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, முதலமைச்சர் அவர்களுடைய ஆணைப்படி, சட்ட அமைச்சர், ஆளுநரைப் பார்க்க நேரம் கேட்கிறார்.

ஆனால், சட்ட அமைச்சரை சந்திக்க, ஆளுநர் நேரம் ஒதுக்க மறுக்கிறார்.

இதற்கிடையில், அண்ணாமலை, ஆளுநர் மாளி கைக்குச் சென்று ஆளுநரைச் சந்திக்கிறார், ஏதோ ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்று வருவதைப் போல.

எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் ஆளுநர்.

சட்ட ஒப்புதல் - நடைமுறைகள் என்ன?

சட்ட அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க மறுக்கிறார் ஆளுநர் என்கிற விமர்சனங்கள் எழுந்தவுடன், இன்று ஒரு தகவல் வருகிறது - நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரும்பொழுது, சட்ட அமைச்சரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள்.

ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள் போன்றவற்றை அறிவித்த பிறகுதான், கொஞ்சம் கதவு திறக்கிறது. அந்தக் கதவு முழுவதும் திறக்கவேண்டும். அப்படி கதவு திறப்ப தோடு மட்டுமல்ல, ஆளுநர்கள் என்பவர்கள் நம்முடைய வரிப் பணத்தைத்தான் சம்பளமாக வாங்குகிறார்கள். சம்பளம் கொடுப்பவர்கள் அத்துணை பேரும் எஜ மானர்கள். சம்பளம் வாங்கக்கூடிய அவர் ஓர் அரசு ஊழியர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், தனிக்காட்டுராஜா போன்று, நானே ராஜா என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார் அவர்.

எனவே நண்பர்களே, இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம் என்பது, ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதே!.

அவர் கேட்ட விளக்கத்திற்கும், விளக்கம் சொல்லியாகி விட்டது.

அப்படி ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பவேண்டும்.

அப்படி அவர் அனுப்பினால், சட்டமன்றம் மீண்டும் கூடி, மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, இவருக்கு வேறு வழியே கிடையாது; ‘‘சுவர் கீரையை வழிச்சுப் போடுடி'' என்ற நிலைதான் ஆளுநருக்கு ஏற்படும்.

கருப்புக்கொடி காட்டும் நிலை வரும்!

அதையும் மீறி இவர் குறுக்குச்சால் விட்டால், இந்த போராட்டங்களுடைய வடிவங்கள் மாறும். ஆனால், ஒருபோதும் நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். இந்த இயக்கம் வன்முறை இயக்கமல்ல. ஜனநாயக ரீதியாகயாகவே அவரை வெளியே அனுப்பக் கூடிய அத்துணை முயற்சியையும் கடைசி வரையில் செய் வதற்குத் தயங்கமாட்டோம், மக்களுடைய ஆதரவோடு!

இதை செய்துவிட்டு, அவர் அங்கே போகலாம், இங்கே போகலாம் என்று நினைக்க முடியாது. அடுத்த கட்டம், ஆளுநர் போகின்ற இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம். ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்படுவதற்கே யோசிக்க வேண்டி இருக்கும் அவர்.

மக்களின் கொதிநிலையை 

உணரவேண்டும் ஆளுநர்

அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டை, அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று ஆளுநர் விரும்புகிறாரா?

அறவழியைத் தாண்ட வேண்டாம் என்று பொறு மையாக இருக்கிறோம்;  மக்களுடைய கொதி நிலை உணர்வை ஆளுநர் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்து கொண்டு அவர் செயல்படவேண்டும். 

இனிமேலும் தாமதிக்கக் கூடாது. எங்களுக்காக அல்ல; தி.மு.க.விற்காக அல்ல. காப்பாற்றப்பட வேண்டிய உயிர்களுக்காக - மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

கழகத் தலைவரின் முழக்கம்!

இந்தக் குறுகிய காலத்தில், நம்முடைய திராவிட இயக் கத்தின் போர்வாள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் மானமிகு வைகோ இப்போராட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என்று அறிக்கை விடுத்திருந்தார். அதேபோல, மற்ற மற்ற சில அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள் - அவர்களுக்கும் என்னுடைய நன்றி தெரிவித்து, வந்திருக்கின்ற தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து, நாம் தொடர் முழக்கம் எழுப்புவோம்!

காப்போம், காப்போம்!

மாநில உரிமைகளைக் காப்போம்!

காப்போம், காப்போம்!

மாநில உரிமைகளைக் காப்போம்!

தேவை, தேவை!

மாநில சுயாட்சி தேவை!

போன்ற முழக்கங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் எழுப்ப, தோழர்கள் முழக்கமிட்டனர்.

- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை நிறைவு பெற்றது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:29 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், ஆர்ப்பாட்டம், உரை, சைதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ▼  டிசம்பர் (28)
      • கவிஞர் கண்மதியன் அன்னையார் மறைவு! கழகத் தலைவர் இறு...
      • சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் ச...
      • தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேர...
      • டிச. 24: தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் தமிழ்நா...
      • கழக மணம் வீசிய திருப்பத்தூர்!
      • தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் 'விடுதலை' சந்தா...
      • கழகப் பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா ரூ.1 லட்சம் ...
      • விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி ...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிற...
      • மயிலாப்பூர் திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப...
      • சென்னை மண்டலத்தில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம...
      • திசை' புத்தக நிலையம் திறப்பு விழாவில் தமிழர் தலைவர...
      • தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழ...
      • சென்னை சூளைமேடு இரா.கோமளா (WCS) 17ஆம் ஆண்டு (8.12....
      • பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வ...
      • தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி...
      • தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - க...
      • தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - ...
      • தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வட...
      • அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்ப...
      • தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் பெர...
      • வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர்...
      • தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெர...
      • ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளி...
      • 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆச...
      • தமிழர் தலைவர் 90 வது பிறந்த நாள் விழாவில் சமூகநீதி...
      • சூளைமேடு கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.1...
      • ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுந...
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.