தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

வெள்ளி, 28 அக்டோபர், 2022

டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை



October 22, 2022 • Viduthalai

 டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய இழப்பு - சேதுராமன் குடும்பத்திற்கு மட்டுமல்ல - இயக்கத்திற்கும், கொள்கைக்கும் இழப்பு

சென்னை,அக்.22  டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய இழப்பு என்பது சேதுராமன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்தக் கொள்கைக்கும் இழப்பு, இந்த இயக்கத்திற்கும் இழப்பாகும். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பிள்ளைகள் தொடர்ந்து இந்தக் கொள்கையில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மயிலை சேதுராமன் துணைவியார் மறைந்த டி.எஸ்.பிரேமா படத் திறப்பு - நினைவேந்தல்

கடந்த 18.10.2022 அன்று காலை  சென்னை மயிலாப்பூரில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமனின் துணைவியார் மறைந்த டி.எஸ்.பிரேமா அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், அவரது படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது  நினைவேந்தல் உரை வருமாறு:

சேதுராமன் எளிமையானவர் - நிகழ்ச்சியையும் எளிமையாக ஏற்பாடு செய்திருக்கிறார்!

செயல் வீரரான மயிலை சேதுராமன் அவர்களுடைய வாழ்விணையர் மறைந்த டி.எஸ்.பிரேமா அம்மையாரின் படத்திறப்பு நிகழ்வு ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகவும் ஆடம்பரம் இல்லாமல், அவர் எப்பொழுதும் எப்படி எளிமையாக இருப்பாரோ, அதேபோல இந்த நிகழ்ச்சியையும் மிக எளிமையாக நடத்தியிருக்கின்றார்.

அம்மா அவர்கள் மறைந்த அந்த செய்தி வந்தவுடன், நேரிலே வரவேண்டும் என்று விரும்பினாலும்கூட, பல தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை. அதற்குப் பிறகு இரண்டு, மூன்று முறை இங்கே வரலாம் என்று சொன்னபொழுது, அவரே, ‘‘அய்யா நீங்கள் இரண்டு மாடி ஏறிவரவேண்டும்; உங்கள் உடல்நலம் கருதி அதைத் தவிர்க்கவேண்டும்'' என்று கூறி, பிறகு இந்தப் படத்திறப்பிற்கான ஏற்பாட்டினை இன்றைக்கு செய்தார்கள்.

இதன்மூலம், அவருடைய குடும்பத்து உறுப்பினர்கள், உறவுக்காரர்கள் அத்துணை பேரையும் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு மிகச் சிறப்பான ஒன்றாகும்.

நம்முடைய மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்கள், அனைத்து இயக்கங் களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

யார், என்ன ஜாதி? என்ன பிரிவு? என்று எப்பொழுதுமே நாங்கள் பார்த்தது இல்லை

நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், யார், என்ன ஜாதி? என்ன பிரிவு? என்று எப்பொழுதுமே நாங்கள் பார்த்தது இல்லை. பல ஆண்டுகள் பழகிய வர்களாக இருந்தாலும், அதை அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பும் எங்களுக்குக் கிடையாது; விருப்பமோ, தேவையோ எங்களுக்குக் கிடையாது.

ஆனால், ரத்த உறவைவிட, கொள்கை உறவு மிகக் கெட்டியானது என்று சொல்லக்கூடிய வகையில், அவருடைய குடும்பத்தினுடைய நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் நாங்கள், உறவுக்காரர்களைவிட, ஒருபடி மேலே ஏறி, கூடுதலாகச் சென்று, அவருடைய துன்பத்தை, இன்பத்தை பகிர்ந்துகொள்ளக்கூடியவர் களாக, கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுகின்றபொழுது ஆறுதல் கூறக் கூடியவர்களாக இருப்போம்.

மயிலை எம்.கே.காளத்தி அவர்களுடன் பெரியார் திடலுக்கு வருவார் சேதுராமன்!

அந்த வகையில், நம்முடைய மயிலை எம்.கே.காளத்தி அவர்களுடன், நீண்ட காலமாக பெரியார் திடலுக்கு  சேதுராமன் அவர்கள் வருவார். அடக்கமாக இருப்பவர், அவரைப்பற்றிகூட விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்.

மறைந்த அம்மையாரும், அவருடைய பிள்ளைகளும் இந்தக் கொள்கைக்கு வந்தார்கள்

பிறகுதான் அவரைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்தோம். அவருடைய வாழ்விணையர், இவருக் குத் துணையாக இருந்தார். பிள்ளைகளும் அதேபோன்று இந்தக் கொள்கைக்கு வந்தார்கள்.

பெரியாருடைய இயக்கத்தில் யாருமே ஜாதி பார்ப்பதில்லை. அரசியல் கட்சியாக இருந்தால்கூட, விருப்பம் இல்லாவிட்டாலும், வாக்கு வங்கியைப் பார்க்கும்பொழுது, அவர் என்ன ஜாதி? என்று பார்க்கவேண்டியது இருக்கும். இன்ன ஜாதி ஓட்டு அதிகமாக இருக்கிறது; அங்கே இருக்கிறது என்று. நல்ல வாய்ப்பாக நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள் என்பதினால், அந்த அவசியம் எங்களுக்கு இல்லை.

நம்முடைய அய்யா சேதுராமன் அவர்கள் என்ன ஜாதி? என்ன பிரிவு? என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

கும்பகோணம் ராமமூர்த்தி - பத்மாவதி!

கும்பகோணம் ராமமூர்த்தி அவர்களின் உறவுக்காரர் என்று  சொல்லும்பொழுதுதான் தெரிந்தது. ராமமூர்த்தி அவர்களின் துணைவியார் பத்மாவதி அவர்கள் - மிகத் தீவிரமானவர்கள். என்னிடம் கொள்கை ரீதியாக சண்டை போடுபவர்.

எந்த அளவிற்குத் தீவிரமானவர் என்றால், மற்றவர்கள் இறந்த நேரத்தில், பத்மாவதி போன்றவர்கள் எல்லாம் அந்தப் பாடையை சுமந்துகொண்டு போன தெல்லாம் ‘விடுதலை’யில் செய்தியாக வந்திருக்கின்றன. ‘பாடைக் காவடி' என்று நடத்துவார்கள், அதில் ராமமூர்த்திதான் படுத்திருப்பார். அந்தப் பாடைக் காவடியை சுமந்து செல்பவர் பத்மாவதி அவர்கள்தான். குடந்தையில் அவர் மிகத் தீவிரமானவர்.

சில சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குத் திராவிடர் கழகம் என்றாலே அலர்ஜியாக இருக்கும்!

எனக்கு ஆச்சரியமாக இருந்தது; ஒரு சில சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குத் திராவிடர் கழகம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். பயம் வேறு. 

கருப்புச் சட்டைக்காரர்களா? மிகவும் கொடுமைக் காரர்கள் என்று எங்களைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

நம்முடைய ராமமூர்த்தியைப் பார்த்தால், எனக்கு உற்சாகம் ஏற்படும்.

ஆனால், சேதுராமன் என்ன ஜாதி? என்ன பிரிவு? என்று தெரியாது. நம்முடைய கொள்கைகள் எல்லா இடங்களிலும் பரவுகிறது. தி.மு.க.வில் நிறைய தோழர்கள் இருப்பார்கள்; அதேபோன்று, மதுரை, கும்பகோணம் போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளில் தோழர்கள் அதிகமாக இருப்பார்கள்.

மதுரையில் சவுராஷ்டிரா சமுதாயத்தில் 

ஒரு சீர்திருத்த திருமணம்!

சில நாள்களுக்கு முன்புகூட, நம்முடைய தோழர்கள், சவுராஷ்டிரா சமுதாயத்தில் இருந்து ஒரு சீர்திருத்த திருமணம் செய்துகொள்வதற்காக என்னை அழைத் தார்கள். அவர்கள் எல்லோரும் கருப்புச் சட்டைதான் அணிந்திருந்தார்கள். மதுரையில் இயக்கத்தில் பொறுப் பாளராக இருக்கிறார் அவர்.  அவர்கள் ஆச்சிரியத்தோடு என்னிடம் வந்து,  ‘‘நீங்கள் முதல் முறையாக இந்தப் பகுதியில் திருமணம் நடத்தி வைக்கிறீர்கள்; உங்களு டைய கருத்துகளை கேட்கவிருக்கிறோம்'' என்றனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஏதோ மனிதன் முதன்முறையாக நிலவுக்கோ செவ்வாய்க்கோளுக்கோ சென்றதுபோல இருந்தது.

லண்டன் உள்பட வாதாடியவர் துளசிராம்!

அப்பொழுது நான் சொன்னேன், நீதிக்கட்சி தொடங்கியபொழுது, நீதிக்கட்சிக்காக வாதாடியவர்கள் - முன்னணி தலைவர்களாக இருந்த சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் போன்றவர்கள். அதேபோன்று, லண்டன் நகர நீதிமன்றம் உள்பட வாதாடியவர் துளசிராம் அவர்கள். அவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

அந்தத் துளசிராம் அவர்களுடைய கொள்ளுப்பேத்தி அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். இந்தத் தகவல் எனக்குத் தெரியாது.

நான் அந்த மணவிழாவில் உரையாற்றி முடித்ததும், என்னை சந்தித்து, அய்யா நான் துளசிராம் அவர்களுடைய கொள்ளுப்பேத்திதான் என்றார்.

நீதிக்கட்சியின் வரலாற்றைப்பற்றி நாங்கள் புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம். துளசிராம் அவர்கள் லண்டனுக்குச் சென்று வாதாடியவர். பிறகு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்ற தகவல்களையெல்லாம் சொன்னோம்.

அடிப்படை காரணம் மறைந்த அம்மையார்தான்

 சேதுராமன் அவர்களைப் பொறுத்தவரையில், இயக் கத்தில் அருமையாகப் பணியாற்றுபவர். அன்றைக்கும், இன்றைக்கும் அவருடைய பிள்ளைகள் மிகப்பெரிய அளவிற்கு ஆதரவாக இருந்தார்கள் என்றால், அதற்கு அடிப்படை காரணம் மறைந்த அம்மையார்தான்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வாழ்விணையரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்!

காரணம் என்னவென்றால், பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்விணையர் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் பொதுவாழ்க்கையில் நிம்மதியாக இருப்பார்கள்; அந்தந்த இயக்கப் பணிகளை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

அந்த வகையில், அம்மையாருடைய இழப்பு என்பது இந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்தக் கொள்கைக்கும் இழப்பு, இந்த இயக்கத்திற்கும் இழப்பாகும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பிள்ளைகள் தொடர்ந்து இந்தக் கொள்கையில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம் - 

எங்கள் உறவு!

ஆகவே, இன்றைக்கு நாம் எல்லோரும் அந்த அம்மையாருக்கு மரியாதை செலுத்துகின்றோம் அவரை வெறும் படமாக மட்டும் பார்க்காமல், பாடமாகப் பார்த்துக்கொண்டு, சேதுராமன் அவர்கள் அவருடைய கொள்கை வழியில் நிற்பதற்கு, அவருக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருந்த அம்மையாருடைய புகழை இன்றைக்கு நாம் மறக்காமல் நினைவூட்டி, அதன்மூலம் இந்தக் குடும்பம் என்றும் கொள்கைக் குடும்பமாக இருக்கும். எல்லா வகையிலும் திராவிடர் கழகம் துணை நிற்கும். இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம் - எங்கள் உறவு என்ற அந்தப் பெருமையோடு என்னு டைய நினைவேந்தல் உரையை நிறைவு செய்கிறேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க அம்மையாருடைய புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:14 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: படத்திறப்பு, பிரேமா, மயிலாப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ▼  அக்டோபர் (23)
      • மனுதர்மம் எரிப்பு @திராவிடர் முழக்கம்
      • டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய படத்திறப்பு நிகழ்வில் த...
      • பொறியாளர் மயிலாப்பூர் குமார் நன்கொடை ரூ. 2000
      • சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வி...
      • இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி _ பவளக் கண்மணி ஆகிய...
      • விடுதலை சந்தா சேர்ப்பில் தீவிரம் காட்டுவோம் கும்மி...
      • எழுச்சித் தமிழரின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்ட...
      • மயிலை நொச்சி நகர் 'வாழ்விட மேம்பாட்டு வாரியம்' குட...
      • எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் : ம...
      • மயிலை சேதுராமன் துணைவியார் மறைந்த டி.எஸ். பிரேமா ப...
      • தென் சென்னையில் விடுதலை வளர்ச்சி குழு -3ன் பொறுப்...
      • தென்சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
      • ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு (அய்யாவின்...
      • கும்மிடிப்பூண்டி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், ப...
      • ஆவடி மனோகரனின் தங்கை மற்றும் தம்பி இரு திருமணம் - ...
      • தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை சேதுராமன்...
      • சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு -24,25,26.12.96
      • மானமிகு தோழர் ‘செஞ்சட்டை’ கே.பஞ்சாட்சரம் மறைவு
      • மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி! - சென்னை
      • தென் சென்னையில் புரட்சியாளர் தந்தை பெரியார் பிறந்த...
      • புதிய பொறுப்பாளர்கள் - தலைமை செயற்குழு தீர்மானங்கள்
      • மறைவு - நன்கொடை - படத்திறப்பு-ம.அஞ்சலா (வயது-81)
      • சென்னை ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் அவர்களது 60ஆம் ...
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.