திங்கள், 17 அக்டோபர், 2022

ஆவடி மனோகரனின் தங்கை மற்றும் தம்பி இரு திருமணம் - அ.குணசீலன்_தங்கமணி ஆகியோரின் செல்வன் கு.வீரமணி திருமணம்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (278)

அக்டோபர் 1-15,2021

சென்னை ஆவடியில் செங்கை தி.க. செயலாளர் ஆவடி மனோகரனின் தங்கையும், மதுரை நாட்டார்மங்கலம் கா.இராமசாமி, காமாட்சி அம்மாள் ஆகியோரின் இளைய மகளுமான இரா.பவானிக்கும், புதுக்கோட்டை ஆர்.வி.முத்து _ எம்.வசந்தா ஆகியோரின் மகன் வி.எம்.ஆறுமுகத்துக்கும், ஆவடி மனோகரனின் தம்பியுமான இரா.முருகேசன் _ சென்னை விருகம்பாக்கம் இரா.மீனாட்சிசுந்தரம், தனபாக்கியம் ஆகியோரின் மகள் மீ.பிரமிளாவுக்கும் _ இரு வாழ்க்கை இணையர்களுக்கும் 25.4.1997 அன்று ஆவடி முல்லை திருமண மண்டபத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து, சிறப்புரையாற்றினேன். கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வடசென்னை திராவிடர் கழகத் தலைவர் அ.குணசீலன்_தங்கமணி ஆகியோரின் செல்வன் கு.வீரமணிக்கும், பெங்களூர் டி.பி.மனோகரன் _ தரணி ஆகியோரின் செல்வி லதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தவிழா 8.5.1997 அன்று அயன்புரம் அய்.சி.எஃப் திருமண மண்டபத்தில் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் கோ.சாமிதுரை அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதியை கூறச்செய்தும், மாலை அணிவிக்கச் செய்தும் நடத்திவைத்தேன். அங்கு சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தை எடுத்துக் கூறினேன். வடசென்னைப் பகுதியில் உள்ள கழகத்தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானவர்கள்  கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக