வியாழன், 13 அக்டோபர், 2022

மானமிகு தோழர் ‘செஞ்சட்டை’ கே.பஞ்சாட்சரம் மறைவு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (272)

ஜுலை 16-31,2021

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு வேண்டும்

கி.வீரமணி

( கட்டுரையின் ஒரு பகுதி)

சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவரும் “அறிவுவழி’’ இதழின் ஆசிரியரும், சுயமரியாதை சமதர்ம வீரருமான மானமிகு தோழர் ‘செஞ்சட்டை’ கே.பஞ்சாட்சரம் அவர்கள் ஒரு விபத்தின் காரணமாக திடீரென்று 25.10.1996 அன்று காலமானார் என்ற செய்தி நமக்குப் பேரிடியாய் அமைந்தது.

திராவிடர் கழகம் நடத்தும் அத்தனை அறப்போர்களிலும் தவறாது ஈடுபடும் தோழர் பஞ்சாட்சரம் ஒரு தீவிர சுயமரியாதை கொள்கைக்காரர்; 24 மணி நேரத்தில் பெரும்பகுதியை பெரியார் திடலில்தான் செலவழிக்கக் கூடியவர்.

அவரது மறைவு நமது இயக்கத்திற்கு மிகப் பெரும் ஈடு செய்ய இயலாத இழப்பு ஆகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ‘அறிவுவழி’ தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, மறைந்த மாவீரருக்கு நமது வீர வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக