தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

சனி, 6 ஆகஸ்ட், 2022

அரியலூர் திறந்தவெளி இளைஞரணி மாநாட்டு முழக்கங்கள்


   July 31, 2022 • Viduthalai

 என் தந்தையார் திராவிடர் கழகத்தவர்; நானும் மானசீகமாக உங்களோடுதான் இருக்கிறேன் - அமைச்சர் சிவசங்கர்

தோளில் துண்டு போட்டு நடக்கும் உரிமையை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் - அமைச்சர் சி.வெ.கணேசன்

நமது இலட்சியத்தை அடையும் கருவி ‘விடுதலை'

அதை எங்கெங்கும் கொண்டு சேர்ப்போம்! - தமிழர் தலைவர் ஆசிரியர்

அரியலூர், ஜூலை 31- திராவிடர் இயக்கத்தின் கொள்கை, தேவை, தந்தை பெரியார் தம் தொண்டின் பலன் ‘விடுதலை' என்னும் பேராயுதம் குறித்து, திராவிடர் கழகத் தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அரியலூரில் நடைபெற்ற மாநாட்டில் முழக்கமிட்டனர்.

ஜூலை 30 அரியலூர் அண்ணா சிலை அருகில் திராவிடர் கழக மாநில இளைஞரணி சார்பில் திறந்தவெளி மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன் வரவேற்புரை நிகழ்த்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரா. வெற்றிக்குமார் தலைவரை முன்மொழிய நிகழ்வு தொடங்கியது.

மாநாட்டு வெற்றிக்கு பெரிதும் காரணமாய் அமைந்த கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரை நிகழ்த்தினார்.

இளைஞர் பட்டாளத்தின் 

கோட்டையான அரியலூர்

அவரது உரையில் ஒருபுறம் விடுதலை 60,000 சந்தாக்கள் சேகரிப்புப் பணி, மற்றொருபுறம் இளைஞரணி மாநாடு என்ற நிலையில், இளைஞர்கள் வருவார்களா? மாநாடு வெற்றி பெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்தோம். ஆனால், இளை ஞர் பட்டாளத்தின் கோட்டையாக இன்று அரியலூர் மாறி, மாநாடு வெற்றியை நிரூபித்துள்ளது என்று கூறி  நிகழ்விற்கு ஒத்துழைப்பு தந்த அமைச்சர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார். கிராமம் சார்ந்த மண், காவி கூட்டம் கையகப்படுத்த நினைக்கும் மண். இந்த மண்ணில் காவிக்கு இடமில்லை என்று, பெரியார் நமக்குத் தந்த சொத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல், பெரியார் போட்டுத் தந்த பாதையில், அவரின் பணி முடிப்போம் என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து தொடக்க உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.

இனத்தினை காக்கும் தலைவர் ஆசிரியர்

மாநாட்டு வெற்றிக்கு அயராது உழைத்து, உழைப்பின் உருவம் த.சீ. இளந்திரையன் என்று, தமிழர் தலைவரால் மாநாட்டு மேடையிலேயே பாராட்டப்பட்ட மாநில இளைஞர் அணி செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமை உரை ஆற்றினார். அவரது தலைமை உரையில், தமிழர் தலைவர் வரிக்குதிரையை போன்ற தலைவர். வரிக்குதிரைக்கு இருக்கும் ஒற்றைக் குணம், மற்ற வரிக்குதிரைகள் அதன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறபோதும், ஒற்றை வரிக் குதிரை மட்டும் தனது இனத்தை காக்கும். மற்ற வரிக்குதிரைகளை காக்கும் பணியினை செய்யும். அப்படி நம் இனத்தை அழிக்கும் எதிரிகளை கண்காணிக்கும் உயரிய குணம் படைத்த தமிழர் தலைவர் அவர்களை யாராலும் அசைக்க முடியாது. காரணம், சிங்கம் புலியை கூட சர்க்கஸ் கூடாரத்தில் பழக்கப்படுத்த முடியும். ஆனால், இதுவரை வரிக்குதிரையை பழக்கப்படுத்த முடியவில்லை. அதுபோல் மதவாத, பயங்கரவாத, பாசிசம் என்று எவற்றாலும் இந்த தலைவரை மட்டும் அசைக்க முடியாது என்று உணர்ச்சிப் பெருக்குடன் தனது உரையை தொடங்கி, 30.4.2022 அன்று சென்னையில் இந்தி அழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், இன்று பேரணியில் தலைவரின் தலைமையில் நாங்கள் இருக்கிறோம் என்று கட்டியம் கூறும் மாநாடாக அமைந்தது என்று கூறி, தந்தை பெரியாரின் அறிவுரையை மேடையில் வாசித்து, இனத்தைக் காக்க எங்கள் தலைவர் இருக்கிறார். ஜாதி, மதவாதம், இந்தித் திணிப்பு அவற்றை அழிக்க கட்டளை இடுங்கள்; இன்னுயிர் தரவும் நாங்கள் தயார்! தயார்! என்று ஒட்டுமொத்த கருஞ்சட்டை  இளைஞர்களின் குரலாய் பேசி அமர்ந்தார்.

திராவிட இயக்க உணர்வும், 

அரியலூரும் பிரிக்க முடியாத ஒன்று

திராவிட முன்னேற்றக் கழக மாநில உறுப்பினர்கள் சார்பில், மாநில சட்டத் திட்ட குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரசேகர் உரையாற்றினார். அவரது உரையில், அரியலூர் முழுவதுமே திராவிட இயக்க உணர்வோடு இருக்கும் பகுதி. அதிலும், குறிப்பாக செந்துறை மண் திராவிட இயக்க உணர்வோடு பிரிக்க முடியாத ஊர் என்பதை பதிவு செய்து, யாரும் செய்ய முன் வராததை தன் தோளில் சுமந்து பெரியார் செய்த போது அவரது எண்ணங்களை ஈடேற்றும் வகையில் அண்ணாவும் கலைஞரும் அரசியலில் திகழ்ந்த விதத்தை விவரித்து, 90 வயதில் யாரும் எண்ணிப் பார்க்காத முடியாத செயலை  ஆசிரியர்  செய்கிறார் என்றார். இன உணர்வை ஊட்டுவது ஆசிரியராகவும், அல்லும் பகலும் அதனை ஈடேற்ற முதலமைச்சர் உழைக்கிறார். முழு அதிகாரமும், முழு ஆணவத்தோடும் இருக்கிற பாசிசத்திற்கு எதிராக நம்பிக்கை பெற்ற தலைவராக தளபதி இருக்கிறார் என்று உரையாற்றினார்.

திராவிட மாடலை பார்த்தால் 

பிஜேபிக்கு எரிச்சல்!

சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவரது, திராவிடர் இயக்கக் குடும்பப் பின் புலத்தை விவரித்து, தனது தந்தை கா.சொ. கணேசன், தாத்தா அணைக்கரை டேப் தங்கராசு ஆகியோர் வாழ்நாள் முழுவதும் எப்படி பெரியார் மீது பற்றும், திராவிட உணர்வும் பெற்றிருந்தார்கள் என்பதை அழுத்தமாக கூறினார். அவரது தந்தை காலத்தில் திறக்க முடியாத பெரியாரின் வெண்கல சிலையை, 2012இல் அவர் திறந்து வைத்ததையும் பதிவு செய்தார். "நானும் கடவுள் மறுப்பாளர் தான்" என்று மாநாட்டு மேடையில் கொள்கை உணர்வுடன் வெளிப்படுத்தினார். தினமலர் தனது நாலாம் பக்க கட்டுரையில் வழக்கம் போல் தேர்தலின் போது ஆரத்தி எடுத்தனர், கடவுளை ஏற்றுக் கொண்டனர். இப்போது கடவுள் மறுப்பு பேசுகிறார் என்ற போது, அவர் சொன்ன பதில்: மக்களை கடவுளாய் நினைத்துக் கும்பிட்டேன். மக்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் நின்றேன் என்று சொன்னதைப் பதிவு செய்தார். எந்தக் கோயில் திருவிழாவுக்கும் நான் செல்லாதவன். ஆனால், மக்களுக்கு நன்மை செய்வேன் என்றார். திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்! இன்று நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை பார்த்தால், பிஜேபிக்கு எரிச்சல். காரணம், இந்த ஆட்சி பெரியார், அண்ணா, கலைஞர் சிந்தனையை நிறைவேற்றுகிறது. பெரியாரின் மறு உருவமாக திகழும் ஆசிரியர், தளபதிக்கு ஆலோசனையை வழங்கி, வழிநடத்த வேண்டும். இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்தார்.

அனைவருக்கும் பெரியார் தேவை

சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா (மதிமுக) தனது வாழ்த்துரையில்: தந்தை பெரியார், திராவிடர் கழகத்திற்கு மட்டும் தலைவர் அல்ல. ஆரிய, கலாச்சார பண்பாட்டை எதிர்த்து நேரில் போர் செய்தவர். இந்த மாநாடு பெரும் நம்பிக்கையை தரும் மாநாடு. இன்று தமிழ்நாடு மட்டும்தான் பிஜேபியிடம் தப்பித்துள்ளது. அதனால், நேரடியாக பிஜேபி போர் தொடுக்க தொடங்கியுள்ளது. அந்த சூழலில், இந்த மாநாடு நம்பிக்கையை தரும் மாநாடாக அமைந்துள்ளது. பெரியார், திராவிடர் கழகத்திற்கு மட்டும் சொந்தமில்லை. காரணம், காங்கிரசிலும் கம்யூனிஸ்டிலும் எந்த  தளபதியாக இருந்தாலும் பெரியாரால் தயாரிக்கப் பட்டவர்கள். இந்த வயதிலும் தமிழர் தலைவர் போராடுகிறார். தமிழ்நாடு அரசுக்கு ஆலோசகராக இருக்கிறார். தமிழ்நாட் டிற்கு பெரியார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார். அவரை அழைத்து காந்தி சிலையை திறக்க, எதிர்ப்பு வந்தது. அவர் ஏன் திறக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. ஆசிரியர் அவர்கள் தான் திறக்க வேண்டும் என்று உறுதியாய் சொன்னேன். எங்களையும் பெரியாரையும் பிரிக்க முடியாது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆம், தன்மானத்தோடு வாழ, தேவை பெரியார்! தமிழ்நாட்டிற்கு தேவை பெரியார், அனைவருக்கும் தேவை பெரியார் என்று கூறி முடித்தார்.

எல்லாமும் மக்களுக்கு கிடைக்க எங்களை இழக்கத் தயார்

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அவர்கள் அவரது உரையில், அரியலூர் என்ற சின்ன ஊர் இந்த மாநில மாநாட்டினை தாங்குமா என்று நினைத்தபோது, கருங் கடலாக இன்றைக்கு அரியலூர் மாவட்டம் காட்சியளிக்கிறது. அரியலூர் மண்ணுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த மண், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கல் மரமாக ஆன வரலாறு, கல்மரப் பூங்கா அதன் அடியில் கடல் உள்ளது என்பதை இன்றைக்கு கண்டுபிடித்திருக்கிறார்கள். பழைமையான நாகரீகமுடைய மண்ணில், இன்று மதவாதம் அதை சுரண்டும் போக்கு உள்ளது. அந்தச் சூழலில், இந்த மாநாடு அறிவிக்கப்பட்டபோது, நன்கொடை திரட்ட அவர்கள் சென்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரியலூர் மாவட்ட செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர். எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க,கண்ணன் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சின்னப்பா அவர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர், வணிகப் பெருங்குடி மக்கள், பொதுமக்கள், கடைவீதி வசூல் என்று அனைத்து ஊர்களிலும் கிடைத்த வரவேற்பினை அப்படியே காட்சிப்படுத்தி விவரித்தார். அரியலூரை மாநாட்டிற்கு தலைவர் தேர்ந்தெடுத்து இருக்க இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, சமூக நீதியை பாதுகாக்க, நீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி, முதல் களப்பணி நீட்டுக்கு எதிராக மரணித்த குழுமூர் அனிதா பிறந்த மண் அரியலூர். அந்த மண்ணில் நீட்டை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற அறைகூவலை விடுக்கவும், இரண்டு, மதவாத கும்பல் தங்களுக்கு உரியதாக அரியலூர் மண்ணை ஆக்கிக் கொள்ள முயற்சி செய்வதாக கூலிப்படைகளை, அனுமார்களை திரட்டும் பணியில் இருப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் ஜாதி, மதவெறி ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த இரண்டு காரணத்திற்காகவும் அரியலூரைத் தலைவர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பதை கூறினார். மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் அரியலூர் மண்ணில், கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை பெற தொடர்ந்து போராடுவோம், பயணிப்போம் என்றார். அரியலூர் மண் மிகப் பெரிய ஆதரவை வழங்கி இருக்கிறது. வெற்றிடம் வெற்றிடம் என்று கலைஞர் மறைவுக்குப் பிறகு கூச்சலிட்டவர்களுக்கு, இது வெற்றிடம் அல்ல கற்றிடம் என்று முதல்வர் காட்டியுள்ளார் என்றார் ஆசிரியர். அரிய அரசியல் ஞானியாக தளபதி விளங்குகிறார். அவருக்கு எல்லா வகையிலும் ஆலோசகராக, ஆலோசனை வழங்கி வருகிறார் தமிழர் தலைவர். எல்லாமும் மக்களுக்குக் கிடைக்க எங்களை இழக்கத் தயார். தலைவரே! ஆணையிடுங்கள் பணி முடிக்க நாங்கள் தயார் என்ற உணர்ச்சிமிகு வரிகளுடன் நிறைவு செய்தார்.

இந்தியா எனும் துணைக்கண்டம்

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தனது உரையில்: சிறப்பான நேரத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை விவரித்து, ஒரே மதம், ஒரே கல்விமுறை, ஒரே வாழ்க்கை முறை,ஒரே நாடு இந்தியா என்கிறார்கள். சொல்லப்போனால், இந்தியா நாடே அல்ல. பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல இந்தியா ஒரு துணை கண்டம் (subcontinent). 1957இல் நாடாளுமன்றத் திற்கு முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சென்ற போது, அங்கே :  "India is not only lingual state but multinational state also"  என்று தோழர் சம்பத் அவர்கள் பதிவு செய்தார் என்றார். தொடர்ந்து,  சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிறது மனுதர்மம். அதன் வடிவம் தான் தேசிய கல்விக் கொள்கை. இன்றைக்கு நடைபெறும் அனைத்து பட்டமளிப்பு விழாக்களிலும் தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசி, பிஜேபி கொள்கை பிரச்சாரமாக பட்டமளிப்பு விழாக்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இளைஞர்களையும் மாணவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் திட்டம் இது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த மாநாட்டை உரிய நேரத்தில் அறிவித்திருக்கிறார். பொதுச்செயலாளர் சந்திரசேகர் அவர்கள் கூறியதைப் போல் தலைவர் ஆணைக் காக தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் ஆணையிடுங்கள் என்று உணர்வு பெருக்கோடு உரையாற்றினார்.

இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய தீர்மானங்கள்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தனது உரையில், புவியியல் ரீதியாக எப்படி அரியலூர் கடல் சார்ந்த பூமி ஆக இருந்தது என்பதையும், இன்று அதே அரியலூர், மக்கள் கடலாக மாறி இருப்பதை சொல்லி தனது உரையை தொடங்கினார். அங்கொன்றும், இங்கொன்றும் கருப்புச் சட்டைகள் இருப்பார்கள் என்று இனி யாரும் சொல்ல முடியாது. ஆசிரியருடன், மாலை நடந்த பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அமர்ந்து கண்டு களித்தார். ஏதோ, வயதானவர்கள் இருப்பார்கள் என்பதை இனி நிச்சயம் மாற்றி சொல்ல வேண்டும். நூறாண்டு, நூறாண்டு, நூறாண்டு கடந்தும் இந்த இயக்கம் இருக்கும் என்பதை தீர்க்கமாக பதிவு செய்தார்.  தனது உரையில் காலையில் நிறைவேற்றப்பட்ட 19-ஆவது தீர்மானத்தை விளக்கினார். 1929இல் செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றும் பேசு பொருளாக இருப்பது போல், காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதியான ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் என்று சொல்பவர்கள் ஒரே ஜாதி என்று கூற முன் வருவார்களா? என்ற ஆசிரியரின் கேள்வி இன்று மம்தா வரை சென்றடைந்து இருக்கிறது என்பதைக் கூறி, காலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தியா முழுவதற்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய தீர்மானங்கள்  என்றார். தமிழ்நாடு எப்படிப்பட்ட மண் என்றால் கடந்த முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது ‘குட் ஈவினிங் சென்னை' என்றார், கைதட்டல். வணக்கம் சென்னை என்றார் கைதட்டல். நமஸ்தே சென்னை என்றார், ஒருவரும் கைத்தட்டவில்லை. இதை யாரும் சொல்லிக் கொடுத்து வரவில்லை. இதுதான் திராவிட மாடல். நூற்றாண்டு கண்ட இயக்கம் திராவிடர் இயக்கம் என்று தனது உரையை நிறைவு செய்தார்

மானசீகமாக உங்களோடு தான் இருக்கிறேன்

‌போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தனது உரையில்:  பகுத்தறிவு நம்பிக்கையாக திகழும் ஆசிரியர் என்று தொடங்கினார். தனது தந்தை எஸ்.எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள் பெரியாரை அழைத்து மாநாடு நடத்தினார். இன்று ஆசிரியர் அருகில் அமர்ந்து மாநாட்டில் பங்கேற்பதை குறிப்பிட்டு, மாலை பேரணியில் இளைஞர்கள் முழக்கமிட்டு வந்ததைப் பார்த்து அமைச்சர் க.பொன்முடியும், சபாபதி மோகனும் இப்படி முழக்கமிட்டவர்கள், இன்று எங்கள் பிரதிநிதியாக இருப்பதாக ஆசிரியர் சொன்னதை சொல்லி, திமுகவில் நான் இருந்தாலும், பேரணிக்கு வரவில்லை என்றாலும், மானசீகமாக உங்களோடு தான் இருக்கிறேன் என்பதை பதிவு செய்தார். 2011 இல் 'இந்த அரசியலுக்கு, சட்டமன்றம் வரை நாங்கள் வர காரணம் பெரியார்' என்று தான் சொன்னது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்றும், இன்று மேடையில் அதையே நாங்கள் பதிவு செய்ய முடிகிறது என்றால், இதை தான் திராவிட மாடல் என்கிறோம். இந்திய ஒன்றியத்திற்கு மாற்று சித்தாந்தம் திராவிடம். அதை எடுத்துச் செல்லும் பணி முதலமைச்சருக்கு இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக மறைந்த அனிதாவை, தான் முதன் முதலில் சந்தித்த இடம் அரியலூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘நீட்' தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது அந்த ஆர்ப்பாட்டம் தான். ஆசிரியர் எழுப்பிய முக்கிய வினா ஒரே ஜாதி என்று கூற முடியுமா என்று சொன்னது அனைவருக்கும் போய் சேர வேண்டிய செய்தி. திராவிடர் கழகம் தேவை, அதன் பணி இன்றும் தேவை, தமிழர் தலைவரின் பணி என்றும் தேவை என்றார்  கழக இளைஞர்களை நோக்கி, "வீரர்,வீராங்கனைகளே! உங்களை சுற்றி இருப்பவர்களை அரசியல் படுத்துங்கள்" என்றார். இந்த மேடை என்பது அனைவருக்குமான மேடை. காங்கிரஸ் பாலகிருஷ்ணன் விபூதி வைத்து அமர்ந்திருக்கிறார். திராவிடர் கழகம் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல  - இதனை உணராத சங்கிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். 

முதலமைச்சர் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு ஆசிரியரி டம் ஆலோசனை பெறுகிறார். கலைஞர் வழியில் முதலமைச்சர் இருப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால், இன்று திராவிடத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருக்கிறார். ஊர்வலத்தில் தீச்சட்டி ஏந்தியவர்கள் ஆசிரியர் கையில் கொடுத்த போது அதை நான் தாங்கிப் பிடிக்கச் சென்றேன். நீங்கள் பிடிக்க வேண்டாம் பத்திரிகைகள் வேறு விதமாக எழுதுவார்கள் என்று ஆசிரியர் எச்சரித்தார். உண்மைதான். சிவன் கோவில் சுவற்றில் திராவிடர் கழக மாநில மாநாடு செய்தி இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்து திராவிடர் கழகத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. திராவிடர் கழகம் இதனை நீக்காவிட்டால், எஸ்.எஸ்.சிவசங்கர் வீட்டை முற்றுகையிடுவோம் என்றனர். காரணம், நாங்கள் திராவிடர் கழகப் பிள்ளைகள். கடவுள் நம்பிக்கை இருக்கா? இல்லையா? என்பது பிரச்சனை இல்லை. மக்களுக்கு நன்மை செய்கிறோமா,இல்லையா அதுதான் முக்கியம். இந்துத்துவா தமிழ்நாட்டை கையகப்படுத்த துடிக்கும் நேரம். பல்வேறு எதிர் அணியினர் அவர்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், பிஜேபியை கொள்கை ரீதியாக எதிர்க்கும் அரசியல் கட்சி திமுக மட்டும் தான். ஆசிரியர், முக்கியமாக நினைக்கும் கொள்கையை தான் நாங்கள் செய்கிறோம். பகுத்தறிவுப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் உண்மையை நாம் சொல்வோம். மீண்டும், மீண்டும் சொல்வோம். அவர்கள் சினிமாக்காரர்கள் , ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாவற்றையும் கொண்டு வரட்டும் அவற்றை முறியடிக்க , ஆசிரியர் வழியில் செயல்படுவோம். விடுதலையை அனைவருக்கும் கொண்டு செல்வோம் அதன் அறிக்கைகள், அறிவியல் செய்திகள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் எனவே விடுதலையை கொண்டு சேர்ப்போம் என்று சொல்லி முடித்தார்.

‌அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை அடையாப்படுத்திய மேடை

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் தனது உரையில், தான் தாமதமாக வருகை தந்ததற்கு வருத்தத்தை தெரிவித்து உரையை தொடங்கினார்.ஆசிரியர் மீது தனக்கு எப்போதும் பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த மேடை சிறப்புக்குரிய மேடை!  அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை, அடையாளப்படுத்திய மேடை. தனது அப்பா, சித்தப்பா இடுப்பில் இருந்த துண்டை, தோளில் போட வைத்த மேடை! கணேசனையும் மேடையில் பேச வைத்த இயக்கம் திராவிடர் இயக்கம் என்று உணர்ச்சி பெருக்கோடு பதிவு செய்தார்.  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வியில், சாலையில் நடக்க என்று அனைத்து உரிமைக்கும் அடித்தளமிட்ட தலைவர் பெரியார்.  அதைத் தொடர்ந்து நடத்திக் காட்டியவர் கலைஞர் என்றார். தமிழர் தலைவர் அவர்கள் எப்படி 90 வயதிலும் 19 வயது இளைஞரை போல் இயங்குகிறார் என்பதை வியந்து சொன்னார்.  பெரியாரின் கொள்கைகளான பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, ஆகியவற்றை கலைஞர் எப்படி சட்ட மயமாக்கினார் என்பதை விவரித்தார். மகாராஷ்டிராவில், அம்பேத்கர் பிறந்த மண்ணில், அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடியாத போது, தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைத்தது தலைவர் கலைஞர் என்பதை எல்லாம் விவரித்து, ஜாதிப் பேர் கொண்ட தெருக்கள் இருந்த மண்ணில், சமத்துவபுரங்கள் கண்ட கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு சட்ட வடிவம் தந்த கலைஞர். காரணம், பெரியாரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதே அவரின் குறிக்கோள். இன்றும் பெரியாரின் லட்சியங்களை நிறைவேற்ற, முதல்வர் கிடைத்திருக்கிறார். ஆசிரியர் அவர்கள் திட்டக்குடி வந்தபோது, அவரது உரையை கேட்டு, எப்படி அவரின் தீவிர ரசிகராக மாறினேன் என்பதை சொல்லி, திராவிடர் கழகம் புத்தகங்கள் வந்தால் உடனே வாங்கி படித்து விடுவேன் அந்த அளவிற்கு இந்த கொள்கைகள் தனக்கு பிடிக்கும் என்பதை விவரித்து மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து அமர்ந்தார்.

லட்சியத்தை அடையும் கருவி ‘விடுதலை‘

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதே மேடையில் ஒரு சுயமரியாதைத் திருமணம், ஒரு தாலி அகற்றும் நிகழ்ச்சி அனைத்தையும் நடத்தி வைத்து அதன் பிறகு தனது உரையை தொடங்கி, பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்களின் வருகையால் தனது பேச்சை இடையிலே நிறுத்தி, மீண்டும் தொடங்கி இன எழுச்சி உரையினை வழங்கினார். ஆசிரியர் தனது உரையில், மேடையில் அமர்ந்திருப்பவர்கள் நம்முடைய குடும்பத்துப் பிள்ளைகள். திராவிடர் கழக குடும்பத்துப் பிள்ளைகள். சமூக நீதிப் போராளி பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அமர்ந்திருக்க கூடிய மேடை என்று சொல்லி, தனது உரையை தொடங்கினார். வருகின்ற போது 89 ஆக இருந்த தனது வயது, மாநாட்டில் இருந்து திரும்பும் நேரத்தில் 29 ஆக குறைந்து இருக்கும் என்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் ஒரு சிறப்பான தொண்டர். செய்யுங்கள் என்று சொன்னால், செய்து முடிப்பவர். அவர் மட்டுமல்ல, அரியலூரில் இருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைத்து, சிறப்பான மாநாட்டை நடத்தி இருப்பதை அவர்களையெல்லாம் பாராட்டி, அரியலூரை தேர்ந்தெடுத்தது 100 சதவீதம் அல்ல 200 சதவிகிதம் வெற்றி என்பதை பதிவு செய்தார். அரியலூர் காவிக் கோட்டை என்ற ஒரு கதையைப் பரப்பினர். அந்தக் கனவை, இனி காணாதீர்கள். காரணம், இது வரலாறு படைத்திருக்கும் மாநாடு. 45 நிமிட பேரணி எந்தவித சிக்கலும் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லாமல் ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கும் இயக்கம் என்பதை நிரூபித்திருக்கிறது என்றார். 

அவர் உரையின் தொடர்ச்சியில் மீண்டு வருகிற இனத்தின் எழுச்சியை சொல்ல, மீண்டும் வருகிறேன் என்று தொடங்கினார். இந்த திராவிட இயக்கம் என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சி. அந்த தலைவர்களின் பதாகைகள் தாங்கிய வாகனம் ஊர்வலத்தில் வந்ததை பதிவு செய்தார். தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் நீதிக்கட்சி ஆட்சியின் போது, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில், கட்டாயம் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அரசாணையை நீதிக் கட்சி வெளியிட்டதை விவரித்து, ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" என்ற நூலில் வீடும் வாழ்வும் என்ற அத்தியாயத்தில், எப்படி பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதவருக்கும் இருந்த வேறுபாட்டை விளக்கி, சுட்ட செங்கலில் வீடு கட்ட கூட உரிமை இல்லாத நிலை என விவரித்தார். அதுதான் சனாதனம், மனுதர்மம் என்றார். இந்த சமயத்தில்தான், பெரியார் எனும் பேராயுதம் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். 

பெரியார் என்பவர் மருந்து, தீர்வு. அவர் கட்டாயம் தேவைப்படுவார். அவரின் தத்துவத்தை, அதிகாரப்படுத்த முதல்வருக்கெல்லாம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி அமைந்திருக்கிறது. எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிடம்; எல்லோரும் படிக்கக் கூடாது என்பது ஆரியம். இன்று ஆளுநர் பஜனை மடம் நடத்துவது போல் நடத்தி வருகிறார். அவர் தொடர்ந்து சனாதனமா?திராவிடமா? என்று விவாதத்தை கிளப்புகிறார். எதுவெல்லாம் சனாதனம், அந்த சனாதனம் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. அப்படி என்றால், இன்று வருகின்ற மாற்றங்கள் எல்லாவற்றையும் நீங்கள் நிராகரிக்க தயாரா? என்று அடுக்கடுக்காக, இந்த மண்ணில் ஏற்பட்ட காணொளி காட்சி, பேனா, அறிவியல் சாதனங்கள் என்று தொடங்கி இன்று குடியரசு தலைவராக இருக்கக்கூடிய ஒரு பெண் இதற்கு உங்கள் சனாதனம் அனுமதிக்கிறதா? என்ற கேள்விகளை அடுக்கினார். எங்கள் பணி என்பது நாங்கள் முன்னே சென்று கண்ணிவெடிகள் எதுவும் இருக்கிறதா என்பதைப் பார்த்து, அதை அகற்றும் பணி எங்களுடையது. இன்று 2000 இளைஞர்கள் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் பஞ்சாயத்து போர்டு பதவிக்குக் கூட போக முடியாது.காரணம், திராவிடர் கழகம் அதற்கு அனுமதிக்காது. ஆனாலும், அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்? காவி கட்சியைப் போல் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டமா? இல்லை! அங்கே போனாலும் காலியாக தான் இடம் இருக்கும். அங்கே இருப்பவர்கள் யார் என்றால் தேடப்படும் குற்றவாளிகள். அப்படி எல்லாம் இருக்கும் நிலையில், இங்கே தூக்கு கயிற்றை முத்தமிடவும், கொள்கைக்காக நாங்கள் தயார் என்று இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கம் எங்களுக்கானதல்ல; உங்களுக்கானது! மக்களுக்கானது! என்றார். தமிழ்நாடு ஏன் இன்றைக்கு தனியாக இருக்கிறது என்றால், தந்தை பெரியாரால்தான்.

 படிக்காதே என்றது மனதர்மம். அனைவரையும் படிக்க வைத்தது திராவிடம். ஒவ்வொரு முறையும் மதக் கலவரங்கள், மதவாதம் இந்தியாவை அச்சுறுத்துகிற போது, தமிழ்நாடு மட்டும் எப்படி அமைதி பூங்காவாக இருந்தது என்பதை ஆசிரியர் விவரித்தார். தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து ஞானகுரு என்பவரால் எழுதப்பட்டிருக்கும் "அறியப்படாத இந்து மதம்" என்ற நூலினை அனைத்து இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தி, அந்நூலில் 'சனாதனத்தின் நீட்சியே நீட் தேர்வு' என்ற ஒரு கட்டுரையில் வரும் செய்திகளை எல்லாம் தொகுத்து சொல்லி, சமஸ்கிருதம் படித்தால் தான் ஒரு காலத்தில் மருத்துவம் என்றவர்கள், இன்று நீட் என்கிறார்கள். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த மகிழ்ச்சியில் இருந்தால், இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை என்கிறார்கள்.  இந்த சூழ்ச்சியை எல்லாம் தமிழ்நாடு மட்டும்தான் கண்டறிய முடியும். காரணம், நாம் அணிந்திருப்பது பெரியாரின் கண்ணாடி, நுண்ணாடி என்றார். தமிழ் மொழிக்கு எவ்வளவு மதிப்பு தற்போது இருக்கிறது? செம்மொழி தமிழ் மொழி என்ற அந்தஸ்து கலைஞரால் பெறப்பட்டது. ஆனால் இன்றைக்குத் தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் மொழியின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பினார். இந்த இயக்கம் பகுத்தறிவு இயக்கம். பகுத்தறிவைப் பரப்புங்கள் என்று முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசியிருக்கிறார்.

நாகரீகத்தோடு மட்டுமல்ல, நயத்தக்க நாகரிகத்தோடு முதல்வர் பேசியிருக்கிறார். ஒருபுறம் பிரதமர், அவருக்கு அருகில் ஆளுநர். அவர்கள் முன்னிலையில் நீங்கள் படித்திருக்கலாம், பட்டம் பெற்றிருக்கலாம் ஆனால், அதனைத் தாண்டி பகுத்தறிவைப் பரப்புங்கள், பகுத்தறிவை நம்புங்கள் என்று பேசியிருக்கிறார். பேசிய அமைச்சர் கணேசன் அவர்கள் நன்றி உணர்ச்சியோடு அவற்றை சொன்னாலும் கூட, அவர் சொன்ன செய்திகள் எவ்வளவு அப்பட்டமான உண்மை. இந்த திராவிடர் இயக்கம் எதையெல்லாம் சாதித்து இருக்கிறது என்பதை விவரித்தார். இதுதான் திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்றார். இந்த புரட்சியை மேலை நாடுகளில் நடத்திக் காட்டுவதற்கு ரத்தம் சிந்த தேவை இருந்தது. ஆனால், ரத்தம் சிந்தாத, துளி ரத்தம் சிந்தாத மாற்றத்தை இன்றைக்கு தமிழ்நாடு பெற்று இருக்கிறது. காரணம், நாம் ஏந்தியது அறிவாயுதம். தந்தை பெரியார் கொடுத்த அறிவாயுதம். அந்த அறிவாயுதத்தின் ஒரு வடிவம் தான் விடுதலை நாளிதழ். எண்ணிக்கைக்காக விடுதலையை நாம் பரப்பவில்லை. மாறாக, லட்சியத்தை பரப்புவதற்காக, கொள்கையை பரப்புவதற்காக விடுதலை அனைவரையும் சென்றடைய வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதைப் போல இளைஞர்களுக்கு, "தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்தின் லட்சியம் மாத்திரம் தெரிந்தால் போதாது, அதை அடைவதற்கான நடைமுறைகளை, கருவிகளை தெரிந்து செயல்பட வேண்டும்" என்றார். அதுபோல், நமது லட்சியத்தை அடையும் கருவி தான் விடுதலை. அதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். சிறப்பாக நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு பாராட்டு! பாராட்டு!

 வாழ்க பெரியார்!

 வளர்க திராவிட மாடல் ஆட்சி!

என்று ஆசிரியர் தனது உரையை நிறைவு செய்தார்.

தொகுப்பு: வழக்குரைஞர் மதிவதனி

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:28 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரியலூர், திறந்தவெளி மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ▼  ஆகஸ்ட் (18)
      • 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்...
      • விடுதலை' சந்தா - அமைச்சர் க. பொன்முடி
      • விடுதலை வளர்ச்சி நிதி - சா.தாமோதரன்-மு.வெண்மதி சுய...
      • அரும்பாக்கத்தில் பெரியார் 1000
      • தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா
      • பெரியார் பெருந்தொண்டர் சி. ஏழுமலை சந்தா அளிப்பு
      • ஆத்தூர், சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர...
      • சென்னை-காஞ்சி மண்டல கழகக் கூட்டத்தில் தமிழர் தலைவர...
      • விடுதலை' ஆசிரியராக தமிழர் தலைவர் ஆசிரியர் 60 ஆண்டு...
      • நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் நூலாசிரியர் சுதாகர்...
      • கலைஞர் நினைவு நாளான இன்று (7.8.2022) அவரது நினைவிட...
      • அரியலூர் திறந்தவெளி இளைஞரணி மாநாட்டு முழக்கங்கள்
      • அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...
      • 40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்ட...
      • விடுதலை' சந்தா தொகை ரூ.1,00,000/ கழக வழக்குரைஞர் அ...
      • 50 விடுதலை ஆண்டு சந்தாக்கள் - தென் சென்னை
      • விடுதலை சந்தா (மயிலாப்பூர் பகுதி)
      • தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா வழ...
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.