திங்கள், 1 ஆகஸ்ட், 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா வழங்கல் (தென் சென்னை)


படம் 1 : சுயமரியாதைச் சுடரொளி வி.கே. ராமு, தனம் குடும்பத்தினர் சார்பாக 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 20,000/- (இருபதாயிரம் மட்டும்) கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.கே.ஆர். ரஸ்சல், வி.கே.ஆர். பெர்னார்ட்ஷா, காமராஜ், பெரியார் செல்வி ஆகியோர் உடனிருந்தனர். படம் 2 : தாம்பரம் மாவட்ட இளைஞரணி சார்பாக ம.இனியரசன் 11 விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ. 22,000/- த்தை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல் 29-07-2022). படம் 3: தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.20,000/- வழங்கினார். உடன்: வாசுதேவன். (28.07.2022 , பெரியார் திடல்).

படம் 1 : தென் சென்னை சி. செங்குட்டுவன் 5 விடுதலை ஆண்டு சந்தா ரூ.9,000/-, கோ.வீ. ராகவன் 5 அரையாண்டு விடுதலை சந்தா ரூ.2,850/-அய்  கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர், இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி உள்ளனர். படம் 2;  சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி  தமிழர் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வடசென்னை மாவட்டம் - 10, தாம்பரம் மாவட்டம் - 5  என மொத்தம் 15 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 30,000/- மும் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டுக்கான நன்கொடை ரூ.5000மும் வழங்கினார். (28.07.2022, பெரியார் திடல்). படம் 3: பேரா. முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 15 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.30,000/- வழங்கினார்.  (பெரியார் திடல் 29-07-2022)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக