தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

சனி, 6 ஆகஸ்ட், 2022

அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!



  July 30, 2022 • Viduthalai

 *    ‘விடுதலை’ சந்தா இலக்கை எட்டுவீர்!  நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடக்கட்டும்!

* தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் ஆபத்தானது!

* உடற்கொடை, குருதிக்கொடை, விதவைத் திருமணம், ஜாதி மறுப்புத் திருமணம் புரிவீர்!

மதவாத ஒன்றிய அரசை அகற்ற ஓரணியில் சேர்வீர்!

ஒரே மதம் என்போர், ஒரே ஜாதி என்று சொல்லட்டுமே!!

‘நீட்’, ‘கியூட்’ தேர்வுகளை நீக்குக!



அரியலூர், ஜூலை 30 திராவிடர் கழக இளைஞரணி செயல்பாடுகள், சமூகநீதி, மதவாத அரசு எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு, ‘நீட்’, ‘கியூட்’, தேசிய கல்வி எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்த 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

விடுதலை சந்தா சேர்ப்பு

நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டு, தந்தை பெரியாரால் நாளேடாக நிறுவப்பட்ட, தமிழர்களின் மூச்சுக்காற்றாம் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக கடந்த 60 ஆண்டுகள் அரும்பணியாற்றி, எண்ணற்ற இடையூறுகளுக்கும், இன்னல்களுக்கும், இழப்புகளுக்கும், தடைகளுக்கும் மத்தியில், கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் எவ்வித தொய்வும் இன்றி, வீறுநடை போடவைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும்பணிக்கு இம்மாநாடு தன் செம்மாந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள் என்பதைத் தனிப்பட்ட சிறப்பாகக் கருதாமல், அதையும் ‘விடுதலை’யின் வளர்ச்சிக்கும், அதன் மூலம் தமிழர் தம் உரிமைக் குரல் சென்று தீர - வென்று வரவேண்டும் என்னும் நோக்கோடு செயலாற்றும் நம் உயிரனைய தலைவராம் ஆசிரியருக்கு 60,000 ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்டித் தரும் பணியை விரைந்து முடித்திடவும், இளைஞர்களுக்கு அறிவூட்ட ‘விடுதலை’யை வீடுதோறும் கொண்டுபோய்ச் சேர்த்திடவும் தொடர்ந்து செயலாற்றுவது என்று திராவிடர் கழக இளைஞரணி உறுதியெடுத்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

பெரியார் 1000 வினா - விடை

பள்ளி மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரை மிகப்பெரிய அளவில் அறிமுகப் படுத்தி, பகுத்தறிவு - இன உணர்வூட்டிய “பெரியார் 1000 வினா-விடைப் போட்டி”யை வரும் ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திட உள்ளது. தமிழ்நாடு அரசின் கல்வித்துறையும் அனுமதி அளித்துள்ளது. அதில், பல லட்சம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்திடமுழு வீச்சில் செயலாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

கல்வியும் -  மாநில உரிமையும்

மாணவர்களின் கல்வி உரிமையை மோசமாகப் பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகப் புகுத்துவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வியில் தனியார் மயத்தைத் திணிப்பது, ஒன்றிய அரசின் அளவிறந்த தலையீடுகள், இந்துத்துவ நோக்கில் வரலாற்றை மாற்றி எழுதுதல் என்னும் முனைப்போடு வரலாற்றுத் திரிபில் ஈடுபடும் செயல்பாடுகள், ‘நீட்’,  ‘கியூட்’ தேர்வுகளில் தொடர்ந்து,  மாநில உரிமைப் பறிப்பு என்று செயல்பட்டுவரும் ஒன்றிய அரசின் கல்விச் சிதைப்பு, சமூகநீதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று போராட்டக் களம் காண திராவிடர் கழக இளைஞரணி சித்தமாக இருக்கிறது என்பதை இம்மாநாடு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

ஆளுநரைத் திரும்பப் பெறுக!

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அறிந்திருந்தும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடைகளை தேசியக் கல்விக் கொள்கைக்கான பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, சனாதனத்துக்குச் சிம்மாசனம் தரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழ்நாடு ஆளுநருக்கு இக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் அமைதிச் சூழலைக் குலைக்கும் நோக்கம் கொண்டது என்று இம்மாநாடு குற்றம் சாட்டுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்திலும் மாநில அரசைக் கலக்காமல் தன்னிச்சையாகவே செயல்படுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகளுக்கும், நெறிமுறைகளுக்கும் மாறாகச் செயல்படுவதோடு, அதன் அடிப்படைக் கட்டமைப்புகளில் முதன்மையானதான மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயலாற்றும் தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 5:

பிரச்சாரப் பணியில் இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் தந்தை பெரியார் கருத்துகளையும், இயக்கச் செயல்பாடுகளையும் பதிவு செய்வதைப் பிரச்சாரத்திற்கான பெருவாய்ப்பாகக் கருதி, கழக இளைஞரணி செயல்படுவது என்றும், கழகத்தின் பிரச்சாரப் பணிக்கு பேச்சு, எழுத்து, கலைத் துறை, மந்திரமா-தந்திரமா உள்ளிட்ட மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், மின்னணு ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் மூலம் பிரச்சாரப் பெரும்படையை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் எண் 6:

மதவாத சக்திகள் மீதான 

நடவடிக்கைகளை விரைவுபடுத்துக!

உண்மைக்கு மாறான தகவல்களையும், புரட்டுகளையும் தொடர்ந்து பரவவிட்டு, சமூகப் பதட்டத்தை உருவாக்கிடும் இந்துத்துவ கும்பலையும், அதற்குத் துணை புரியும் ஊடகங்களையும் முறையாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

பள்ளி-கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் ஷாகா, யோகா என்ற பெயர்களில் ஊடுருவ நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கும், பல்வேறு பெயர்களில் இயங்கும் அதன் மறைமுக அமைப்புகளுக்கும் இடம் தந்துவிடாமல் இவர்களின் நடவடிக்கை உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படவேண்டும்.

தமிழ்நாடு இதுவரை காணாத வகையில் வன்முறைக்கான திட்டமிடல்களிலும், அதற்கான முனைப்புகளிலும் சமூக ஊடகத்தின் பங்கை அண்மைக்காலத்தில் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஜாதி, மத வெறியைக் கூர்தீட்டிட முயலும் பாசிசச் சக்திகளை எவ்விதத் தயக்கமுமின்றி முளையிலேயே கெல்லி எறிய வேண்டியது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ மேற்கொள்ளப்படவேண்டிய அவசர அவசிய நடவடிக்கை என்பதையும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

மாணவர் நலன்

கல்வி நிலையங்களில் மாணவர்கள் - ஆசிரியர்கள் உறவிலும், பள்ளிகளின் அன்றாட நிகழ்வுகளிலும் உளவியல் சிக்கல்கள் எழுவதையும் கவனத்தில் கொண்டு, மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கி நெறிப்படுத்தவும், அதற்குத் தேவையான பயிற்சியையும், விளையாட்டு, கலை நிகழ்வுகள், தனித்திறன் போட்டிகள் மூலம் அவர்களின் பல்துறைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் மூலமும் இந்நிலை சரியாக்கப்படவேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. இத் திசையில் தமிழ்நாடு அரசின் தொடர் செயல்பாடுகளை இம் மாநாடு நம்பிக்கையோடு எதிர் நோக்குகிறது

பள்ளி-கல்லூரி மாணவர்கள் எவ்வித போதைப் பழக்கங்களுக்கும் ஆளாகிவிடாமல் அவர்களை நெறிப்படுத்துவதும், தன்னம்பிக்கை குறைவிலோ, அநீதியை எதிர்க்கத் துணி வில்லாமலோ தவறான முடிவுகளை மேற்கொண்டுவிடாமல் காக்க வேண்டியது அவசியம் என்பதையும், அதற்கான பணிகளில் அறிவியல் சிந்தனையோடு கூடிய அமைப்புகளையும், உளவியலாளர்களையும் ஈடுபடுத்திட வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. மாணவர்கள் மத்தியில் ஜாதீய உணர்வை வளர்க்கும் வகையில் ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் தனித்தனி வண்ணக் கயிறுகளைக் கட்டி வருவதைக் கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8:

நடைபாதைக் கோயில்களை அகற்றுக!

உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும், பல முறை கண்டிக்கப்பட்டும் கூட நடைபாதைக் கோயில்கள் இன்னும் நிறைய தோன்றுவதும், சிறிய பொம்மைகள் வைக்கப்பட்ட இடங்களில் அவை விரிவாக்கப்பட்டு கோயில்களாக உருவாவதும், அரசுக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் கோயில்கள் கட்டப்பட முயற்சிகள் எடுக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் கடவுள் பொம்மைகளை வைத்து, அவற்றை வழிபாட்டிடங்களாக மாற்றி, மெல்ல மெல்ல மதவெறியாளர்கள் அப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பொது அமைதிக்கு ஆபத்தான சூழலை உருவாக்க முயற்சிப்பதும் கடந்து செல்லக் கூடியவையல்ல. அவற்றை சட்டரீதியாகத் தடுத்திட இருக்கும் வாய்ப்புகளை அரசு பயன்படுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் மதச்சார்புடைய நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மதச்சார்பின்மை  அடையாளத்தைப் பேண வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. 

தீர்மானம் எண் 9: 

வடமாநிலத்தவரின் ஆதிக்கம்  

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறைகளின் வேலைவாய்ப்புகளில் சட்ட விரோதமாக வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது. வங்கிகளில் தமிழ் தேர்வு அவசியமில்லை என்பதும், வங்கிச் செயல்பாடுகளில் தமிழைத் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி, ஆங்கிலம் என்னும் இருமொழிகளைக் கொண்டுவருவதற்கு அச்சாரமாக இந்தப் போக்கு இருப்பதையும் காண முடிகிறது. இந்த நிலை தொடர்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதுடன், தமிழ்நாடு அரசின் பணி வாய்ப்புகளிலும் சட்டத்தின் சந்துபொந்துகளைப் பயன்படுத்தி, வடநாட்டவர் ஆக்கிரமிப்புத் தொடர்வதை (எ.கா: பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள்) மிகுந்த எச்சரிக்கையுடன் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது. தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை விரைவுபடுத்திடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

மண்டலத்திற்கு ஓர் இடத்தில் சனி, ஞாயிறு ஆகிய இருநாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது எனவும், பெருவாரியான இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து  பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை ஒரு முக்கிய திட்டமாகக் கருத வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

பெரியார் சமூகக் காப்பு அணி 

பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம்களை பரவலாக முக்கியப் பகுதிகளில் நடத்துவது, எந்த நேரத்திலும் எதற்கும் தொண்டாற்ற தயாராகவுள்ள உடல் வலிவும், உள்ள உறுதியும் கொண்ட இளைஞர்களை மாவட்டத்திற்கு 15 நபர்கள் என்று தேர்வு செய்து, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாமில் பயிற்சி பெறச்செய்வது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு முன்னின்று உதவும் வகையில்  பணியாற்றுவது என்று திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த முழுவீச்சில் உழைப்பதென்று தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் எண் 12:

பெரியார் வீர விளையாட்டுக் கழகம்

தமிழர்களின் பண்பாட்டுக் கலையான சிலம்பம், சடுகுடு, உடல்வலிவை மேம்படுத்தும் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்கும் பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் கிளைகளை தமிழ்நாடு தோறும் உருவாக்கி, அதற்கான போட்டிகள் மூலம் இருபால் இளைஞர்களையும் ஊக்கப்படுத்திடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 13:

கழக இளைஞரணியை வலுப்படுத்துதல்

திராவிடர் கழக இளைஞரணி, மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, கிராமக் கிளை, ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வட்டக் கழக வாரியாக இளைஞரணி அமைப்புகளை உருவாக்குவது.  இவ்வமைப்புகளுக்குப்  புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கழக இளைஞரணி அமைப்பைப் பரவலாக வலுப்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.  

தீர்மானம் எண் 14:

தெருமுனைக் கூட்டங்கள், 

கிராமப் பிரச்சாரம் 

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு மற்றும் பலமுனைகளில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ‘விடுதலை’ அறிக்கைகள், தலையங்கங்களைக் கொண்டு விளக்கியும், பகுத்தறிவுப் பிரச்சாரத் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்திடுவதை தொடர் பணியாக மேற்கொள்வது எனவும், கிராமப் பிரச்சாரத்தில் போதிய கவனம் செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் எண் 15: 

உடற்கொடை - குருதிக் கொடை - 

உற்சாகம் காட்டுக!

உடற்கொடை - குருதிக் கொடை என்பவை தலை சிறந்த தொண்டறம் என்பதால் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 16:

விதவைத் திருமணம் - ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு முன்னுரிமை

விதவைத் திருமணம், ஜாதி ஒழிப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்துவது என்றும், வாழ்வில் இவற்றைச் செயல்படுத்துவதில் முன்னுரிமை கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 17: 

உயிருக்கு ஊறு விளைவிக்கும் பழக்கவழக்கங்களைத் தடை செய்க!

குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடுவது, புனித நீர் என்று ஆறு, குளங்களில் நீரை குடிப்பது, தீர்த்தம் சாப்பிடுவது என்பவை ஆபத்தை விளைவிக்கும் செயல்பாடுகள் என்பதால் இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று ஒன்றிய, மாநில  அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. கோயில்களில் மத சம்பந்தப்பட்டவை என்பதற்காக உயிருக்கு ஆபத்தான இவற்றை அனுமதிக்க கூடாது; இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ)  விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரான பழக்கத்தில் இருக்கும் மூடத்தன்மைகளைக் களைய வேண்டியது மக்கள் நல அரசுகளின் அடிப்படைக் கடமை என்பதையும் இம்மாநாடு நினைவூட்டுகிறது.

தீர்மானம் எண் 18:

சமூகநீதிப் பாதுகாப்புக் களம்

ஒன்றிய அரசின் உயர் அதிகாரப் பணியிடங்கள், செயலாளர்கள் மட்டத்தில் சமூகநீதிமுற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதோடு, ஒன்றிய அரசின் பிற பணி வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் படி நிரப்பப்படாமல் இருப்பதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இதே நிலைமை திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. சமூகநீதிப் புறக்கணிப்பை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது என்பதோடு, கடினமாகப் படித்து அரசின் நிர்வாகத்துறையில் இடம்பெறப் போராடும் ஏராளமான இருபால் இளைஞர்களின் கனவுகளை நசுக்கும் இத்தகைய போக்கு கண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். இடஒதுக்கீட்டை விதிவிலக்கு இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு நியமித்துள்ள சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவைப் போல, ஒன்றிய  அரசு அளவில் குழு நியமிக்கப்பட்டு, அதற்கு உரிய சட்ட அங்கீகாரமும், அதிகாரமும் வழங்கப்படவேண்டும் என்றும், இதுவரை இட ஒதுக்கீட்டின் படி நிரப்பப்பட வேண்டிய இடங்களில் பணி நியமனங்கள் செய்யப்படாமல் இருந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும். ஏட்டளவில் மட்டும் இட ஒதுக்கீடு என்ற ஏமாற்றுத்தனத்தை வடபுலத்து இளைஞர்கள் மத்தியிலும் அம்பலப்படுத்தி அவர்களின் உரிமைக் குரலையும் எழுப்பவேண்டியிருப்பதையும் இம்மாநாடு கவனத்தில் கொள்கிறது. சமூகநீதிப் பாதுகாப்புக்கான களத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் முனைப்புடன் செயலாற்றுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 19 (அ):

பிஜேபி தலைமையிலான அரசு

ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பிஜேபி தலைமையிலான அரசு - அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற தன்மையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம், ஜனநாயக கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வேலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டுவருவதாலும் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையிலும் ஜனநாயகப் பண்புகளுக்கு விரோதமாக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், வரும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பாசிச - மதவாத பிற்போக்கு ஜனநாயக விரோத அரசை அகற்றும் வகையில் மதச்சார்பின்மை, சமூகநீதியில், நம்பிக்கையுள்ள சக்திகள், கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று முற்போக்குச் சக்திகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 19 (ஆ):

ஒரே ஜாதி என்று கூறட்டும்!

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்போர் ஒரே ஜாதி என்று கூற முன்வருவார்களா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறி வரும் கருத்துப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை என்ற வினாவை நாடெங்கும் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:10 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரியலூர், இளைஞரணி, தீர்மானம், மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ▼  ஆகஸ்ட் (18)
      • 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்...
      • விடுதலை' சந்தா - அமைச்சர் க. பொன்முடி
      • விடுதலை வளர்ச்சி நிதி - சா.தாமோதரன்-மு.வெண்மதி சுய...
      • அரும்பாக்கத்தில் பெரியார் 1000
      • தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா
      • பெரியார் பெருந்தொண்டர் சி. ஏழுமலை சந்தா அளிப்பு
      • ஆத்தூர், சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர...
      • சென்னை-காஞ்சி மண்டல கழகக் கூட்டத்தில் தமிழர் தலைவர...
      • விடுதலை' ஆசிரியராக தமிழர் தலைவர் ஆசிரியர் 60 ஆண்டு...
      • நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் நூலாசிரியர் சுதாகர்...
      • கலைஞர் நினைவு நாளான இன்று (7.8.2022) அவரது நினைவிட...
      • அரியலூர் திறந்தவெளி இளைஞரணி மாநாட்டு முழக்கங்கள்
      • அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...
      • 40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்ட...
      • விடுதலை' சந்தா தொகை ரூ.1,00,000/ கழக வழக்குரைஞர் அ...
      • 50 விடுதலை ஆண்டு சந்தாக்கள் - தென் சென்னை
      • விடுதலை சந்தா (மயிலாப்பூர் பகுதி)
      • தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா வழ...
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.