திங்கள், 3 ஜூன், 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர்மாலை வைத்து மரியாதை



விடுதலை நாளேடு 
Published June 3, 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த கலைஞருடைய உருவப்படத்திற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவெற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் மோகன், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வெற்றிச்செல்வி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மு.சண்முகப்பிரியன், அரும்பாக்கம் தாமோதரன், தனலட்சுமி தங்கமணி, அன்புமணி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் (சென்னை, 3.6.2024)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக