செவ்வாய், 25 ஜூன், 2024

மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 94ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் மரியாதை



Published June 25, 2024

மேனாள் இந்தியப் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 94ஆவது பிறந்த நாளான இன்று (25.6.2024) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி.சிங் உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: சென்னை நில கல்லூரி முதல்வர் முனைவர் இரா. ராமன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மயிலை சேதுராமன், தனலட்சுமி தங்கமணி, மரகதமணி, தாம்பரம் மோகன்ராஜ், அரும்பாக்கம் தாமோதரன், சுரேஷ் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

 

சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர், பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் 94ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று(25.6.2024) காலை 10 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வழக்குரைஞர் வேலவன், தாம்பரம் சு.மோகன்ராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், த.மரகதமணி, பவானி, உத்திரா, தங்க. தனலட்சுமி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, போளூர் பன்னீர்செல்வம், கு. சோமசுந்தரம், மடிப்பாக்கம் ஜெயராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், நா.பார்த்திபன், க.கலைமணி, செந்தமிழ் சேகுவோரா, பூவை. தமிழ்ச் செல்வன், மாணிக்கம் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழர் தலைவரை முன்னதாக வந்திருந்த சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. ராமன் அவர்கள் வரவேற்றார். மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் இரகு. இக்கல்லூரியின் தி.மு.க. மாணவர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் அரிகரன், கோகுல், ஈஸ்வரன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக