புதன், 27 ஜனவரி, 2021

அருமைத் தோழர் சைதை எஸ்.பி.தட்சிணாமூர்த்தி அவர்கள் 25.2.1992 அன்று இயற்கை எய்தினார்.


எஸ்.பி.தட்சணாமூர்த்தி

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், முன்னாள் தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவரும் ‘மிசா’வில் ஓராண்டு சென்னை சிறையில் இருந்தவரும் இயக்கப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு சிறை சென்றவருமான அருமைத் தோழர் சைதை எஸ்.பி.தட்சிணாமூர்த்தி அவர்கள் 25.2.1992 அன்று இயற்கை எய்தினார். நான் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, சென்னை மாவட்ட தலைவர் சைதை எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர்கள் எம்.கே.காளத்தி ஆகியோருடன் சைதை மசூதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். அவரின் துணைவியார் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில்  ஆறுதல் கூறினோம்.

26.2.1992 அன்று இறுதி ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்று அவரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தப்பட்டது.

பி.ஈ.பக்தவச்சலம்

அதேநாளில் (25.2.1992) வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும், திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினரும் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கடைசி மூச்சு அடங்கும் வரை கட்டுப்பாடு மிக்க கழக செம்மலாக வாழ்ந்த சென்னை அயன்புரம் பி.ஈ.பக்தவத்சலம் அவர்கள் மறைவுற்றார். அவரது இழப்பு கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது என்று குறிப்பிட்டு, அவரது இறுதி ஊர்வலத்தில் கழகத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.  தலைமை நிலையத்தின் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் என்கிற முறையில்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏராளமான கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக