திங்கள், 25 ஜனவரி, 2021

குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி!

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குத் துரோகம், மண்டல் கமிஷன் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகம்,  குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆரம்பத்திலிருந்தே போட்டு வந்த முட்டுக்கட்டை, குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க மறுத்த அநீதி ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி காட்ட 9.11.1991 அன்று என் தலைமையில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்களை விளக்கிப் பேசினேன். கழகத் தோழர்களுடன் கைதாகி சிறை சென்றேன்.

 காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவருக்கு ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கருப்புக் கொடி காட்டும் காட்சி.

 கைதாகி மீனம்பாக்கம் முத்து திருமண மண்டபத்தில் இருந்த போது பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் _ திருமகள் ஆகியோரின் செல்வன் இசையின்பன் மதுரை முனியசாமி _ பொன்னுத்தாய் ஆகியோரின் மகள் செந்தில்குமாரி(தற்போதைய பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். உரிமைப் போரில் கைது செய்யப்பட்டிருந்த போது நடைபெற்ற இந்தத் திருமணம் ஏடுகளில் பரபரப்பானது.

 இசையின்பனுக்கு செந்தில்குமாரி மோதிரம்

அணிவிக்கும் காட்சி

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி, 

- உண்மை இதழ், 1-15.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக