புதன், 27 ஜனவரி, 2021

சேலத்தில் நீதிக்கட்சி பவழவிழா மாநாடு (14, 15.2.1992 )

சேலத்தில் 14, 15.2.1992 ஆகிய இரு நாள்களிலும் முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடும், இரண்டாம் நாள் நீதிக்கட்சி பவள விழா மாநாடும் (சமூகநீதி மாநாடும்) சிறப்பாக நடைபெற்றன. முதல் நாள் மாநாட்டில் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகத்து மய்ய அரசு நிறுவனங்களின் அலுவல் மொழியாகத் தமிழே இருக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்க்கு தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும், அனைத்திலும் தமிழ்ப் பெயர்களே சூட்ட வேண்டும், தமிழகத்தில் இதர மொழிப் பெயர்ப் பலகைகள் கூடாது, புரட்சிக்கவிஞர் நூலை அரசே மலிவு விலையில் வெளியிட வேண்டும், தமிழிசை இயக்கத்தின் தேக்க நிலையை நீக்குக, கர்நாடகத் தமிழர்கள் மீண்டும் தத்தம் இருப்பிடங்களில் வாழ உத்தரவாதம் தேவை மற்றும் தமிழிசை இயக்கத்தின் தேக்க நிலையை நீக்கவும், ‘தடா’ சட்டப் பிரயோகத்தை தமிழக அரசு விலக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

15.2.1992 அன்று சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாளில் திராவிடர் கழகத்தின் தென்மாநில சமூகநீதி மய்யத்தின் தலைவர் தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நீதிக்கட்சி பவளவிழா (75ஆம் ஆண்டு) மாநாடு நடந்தது. அதில் 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானமாக பொது நிறுவனங்கள், சாலைகள், வளாகங்களுக்கு நீதிக்கட்சி தலைவர்கள் பெயர்களை சூட்டுக, வரலாற்று நூல்களில் நீதிக்கட்சி உரிய இடம் அளிக்க வேண்டும், ஜாதி ஒழிப்பு மாநாடுகள், பெண்கள் இழிவுகள் நீக்கவும், இடஒதுக்கீடு வழங்கவும், பெண்ணுரிமை பாதுகாப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பத்தே நிமிடத்தில் முடிந்த 7 மண விழாக்கள் குறிப்பிடத்தகுந்ததாகும். துண்டு ஏந்தி வழக்கு நிதியைத் திரட்டி வந்தேன். கருஞ்சட்டைப்படை தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று சபதம் செய்தனர். 18 மணி நேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்று சாதனை படைத்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக