செவ்வாய், 12 ஜனவரி, 2021

புரடசிக்கவிஞர் பிறந்த நாள் விழா -1984

சென்னை கடற்கரையில் காந்தி சிலை அருகே பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட புரடசிக்கவிஞர் பிறந்த நாள் விழாவான தமிழர் கலை விழா 29, 30.04.1985 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இரண்டு நாளும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டார்கள். “இந்தக் கலைவாணன் பொம்மலாட்டம் குழுவினுடைய அரும்பணியினை கொள்கை விளக்கப் பணியினை தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துக்களை, சிற்றூர், பட்டிதொட்டி, குக்கிராமம் இங்கெல்லாம் பரப்புகின்ற வகையில் இந்தக் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்தக் குழுவின் அரும்பணியாற்றி வருகின்ற முத்துக்கூத்தனுக்கும், அருமைசெல்வன் கலைவாணனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

இவ்விழாவில் நான் உரையாற்றும்போது, “பார்ப்பனர்கள் என்னை அழிக்க வேண்டும் என்ற பார்ப்பன பெரு உள்ளங்கள் பார்ப்பன மூலவர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் அதிலே வெற்றி பெறாமல் போய்விடுவார்களா அல்லது நாங்கள் அந்த வெற்றியைத் தாண்டி வெற்றி பெற்றுவிடுவோமா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. என்னுடைய இறுதி மூச்சு எத்தனை நாளைக்கு இருக்கும் என்பதைப் பற்றி யாருக்கும் உத்தரவாதம் கிடைக்காது என்பதைப் போல -_ அந்த இறுதி மூச்சு என்னிடமிருந்து பிரிக்கப்படுகின்ற வரையிலே மானத்தையும், அறிவையும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊட்டுவதற்குத் தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியிலே, புரட்சிக்கவிஞர் வழியிலே நின்று நித்தம் நித்தம் உழைப்பேன்’’ என்று உரை ஆற்றினேன். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக மாநாடு போல் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக