செவ்வாய், 12 ஜனவரி, 2021

குட்டிமணி தங்கதுரை படுகொலை

08.08.1983 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த ஈழத் தமிழர்கள் பாதுகாப்புக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினேன். “குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற இளைஞர்கள் சரித்திரத்திலே இருபதாம் நூற்றாண்டுக்கான இளம் சிங்கங்கள் வீரர்கள் அவர்கள்.’’

குட்டிமணி அவர்கள், “நான் இறந்த பிறகு என் கண்களை எடுத்து ஒரு கண்ணில்லாத தமிழனுக்குக் கொடுங்கள். அவன் பார்வை பெறட்டும். அந்த பார்வை மூலமாக சுதந்திர மண்ணாக என்னுடைய மண் மலர இருப்பதை நான் பார்த்து மகிழ இருக்கிறேன். தான் உயிரோடு இல்லாவிட்டாலும்கூட’’ என்று அவர் உணர்ச்சியோடு சொன்னார்.

அதை மனதில் வைத்துக்கொண்டு சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையைத் திறந்து வெளியே கொண்டுவந்து நிறுத்தி அடித்துக் கொன்று முதலிலே அவருடைய கண்களை கீழே போட்டு காலால் நசுக்கினார்கள். இத்தகைய கொடுமைகளைக் களைய தமிழ்ப் பெருமக்களை நாங்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் வேண்டிக் கொள்கிறோம்’’ என்று உணர்வு பொங்க வேதனையால் நெஞ்சுவேகப் பேசினேன்.

-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1.8.18



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக