வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில்  ஆ.இராசா எம்.பி.

பெரியார் - அம்பேத்கர் என்கின்ற இரு கருவிகளைப் பயன்படுத்தி, போர்த் தளவாடங்களைப் பயன்படுத்தி, இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவோம்!

பெரியாரைப் போன்று நாணயமான ஒரு தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே பார்க்க முடியாது


தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில்  ஆ.இராசா எம்.பி.




சென்னை, செப்.26  பெரியாரைப் போன்று நாணயமான ஒரு தலைவரை, இந்தியாவில் மட்டுமல்ல,  உலகத்தி லேயே பார்க்க முடியாது. எதையும் சொல்லிவிட்டுத்தான் செய்திருக்கிறார் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் .

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு


பிறந்த நாள் பொதுக்கூட்டம்


17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ஆ.இராசா  அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இன உணர்வோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தந்தை பெரியார் அவர்களின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தின் தலைவர் தென் சென்னை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மதிப்பிற்குரிய வில்வநாதன் அவர்களே,

வரவேற்புரை நிகழ்த்தியிருக்கின்ற மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி அவர்களே,

உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மதிப்பிற் குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எனக்கு முன் உரையாற்றிய திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய சகோதரி அருள்மொழி அவர்களே,

பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் அன்புராஜ் அவர்களே, பொருளாளர் குமரேசன் அவர்களே, வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களே,

நிறைவாக நிறைவுப் பேருரை நிகழ்த்தவிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் பெருந்தகை அவர்களே,

வருகை தந்திருக்கின்ற பெரியாரின் பெருந்தொண்டர் களே, பெரியோர்களே, தாய்மார்களே, பத்திரிகையா ளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணி வான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்திற்கே


ஆயிரம் கேள்விகள் கேட்கும் காவல்துறை


எனக்கு முன் உரையாற்றிய அருள்மொழி அவர் களும், சுப.வீ. அவர்களும் தந்தை பெரியாருடைய இன்றைய தேவை, அவருடைய பெருமை, அவருடைய சிந்தனையைப்பற்றியெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றுகின்றபொழுது சொன்னார், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட் டத்திற்கே ஆயிரம் கேள்விகளை காவல்துறை கேட்கிறார்கள்; அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னார்; அதி லொன்றும் ஆச்சரியமில்லை.

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கம், இரட்டை இலை அரசாங்கமல்ல; அது நீண்ட காலமாக தாமரை அரசாங்கமாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

இரட்டை இலை அரசாங்கமாக இருந்தால்கூட, பெரி யாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண் டதைப்போல, கொஞ்சம் நஞ்சம் ஏற்றுக்கொண் டிருப்பார்கள். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசு, மிக மோசமான பாரதீய ஜனதாவினுடைய அரசு என்பதினால், பெரியாரை அவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள் என்பதில் வியப்பேதுமில்லை.

பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய


தீர்க்கதரிசி


ஆனால், இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய ஒரு பாடத்தை உணர்த்துகிறது. ஆசிரியர் அவர்கள் உரை யில் இங்கே குறிப்பிடவிருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரையில், அன்றைக்கு இருந்த கலைஞர் ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டால், என்னாகும் என்று பயந்தார்களோ, கணித்தார்களோ அவையெல் லாம் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆசிரியர் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டிட உள் ளார்கள். பெரியார் அவர்கள் எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி என்பதை பேசியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அருள்மொழி அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், உலக அரசியலை, உலகத் தத்துவத்தை, மானிடப் பற்றை எப்படியெல்லாம் பெரியார் சிந்தித் திருக்கிறார், அவருடைய மண்டைச் சுரப்பை - இந்த உலகிற்கு ஒரு மானிடப் பற்றாளராக எப்படித் தெரிந்தி ருக்கிறது என்பதையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்.

நானும் அடிக்கடி சொல்கின்ற பெரியாருடைய மேற்கோள் ஒன்று, சுபவீரபாண்டியன் அவர்களும் சொல்வார்கள். பெரியார் அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகளில், மிக முக்கியமான வாக்கியங்களை ஒன்றிரண்டை அடிக்கடி நான் பேசுவேன், யோசிப்பேன், அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன்.

அதேபோன்று அம்பேத்கர் அவர்கள் சொல்வார்கள், Universal Brotherhood - சர்வதேச சகோதரத்துவம் - அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

பெரியாரை எதிர்ப்பவர்கள் யார்?


அதுபோல, பெரியார் அவர்களுடைய வார்த்தை களில் எனக்குப் பிடித்தது, அவர் சொல்கிறார்,  எது நாகரிகமான வாழ்க்கை என்றால், நமக்கு என்னென்ன தேவைகள், என்னென்ன பெருமைகள், என்னென்ன வசதிகள் வேண்டுமென்று விரும்புகிறோமோ, அதே வசதி, அதே பெருமை, அதே நண்பர்கள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று வாழுகின்ற வாழ்க்கைதான் நாகரிகமான வாழ்க்கை.

பெரியாருக்கு என்ன பிரச்சினை? திராவிடத்திற்கு என்ன பிரச்சினை?

எல்லோருக்கும் வேண்டிய என்னென்ன தேவைகள் வேண்டுமோ, பெருமைகள் வேண்டுமோ, வசதிகள் வேண்டுமோ, நன்மைகள் வேண்டுமோ இவையெல்லாம் கிடைக்கவேண்டும் என்று பெரியார் சொன்னார். இந்தத் தேவைகளும், பெருமைகளும், நன்மைகளும் பிறருக் குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந் தவர்கள் பெரியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் யார்? என்று சொல்லிவிட்டு,


பொதுவாழ்க்கைக்கு வந்ததில்லை


அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், எனக்குத் தெரிந்து, எந்தத் தலைவரும் நான் யார்? என்று சொல்லிவிட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்ததில்லை.

தனியாகவே தலைப்பிட்டு, சொந்தப் பேனாவைக் கொண்டு எழுதுகிறார்.

நான் யார்?

‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகத்தில் இருக்கின்ற பிற சமுதாயத்தின ரைப்போல், அறிவும், மானமும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினை மேற்போட்டுக் கொண்டிருக்கி றேன். அந்தத் தொண்டை செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, அந்தத் தொண்டை வேறு யாரும் இந்த நாட்டில் செய்ய முன்வராத காரணத்தினால், நான் என்மீது போட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல,


உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள்!


நான் யார் என்று சொல்லிவிட்டு, பொது வாழ்க்கைக்கு வந்து, இந்த மண்ணில் இருக்கின்ற ஜாதியக் கொடு மைகளை களையவேண்டும் என்பதற்காக, தன் வாழ் நாட்களை, வத்திக் குச்சிகளாகக் கிழித்துப் போட்டுக் கொண்ட ஒரு மாபெரும் மனிதருக்குத்தான், பிறந்த நாள் விழாவினை, தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள் - நம்முடைய சுப.வீ. அவர்கள் சொன்னார்கள், மோடி டிரண்ட் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை இப்பொழுது. ஏனென்றால், மோடியினுடைய ஆளுமை என்பது இந்தியாவிற்குள்ளேகூட கிடையாது. இந்தியாவில்தான் தமிழ்நாடு இல்லையே!

என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார், ‘‘நீங்களெல்லாம் பெரியாரிஸ்ட்டுதானே, அத்திவரதரை ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்களே? என்றார்.

அத்திவரதரை போய் பார்த்த ஒரு கோடி பேர்தான், திராவிட முன்னேற்ற கழக அணிக்கு வாக்களித்து, தந்தை பெரியார் அணிக்கு வாக்களித்து, அண்ணா வினுடைய அணிக்கு வாக்களித்து, கலைஞர் அணிக்கு வாக்களித்து - எங்களுக்கு இவர்கள்தான் தேவை என்று சொன்னார்கள்.

கடவுளை நம்பும் நம்பிக்கையாளர்களுக்கும் - கடவுளை நம்பாத


தந்தை பெரியார்தான் தலைவர்


அதற்கு என்ன பொருள் என்றால், 98 விழுக்காடு பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கடவுளை நம்பாத தந்தை பெரியார்தான், தலைவராக இந்த நூறாண்டு காலம் இருக்கப் போகிறார் என்பதற்கு அச்சாரமாகத்தான் அத்திவரதரைப் போய் பார்க்கிறார்கள்; எங்களுக்கொன்றும் ஆட்சே பனையில்லை.


பெரியாருக்கு என்ன பிரச்சினை? கடவுளுக்கு என்ன பிரச்சினை என்று அவரே சொன்னாரே,

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது,

கண்ணில் படக்கூடாது,

பார்த்தால் குற்றம்,

தெருவிலே நடக்கக்கூடாது,

படிக்கக்கூடாது,

தண்ணீர் எடுக்கக்கூடாது

என்பதைப்போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் எரிக்காமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழச் செய்யாமலோ, பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, கடவுள் என்று சொல் கிறானே? வேறு தேசத்தில் வேற்றுமைகளே இல்லையா!

பெரியார் சொல்கிறார்:


பெரியார், 1934, 1935 ஆம் ஆண்டிலேயே சொல்கிறார்,

எனக்குத் தெரிந்து ஒரு மதத்தில், ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களை பெருமளவில் இருக் கிறவர்களை, படிக்கக்கூடாது என்று தரித்திரர்களாகவும், கல்வி அறிவு அற்றவர்களாகவும் வைத்திருக்கின்ற கொள்கையைக் கொண்ட ஒரு மதம் உலகத்திலேயே இந்து மதத்தைத் தவிர இன்னொரு மதம் இல்லை.

1946 ஆம் ஆண்டில், அம்பேத்கர் ஒரு புத்தகத்தில் எழுதுகிறார், இந்து மதம் என்று மட்டும் சொல்லாமல், பிராமின் என்கிற வார்த்தையை சேர்க்கிறார்.

No where in the world that the makers of the constitution have been compelled to deal such  matter.


No intellectual class in the world has prosesecuted the intelligence to find out a philosophy to keep its fellow men in a perpectual state of ignorance and poverty as the Brahmins have done in name of Hindusium.


பெரும்பான்மை மக்களை, தற்குறிகளாகவும், வறுமைக்குள்ளானவர்களாகவும்...


இந்து மதத்தின் தத்துவத்தின் பெயரால், இங்கே இருக்கிற பிராமணர்கள் சமுதாயத்தில் இருக்கின்ற பெரும்பான்மை மக்களை, தற்குறிகளாகவும், வறுமைக் குள்ளானவர்களாகவும் வைத்திருப்பதற்கு ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்த வரலாறு இந்து மதத்தைத் தவிர, பிராமணர்களைத் தவிர அல்ல.

Division of Labour இருந்திருக்கிறது; எல்லா ஊர்களிலும் இருந்திருக்கிறது. வெளிநாடுகளில் Shoe Maker என்று போட்டிருக்கிறது; நம்முடைய புத்தி என்ன சொல்கிறது, ‘‘ஏம்பா, நீ அருந்ததியரா? நீ சக்கிலியரா?'' என்று கேட்க முடியுமா?

முடியாது. ஒரு மூன்று மாதத்திற்கு ஷூ தைத்துக் கொண்டிருக்கிறார்; பிறகு அவர் வேறு வேலைக்குச் சென்றுவிடுவார். அங்கே பொற்கொல்லர் உண்டு; ஆனால், பொற்கொல்லர் என்கிற ஜாதி கிடையாது.

இங்கே தொழிலாளர்களைப் பிரித்து


பிறப்போடு முடிச்சுப் போட்ட வரலாறு


அதனால்தான் மிகவும் நுட்பமாக சொன்னார் அம்பேத்கர், Division of Labour is Universal Concept - எல்லா நாடுகளிலும் தொழிலைப் பிரிப்பது என்பது இருக்கிறது. But India is a unique feature of Division of Labourers - இங்கே தொழிலாளர்களைப் பிரித்து பிறப்போடு முடிச்சுப் போட்ட வரலாறு இருக்கிறது என்றால், அதுதான் பிராமணியம் என்று சொன்னார்.

மிக அழகாகச் சொன்னீர்கள். பிராமணீயம் என்று சொல்வது பிராமணர்களுக்கு மட்டுமல்ல. இது பெரியாருடைய பிறந்த நாள் விழா. அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொன்னார்,

By Brahminism I do not mean the power and privilege accrued by a community

ஒரு சமூகத்தால் அதிகாரத்தையோ அல்லது பொருளாதாரத்தையோ பெற்றுக்கொண்டு தெனவோடு இருப்பதல்ல பிராமணிசம்.

பிராமணிசம் என்பது  Simple

Negation of Liberty Equality and Fraternity

எது எதுவெல்லாம் சமத்துவத்திற்கு,


சகோதரத் தத்துவத்திற்கு, சகோதரத் தத்துவத்திற்கு எதிரானதோ, அதெல்லாம் பிராமணியம்தான்


எது எதுவெல்லாம் சமத்துவத்திற்கு எதிரானதோ, எது எதுவெல்லாம் சகோதரத் தத்துவத்திற்கு எதிரா னதோ, எது எதுவெல்லாம் சகோதரத் தத்துவத்திற்கு எதிரானதோ, அதெல்லாம் பிராமணியம்தான்.

ஒரு நாடாரோ, ஒரு முக்குலத்தோரோ எனக்குக் கீழே ஒருத்தன் இருக்கிறான் என்று எண்ணினால், அங்கே பிராமணியம் இருக்கிறது.

ஏன்? ஒரு பள்ளர், தனக்குக் கீழே அருந்ததியர் இருப்பதாகவோ, ஒரு பறையர் தனக்குக் கீழே சக்கிலியர் இருப்பதாகவோ எண்ணினால், அந்தப் பறையரும், பள்ளரும்கூட பிராமணியத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள். அதுதான் பெரியாருடைய தத்துவம்.

வன்னியர் மாநாட்டில்


தந்தை பெரியார் பேசியது என்ன?


1940 வன்னியர்குல சத்திரியர் மாநாட்டிற்கு பெரியாரை அழைக்கிறார்கள்.

பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்குப் போனால், நீங்கள் எல்லாம் பெரிய ஜாதி என்று சொல்வது வழக்கம்; அல்லது நீங்கள் எல்லாம் நன்றாகப் படிக்கவேண்டும் என்று சொல்வது வழக்கம்.

1930, ஜூன் 1 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற வன்னியர்குல சத்திரியர் மாநாட்டில், பெரியார் அவர்கள் வணக்கம் என்று சொல்லி முடித்துவிட்டு,

‘‘பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும், தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும், நீங்கள் சில ஜாதிகளுக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிற«ன்.

ஏனெனில், நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமென்னும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுவதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற உங்களுடைய வறட்டுத் தத்துவம் தகராறில் முடிந்துவிடுகின்றது.''

இதைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும் அல்லவா? நாணயம் வேண்டும் அல்லவா!

பெரியார் போன்று நாணயமான ஒரு தலைவரை, இந்தியாவில் மட்டுமல்ல,  உலகத்திலேயே பார்க்க முடியாது


பெரியார் போன்று நாணயமான ஒரு தலைவரை, இந்தியாவில் மட்டுமல்ல,  உலகத்திலேயே பார்க்க முடியாது.

எதையும் சொல்லிவிட்டுத்தான் செய்திருக்கிறார். தமிழக விடுதலை, ஜாதி ஒழிப்பு - இந்த இரண்டிற்காகத்தான் எனது இறுதி மூச்சுவரை பாடுபடுவேன். போய் வருகிறேன், போய் வருகிறேன், வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!! என்று மூன்று முறை சொல்லிவிட்டு, சிறைக்குச் செல்கிறார்.

அவருடைய கடைசி உரை, இங்கே சொன்னார்கள், அருள்மொழி அவர்கள் அழகாக சொன்னார், தந்தை பெரியாரைப்பற்றிப் பாடியதையெல்லாம்.

மரித்தது பெரியாரல்ல,


மாபெரும் தமிழர் வாழ்க்கை!


கவிஞர் கண்ணதாசனே, வேறொரு நிகழ்வில் பேசுகின்றபொழுது, பெரியார் அவர்கள் மறைந்த பொழுது,


‘‘சரித்திரம் மறைந்த செய்தி


தலைவனின் மரணச்செய்தி


விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியைக் கூறும் செய்தி


நரித்தனம் கலங்கச்செய்த நாயகன் மரணச் செய்தி


மரித்தது பெரியாரல்ல, மாபெரும் தமிழர் வாழ்க்கை!''


பகவத் கீதையை தூக்கிப் பிடித்த கண்ணதாசன்,


கண்ணனைத் தூக்கிப் பிடித்த கண்ணதாசன்,


அர்த்தமுள்ள இந்து மதத்தைப் பாராட்டி, சிலே கித்து, கட்டுரைகளாக எழுதிக் குவித்த கண்ணதாசன்,


அதனால்தான் சொன்னேன், எத்தனைக் கடவுள் களிடம் போனாலும் தமிழர்கள் தங்களு டைய இன இழிவைத் தீர்த்துக் கொள்ளவேண்டு மானால், தந்தை பெரியார் என்கிற மாமருந்தை விட்டால், வேறு மருந்தில்லை என்கிற காரணத் தினால்தான், கண்ணதாசனே அவருடைய புகழைப் பாடுகின்ற அளவிற்கு ஆளாக்கப்பட்டார் என்பதை இன் றைக்குத் தமிழ்ச் சமுதாயம் உணர்ந்திருக்கிறது.


எங்கள் பெரியாருக்கு


வரலாறு, தத்துவம் இருக்கிறது!


இன்றைக்கு நாடாளுமன்றத்தில் எங்களை எப்படிப் பார்க்கிறார்கள்.

பதவியேற்பின்போது, நாங்கள் எல்லாம் ‘‘பெரியார் வாழ்க!'' என்று சொன்னோம். அவர்கள் ‘‘ஜெய் ராம்'' என்றார்கள்.

எங்களிடம் கேட்டார்கள், Who is Periyar?  என்று.

நான் அவர்களைத் திருப்பிக் கேட்டேன், Who is your Raman? என்று.

எங்கள் பெரியாருக்கு வரலாறு இருக்கிறது,

எங்கள் பெரியாருக்கு தத்துவம் இருக்கிறது,

எங்கள் பெரியார் என்னென்ன சொன்னார் என்று நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.

ஆனால், உங்கள் ராமன் மூன்று லட்சம் ஆண்டு களுக்கு முன்பு பிறந்தார் என்று சொல்கிறீர்களே, அவருக்கு இங்கேதான் பிரசவம் பார்த்தேன் என்று சொல்லுகிறீர்களே,

அந்த ராமனை நீங்கள் ‘ஜெய் ராம்' என்று சொல்லும் பொழுது, எங்களை உருவாக்கிய, எங்களைப் படிக்க வைத்த, எங்களை அரசியலுக்கு ஆற்றுப்படுத்திய, நாங்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாள்களை செலவிட்ட தந்தை பெரியார் வாழ்க என்று சொன்னால், உங்களுக்கு என்ன பிரச்சினை?

தமிழ்நாடு தனித்த அடையாளத்தோடு இருக்கிறதென்றால்...


ஆக, இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு தனித்த அடையாளத்தோடு இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், அத்திவரதரை தரிசிக்கப் போன பக்தர்களும் ஒப்புக்கொள்வார்கள், இந்தத் தனித்தன்மைக்குக் காரணம், அத்திவரதர் அல்ல, எங்கள் தந்தை பெரியார் என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

அருள்மொழி அழகாக சொன்னார்கள், பெரியார் தன்னை தாராளவாதி, நாத்திகவாதி என்று சொல்லிக் கொண்டாலும், கடவுள்களுடைய தேவை இருந்தே தீரும். ஏனென்றால், மனிதர்களுக்குப் பேராசை இருக் கிறது; அவர்கள் பேராசையை ஒப்புக்கொள்ள மாட் டார்கள். இதைவிட  ஹியூமென் சைக்காலஜி படித்த ஒரு மிகப்பெரிய சைக்காலஜிஸ்ட். எம்.ஏ., பிஎச்.டி., படித் திருந்தால்கூட இப்படியெல்லாம் பேசியிருக்க முடியாது.

ஆக, அப்படிப்பட்ட ஒரு பெரிய சுடரை ஏற்றிக் கொண்டுதான் நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம்.  அதனால்தான், எங்களுக்கெல்லாம் பெரிய மரியாதை.

நாள்தோறும் காலையில், ஸ்பீக்கர் வணக்கம் வைத்த வுடன், அவர் ஓம் சக்தி என்று சொல்வது மைக்கில் கேட்கிறது.

நாங்கள், லாங் லிவ் செக்குலரிசம் என்போம்.

அவர்கள், ‘ஜெய் ராம்' என்று சத்தம் போடுவார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினரின்


அடாவடித்தனமான பேச்சு!


நாடாளுமன்றத்தில் நான் அய்ந்து முறை இருந் திருக்கிறேன். இந்த முறை போன்று நடக்கும் அநியாயம் எப்பொழுதும் நடந்தது கிடையாது.

ஜாதி வேண்டும் என்று பேசுகிறவர்கள்; நான்கு வருணம் நல்லது என்று பேசுகிறவர்கள். ஒரு எம்.பி. பேசுகிறார்,

In order to maintain the social equilibrium scientifically varnashrama was invented by Hinduism.

இந்த சமூகத்தில் சமநிலை இருக்கவேண்டுமானால், ஒருவன் மலம் அள்ளவேண்டும்; ஒருவன் முடி திருத்த வேண்டும்; ஒருவன் உழைக்கவேண்டும்; நான் ஓத வேண்டும். இது இழிவுக்கான வேலைகளல்ல, இந்த சமூகத்தில், They want  establishment  social equilibrium என்று ஒரு எம்.பி., பேசுகிறார்.

நாங்கள் எழுந்து சத்தம் போட்டோம்.

ஆக, இப்படியெல்லாம் வடநாட்டில் ஒரு நூறாண்டு களுக்குப் பிற்போக்குத்தனம் நிலை கொண்டிருக்கின்ற வேளையில், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழகம் விழித்துக் கொண்டிருக்கிறது; இவ்வளவு நாகரிகமாகவும், பண்பாடோடும், அறிவோடும் இன்றைக்குத் தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இருக்கி றோம் என்று சொன்னால், அதற்கு முழு ஒரே காரணம், தந்தை பெரியார் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு நினைப்பது மட்டுமல்ல, நம்முடைய எதிரிகள் விரிந்து கிடக்கிறார்கள்.

ஒரு காலத்தில் 370 இல் கை வைக்கமாட்டார்கள் என்று நினைத்திருந்தோம். இன்று வைத்துவிட்டார்கள்.

பாபர் மசூதி வழக்கு என்னாகும்?


பாபர் மசூதி வழக்கு என்னாகும் என்று தெரிய வில்லை.

அருள்மொழி அவர்கள் சட்டம் படித்தவர்; அருள் மொழியினுடைய சொத்தை, நான் 12 ஆண்டுகள் அருள்மொழிக்குத் தெரிந்தே, நான் பயன்படுத்திவிட்டால், அந்த சொத்து யாருக்கு சொந்தம்?

அருள்மொழி அவர்களின் வீட்டை, என்னிடம் கொடுத்தார்கள்; நான் நான்கு நாள்கள் தங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறேன். 12 ஆண்டுகாலம் அருள்மொழிக்குத் தெரிந்தே அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன். வாடகை வசூல் செய்த ரசீது என்னிடம் இருக்கிறது; மின் கட்டண பில் என்னிடம் இருக்கிறது. இதையெல்லாம் கொண்டு போய் நீதிமன்றத்தில் கொடுத்தேன் என்றால், அதற்கு சட்டம் என்ன சொல்கிறது என்றால், 12 ஆண்டுகாலம் அருள்மொழிக்குத் தெரிந்தே அந்த இடத்தை நீ அனுபவித்திருந்தால், Advert Possession அது எதிர்நிலை நிலவுடைமைத் தத்துவம்; அதனால், அந்த வீடு ராசாவுக்கு சொந்தம் என்று சட்டம் சொல்கிறது.

400 ஆண்டுகளுக்கு முன்பு


மசூதி கட்டியிருக்கிறான்


12 ஆண்டுகள் இருந்தாலே, அருள்மொழி சொத்து எனக்கு. 400 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி கட்டியி ருக்கிறான். மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவன் ராமன்; அப்படியென்றால், Advert Possession வராதா? இதற்கு எதற்கு உச்சநீதிமன்றம்?

மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், பார்த்த பிரசவத்திற்கு சாட்சியம் இல்லை.

400 ஆண்டுகளுக்கு முன்னால் மசூதி இருந்தது என்பதற்கு சாட்சியம் இருக்கிறது.

இதற்கு இந்தியாவில் உள்ள எல்லா சீனியர் கவுன்சிலும் அப்பியர் ஆகி, இந்தியாவினுடைய உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில், 5, 6 பேர் அமர்ந்து, அதிலும் லைவ் டெலிகாஸ்ட் கேட்கிறார்கள். நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

ஆக, 370 இலும் கை வைத்துவிட்டார்கள். பிறகு பாபர் மசூதி வழக்கு இப்போது நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.

யூனிஃபார்ம் சிவில் கோடு


அதற்கடுத்து என்ன வரப் போகிறது - யூனிஃபார்ம் சிவில் கோடு (Uniform Civil Code).

இந்த மூன்றையும் முடித்துவிட்டு, அவர்கள் எங்கே வருவார்கள் என்றால், அவர்களிடம் இருக்கும் மிருக பலத்திற்கு - அரசமைப்புச் சட்டத்தை They want to re write the constitution ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியே,

இந்த நாடு மதச்சார்பற்ற நாடு

இந்த நாடு சமதர்மம் உள்ள நாடு

“WE, THE PEOPLE OF INDIA,
having solemnly resolved to constitute India
into a SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC''


இது ஒரு ஜனநாயகக் குடியரசு நாடு

இது ஒரு சமதர்ம நாடு

இது ஒரு மதச்சார்பற்ற நாடு

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதமாக இருக்கின்ற முகவுரையை மாற்றக்கூடாது


இந்த அடிப்படைத் தத்துவம், பண்புகளை அரச மைப்புச் சட்டத்தில் நீங்கள் எத்தனை முறை வேண்டு மானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதமாக இருக்கின்ற முகவுரையை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.

அதை மாற்றிவிட்டால், இந்தியா ஒரு இந்து நாடாக சொல்லப்படாமலே ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக் கிறார்கள்.

பெரியார் வடக்கே இல்லாது போன காரணத்தினால், அவர்களுக்கு அந்தத் துணிச்சல் வந்திருக்கிறது. என்றாலும் நம்பிக்கையோடு இருப்போம்.

இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவோம் என்ற உறுதியெடுப்போம்!


பெரியார் - அம்பேத்கர் என்கின்ற இரு கருவிகளைப் பயன்படுத்தி, போர்த் தளவாடங்களைப் பயன்படுத்தி, இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவோம் என்ற உறுதியை இந்த நாளில் எடுத்துக்கொள்வோம்.

வாழ்க பெரியார்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 26. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக