வியாழன், 19 செப்டம்பர், 2019

சென்னை தியாகராயர் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சென்னை,செப்.18, சென்னையில் தந்தைபெரியார் 141ஆவது பிறந்த நாள் பெருவிழாவில் காலை முதல் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. மாலையில் பொதுக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது.
சென்னை மண்டலம் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தைபெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை தியாக ராயர் நகர் முத்துரங்கம் சாலையில் தந்தை பெரியார் நினைவுத் திடலில் நேற்று (17.9.2019) மாலை நடைபெற்றது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. பாலு, மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்ட துணைத் தலைவர்கள் சி.செங் குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், தியாக ராயர் நகர் பகுதி தலைவர் ஏழுமலை, கு.அய்யாத்துரை, மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  ந.மணித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, கோ.வீ. ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
இந்திய நாத்திக சங்கம் தெலங்கானா மாநில தலைவர் ஜி.டி.சாரய்யா தலை மையில் குழுவினர் தெலுங்கு மொழியில் பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள். தொடர்ந்து பகுத்தறிவு பாடல்களை புழல் அறிவுமானன் பாடி பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாறு இரண்டு தொகுதிகள், தந்தை பெரியார்  141ஆவது பிறந்த நாள் விடுதலை மலர், “தாய்க் கழக மாநாடுகளில் தளபதியின் முழக்கங்கள்”  ஆகிய நூல்களை திமுக கொள்கை பரப்பு செயலாளர் மக்கள வை உறுப்பினர் ஆ.இராசா வெளியிட்டார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார். திமுக பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி திராவிட இயக்க வரலாறு 2 தொகுதிகள் மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள்விழா மலர்  5 புத்தகங்களைப்  பெற்றுக்கொண் டார். திராவிட இயக்க வரலாறு இரண்டு தொகுதிகள் நன்கொடை மதிப்பு ரூ.700. பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் ரூ.600க்கும் பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா விடுதலை மலர் நன்கொடை ரூ.200க்கும், தாய்க்கழக மாநாடுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கங்கள் நூல் நன்கொடை ரூ.50க்கு அளிக்கப்பட்டது.
நூல்களைப்

பெற்றுக்கொண்டவர்கள்

கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மலேசிய திராவிடர் கழகத் தோழர் அன்பழகன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன்,  சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தின சாமி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்செந்தில் குமாரி, அய்யாதுரை, வேலூர் பாண்டு, ஆவடி மாவட்டச் செயலாளர் இள வரசன், அம்பத்தூர் இராமலிங்கம், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம், சைதை மு.ந.மதியழகன், மயிலை டி.ஆர்.சேதுராமன், திராவிட மாணவர் கழகம் தொண்டறம், வேலவன் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.
தலைவர்கள் உரை

சென்னை தியாகராயர் நகரில் தென் சென்னை மாவட்டக் கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் நடைபெற்ற பெரியார் 141ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப் பினர் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச் சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பொதுக்கூட்ட நிறைவுரை சிறப்புரை ஆற்றினார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன்,  துணைத் தலைவர் கி.இராம லிங்கம், செயலாளர் கணேசன், சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், சி.வெற்றிசெல்வி, பெரியார் களம் இறைவி, தங்க.தனலட்சுமி, கோ.தங்கமணி, பெரியார் மாணாக்கன் உள்பட கழகப் பொறுப் பாளர்கள் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டில் நன்கொடை வசூல் பணிகளில் ஈடுபட்டு பணியாற்றிய புரசை அன்புசெல் வன், பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி உள்ளிட்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். கூட்ட முடிவில் மு.சேகர் நன்றி கூறினார்.
 -  விடுதலை நாளேடு, 18.9.19
 ஆந்திர நாத்திக சங்க சாரையா குழுவினரின் பாடல் நிகழ்ச்சி

 அறிவுமானனின் பாடல் நிகழ்ச்சி
 உரை வீச்சு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக