வெள்ளி, 20 செப்டம்பர், 2024

தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்: கழகத் துணைத் தலைவரின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

 


விடுதலை நாளேடு

சென்னை, செப்.17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து, பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி மற்றும் மகளிரணி, இளைஞரணி தோழர்கள் பங்கேற்றனர்.

அறிவாசான் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- கருத்தரங்கம்


அய்யா, அம்மா சிலை – நினைவிடத்தில் மாலை – மலர் வளையம் வைத்து
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு

சென்னை, செப்.17– அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று காலை பெரியார் திடலில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும், நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டும் கழகத் துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) அப்பெருவிழா உலகமெங்கும் உள்ள பகுத்தறிவாளர்களால் கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கூடியிருந்த திராவிடர் கழக தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக அணி வகுத்து பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் மாலை வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் – ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ கூற, கூடியிருந்த கழகத் தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

சமூகநீதிநாள் உறுதிமொழி வருமாறு:

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க!! தமிழர் தலைவர் வாழ்க!!! என ஒலி முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் தோழர்கள் திரளாக வந்து பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் நிறுவனர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் தோழர்களுடன் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உடனிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் பகுதி தலைவர் ஜெ. அஸ்வின் தலைமையில் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பெரியார் நினைவிடத்தில் பெரியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மீனாம்பாள் தலைமையிலும், திராவிடன் நல நிதி சார்பில் அருள்செல்வன் தலைமையிலும், பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யத்தின் சார்பில் இருதயநாத் தலைமையிலும், திராவிட தொழிலாளரணி, திராவிடர் கழக மகளிரணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களின் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பி.இ. சுதீர்குமார் (NIA), சுரேஷ் (AVT), ஆரோக்கியராஜ் (BOB), நடராஜன் (VBI) சந்திரன், ரவிகுமார், சத்தியமூர்த்தி, லோகேஷ் பிரபு, ரவியரசு, அருள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர்சே.மெ.மதிவதனி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர்
கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வே. பாண்டு, மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியனாந்தம், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன் மற்றும் புலவர் வீரமணி, பேராசிரியர் தேவராஜ், வழக்குரைஞர் பிரசன்னா, வழக்குரைஞர்கள் ஆம்பூர் துரை, துரை. அருண், சி.வெற்றிச்செல்வி, சி. காமராஜ், க. பெரியார்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பெரியார் களம் இறைவி, இளவேனில் ஜெயகுமார் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் பெருவிழா அனைத்துக் கட்சித் தலைவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக