ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்(20.8.1996)

 

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்

20.8.1996 அன்று ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து இலங்கை தூதர் அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் காலை முதலே அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பு வரத் தொடங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கொல்லாதே! கொல்லாதே! ஈழத் தமிழர்களைக் கொல்லாதே! என குரல் எழுப்பி முழக்கமிட்டனர். தமிழ் உணர்வாளர்கள் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாது அங்குக் கூடியிருந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “நாம் மிகுந்த வேதனையோடும், கனத்த நெஞ்சத்தோடும் சிங்கள அரசை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழச்சிகளினுடைய கற்பு சூறையாடப்படுகிறது. நம்முடைய தாய்த்திரு நாட்டிற்கு அகதிகளாக வந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதி அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக ஓடி வருகிறார்கள். இனப் படுகொலைக்கு எதிராக அய்.நா. சாசனத்திலேயே விதிமுறை இருக்கிறது. இதைக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. ஆகவே, கேட்கின்றோம்’’ என கூடியிருந்த கழகத்தினர் மத்தியில் உரையாற்றினேன்.

(நினைவுகள் நீளும்…)

(கட்டுரையின் ஒரு பகுதி)

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (271)

ஜுன் 16-30 ,2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக