வியாழன், 9 மார்ச், 2023

தமிழர் தலைவருக்கு விருது, சென்னை பெரியார் திடலில் காணொலியில் தோழர்கள் பங்கேற்பு

 

சென்னை பெரியார் திடலில் காணொலியில் தோழர்கள் பங்கேற்பு

சென்னை, செப். 27- கனடா நாட் டின் டொராண்டோ நகரில் சமூகநீதிக்கான 3ஆவது பன் னாட்டு மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை ஆற்றினார்கள்.  

இரண்டாம் நாளில் (25.9.2022) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு கனடா மனிதநேய அமைப்பின் சார்பில்  2022ஆம் ஆண்டுக்கான ‘மனிதநேயர் சாதனை விருது’ (2022 Humanist Achievement Award) வழங் கப்பட்டது.

கனடா மனிதநேயர் அமைப்பின் (Humanist, Canada) சார்பில் 2022ஆம் ஆண் டுக்கான “மனிதநேயர் சாதனை விருதினை” (2022 Humanist Achievement Award) மார்ட் டின் ஃபிளிர்த் வழங்கினார். திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன்அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்ய பொருளாளர் அருள்செல்வி பாலகுரு,  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அமெரிக்கா பெரியார் பன் னாட்டு மய்யத்தின்  இயக்குநர் மருத்துவர் சிகாகோ சோம.இளங்கோவன், முனைவர் கண்ணபிரான்  ரவிசங்கர் மற் றும் மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு அமைப்புகளின் பேரா ளர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர். 

கனடா மாநாட்டு அரங்கி லும், சென்னை பெரியார் திடலில் காணொலியிலும் கலந்துகொண்ட தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, தந்தைபெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என முழக்கமிட்டனர்.

சென்னை பெரியார் திட லில் காணொலியில் விருதைப் பெற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையாருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், துணைப்பொதுச்செயலா ளர் பொறியாளர் ச.இன்பக் கனி,  சி.வெற்றிசெல்வி உள் ளிட்ட மகளிர் அணியினர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுரு கேசன்,மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, மகளிர் பாசறை த.மரகதமணி, ஆடிட் டர் இராமச்சந்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், செங்குட்டுவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வன், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இள வரசன், அமைப்பாளர் உடு மலை வடிவேல், இளைஞரணி பொழிசை கண்ணன், சோ.சுரேஷ், தளபதி பாண்டியன், க.கலை மணி, கார்வேந்தன், சைதை தென்றல், விழிகள் வேணு கோபால், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஜனார்த்தனம், தென்சென்னை பகுத்தறிவா ளர் கழகம் மாணிக்கம், ச.இராஜசேகரன், வெ.ஞானசேக ரன், வழக்குரைஞர் தமிழ்செல் வன் உள்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விருது பெற்றதைப் பாராட்டி கழகத் துணைப் பொதுச் செய லாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, சென்னை மண்டல கழக செயலாளர் கொடுங்கையூர் கோபால், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் தலா ரூ. 1000 (ஆயிரம்) நன்கொடை வழங் கினர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக