செவ்வாய், 8 ஜனவரி, 2019

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்...

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!"



"பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்கே நாம் ஒருங்கிணைந்துள்ளோம். இது வெறும் கூடிக் கலைகிற கூட்டமல்ல. நமக்கான ஆட்சியாளர்களைக் கோட்டைக்கு அனுப்பவும் தயாரான கூட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் யார் யாரெல்லாம் கூட்டணி சேர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இனத் துரோகிகள்" என்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவேசமாகக் கூறினார்.
திருச்சியில் கருஞ்சட்டை கர்ஜனை



பெரியார் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று திருச்சியில், தமிழின உரிமை மீட்புப் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத் தில் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத் தினர். பல்லாயிரக்கணக்கில் தொண் டர்கள் குவிந்ததால், போலீஸார் பதற் றத்துடன் காணப்பட்டனர். திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், அரங்க. குணசேகரன் ஆகியோரின் ஒருங்கி ணைப்பில், ஆனைமுத்து, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், அதியமான் ஆகியோர் சகிதமாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேரணியைத் தொடங்கிவைத்தார். சிலம்பம், பறையாட்டம், மேளதாளம் எனக் களைக்கட்டியது பேரணி.
கருப்பு எங்கள் நிறம் என்ற கோவன் குழுவினர் பாடலுடன், மாநாடு ஆரம்ப மானது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், ``தந்தை பெரியாரின் வழியில் தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் திரண்டுள்ளோம். இனி, தமிழகத்தில் மதவெறி, சாதிவெறி அரசியல் தலைதூக்கினால் பெரியார் படை அதைத் தடுத்து நிறுத்தும். எட்டுவழிச் சாலை, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நமது சொத்துகளைப் பறித்து கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்ப்ப தற்கு ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதற்கு எதிராக ஒன்றிணைவோம். இந்தக் கருஞ்சட்டைப் பேரணியின் தொடர்ச்சியாக நீலச்சட்டை, சிவப்புச் சட்டை பேரணிகளையும் நடத்த வேண்டும்" என்றார்.
எப்படி இணைந்தார்கள்?

2014-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள  பெரியாரிஸ்ட் டுகள் மீதும், பெரியார் இயக்கங்கள் மீதும் பிஜேபி, இந்து இயக்கங்கள் கடும் விமர்சனங்களை முன் வைத் தன. தமிழக அரசின் துணையுடன் பலர் கைது செய்யப்பட்டனர். எனவே, பி.ஜே.பி-க்கு எதிராக பெரியார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஒற்றுமையை  வலியு றுத்த வேண்டும் என்ற ஆர்வம் பெரியார் அமைப்புகள் மத்தியில் எழுந்தது அதற்கான முயற்சிகள் கடந்த செப்டம்பரில் தொடங்கின. அந்த முயற்சிதான் திருச்சியில் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள்.

- இ. லோகேஷ்வர்


திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் சுப.வீரபாண்டியன், ``பெரியார் என்பது ஒரு நூற்றாண்டின் சொல். இங்கு இவ்வளவு இயக்கங்கள் உள்ளன. இவை, பெரியார் பெயரிலான கிளைகள் தானே தவிர, பிளவுகள் அல்ல. இந்த மாநாட்டின் நோக்கம் மதவெறி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மட்டுமல்ல. சாதி ஆணவப் படுகொலைகளையும் இந்த மாநாடு எதிர்க்கிறது. நமது எச் சரிக்கை மதவெறியர்களுக்கு மட்டு மல்ல, சாதி வெறியர்களுக்கும் எதி ரானது. தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்ற கனவு கருகிப்போயிருக்கிறது. கரிசல் காட்டில் ஒருபோதும் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலரவே மலராது" என்றார் ஆவேசமாக!
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், "தமிழகத்தில்தான் சுய மரியாதைத் திருமணம் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திரும ணங்கள் மற்ற மாநிலங்களில் இல்லை. சாதி ஒழிப்பும், பெண்ணிய விடு தலையும் பெரியாரியக் கோட்பாடுகள். சாதி ஒழிப்பை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருட்டிணன், "பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கு எதிராக மஞ்சள் சட்டை வெற்றி பெற் றதைப் போல, இந்தக் கருப்புசட்டை அணியும் விளங்கும். நமது அடுத்த நிகழ்ச்சியில், பேரறிவாளனையும், நளினியையும் பங்கேற்கச் செய்வோம். நாம் சிறை நிரப்பும் போராட்டம் நடத் தினால், அவர்கள் வெளியே வரு வார்கள். அடுத்த திட்டம் இதுதான்" என்றார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், "பெரியாரை கொண்டாட காரணம், அவரது தொலைநோக்குப் பார்வைதான். இங்கு பல்லாயிரக்கணக் கான இளைஞர்களைப் பார்க்க முடி கிறது. இவர்களுக்கும் ஏன் பெரியார் பிடிக்கிறது என்றால், பெரியார் வீதியில் பேசியதை நீதிமன்றத்தில் மறுத்த தில்லை. தான் எழுதியதை அட்மின் எழுதினார் என்று சொல்லவில்லை. பெரியார், ஒரு ஹீரோவாகவே வாழ்ந் தார்" என்று சந்தடிசாக்கில் ஹெச்.ராஜாவைச் சீண்டினார்.
- சி.ய.ஆனந்தகுமார்,  இரா.அமுதினியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
நன்றி: 'ஜூனியர் விகடன்' 30.12.2018
- விடுதலை நாளேடு, 29.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக