புதன், 23 ஜனவரி, 2019

தியாகராயர் நகர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு



தமிழ்ப் புத்தாண்டையொட்டி 15.1.2019 முற்பகல் 9.30 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைச்செயலாளர்கள் கோ.வீ.ராகவன்மற்றும் சா.தாமோதரன், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச் செல்வன், இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை மற்றும் சதிஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சிலையும் பீடமும் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 23.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக