தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

வெள்ளி, 14 அக்டோபர், 2022

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு -24,25,26.12.96

 

அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (274)

ஆகஸ்ட் 1-15,2021
   August 2, 2021உண்மைLeave A CommentOn அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (274)

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு

கி.வீரமணி


சென்னையில் மாநில மாநாடு வேலை நடைபெற்று வருகின்ற நிலையில் கழகப் பற்றாளரும், பெரியார் பெருந்தொண்டர்கள் மூவர் அடுத்தடுத்து மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. பாரீசில் வாழ்ந்த சுயமரியாதை வீரரும், திருமதி சுசீலா எத்துவால் அவர்களது கணவரின் தம்பியான திரு.பக்தவத்சலம் அவர்கள் 16.12.1996 அன்று பாரீசில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தோம். மறைந்த ‘பக்தா’ அவர்கள் கழகத்திடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு நல்ல சுயமரியாதை வீரர். புதுவையைச் சார்ந்த அவர் பல ஆண்டுக்காலம் பாரீசில் பணியாற்றி ஓய்வு பெற்று அங்கேயே தங்கியிருந்தவர் ஆவார்.

அவரது மறைவு கேட்டு இரங்கல் தந்தியை அவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பினேன். பாரீசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமதி சுசீலா அவர்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன்.

திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான டி.ஆர்.கே.டி.எஸ்.மூர்த்தி 17.12.1996 அன்று திருவண்ணாமலையில் மறைவுற்றார் என்ற செய்தியைஅறிந்து வருந்தினேன். மாணவர் பருவந்தொட்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர். மறைந்த அவருக்கு வயது 68. சிறிது காலமாகவே உடல்நலமற்று இருந்தார். கவுதமன், சித்தார்த்தன் என்ற இரு மகன்களும், மனைவியும் உண்டு. அவர்களது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பி ஆறுதல் கூறினேன்.

திருப்பனந்தாள் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழகத் தலைவரும் நீண்டகால இயக்க முன்னணி வீரரும், துகிலியில் அய்யா சிலை நிறுவி அயராது பாடுபட்டவருமான துகிலி நடராசன் 19.12.1996 அன்று மறைவுற்றார் என்ற  செய்தி மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பினேன். தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்கள் கழகத் தோழர்களிடையே மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

சென்னை பெரியார் திடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு டிசம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கழகத்தின் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்புடன் நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகம், புதுவை, மும்பை, ஆந்திரா, தில்லி எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில் காலை 9:00 மணிக்கு திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலைக்கு கழகத் தோழர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள், பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மாநாட்டினைத் துவங்கி வைத்தேன். டாக்டர் நாவலர் அவர்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்து சிறப்பு செய்தார். உடனே அவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின், பெரியார் அறிவியல் கண்காட்சி மய்யத்தைத் துவங்கி வைத்து முழுமையாக அதனைப் பார்த்து பெரிதும் வியந்து பாராட்டினார்.

பெரியார் சமூகக் காப்பு அணி மரியாதை செய்யும் வகையில் அணிவகுத்து ஒருவர் பின் ஒருவராக வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். அதனைக் கண்ட வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்த அத்துணை தோழர்களும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்து மலைத்தனர். பல்வேறு கட்சி பிரமுகர்களும் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் தந்தை பெரியார் படத்தை அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் இலக்குவன் தமிழ் திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் பன்னாட்டமைப்பு _ பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெரியார் பன்னாட்டமைப்புக் கருத்தரங்கம் காலை 10:30 மணியளவில் சென்னை அபுபேலஸில் துவங்கியது.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பன்னாட்டு நாத்திகர் கழகம், மனித உரிமைகள் சங்கம் ஆகியவற்றின் துணைத் தலைவர் எம்.லெவி ஃபிராகல் (நார்வே) தலைமை தாங்கி உரையாற்றுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மனிதநேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடியவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கேள்விப்பட்டிருந்தேன். அதனை உங்களைப் பார்க்கையில் உணர்கிறேன். இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால், இங்கர்சாலுக்கு நியூயார்க் நகரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்க முடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்க முடியாத ஒன்று. இதை இங்கு மிகப் பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் பெரும் வியப்பு ஏற்பட்டது. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை பெரிய சாலைக்கு வைக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்குக் கண்டேன்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதத்தினால் நடக்கக்கூடிய கொடுமைகளை யெல்லாம், அடக்குமுறைகளையெல்லாம் குறிப்பாக இந்து மதத்திலிருக்கிற அடக்குமுறைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை விழிப்படையச் செய்வதைக் கண்டு வியக்கிறேன். இதற்காக நாம் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை இதற்காக நடத்த வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் நீங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் நானும் கலந்து கொள்ளுவேன் என்று சொல்லக்கூடிய விருப்பம் எனக்கு வருகிறது’’ எனப் பல கருத்துகளை அவர் எடுத்துக் கூற பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

கருத்தரங்கில், “21ஆம் நூற்றாண்டுக்கும் தந்தை பெரியாரின் கருத்துகள் ஏற்புடையவை _ புதிய சமுதாயத்தைப் படைப்பதில் பெரியாரின் பங்களிப்பு’’ என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். மாநாட்டில் பங்கு கொண்ட மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கப்பட, அவரின் பிரதிநிதி ஜனதாதள முன்னணித் தலைவர் ஜெகவீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவைச் சார்ந்த இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அதை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு உடல்நலக் குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பேசிய ஒலி நாடாவை அனுப்பியிருந்தார். அது மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. அவர் கைப்பட எழுதியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், “தந்தை பெரியார் அவர்கள் ஒரு புதிய சமுதாயத்தைக் குறித்த தொலைநோக்காளர் ஆவார். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பெரியாரின் கொள்கைகளைத் தெரிவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தின் பொன் விழா மாநாட்டில் கலந்துகொண்டு பெரும் பேற்றைப் பெற்றேன். எனக்கு விருது அளித்துப் பாசத்தையும், நல்லெண்ணத்தையும் காட்டுகின்ற திரு.வீரமணி அவர்களுக்கும், பெரியார் அமைப்பைச் சார்ந்த டா

க்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் உறுதியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி மற்றும் மதச் சார்பின்மை எனும் இலக்குக்காக எங்கிருந்தாலும் என்றைக்கும் ஓயாது உழைப்பேன்’’ என தமிழில் கையொப்பமிட்ட வாழ்த்துக் கடிதம் மேடையில் வாசிக்க கழகத் தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, சிங்கப்பூர் நாகரத்தினம், சோம.இளங்கோவன், நார்வே லெவி ஃபிராகல் ஆகியோருக்கு மேடையில் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தோம். முதல் நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக ‘பெரியார் சி.டி.ராமை’ தொடங்கி வைத்து உரையாற்றினேன். அந்த உரையில், “21ஆம் நூற்றாண்டே பெரியார் நூற்றாண்டுதான். அதனை செயல்படுத்த உலகெலாம் பெரியார்; எல்லார் உள்ளங்களிலும் பெரியார் என்று ஆகவேண்டுமானால் என்ன வழி என்று சிந்தித்தபோது அறிவியல் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அறிவியலின் உச்சகட்டம் _ கணினி. உலகம் முழுவதும் பெரியாரை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம். இன்னும் சிறப்பாகச் செய்வதற்காகத்தான் ‘பெரியார் சி.டி.ராம்’ என்பதைச் செய்து இருக்கிறோம். இதிலே சிறந்த தகுதி படைத்த கிரியா உற்பத்தியாளர்கள் யார் எனத் தேடி, பாலசுப்ரமணியம் என்ற தமிழர் மூலம் இதனை உருவாக்கியுள்ளோம். பல மாதங்கள் செய்ய வேண்டிய பணியினை, சில மாதங்களுக்குள்ளாக முடித்து உலகம் முழுவதும் அதை பரப்ப இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு, பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். நிகழ்வில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சமூகநீதி மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் முதலில் பிற்பகல் சென்னையைக் குலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் பேரணி நடைபெற்றது. தந்தை பெரியார் திடலுக்கு முன்பு விழுப்புரம் இராமசாமிப் படையாச்சியார் மாவட்டத் தலைவர் புலவர் ந.தங்கவேலன் அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். 64 மோட்டார் சைக்கிள்களில் கழகக் கொடிகளுடன் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். வழியெல்லாம் இளைஞர்கள் வாணவெடிகள், அதிர்வேட்டுகள் வெடித்துக் கொண்டு உற்சாகத்துடன் குரலெழுப்பி வந்தனர். பேரணியில் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் பெரியார் வேடமிட்டு கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தி வந்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்கள் அவரவர் மாவட்ட பதாகைகளுடன் அணிவகுத்து கட்டுப்பாட்டுடன் நடந்து வந்தனர். பெரியார் சமூகக் காப்பு அணி வீராங்கனைகள் பேரணியை சிறப்பாக வழிநடத்தி வந்தனர். வழியெங்கும் தோழர்கள் சுருள் கத்தி வீச்சு, கொம்பு விளையாட்டு, குஸ்தி, வாயில் மண்ணெண்ணெய்யை -ஊற்றி நெருப்புத் தீ கொப்பளிக்கின்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர். மதியம் துவங்கிய பேரணி இரவு 8:00 மணிக்கு தங்கசாலை திறந்தவெளி மாநாட்டை அடைந்தது.

அந்த சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்ட சமூகநீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் ஒரு தனி மனித வரலாறு. அவர் இந்திய நாட்டிற்கே உரிய தலைவர் அல்ல; உலகத்திற்கே உரிய தலைவர் என்று சொல்ல வேண்டும். புதிய உலகத்தை, சமத்துவமான, சமூகநீதியுடைய உலகத்தைப் படைக்கும் ஆற்றல் பெரியார் கொள்கைகளுக்கு இருக்கிறது. அவருடைய பாதையில் உழைத்து வருகின்ற நம்முடைய தலைவராக இருக்கின்ற வீரமணி அவர்களுக்கும் ஒரு பெருமை சேர்க்கின்ற வகையில் ‘சமூகநீதி வீரமணி விருது’ என்ற விருதினை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் கொள்கைகள், நடைமுறைகள் எல்லாம் இந்த நாட்டினுடைய கொள்கைகளாக நடைமுறைகளாக மலர்ந்து வருகின்றன. இதன் பெருமையெல்லாம் வீரமணியையே சாரும். நமது வீரமணி அவர்கள் தலைமை தாங்கி நடத்தியிருக்காவிட்டால் மண்டல் பரிந்துரைகள் நடைமுறைக்கே வந்திருக்காது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையிலே இந்த நாட்டை நடத்தி வைக்கின்ற பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு உண்டு. உங்கள் போராட்டங்களால் இந்தியா முழுமைக்கும் நன்மை அடையும். உங்கள் போராட்டங்களில் நாங்கள் உங்களோடு என்றும் இருப்போம் என்று உறுதி அளிக்கிறேன்’’ என பல அரிய கருத்துகளைக் கூறி உரையாற்றினார். மாநாட்டின் 2ஆம் நிகழ்வை நிறைவுரையாற்றி முடித்து வைத்தேன்.

(நினைவுகள் நீளும்…)

கட்டுரையின் ஒரு பகுதி இது...

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (275)

ஆகஸ்ட் 16-31,2021
August 18, 2021உண்மைLeave A CommentOn அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (275)

திராவிடர் கழகம் ஒரு திறந்த புத்தகம்!

கி.வீரமணி

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கோ.அரங்கநாதனின் இளைய மகன் ஆர்.அண்ணாதுரைக்கும், நடராசனின் மகள் என்.கஜலட்சுமிக்கும் வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு விழா 15.12.1996 அன்று சென்னை இந்திரா நகர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினேன். தாம்பரம் மாவட்டக் கழகச் சார்பில் வாழ்த்து மடல் அளிக்கப்பட்டது. விழாவில் கழகத்தின் பொறுப்பாளர்களும், அழைப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூகநீதி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வு டிசம்பர் 26 அன்று காலை 9:00 மணிக்கு பெண்ணுரிமை மாநாடு என்னும் கருத்தமைவில் கலை நிகழ்ச்சியும், பெண்கள் நலம் சார்ந்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், பெண்கள் கருத்தரங்கம் பல்வேறு தலைப்புகளில் கழகப் பொறுப்பாளர்கள், உரை நிகழ்த்தினர். மாலை 4:00 மணிக்கு திராவிடர் கழக மாநில மாநாடு என்னும் பொருளின் கீழ் கழகப் பொறுப்பாளர்கள் வழிமொழிய தமிழர் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலை மாநாட்டு மேடையிலே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. அதில், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்ட தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் ஆகியோரின் செல்வி ஈ.வெ.ரா.ம.அமலா மணி அவர்களுக்கும், தஞ்சை மாவட்டம் உம்பளப்பாடி மணமகன் ம.அண்ணாதுரை அவர்களுக்கும், பசும்பொன் மாவட்ட தி.க. செயலாளர் சாமி.திராவிடமணி _ செயலெட்சுமி ஆகியோரின் செல்வன் என்னாரெசு பிராட்லா, காரைக்குடி சொக்கலிங்கம் _சரசுவதி ஆகியோரின் செல்வி ஜான்சிராணி அவர்களுக்கும், சேலம் மாவட்டம் மின்னக்கல் வை.பழனிச்சாமி _ லெட்சுமி ஆகியோரின் செல்வன் ப.செல்வகுமார், திருச்சியைச் சேர்ந்த இரத்தினம்_பானுமதி ஆகியோருடைய செல்வி மணிமேகலை ஆகியோருக்கும், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பிரதிநிதி மு.இரா.இளங்கோவின் தம்பியும், காஞ்சிபுரம் மு.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோர்களுடைய செல்வன் மு.இரா.சேகர், காஞ்சிபுரம் மணி _ நீலா ஆகியோருடைய செல்வி ம.லதா ஆகியோர்களுக்கும் ஒரே மேடையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அய்ந்து திருமணங்களும் ஜாதி மறுப்புத் திருமணங்களாகும். இத்திருமணங்களில் தாலி அணிவிக்கப்படாதது ஒரு தனிச் சிறப்பாகும். அனைவருடைய கைத்தட்டல்களுக்கிடையே மண விழா நிறைவு பெற்றது.

அதனைத்தொடர்ந்து அய்ம்பெரும் பெரியார் தொண்டர்களை சிறப்பித்து பரிசு வழங்கினேன். மயிலாடுதுறை கோ.அரங்கசாமி, மாநில தி.க. மகளிரணிச் செயலாளர் க.பார்வதி, சேலம் அப்பாய், கண்கொடுத்த வனிதம் கண்பார்வையற்ற பிச்சையன், மறைந்த டோல்கேட் பிச்சை சார்பாக அவரது மகள் சிந்தனைச் செல்வி ஆகியோருக்கு செயராமன் _ சகுந்தலா அறக்கட்டளை சார்பாக சால்வைகளை அணிவித்து, தந்தை பெரியார் உருவம் பொறித்த மோதிரத்தை மக்கள் கடலின் ஆரவாரம் _ கைத்தட்டல்

களுக்கிடையே அணிவித்தேன். பெரியார் பெருந் தொண்டர்களைப் பாராட்டி உரையாற்றுகையில், “ஒவ்வொருவருடைய சிறப்பையும், அவர்களின் இயக்க ஈடுபாட்டையும், எப்படி குடும்பமாகத் தன்னை இணைத்துக் கொண்டு கழகத்திற்கு உழைத்த மேன்மைகளைக் குறிப்பிட்டு அவர்களை வாழ்த்தினேன். இன்று இந்த இயக்கத்தை விட்டு யாராவது ஓடுகிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கத்திலே இருந்து எதையும் எடுத்துப் பழக்கப்பட முடியவில்லையே என்பதற்காக ஓடுகிறார்களே தவிர வேறு இல்லை. இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் பல முனைகளிலே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டாற்றக்கூடிய பெரியார் பெருந் தொண்டர்கள் பலரும் இன்னும் கழகத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களைச் சிறப்பிக்க வேண்டிய நமது கடமை, அவர்களே இயக்கத்தின் ஆணி வேர்கள்! எனவேதான், இவர்களைப் பாராட்டுவதிலே, நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எனக்கு இட்ட கட்டளையை இதன் மூலமாக நிறைவேற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என பல கருத்துகளைக் கூறி உரையாற்றினேன். அதன்பின் பெரியார் கொள்கைகளை பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியில் பயின்று பட்டயம் பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்துகொண்டு தோழர்களை உற்சாகப்படுத்தி வந்த சிறப்பு அழைப்பாளர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “நான் இங்கே வருவதற்கு முன்னால் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பெரியார் அறிவியல் கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அங்கே விஞ்ஞான உண்மைகளை எவ்வளவு எளிமையாக _ சிறப்பாக அந்த மாணவிகள் விளக்கினார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு அய்யா வீரமணி அவர்கள் மேல் ஓர் நன்றி உணர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த மாணவிகளை அவர்கள் எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்ற நினைத்து வியந்து போனேன். தந்தை பெரியார் மாதிரி தீர்க்கதரிசி உலகத்திலே வேறு எவரும் கிடையாது. நீ நன்றாக நடித்தாலும் உனக்குச் சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைக்காது. அதனால்தான் உனக்கு ‘சிவாஜி கணேசன்’ என்கிற பட்டம் கொடுக்கிறேன் என்று தந்தை பெரியார் சொல்லிப் பட்டம் கொடுத்தார். எதிர்காலத்தை

முன்கூட்டியே கணிக்கக் கூடிய திறமை பெரியாருக்கு அப்பொழுது இருந்திருக்கிறது. இன்றைக்கு அவர் எழுதி வைத்த விஞ்ஞானக் கருத்துகள் எல்லாம் நடைமுறைக்கு வருவதை நாம் பார்க்கிறோம். அவர் என்னென்ன சொன்னாரோ அவையெல்லாம் நடந்துகொண்டு வருகின்றன. மக்களுக்கு உங்களைப் போல் தொண்டு செய்கிற_ தியாகம் செய்கிற தோழர்களைவிட சினிமாவில் நடிக்கிற எங்களுக்கு போராடும் குணம் குறைவு. எங்களை விட நீங்கள் பெரிய தியாகிகள் _ வீரர்கள். இந்தக் கடவுள் நம்பிக்கைதான் மூடநம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஆணிவேராக இருக்கிறது.

நாட்டில் ஜாதிக் கலவரம் உருவாவதற்குக் காரணமே மதத் தலைவர்கள்தான். இந்த மதத்துக்கெல்லாம் தலைவன் கடவுள்தான். அதனால், அந்தக் கடவுளை ஒழித்தால்தான் எல்லாப் பிரச்சினைகளும் தீரும். நாட்டில் சாமியார்களுக்கெல்லாம் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் சாமியார்கள் கஞ்சா, அபினைவிட பெரிய போதையைக் கொடுக்கிறார்கள். அது தெரிந்தும் அவர்கள் பின்னாலே மக்கள் போகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டது பெரியார் புத்தகங்களைப் படித்துத்தான். பெரியார் கொள்கைகள் மீது நான் ஈடுபாடு கொண்டதற்குப் பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யாராவது ஒருவர் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தால், அந்தப் படத்தில் நான் காசு வாங்காமல் நடித்துக் கொடுப்பேன். (பின்னர், பெரியார் திரைப்படத்தில் நடித்தும் சிறப்புக்குரியவரானார்.) பெரியார் வேடத்தில் என்னைப் பார்த்துவிட்டேன் என்றால் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவேன். இது நடந்தே தீரும்’’ என்பதைப் போன்ற கருத்துகளை மாநாடு மூலமாக சிறப்புரையாற்றினார்.

எனது உரையில், “இங்குக் கூடியிருக்கும் குடும்பம் எவ்வளவு நெருக்கமான குடும்பம். எவ்வளவு பகுத்தறிவுள்ள குடும்பம், கொள்கைகளுக்காக தங்களை அழித்துக் கொள்கின்ற கருப்பு மெழுகுவத்திகளாக இருக்கின்ற குடும்பம் என்பதை நிலைநாட்டக் கூடிய வகையில் கடந்த மூன்று நாள்களாக இடையறாமல் தொடர்ந்து இங்கே நாம் குழுமியிருக்கிறோம். அதற்கு முதற்கண் என்னுடைய நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அருமை நண்பர்களே! அடுத்து வரக்கூடிய இருபத்தி ஓராம் நூற்றாண்டு நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டுதான் என்பதை நாம் உலகுக்கு எடுத்துக்காட்டப் போகின்றோம். ஒரு வெளிநாட்டுக்காரர் என்னை வந்து சந்தித்தார். உங்களுடைய இயக்கத்திலே எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதை அவ்வளவு சுலபமாகச் சொல்ல முடியாது என்று எண்ணிவிட்டு, எங்களுடைய இயக்கத்திலே இரண்டு விதமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னேன். கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் ஒரு வகை; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் மற்றொரு வகை என்று சொன்னேன். அவர் அதிர்ந்து போய் நீங்கள் ஏதாவது இரகசிய இயக்கம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை, இரகசிய இயக்கத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் எந்த இரகசியமும் கிடையாது.- எங்களுடைய இயக்கம், எங்களுடைய கொள்கை ஒரு திறந்த புத்தகம். அதனால்தான் எங்களுடைய இயக்கத்தை எதிரிகளாலும், துரோகிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள்  பாராட்டை எதிர்பார்ப்பவர்கள் அல்ல; நன்றி எதிர்பாராமல் தொண்டாற்றுபவர்கள்’’ என்றேன்.

இந்த மாநாடு எனக்கு வயதைக் கூட்டவில்லை, வயதைக் குறைத்திருக்கிறது என்பதை மெத்த பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் தொய்வில்லாப் பணியின் மூலம் டெல்லியில் தந்தை பெரியார் கொள்கை புன்முறுவல் பூக்கிறது. இன்னும் நிறைய பணியிருக்கிறது. வருங்காலத்தில் இயக்கத்திற்கு புதிய இளைஞர்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. மகளிரின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். ஜனவரியில் கிராமப் பிரச்சாரத் திட்டத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மக்களிடையே புதிய பிரச்சார உத்திகளை ஏற்படுத்தி இயக்கத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும். எனக்கு உங்களைப் பார்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்னும் உங்களுக்காக உழைத்து, உங்களை என்னுடையே தோளிலே தூக்கிச் சுமப்பதற்கு உரிமை பெற்றவன் என்ற முறையிலே அந்த வலிமையோடு உழைக்கின்றேனே அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. சிலர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம், விலக்கப்பட்டவர்களை வைத்து வியாக்கியானம் செய்யலாம், வழக்கு மன்றத்திற்குப் போகலாம் என்று நினைத்தால் அதைச் சந்திப்பதற்கு இந்தப் படை எப்போதும் தயாராக இருக்கிறது.அப்படி நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. உங்களுக்குப்பின்புலம் எது? எங்கே இருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். மிக நன்றாகவே தெரியும். எனவேதான்

தந்தை பெரியார் இட்ட -_ விட்ட பணிகளை முடிக்க எந்த நம்பிக்கை என் மீது வைத்திருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை என்னுடைய இருதயத்தின் கடைசி துடிப்பு இருக்கின்ற வரையிலே, என்னுடைய உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை காப்பாற்றுவேன் என்பதைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்

கெல்லாம் சொல்ல இருக்கிறது. நண்பர்களே, நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. காரணம், நம்முடைய நியாயங்கள் தோற்பதில்லை. வெற்றி நமதே! வீறுகொண்டு நடைபோடுவோம்’’ என உலகளவில் பெரியாரின் தேவையும் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் பா.தெட்சிணாமூர்த்தி நன்றி உரையாற்றினார்.

திராவிடர் கழகம் டிசம்பரில் நடத்திய சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த உலக மனிதநேய அமைப்பின் உறுப்பினரான லெவி ஃபிராகல் அவர்கள் நார்வே சென்ற பின், மாநாட்டு நினைவுகளை எண்ணி பெருமகிழ்ச்சி கொண்டு,

நமது பணியினைப் பாராட்டும் வகையில் ஒரு கடிதத்தினை 9.1.1997 அன்று கழகத்திற்கு அனுப்பினார். அதில்,

அன்புள்ள திரு.வீரமணி,

திசம்பரில் 23, 26 ஆகிய நாள்களில் நான் சென்னை வந்திருந்தபோது, தாங்கள் என்னிடம் காட்டிய அளவற்ற அன்புக்காகவும், விருந்தோம்பலுக்காகவும் நான் என்னுடைய ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பகுத்தறிவாளர்கள் / மனித நேயப் பற்றாளர்களின் ஒரு நிகழ்ச்சி அமெரிக்கா அல்லது அய்ரோப்பாவில் இல்லாமல் இந்தியாவில், உலக அளவில் மிகச் சிறப்பான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது வித்தியாசமாக இருக்கிறது.

தங்களையும், தங்கள் தமிழக மக்களையும் மீண்டும் சந்திக்கவும், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் தங்கள் பணி குறித்து முழுமையாக அறியவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் அங்குத் தங்கியிருந்த காலத்தில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக் கொண்ட திரு.போகா அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அன்புடன்,

லெவி ஃபிராகல் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களது தமக்கையர் ஆயப்பாடியைச் சார்ந்த இராசேசுவரி, சிங்கப்பூர் ஓ.டி.மூர்த்தி ஆகியோரின் செல்வன் தெ.வீரமணிக்கும், விழுப்புரம் டி.சந்திரசேகரன், சுமதி ஆகியோரின் செல்வி உமாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 19.1.1997 அன்று பொறையாறு சியாமளா கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தி வைத்தேன். கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் சிங்கப்பூர் தி.நாகரத்தினம், எம்.ஆர்.சந்திரன், திருமதி விஜயகுமாரி ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். விழாவில் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும், தந்தை பெரியாரின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினேன். விழாவில் ஏராளமான பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அடுத்து மதுரையில் நடைபெறும் திருமணத்திற்குப் புறப்பட்டேன்.

சுயமரியாதைச் சுடரொளி மதுரை ஓ.வி.கே.நீர்காத்தலிங்கத்தின் பேத்தி மணவிழா 20.1.1997 அன்று மதுரை ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. மணமக்கள் ஓ.வி.கே.என். அறிவுச் செல்வம், அ.சித்ரா ஆகியோருடைய செல்வி சுஜிபிரியா அவர்களுக்கும், மதுரை ஆர்.சந்திரசேகரன், சி.மல்லிகா ஆகியோரின் செல்வன் சி.வெங்கடேஸ்ராஜ் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரை யாற்றினேன். மணவிழாவில் கு.வெ.கி.ஆசான், சி.மகேந்திரன், பேராசிரியர் காளிமுத்து, அ.இறையன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், திருமகள் இறையன் மற்றும் ஏராளமான மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு அருகிலுள்ள ஒக்கநாடு மேலையூரில் அய்யா சிலை திறப்பு விழா மற்றும் கிராமப்புற பகுத்தறிவு மாநாடு 21.1.1997 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டேன். பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலையை மக்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே, அதிர்வேட்டு ஒலிக்க திறந்து வைத்தேன்.

காலை முதலே கிராமப்புற பகுத்தறிவு மாநாடு துவங்கி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கமும், நாடகமும் சிறப்பாக நடைபெற்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் அரவிந்த் என்ற சிறுவனுக்கு பெரியார் செல்வம் என்றும், வீதி நாடக நடிகர் தெற்கு நத்தம் வேம்பையன் ஆண் மகனுக்கு தமிழ்ச் செல்வன் எனவும், சாந்தியின் பெண் மகவுக்கு மணியம்மை எனவும், முத்துலெட்சுமி, முருகேசன் ஆகியோருடைய ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வம் எனவும், பெரியார் மணி _ சாந்தா ஆகியோருடைய பெண் மகவுக்கு அன்புமணி எனவும் பெயர் சூட்டினேன். மாநாட்டு நிகழ்ச்சிகளை மாநில இளைஞரணிச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வை.குப்புசாமி ஆகியோர் சிறப்பாக அமைத்திருந்தனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழாக் குழுவிற்கு சால்வைகளை அணிவித்தேன். நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு 10 மூடை நெல்லை கிராமப்புற மக்கள் சார்பாக விழாக்குழுவினர் வழங்கினர். மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி சுந்தர் திருமண மண்டபத்தில் வழக்குரைஞர் இரெ.பழனியப்பன் _ டாக்டர் சரோஜா ஆகியோரின் மகன் வழக்குரைஞர் இரவிசங்கர், பெங்களூர் டாக்டர் லதா ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் 27.1.1997 அன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பெரியார் பெருந்தொண்டர் தி.நாகரத்தினம், இரத்தின நடராசன், வெங்கடாசலம், ‘அரிமா’ ரெங்காச்சாரி ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, பாராட்டினர்.

(நினைவுகள் நீளும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:12 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சென்னை, மாநில மாநாடு

வியாழன், 13 அக்டோபர், 2022

மானமிகு தோழர் ‘செஞ்சட்டை’ கே.பஞ்சாட்சரம் மறைவு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (272)

ஜுலை 16-31,2021
July 16, 2021உண்மைLeave A CommentOn அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (272)

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு வேண்டும்

கி.வீரமணி

( கட்டுரையின் ஒரு பகுதி)

சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவரும் “அறிவுவழி’’ இதழின் ஆசிரியரும், சுயமரியாதை சமதர்ம வீரருமான மானமிகு தோழர் ‘செஞ்சட்டை’ கே.பஞ்சாட்சரம் அவர்கள் ஒரு விபத்தின் காரணமாக திடீரென்று 25.10.1996 அன்று காலமானார் என்ற செய்தி நமக்குப் பேரிடியாய் அமைந்தது.

திராவிடர் கழகம் நடத்தும் அத்தனை அறப்போர்களிலும் தவறாது ஈடுபடும் தோழர் பஞ்சாட்சரம் ஒரு தீவிர சுயமரியாதை கொள்கைக்காரர்; 24 மணி நேரத்தில் பெரும்பகுதியை பெரியார் திடலில்தான் செலவழிக்கக் கூடியவர்.

அவரது மறைவு நமது இயக்கத்திற்கு மிகப் பெரும் ஈடு செய்ய இயலாத இழப்பு ஆகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ‘அறிவுவழி’ தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, மறைந்த மாவீரருக்கு நமது வீர வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பஞ்சாட்சரம், மறைவு

மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி! - சென்னை

 

  October 12, 2022 • Viduthalai

 அனைத்துக் கட்சி- சமூக அமைப்பு தலைவர்கள் - தோழர்கள் பங்கேற்பு - தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற

மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி!

தமிழர் தலைவர் கி.வீரமணி - கே.வி.தங்கபாலு - வைகோ - தொல்.திருமாவளவன் - கே.பாலகிருஷ்ணன் - இரா.முத்தரசன் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் - ஜவாஹிருல்லா - வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்

சென்னை, அக். 12 -மதவெறி பரப்புரை செய்து சமூக அமைதியை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையை எதிர்த்து மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், நிலை நாட்டவும் நேற்று (11.10.2022) மாலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள்,  அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அண்ணா சாலையில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை அருகே நேற்று மாலை 4 மணியளவில் இம்மாபெரும் மனித  சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. பெரியார் சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம்வரை மிக நீண்ட தூரம் வரிசையாக மதச்சார்பற்ற கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், இதர ஜனநாயக அமைப்புகளின் மாநிலத் தலை வர்களும் பங்கேற்ற இந்த மனித சங்கிலி அறப்போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மதவெறி பரப்புரை செய்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக் கைகளைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைப் பலவீனப்படுத்த, மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் படுவதைக் கண்டித்தும் ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங் கேற்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை யிலும், காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு அவர்கள் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் தலைமையிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் தலைமையிலும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தலைமையிலும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் இம்மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒலிமுழக்கங்கள்

இப்போராட்டத்தில், சாலையோரத்தில் அனைவரும் வரிசையாக நின்று கைகோத்தபடி ‘வீர வணக்கம், வீர வணக்கம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு, தந்தை பெரியா ருக்கு, மாமனிதர் மார்க்சுக்கு, பெருந்தலைவர் காமராசருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு வீர வணக்கம், வீர வணக்கம்' என்று தொடங்கி, ‘சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம், தமிழ் மண்ணின் மணம் காப்போம், வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம்' போன்ற ஒலி முழக்கங்களை சுமார் ஒரு மணிநேரம் எழுப்பினர்.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றபடி, அண்ணா சாலையில் மனித சங்கிலியில் பங்கேற்றவர்களைப் பார்த்து ஒலி முழக்கமிட்டவாறு சென்றனர்.

நிறைவாக அண்ணா மேம்பாலம் அருகே மனித சங்கிலி அறப்போராட்டம் முடிவடைந்தது.

திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு

இம்மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர், பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சோ.சுரேசு, சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால்.

தென்சென்னை சார்பாக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேது ராமன், கோவி.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.ந.மதியழகன், ச.மகேந்திரன், சண்முகப்பிரியன், பி.டி.சி. இராசேந்திரன், யுவராஜ், அப்துல்லா, செல்வராசு, அரிதாஸ், பெரியார் பிஞ்சுகள் பெரியார் ஆதவன், பெரியார் இனியன் மற்றும் பூ.இராமலிங்கம், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் ஜெனார்த்தனம்.

வடசென்னை சார்பாக மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ.கணேசன், கி.இராமலிங்கம், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், ந.இராசேந்திரன், துரை.ராவணன், கு.ஜீவா, க.கலைமணி, சி.பாசுகர், பா.கோபாலகிருட்டிணன், கண்மணி துரை, க.செல் லப்பன், மனோகரன், திராவிடச்செல்வன் மற்றும் ஆலங்குடி குமார்.

மகளிரணி சார்பாக சி.வெற்றிச்செல்வி, க.சுமதி, க.வெண்ணிலா, சாந்தகுமாரி, தொண்டறம், முத்துலட்சுமி, அன்புமணி, த.மரகதமணி, இரா.தமிழரசி, ஜெயலட்சுமி, மணிமேகலை, க.கோட்டீசுவரி, பெரியார் பிஞ்சுகள் திலீபன், அதிரா மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில்...

இம்மனித சங்கிலிப் போராட்டத்தில் அண்ணா சாலை எல்.அய்.சி. கட்டடம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், மாநில செயலாளர் அகரம் கோபி, இலக்கிய பிரிவு தலைவர் பி.எஸ்.புத்தன் மற்றும் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இம்மனித சங்கிலி அறப்போராட்டத்தில் பேராயர் எஸ்றா.சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும் பங்கேற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் சக்கர நாற்காலி, 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் ஒரே இடத்தில் திரண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒலி முழக்கமிட்டனர்.

செய்தியாளர்களிடம் தலைவர்கள் கருத்து

தலைவர்கள், மனித சங்கிலி அணிவகுப்பை பார்வை யிட்டபடி ஆயிரம் விளக்கு மசூதி பகுதிக்கு ஜீப்பில் சென்றனர். பின்னர் மனித சங்கிலி குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாசகார வேலைகளைச் செய்யும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதை மனித சங்கிலி நிரூபித்துக் காட்டியுள்ளது. 

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழ்நாட்டில் ஜாதியவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவர் களது பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா: மதச்சார்பின்மையை தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்துவோம். மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்கும் வல்லமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வேண்டுகோள் விடுத்தவுடன் தன்னெ ழுச்சியாக கலந்து கொண்டவர்கள் மூலம் பாஜகவுக்கு எதி ரான வெறுப்பு இங்கு வேரூன்றியிருப்பது தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை மண் மூடச் செய்வதற்கான எச்சரிக்கைதான் இந்த மனித சங்கிலி.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழ்நாட்டில் நவ.6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ்அணிவகுப்பு நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளிலும் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் எதிர் நடவடிக்கைகளை நாங்கள் மேற் கொள்ளும் நிலை ஏற்படும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: தமிழ்நாட்டில் மதவாத இயக்கங்களுக்கு அனுமதியில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:25 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மனித சங்கிலி

புதன், 12 அக்டோபர், 2022

தென் சென்னையில் புரட்சியாளர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
  October 10, 2022 • Viduthalai


இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:12 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தந்தை பெரியார், பிறந்தநாள்

புதிய பொறுப்பாளர்கள் - தலைமை செயற்குழு தீர்மானங்கள்



   October 10, 2022 • Viduthalai

8.10.2022 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளராக பாஸ்கரன், பழனி மாவட்டக் கழகத்திற்கு தலைவராக முருகன், மாவட்ட செயலாளராக பொன். அருண்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

கழகச் சொற்பொழிவாளர் மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுகள்

8.10.2022 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட பிரச்சாரத் திட்டங்கள் வருமாறு:

அக்டோபர்- 2022 முதல் ஜூன் - 2023 வரை பிரச்சாரத் திட்டங்கள்

1. அக்டோபர் மற்றும் நவம்பர் பிரச்சாரத் திட்டம்

= ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு கூட்டங்கள்

= 64 மாவட்டங்களிலும் - 128 கூட்டங்கள்

= பேச்சாளர்கள் - 25 பேர்கள்

= நிகழ்ச்சிகள் - தெருமுனை அல்லது பொதுக்கூட்டங் களாக நடைபெற வேண்டும்.

= மழை நெருக்கடியிருப்பின் - அரங்க நிகழ்ச்சியாக நடத்தலாம்

2. டிசம்பர் மாத பிரச்சார திட்டம்

= தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு கிராமப் பிரச்சாரத் திட்டம்.

= முதற்சுற்று - 10 மாவட்டங்களில்

= ஒரு மாவட்டத்தில் 10 நாட்கள் மட்டும்.

= ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் - அ) 1 பேச்சாளர் ஆ) 1 மந்திரா? தந்திரமா நிகழ்ச்சியாளர் (அல்லது) (இ) பகுத்தறிவு இசை நிகழ்ச்சி (ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி மட்டும்)

3. புத்தாண்டு - 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிகழ்ச்சிகள்

= தமிழர்  திருநாள் -  தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு

= பொதுக்கூட்டம், = பட்டிமன்றம், = வழக்காடு மன்றம்

= சுழலும் சொற்போர்

= கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அருள்மொழி, அதிரடி அன்பழகன் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள்

= ஒரு மாவட்டத்தில் மேற்கண்ட ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுதல் வேண்டும்.

= பொதுவெளியில் இயன்றவரை நடைபெறுதல் வேண்டும்.

4. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

= மண்டலத்திற்கு ஒரு பயிற்சிப் பட்டறை

= 100 பேர்களுக்கு மிகாமல்

= தலைமைக்கழக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்

= 2023-க்குள் அனைத்து மண்டலத்திலும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றிடல் வேண்டும்.

5. மந்திரமா? தந்திரமா பயிற்சிப் பட்டறை

இம்மாத (அக்டோபர்) கடைசி வாரத்திற்குள் குறைந்தது 25 - பேர்களுக்கு மந்திரமா-? தந்திரமா? நிகழ்ச்சி செய்வ தற்குரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

ஜூன் - 2023

ஜூன்  - பள்ளி, கல்லூரி வாயிற் கூட்டங்கள் நடத்திடல் வேண்டும்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தலைமை செயற்குழு, புதிய பொறுப்பாளர்

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மறைவு - நன்கொடை - படத்திறப்பு-ம.அஞ்சலா (வயது-81)

 


மறைவு 

October 10, 2020 • Viduthalai • மற்றவை
செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி அவர்களின் தாயார் ம.அஞ்சலா (வயது 81) அவர்கள் 7.10.2020 அன்று அதிகாலை செங்கல்பட்டு அருகிலுள்ள வல்லம் என்ற ஊரில் காலமானார்.  மாலை 4 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கழகத்தின் சார்பிலும் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. கலியப்பேட்டை தமிழ் மணி, செங்கல்பட்டு இராஜேந்திரன், தன சேகரன், செம்பியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பேரமனூர் கழகத் தோழர்கள் சு. விஜயராகவன். கி.நீலகண்டன், கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க தலைவர் த.ரமேஷ், துணைத்தலைவர் கோ.குமாரி மற்றும் கழகத் தோழர்களும் கோத்ரேஜ் தொழிற்சாலை தொழிலாளர்களும் மரியாதை செலுத்தினர்.
October 17, 2020 • Viduthalai • 


7.10.2020இல் மறைந்த தனது தாயார் ம.அஞ்சலா (வயது-81) அவர்களின் படத்திறப்பு (18.10.2020, வல்லம், செங்கல்பட்டு) நிகழ்ச்சியின் நினைவாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார் செங் கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அஞ்சலா, செங்கல்பட்டு, மறைவு

சனி, 1 அக்டோபர், 2022

சென்னை ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் அவர்களது 60ஆம் ஆண்டு பிறந்த நாள்!


   September 10, 2022 • Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றார்

நேற்று (9.9.2022) மாலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை இல்லத்தில் சந்தித்து, சென்னை ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் அவர்கள்  இன்று (10.9.2022) துவங்கும் தமது 60ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களைப் பெற்றார்!

பிரபல சென்னை ஆடிட்டரான அவர் ஒரு சிறந்த பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்து  வளர்ந்த பகுத்தறிவாளர்.

கழகத் தலைவரிடம், தமது 60ஆம் ஆண்டு பிறந்த  நாள் மகிழ்வாக நாளையொட்டி திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலக'த்திற்கு  ரூபாய் அய்ம்பதினாயிரமும், 'விடுதலை' வளர்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாயும்  வழங்கினார்.

கழகத் தலைவரும், அவரது வாழ்விணையர் திருமதி மோகனாவும் ஆடிட்டர் இராமச்சந்திரன் - அவரது வாழ் விணையர் திருமதி வேல்விழி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக் கூறினர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:49 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அன்பளிப்பு, ஆடிட்டர் ராமச்சந்திரன், பிறந்தநாள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம, 22. 11 .2025 மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93 வது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார். நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. இரங்கல் தீர்மானம் கவியருவி ஈரோடு தமிழன்பன், தாம்பரம் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.ரத்னசாமி, இரத்தினசாமி அவர்களின் இணையர் ர. ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2. 'பெரியார் உலகம்' கட்டுமான நிதிக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதன ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. 3. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 வது ஆண்டு (டிசம்பர் -2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், 4. கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழக பரப்புரை பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 5. பெரியார் உலகம் நிதி திரட்டுவதற்காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இளைஞர் அணி துணைத் தலைவர் அ. அன்பு நன்றி கூறினார்.
Powered By Blogger

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்

லேபிள்கள்

  • ‘உரையாடல் குடில்
  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா
  • அ.பாபு
  • அகழாய்வு அறிக்கை
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழகிரி
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவு இல்லம்
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • ஆளுநர் எதிர்ப்பு
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரத்தினசாமி
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் அரங்கம்
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இல கணேசன்
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம் ஜி ஆர் நகர்
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • எஸ்.அய். ஆர்.
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • க.வெற்றிவீரன்
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கலைஞர் பிறந்த நாள்
  • கலைஞர் பிறந்தநாள்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கள வீரர்கள்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காசா
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காண்டீபன்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • கார்ல்மார்க்ஸ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலக்கணக்கு
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கி.வீரமணி விருது
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கீழடி
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமரேசன்
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கேரளா
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ. அரங்கநாதன்
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சமூகநீதிக் காவலர்
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சாலிகிராம்
  • சாஸ்திரி பவன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதைச் சுடரொளி
  • சுவர் எழுத்து
  • சுவர் ஓவியம்
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை தொகுதி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோ.சுரேஷ் – மு.பவானி
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • ஞாயிறு மலர்
  • டி ஆர் பாலு மனைவி
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டி.கே.நடராசன் – குஞ்சிதம்
  • டிரோஜன் குதிரை
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தமிழினி
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாம்பரம்<விஜயவாடா
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.இரா.இரத்தினசாமி
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரை.இராவணன்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேசியக் கல்வி
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொல்லியல் அகழாய்வு
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளர் சட்டம்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நகல் எரிப்பு
  • நடராசன்
  • நடராஜன்
  • நடராஜன் குடும்பம்
  • நடவடிக்கைகள்
  • நடிகர்ராஜேஷ்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகம்மையார்
  • நாகர்கோயில்
  • நாத்திகர் மாநாடு
  • நால் அறிமுகம்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நிறைவு விழா
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நெகிழித்திரை
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தகம் வெளியீடு
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொறுப்பு மாவட்டங்கள்
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • போரூர்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி -மகளிர் பாசறை
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைமலைநகர்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்சிகள்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாட்டு தீர்மானங்கள்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மார்ஷல்
  • மாலை
  • மாலை அணிவி
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முத்தையன்
  • முதல்வர்
  • மும்பை
  • மும்மொழித் திட்டம்
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மேற்கு சென்னை
  • மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்
  • மேனாள் பிரதமர்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராதிகா தாயார்
  • ராமாபுரம்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட்டார மாநாடு
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்க்கை
  • வாழ்க்கை குறிப்பு
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருகம்பாக்கம்
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கக் கூட்டம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா
    கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின்...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • சைதை எம்.பி. பாலு பேசுகிறேன்!
    1948 ஆம் ஆண்டு ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை முதல் முதலாக கேட்டேன். அன்று முதல் நான் பெரியாரின் ...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (48)
    • ▼  ஜூலை (6)
      • நீட்’, EWSசை எதிர்த்து இரு சக்கர வாகனப் பயணத்தைத் ...
      • தென்சென்னையில் ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை' எ...
      • மாங்குடி துரை.இராவணன்!
      • கல்வி வள்ளல் காமராசரின் 124 ஆம் ஆண்டு பிறந்த நாள்:...
      • பேரெழுச்சி தந்த அறப்போராட்டக் கள வீரர்கள் பட்டியல்...
      • சேலம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்...
    • ►  ஜூன் (7)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (6)
  • ►  2025 (94)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (16)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ►  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.