19.07.2026 மாலை 6.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் கோடம்பாக்கம் 'படைப்பு அரங்கத்'தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை' என்ற நூலின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மு.இரா.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் நூலைப் பற்றி ஆய்வுரை வழங்கினார்.
பகுத்தறிவாளர்கள் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற, திராவிடர் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் மற்றும் பயனாளர்களும் கலந்து கொண்டனர்.















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக