ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அறிஞர் அண்ணாவின் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் - சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பத்தின் தலைமகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2019)  சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் - தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தும், அவர் படத்திற்கு மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பத்தின் தலைமகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2019) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் - தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தும், அவர் படத்திற்கு மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், துணைப்பொதுச் செயலா ளர் ச.இன்பக்கனி, திராவிட வர லாற்று ஆய்வு மய்ய செயலாளர் முனைவர் ந.க.மங்கள முருகேசன், மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தைய்யன், சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் விடுதலை நகர் ஜெயராமன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மயிலை டி.ஆர்.சேதுராமன், சைதை மு.ந.மதியழகன், ஆயிரம் விளக்கு சேகர், அரும்பாக்கம் சா.தாமோதரன், கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, க. கலைமணி, சுதன், உடுமலை வடிவேல், தளபதி பாண்டியன், காரல்மார்க்ஸ், பா.கோபாலகிருஷ்ணன், அமைந்த கரை சாம்குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திர ளாகப¢ பங்கேற்று இந்நிகழ்வில் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிஞர் அண்ணா அவர்க ளின் அடுத்த ஆண்டு பிறந்த நாள் முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக் கும் அண்ணா சிலைக்குக் கழகத் தின் சார்பில் மாலை அணிவிக்கப் படும்.
- தலைமை நிலையம்
விடுதலை நாளேடு, 15.9.19

சனி, 14 செப்டம்பர், 2019

திராவிட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்

மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள்: நா.ஜீவா (ஆண்டிப்பட்டி), நாத்திக பொன்முடி (நாகை), எழில் சிற்றரசு (திருப்பத்தூர்), வி.தங்கமணி (மயிலாப்பூர்), இராசி.பிரபாகரன் (கோவை), ச.அஜிதன் (கும்பகோணம்), த.யாழ்திலீபன் (தருமபுரி)

மண்டல மாணவர் கழக செயலாளர்கள்: மா.செல்லதுரை (தருமபுரி), சு.தமிழ்மணி (அருப்புக் கோட்டை), ஷா.ரிஸ்வான் (திருச்சி), கெ.வெற்றிச்செல்வன் (அரியலூர்), ஜெ.ம.விக்ரம் செல்வா (பழனி), மு.இராகுல் (கோவை).

இங்ஙனம்: சா.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்)

- விடுதலை நாளேடு, 9. 9 .19

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சுப்பம்மாள் - கணபதி இணையரின் கனவு இல்லம் திறப்பு விழா

8.9.2019 ஞாயிற்றுக்கிழமை


சுப்பம்மாள் - கணபதி இணையரின் கனவு இல்லம் திறப்பு விழா


பூவிருந்தவல்லி: மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை

 * இடம்: 3, அம்மன் கோயில் குறுக்கு தெரு, வடக்கு மலையம்பாக்கம், பூந்தமல்லி, சென்னை - 123 

* வரவேற்பு: அரும்பாக்கம் சா.தாமோதரன் 

* முன்னிலை: இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்), இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, வெ.கார் வேந் தன், பெரியார் மாணாக்கன்

 * தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)

 * திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), 

தாம்பரம் தி.இரா.ரத்தினசாமி (மண்டல தலைவர்), தெ.சே.கோபால் (மண்டல செயலாளர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், ப.முத்தையன் நீலாங்கரை வீரபத் திரன், புழல் ஆனந்தன், எண்ணூர் மோகன் 

* குறிப்பு: மாவட்ட கழக பகுதி கழக, கிளை கழக, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்,

 * நன்றியுரை: த.அண்ணாதுரை * 

விழைவு: க.தமிழ்ச்செல்வன், த.லலிதா

- விடுதலை நாளேடு, 2.9.19

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

புதியதாக பொறுப்பேற்ற வி.பி. கலைராஜன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை - தமிழர் தலைவரிடம் வாழ்த்து



திமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட வி.பி. கலைராஜன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். உடன்: சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (சென்னை, 2.9.2019)
- விடுதலை நாளேடு, 3.9.19

வி.பி.கலைராஜன் அவர்களுக்கு பாராட்டு



2.9.2019 முற்பகல் 10 மணி அளவில் வி.பி.கலைராஜன் அவர்களை கோபால புரத்தில் உள்ள இல்லத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் சந்தித்து தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துத் தெரிவித்து  பயனாடை அணிவித்துப் பாராட்டினார். உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளனர்.
- விடுதலை நாளேடு, 3 .9 .19

திங்கள், 2 செப்டம்பர், 2019

நூல் வெளியீடு

கலைமாமணி முனைவர் பெரு. மதியழகன் மணி விழாவில் "என் பார்வையில் பாவேந்தரின் குடும்ப விளக்கு' என்ற நூலினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஒடிசா அரசின் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். (சென்னை -1.9.2019)
-விடுதலை நாளேடு, 2.9.19

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சேலம் மாநாட்டில் தென் சென்னை பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவழ விழா மாநாட்டிலும் பேரணியிலும் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் பங்கேற்றது!

27.8.19 பகல் சேலம் அம்மாப்பேட்டை மாநாடு, மாலை நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணி, இரவு கோட்டை மைதானத்தில் மாபெரும் மாநாடு!

27.8.19 பகல் சேலம் அம்மாப்பேட்டை மாநாடு






மாலை சேலம் நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணி



















மாலை மாநாடு