வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை


தமிழ்நாடு

சென்னை, ஆக.7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (7.8.2026) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராவிட இயக்கத்தின் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தன்னை ஒரு வரி விமர்சனத்திற்குள் அடக்கி, பதிலளித்த வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2026) காலை10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் இணைந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர்
ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு  பெரியார், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா. மகளிரணித் தோழியர்கள் பேராசிரியர் க. பெரியார்செல்வி, பசும்பொன், தங்க. தனலட்சுமி, மு. பவானி, நதியா, த.மரகதமணி, த.இளவரசி, பூவைசெல்வி, செ.பெ.தொண்டறம், அன்புச்செல்வி. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், அய்ஸ்அவுஸ் அன்பு, ச. மகேந்திரன், பெரியார் மாணாக்கன், சி. காமராஜ், ஆனந்தன், ஜி. சண்முகம்.

தமிழ்நாடு

தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா. முத்தையன், மோகன்ராஜ், கருப்பையா, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு. அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன்,  கொடுங்கையூர் தங்கமணி, எம்.ஆர். மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன்,  அருண், ஆனந்தன், நெய்வேலி, ஞானசேகரன்,  விடுதலை நகர்  பி.சி. ஜெயராமன், கலைமணி, அருண் ரங்கநாதன், விஜய், பார்த்திபன், பெரு. இளங்கோ, உடுமலை வடிவேல், ப. சிவக்குமார், இராவணன், ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன், பேராசிரியர் தீபக், சண்முகம் மாங்குடி துரை. ராகவன், சேரலாதன், முரளி கிருஷ்ணன், டாக்டர் பைரி நரேஷ் (தெலங்கானா) உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 07.08.26