வெள்ளி, 2 ஏப்ரல், 2021

என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை’ தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விளக்கம்

April 01, 2021 • Viduthalai

சென்னை,ஏப்.1- தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்ட விளக்கத்துக்குதனது பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் .ராசா விளக்கம் அளித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் .ராசா எம்.பி., தேர்தல் பிரச்சாரத்தின்போதுமுதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டதுஇதுதொடர்பான பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்புகாரின்பேரில் .ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஅதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதேர்தல் ஆணையம் சார்பில் .ராசாவிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளதுஅதற்குமின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையத்துக்கு .ராசாஅனுப்பி யுள்ள இடைக்கால விளக்க கடிதத்தில் கூறியி ருப்பதாவதுதிராவிட இயக்கத்தின் அடித் தளமே மகளிருக்கு அதிகாரம் அளித்தலும்சமுதாயத்தில் அவர்களுக்கு சமஉரிமை வழங்குதலும் தான்டாக்டர் அம்பேத்கர்தந்தை பெரியார்அறிஞர் அண்ணா ஆகி யோரின் மாணவனாகமறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின்  வழிகாட்டுதலில்திமுக வில் உறுப்பினராக இருக்கும் நான் ஒருபோதும் மகளிர்குறித்து இழிவாக பேசமாட்டேன்.

முதல்வரை நான் இழிவுபடுத்தியதாக அதிமுகவும்பாஜகவும் தேர்தல் ஆதாயத்துக் காக பொய்யான பிரச்சாரத்தை செய்கின்றன.

கடந்த 27ஆம் தேதி பெரம்பலூரில் செய்தி யாளர்களை சந்தித்துஎனது விளக்கத்தை அளித்தேன்அப்படி இருந்தும்முதல்வர் பழனிசாமி, 28ஆம் தேதி சென்னை திருவொற்றியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில்எனதுபேச்சை மேற்கோள் காட்டி உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார்அதைத் தொடர்ந்து 29ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, ‘முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் நோக்கில் பேச வில்லைஅது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால்அதற்கு மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்திருந்தேன்.

நான் தேர்தல் விதிகளை மீறி எதுவும் பேச வில்லைஎன் மீது அதிமுக சார்பில் எத்தகைய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியாதுஎனவேஅதிமுகவின் புகார் மனுவை எனக்கு அளிக்க வேண்டும்அதன் பின்னரே எனது முழு விளக்கத்தை அளிக்க முடியும்.

பொதுமக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உவமானத்தை மேற்கோள்காட்டி முதல்வர் பழனிசாமிதிமுக தலைவர் ஸ்டாலின் ஆகி யோர் அரசியலில் உயர்ந்ததை ஒப்பிட்டு பேசினேன்என் முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால்அதில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும்இவ்வாறு அதில் .ராசா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக