புதன், 13 பிப்ரவரி, 2019

கழக வெளியுறவுச் செயலாளராக தோழர் கோ.கருணாநிதி

நமது இயக்கப் (திராவிடர் கழக) பணிகள் நாளும் தமிழ்நாட்டைத் தாண்டி அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளிலும் பரவி, அவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவரவர் விருப்பங்களை நிறைவேற்றிடவும்,  பன்மொழி இணைய தளங்களும், பல மாநில, நாடுகளிலும் தொடர்புடன் தந்தை பெரியார் லட்சியங்கள் பற்றியும், உலகம் முழுவதும் பரவிடவும் பெரியார் - அம்பேத்கர் கல்வி வட்டங்களுடன் தொடர்பு கொண்டு பணிகளைப் பெருக்கவும், கழகத்தின் வெளியுறவுச் செயலாளராக மானமிகு தோழர் கோ.கருணாநிதி அவர்கள் நியமிக்கப்பட்டு, இன்றுமுதல் பொறுப்பேற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.2.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக