புதன், 12 செப்டம்பர், 2018

திராவிடன் நிதி லிமிடெட்டின் தலைவர் டி.கே.நடராசன் துணைவியார் குஞ்சிதம் அம்மையார் மறைவு

சென்னை அரசு மருத்துவமனையில் உடற்கொடை அளிக்கப்பட்டது




திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்  மறைந்த குஞ்சிதம் அம்மையார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, செப். 7- பெரியார் புத்தக நிலைய மேலாளர், திராவிடன் நிதி தலைவர் த.க.நடராசன் அவர்களின் வாழ்விணையர் குஞ்சிதம் நடராசன் (வயது 75) உடல்நலமின்றி மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (6.9.2018) காலை மறைவுற்றார். அவரது உடல் சென்னை பெரியார் திடலில் பெரியார் நினைவிடம் வாயிலில் அருகில் வைக்கப்பட்டது. குஞ்சிதம் நடராசன் உடலுக்கு கழகக் கொடியை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் போர்த்தினார்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி இரங்கலுரையாற்றினார்.



கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மறைந்த குஞ்சிதம் அம்மையார் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்.


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,   வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் இராஜசேகரன், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்,  நீதிபதி பரஞ்சோதி (ஓய்வு) க.பார்வதி, கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு,  திராவிட நலநிதி மேலாளர் அருள்செல்வன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன் உள்ளிட்டவர்கள் இரங்கலுரையாற்றினார்கள்.

மோகனா வீரமணி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன், சுதாஅன்புராஜ்,  அச்சக மேலாளர் க.சரவணன், செய்திப்பிரிவு சிங்காரம், வே.சிறீதர், கணக்குப்பிரிவு முத்துக்கிருஷ்ணன், அச்சகப்பிரிவு பிரபாகரன், ஜெய ராஜ், பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி கா.அமுதரசன், நூலகர் கோவிந்தன், சுயமரியாதை திருமண நிலையம் பசும்பொன்செந்தில்குமாரி, நடிகவேள் எம்.ஆர்.ராதாமன்றம், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை உள்ளிட்ட பெரியார் திடல் பணியாளர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் பலரும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆடிட்டர் இராமச்சந்திரன், அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன்,  சட்டத்துறை தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் ஜெ.துரை, வழக்குரைஞர் ரத்தினகுமாரி, வழக்குரைஞ ரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கு.தங்க மணி, தங்க.தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி,  நாகவள்ளி, பெரியார் களம் இறைவி, சந்திரா முனுசாமி, மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

குஞ்சிதம் நடராசன் அவர்களுக்கு அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர், அவரது உடல் ஆம்பு லன்ஸ் மூலம் சென்னை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரியார் நினைவிடப்பகுதியி லிருந்து ஆம்புலன்சைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன்  அனைவரும் இணைந்து நடந்துசென்றார்கள். குஞ்சிதம் நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம் முழக்கத்துடன் இறுதி ஊர்வலம் சென்றது. பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை அன்னை மணிம் மையார் சிலை அமைந்துள்ள பகுதிவரை ஊர்வலம் சென்றது. அதன்பின்னர் சென்னை பொது மருத்துவ மனையில் உடற்கூறுஇயல் துறை இயக்குநர் சுதாசேஷய் யன் உடற்கொடை அளித்த குஞ்சிதம் நடராசன் குடும் பத்தினருக்கு வணக்கத்துடன் நன்றி யைத் தெரிவித்துக் கொண்டார்.

-  விடுதலை நாளேடு, 7.9.18

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

வாழ்க்கை இணை ஏற்பு விழா- த.அண்ணாதுரை- இர.நந்தினி



கோயம்பேடு கழகத் தோழர் க.தமிழ்ச்செல்வன்-த.லலிதா ஆகியோரது மகன் த.அண்ணாதுரை, திருநெல்வேலி கோ.இரவி-இர.முத்துமாரி ஆகியோரது மகள் இர.நந்தினி இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா 9.9.2018 அன்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தமிழுணர்வாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். உடன் மணமக்கள் பெற்றோர். (சென்னை - எம்.ஜி.ஆர்.நகர்)

- விடுதலை நாளேடு, 11.9.18

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா

தமிழர் தலைவரின் சமூக நீதிப்பாடம் விழா
ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா
சென்னை, செ.8 சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சிறப்புக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் சிறீராஜ் மகாலில் நேற்று (7.9.2018) மாலை 6 மணியளவில் நடை பெற்றது.
ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி தலைமையில் சிறப்புக் கூட்டம் எழுச்சியுடன் தொடங்கியது. திருப்போரூர் சிறீ சத்யசாய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர் இள.சூர்யகலா வரவேற்று பேசினார்.
மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா.பார்த் திபன், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வ.கலைச்செல்வன், செயலாளர் வ.வேலவன், அமைப்பாளர் த.பர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார். ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி தலைமையேற்று உரையாற் றுகையில், புதிதாக பங்கேற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்பற்றிய சிறப்பு குறிப்புகளை எடுத்துக்காட்டியதுடன் வரலாற்றை அறிவோம், வரலாறு படைப்போம் என்றார். மருத்துவ மாணவி மங்கையர்க்கரசி பேசுகையில் நீட்  தேர்வை ஒழிப்புக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டுமே முடியும் என்றும், அவர் ஆணைக்கு காத்திருப் பதாகவும் குறிப்பிட்டார்.
‘நம் உயிரோடு-ஈரோடு’ தமிழர் தலைவர் சிறப்புரை
நம் உயிரோடு & ஈரோடு தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மாணவர்களிடையே உரையாற்றினார்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு நம் உயிரோடு & ஈரோடு. சுவாசிப்பது என்பது உயிரோடு இருப்பதற்கான அடையாளம். பெரியாரை வாசிப்போம், சுவாசிப்போம் என்ற கும்பகோணம் மாநாட்டின் முழக்கத்தின் சுருக்கமாக ‘நம் உயிரோடு&ஈரோடு’ என்று தலைப்பு கவிதையாக அளிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மாணவச் செல்வங்கள் முந்திக் கொண்டுள்ளீர்கள் பெரியாரைப்பார்ப்பது அவர் உருவத்தை வைத்து அல்ல. பெரியாரை சுவாசிப்பது என்பதன்மூலம்,  அவரு டைய தத்துவங்களை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக மாணவச் செல்வங்கள் உள்ளீர்கள். மாணவர்களிடையே பேசத் தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களிடையே கேள்விகளை முன்வைத்தார்.
கேள்வி பதில்
இங்கே கூடியுள்ளவர்களில் மாணவர்கள் மட்டும் பதில் அளிக்க வேண்டும்.
1. மருத்துவ மாணவர்கள் எத்தனை பேர்? விடையாக 52 பேர். 2. மருத்துவ மாணவர்களில் பெற்றோரை மருத்துவ ராகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? விடையாக 5 பேர். 3. அனைத்து மாணவர்களில் பட்டதாரி பெற்றோரைக் கொண்டுள்ளவர்கள் எத்தனை பேர்? விடையாக 25 பேர். 4. அனைத்து மாணவர்களில் கல்லூரிக்கு சென்ற தாத்தா, பாட்டிகளைக் கொண்டுள்ளவர்கள் எத்தனை பேர்? விடையாக 9 பேர். 5. கல்லூரிக்குக் கீழ் எஸ்எஸ்எல்சி வரை படித்த  பெற்றோரைக்கொண்டவர்கள் எத்தனைபேர்? விடையாக 31 பேர். 6. அறவே படிக்காத பெற்றோரைக் கொண்டவர்கள் எத்தனை பேர்? விடையாக 23 பேர். 7.படித்த அம்மாக்களைக் கொண்டவர்கள் எத்தனை பேர்? விடையாக 36பேர்.  8. படித்த அப்பாக்களைக் கொண்ட வர்கள் எத்தனை பேர்? விடையாக 37 பேர்.
மேற்கண்டுள்ள இந்த விடைகளில் தாத்தா, பாட்டி 9பேராக மட்டுமே உள்ளனர். மருத்துவ மாணவர்கள் 52 பேர் உள்ளனர். இதற்கு காரணம் இந்த இயக்கம். நீதிக் கட்சி, திராவிட இயக்கம். சூத்திரனுக்கு கல்வி கொடுக்கக் கூடாது என்று முதல் தடை மனுதர்மத்தின் பெயரால் இருந்தது. அரசர்கள் காலத்தில் மனுதர்மம்தான் ஆண்டது.
மனோன்மணியம் சுந்தரனார்
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி?" என்றார்.
நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கத்தின் சமூகநீதி பயணம்குறித்து மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். சிறப்புக்கூட்டத்தில் கலந்து கொண்ட புதிய மாண வர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஆசிரியர் அவர்தம் உரையில், நீதிக்கட்சி, தந்தை பெரியார், திராவிடர் கழகம், சமூக நீதி வரலாற்று தகவல்களை பாடமாக எடுத்துக்காட்டி விளக்கமாக பேசினார்.  நீதிக்கட்சி ஆட்சியின்போது 1928 ஆம் ஆண்டுகளில் இருந்த சமூகநீயை காப்பாற்றிட களம் கண்டவர் தந்தை பெரியார். இந்திய அரசமைப்புச்சட்டத்தில்  முதல் திருத்தம் உள்பட மூன்று திருத்தங்கள் திராவிட இயக்கத்தால், சமூக நீதிக்காக ஏற்பட்டது என்பதை எடுத்துரைத்தார். குலக் கல்வியை ஒழித்தது போல் 'நீட்'தேர்வையும் ஒழிப்போம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.
மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களை துணைவேந்தர் குழந்தைவேல் அனுப்பிவைத்தமைக்கு சிறப்புக்கூட்டத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், சேலம், கிருஷ்ணகிரி, பர்கூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கூட்ட ஏற்பாட்டில் பங்களிப்பை வழங்கிய கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக துணை செயலாளர்கள் செந்தூர்பாண்டியன், நா.பார்த்திபன்,  மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, வடசென்னை மாணவர் கழகம் யாழ்.திலிபன், வேலவன், பிரவீன்குமார், சீர்த்தி, புரசை பகுதி அன்புச்செல்வன், பாலமுருகன் உள்ளிட்டோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார். மண்டப உரிமை யாளர் பாலாஜியை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். புரசை பகுதி சார்பில் பெரியார் பிஞ்சு அ.அறிவுமதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்.
சிறப்புக்கூட்டத்தை ஒருங்கிணைத்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு ஸ்டான்லி மருத்து வக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
நூல் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் ஆங்கில மொழியாக்க நூல் ‘லிஷீஸ்ணீதீறீமீ லிவீயீமீ’ வெளியிடப்பட்டது. பெரியார் மருத்துவரணி மாநில செயலாளர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு நூல் குறித்த அறிமுகவுரையாற்றினார். கழகப்பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து மாண வர்கள் பலரும் பெரிதும் ஆர்வத்துடன் நூலைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி, சென்னை இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மாணவர் எ.மங்கையர்க்கரசி, பெரம் பலூர் தனலட்சுமி மருத்துவக்கல்லூரி மாணவர் தொ.முத்துக்கிருஷ்ணன்,  செய்யாறு மருத்துவர் கா.கவுதமன் ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் க.கதிரவன், தாம்பரம் மருத்துவர் மு.கனிமொழி, சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் வீ.பாவேந்தன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சு.நாத்திகன், திருப்போரூர் சிறீ சத்யசாய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர் இள.சூர்யகலா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் க.சவுமியன், சிறீ சத்ய சாய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரி மாணவர் இரா.வீரபாண்டியன், சென்னை சட்டக்கல்லூரி மாணவர் திராவிட மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, தங்க.தனலட்சுமி, தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, வடசென்னை பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன்,  சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழகம் சீர்த்தி, மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், செந்துறை இராசேந்திரன்,  ஊரப்பாக்கம் சீனுவாசன், பொய்யாமொழி, தமிழ்செல்வி உள்பட பலரும் நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். சிறப்புக்கூட்ட முடிவில் தூத்துக் குடி க.கதிரவன் நன்றி கூறினார்.
நீட் தேர்வால் உயிரிழந்தோருக்கு மரியாதை
மாணவி அரியலூர் அனிதா, பெருவளூர் பிரதிபா,   திருச்சி சுபசிறீ, ஏஞ்சலின் சுருதி மற்றும் உயிரிழந்த பெற் றோர் உள்ளிட்ட ‘நீட்’ தேர்வால் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும்வண்ணம் அனைவரும் எழுந்து நின்று சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.
கலந்துகொண்டவர்கள்
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச்செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் விஜி இளங்கோ, திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ம. கவிதா, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், வெண்ணிலா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் மோகன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி.செங்குட்டுவன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  அனகை ஆறுமுகம், உடுமலை வடிவேல், கோ.தங்கமணி, மா.ராசு, பெரம்பூர் கோபலகிருஷ்ணன், தாம்பரம் விஜய்ஆனந்த், மோகன்ராஜ், சோமசுந்தரம், வடசென்னை இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
 - விடுதலை நாளேடு, 8.9.18

திங்கள், 3 செப்டம்பர், 2018

முகிலன் - மஞ்சு (ஈழத் தமிழ்ப்பெண்) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் உரை

நாடும் நிலமும் நம்மை பிரிக்காது - பண்பாடும், மனிதநேயமும் இணைக்கும்


முகிலன் - மஞ்சு (ஈழத் தமிழ்ப்பெண்) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் உரை




சென்னை, ஆக. 26-   நாடும், நிலமும் நம்மை பிரிக்காது - பண்பாடும், மனிதநேயமுமே நம்மை இணைக்கும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  12.8.2018 அன்று சென்னை வடபழனியில் உள்ள நாகி ரெட்டி ஹாலில் கோ.முகிலன் - செ.மஞ்சு ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

கோ.முகிலன் - செ.மஞ்சு


மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் நடைபெறக்கூடிய அன்புச்செல்வர்கள் முகிலன் - மஞ்சு ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு நம் அனைவரையும் வரவேற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும், இந்தக் குடும்பத்திற்கு உரியவருமான அன்பிற்குரிய அருமைத் தோழர் செங்குட்டுவன் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, கழகத் தோழர்களே, மன்றம் கண்டிடும் மணமக்களே, மணமக்களின் பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குடும்பத்து மணவிழாவில் கலந்துகொள்வதில் மிகுந்த வாய்ப்பும், பெருமையும் எங்களுக்கு உண்டு.

காரணம், இந்த மணவிழா என்பது இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, குறிப்பாக நம்முடைய குணசேகரன் அவர்களும், அய்யா பக்தவச்சலம் அவர்களும் சுட்டிக்காட் டியதைப்போல, தென்னமநாடு பெரியார் நாடு என்று நாங்கள் அழைக்கின்ற ஒரத்தநாட்டிற்குச் சென்றபொழுதெல்லாம், அதைப் பார்த்துவிட்டுச் செல்லக்கூடிய நிலையில், அந்தப் பகுதியில் இயக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக இருப் பார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அதிலே ஒரு குடும்பம் பெரியார் குடும்பங்கள், சுயமரியாதை உணர்வாளர்களுடைய குடும்பங்கள் நிறைந்துள்ளன என்பதற்கு அடையாளம் - இங்கே வந்தபொழுது ஒன்றை நினைவூட்டினார்கள்.

அய்யா பண்டரிநாதன் - புலவர் கோலப்பன்


தென்னமநாட்டின் சுயமரியாதை வீரர்களாகத் திகழ்ந்த அய்யா பண்டரிநாதன் அவர்கள், புலவர் கோலப்பன் ஆகி யோர்.

பண்டரிநாதன் மணவிழாவிற்கு, தென்னமநாட்டில் பெரியார் தலைமையேற்று ஆற்றிய உரை, பெரியார் களஞ்சியத்தில் பதிவாகி இருக்கிறது. ஆகவே, தென்னமநாடு இயக்க வரலாற்றிலேயே ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை செய்யக் கூடிய ஒரு அற்புதமான பகுதிகளில் ஒன்று.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் மணமகனது பெற்றோர்களாக இருக்கக்கூடிய சி.கோவிந்தராசு - கவுசல்யா ஆகியோர். இது நம்முடைய குடும்பம்.

இதில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், சமுதாயப் புரட்சி - ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம் இந்த மணமக்கள் - இந்த மணவிழாவாகும். இதனை நன்றாக ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்....


ஒரு காலத்தில் நாம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்தவர்கள். படிக்கக்கூடாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்.

இந்த ஒரு நூற்றாண்டில் பெரியார் என்ன செய்தார்? இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் என்ன செய்தார்கள்? திராவிடர் கழகம் என்ன செய்தது? என்பது - நம்முடைய ஈழத் தமிழர்களுக்கு - இலங்கைத் தமிழர்கள் என்கிற சொல், என்னுடைய வாயிலிருந்து அவ்வளவு சுலபத்தில் வராது - ஈழத் தமிழர்கள் என்றுதான் சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்று ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லக்கூடியவர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இது தெரியவேண்டும் என்பதற் காகச் சொல்கிறேன். மனுதர்மம் இந்த நாட்டை ஆண்டதினுடைய விளைவு, மிகப்பெரும்பான்மையான மக்கள், உழைக்கக்கூடிய மக்கள், பாடுபடக்கூடிய மக்கள், அறிவுள்ள மக்கள் பேதத்திற்குத் தள்ளப்பட்டார்கள் - பேதத்தை ஏற்றார்கள் - அதன் விளைவு பேதத்தை ஏற்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்தது.

அதனுடைய விளைவாக அந்தத் தத்துவம் - அதன்படி, எதைக் கொடுத்தாலும், கீழ்ஜாதிக்காரனுக்கு, சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்றார்கள்.

அருள்கூர்ந்து நினைத்துப் பார்க்கவேண்டும் நீங்கள் - என்ன இந்தத் திருமணத்தில் சடங்குகள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை, பிரச்சாரத்தைப்பற்றி அருள்மொழி பேசினாரே, பூங்குன்றன் பேசினாரே, அய்யா இளங்கோவன் அவர்கள் விளக்கமாக சொன்னாரே - என்னுடைய அருமைச் சகோதரர்கள் எத்தனையோ இன்னல்களையெல்லாம் கடந்து, அவைகளையெல்லாம் தாண்டி இன்றைக்குக் கனடா நாட்டிற்குச் சென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கக்கூடிய அளவிற்கு, அங்கேயும் தம்முடைய தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகள், நம்முடைய உடன்பிறப்புகள், அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்தக் கருத்தைச் சொல்கிறேன்.

பெண்கள் எப்பொழுதுமே படிக்கக்கூடாது, இதுதான் மனுதர்மம்


ஆண்களே படிக்கக்கூடாது; ஆண்களே படிக்கக்கூடாது என்றால், பெண்கள் எப்பொழுதுமே படிக்கக்கூடாது, இதுதான் மனுதர்மம்.

பழைய திருமணம், வைதீகத் திருமணம், புரோகிதத் திருமணம், இந்து மத சடங்கு, சம்பிரதாய திருமணம் என்று சொன்னால், எங்களுக்கொன்றும் அறிவுள்ள நிகழ்வுகள்மீது கோபமில்லை. எது அறிவார்ந்ததோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அவ்வளவுதான், நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

மானிடத்தினுடைய சரி பகுதி பெண்கள். அருள்மொழி அவர்கள் சொன்னதைப்போல, மாவீரர்களைக் கொண்டாடு கிறோம் என்றால், பெண்கள் வீராங்கனைகளாகக் களத்தில் நின்று, அவர்களை களத்திற்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்து, இன்னல்களை ஏற்ற தாய்மார்கள் அங்கே இருந்ததுதான் அடிப்படையானது என்பதைச் சுட்டிக்காட்டினார். இப்படி எல்லாத் துறைகளிலும் பெண்கள் இருந்தார்கள் நண்பர்களே!

நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும், பண்பாட்டுப் படை யெடுப்பின் காரணமாக, மிகப்பெரும்பாலான மக்களுக்கு படிப்பு மறுக்கப்பட்டது, தடை செய்யப்பட்டது.

வாழ்வுரிமையே பெண்களுக்கு இல்லாத அளவிற்கு...


மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களுக்கு - அவர்கள் எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பேதம் கிடையாது. அந்தப் பெண்கள் படிக்கவே கூடாது. இன்னுங்கேட்டால், ஏன் படிக்கக்கூடாது? படிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்லவேண்டுமானால், சொத்துரிமை கிடையாது, படிப்புரிமை கிடையாது என்பதையெல்லாம் தாண்டி, வாழ்வுரிமையே அவர்களுக்கு இல்லாத அளவிற்கு அவர்கள் அடிமைகள்.

அடிமைகளாக இருக்கக்கூடியவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதுதான் அவர்களுடைய தத்துவம். அதைத் தான் மனுதர்மம் சனாதன தர்மமாக நாட்டில் வைத்து, சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், நிகழ்வுகள் இவை அத்தனையும் நடந்தது. பெண்களையே, பொருள்களாகத்தான் கருதினார்கள்.

இங்கே நாம் பார்க்கிறோம், எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. இவை அத்தனையும் ஒரு நூறாண்டு காலம் உழைத்ததின் பலன்.

பண்பாட்டுப் படையெடுப்பு கலாச்சாரம் பெயரிலும் நுழைந்துவிட்டது


நம்முடைய அய்யா கோவிந்தராசு அவர்களுடைய செல்வன் மணமகன் முகிலன்.

இதுபோன்ற பெயரைக் கேட்பதே மிகவும் அபூர்வமாக இருக்கிறது. ஏனென்றால், வாயில் நுழையாத அளவிற்கு பண்பாட்டுப் படையெடுப்பு கலாச்சாரம் பெயரிலும் நுழைந்துவிட்டது.

முகிலன் அவர்கள் பி.இ. படித்து, எம்.எஸ். படித்து, கனடா நாட்டில்  பணி புரிகிறார்.

அதேபோன்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம்முடைய அருட்தந்தையார் சிறப்பாக சொன்னார்.

பண்பாடும், மனிதநேயமும் நம்மை இணைக்கும்!


அதை நடைமுறைப்படுத்தக் கூடிய அளவிற்கு இந்த மணமக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நாடு நம்மை பிரிக்காது


நிலம் நம்மை பிரிக்காது


பண்பாடு நம்மை இணைக்கும்


மனிதநேயம் நம்மை இணைக்கும்


மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, இன்றைக்கு வாழ்விணையர்களாக ஆகியிருக்கிறார்கள்.


மணமகளாக இருக்கின்ற மஞ்சு அவர்கள், பி.ஏ. படித்து கனடாவில் உள்ள ராயல் வங்கியில், அக்கவுண்ட் மேனேஜராக இருக்கிறார் என்றால், ஒரு நூறாண்டுகளுக்கு முன் இந்த வாய்ப்பு இங்கே உண்டா?


நம்மைவிட, இலங்கையில் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்தார்கள், படித்தார்கள் என்பது ஓரளவிற்கு உண்மை.


ஆனால், இந்த சமுதாயத்தில்,  இந்த மாறுதல்களைப் பார்க்க முடியாது நூறாண்டுகளுக்கு முன்பு.


அறிவிலே நமக்கொன்றும் குறைவில்லை; வாய்ப்புக் குறைவு


ஏன்? வாய்ப்புக் கொடுத்தால்தான், அவர்கள் படிக்க முடியும். அறிவிலே நமக்கொன்றும் குறைவில்லை. வாய்ப்புக் குறைவு - தடுக்கப்பட்டோம் - படிப்பு மறுக்கப்பட்டது.

அந்த மறுப்பைத் தூக்கி எறிந்து, எல்லோருக்கும் எல்லாம்

அனைவருக்கும் அனைத்தும் என்று செய்த ஆசான்தான் தந்தை பெரியார் - அந்த இயக்கம்தான் இந்த இயக்கம்.

இன்றைக்கு எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இவ்வளவுக்கும் ஆயுதத்தை எடுக்கவில்லை. அவர்கள் சொல் லியதுபோல, அரசியலில் பெரிய பதவிக்குப் பெரியார் போய் செய்யவில்லை. மக்கள் மத்தியில், சங்கடத்தை ஏற்றுக்கொண்டு இடைவிடாத பிரச்சாரத்தை செய்தார்கள், மிகப்பெரிய அள விற்கு.

சுயமரியாதைத் திருமண மேடையை வாய்ப்பாகப் பயன்படுத்தினார் கலைஞர்


பிரச்சாரம் செய்யும்பொழுதுகூட, நெருக்கடி காலத்தில் பேச்சுரிமை இல்லாத இந்த நாட்டில்கூட, நம்முடைய கலைஞர் அவர்கள் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் நிறைந்திருக்கின்ற தலைவர் வெளியில் இருந்தார். நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் மிசா கைதிகளாக இருந்த நேரத்தில், ஒரே ஒரு மேடைதான் சுதந்திரமாக இந்தக் கருத்துகளைப் பரப்பக்கூடிய மேடையாக இருந்தது. அதுதான் இந்த சுயமரியாதைத் திருமண மேடை. அவருடைய கெட்டிக்காரத்தனம் இந்த மேடையையே அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார்.

ஆக, இவ்வளவு பெரிய மாறுதல்களும் இன்றைக்கு வந்தி ருக்கிறது. இங்கே அருள்மொழி அவர்கள் சொன்னார்கள், சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஒரு பாட்டைச் சொன்னார்கள்,

"யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

இருவரும் காதலர்களாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்களாக இருந்தார்கள்.

இதில் மிகவும் பாராட்டவேண்டிய செய்தி என்னவென்றால், மணமகளின் தாயைப் பாராட்டவேண்டும்; அவருடைய சகோதரர்களைப் பாராட்டவேண்டும்; அந்தக் குடும்பத்தை நாங்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.

அதேபோன்று, அய்யா கோவிந்தராசு அவர்கள், பண் பட்ட தன்மான உணர்வு படைத்தவர், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ஆகவே, அவருடைய மகன் முகிலன் அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, எல்லா பணிகளையும் இன்றைக்குச் செய்து சிறப்பாக வாழ்கிறார்கள்.

இந்தப் பகுத்தறிவு கருத்து ஊடுருவாமல், அவர் ஆசிரியராக மட்டுமே இருந்திருந்தால் என்னாயிருக்கும்? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

வெளிநாட்டிலிருந்த நம்முடைய முகிலன் அவர்கள், அவரிடம் பகுத்தறிவு கருத்து, பெரியாருடைய கருத்து, சிந்தனை இவைகளெல்லாம் ஊடுருவாமல் இருந்திருந்தால், அல்லது அந்தக் கருத்தை வாழ்க்கை முறையாக ஏற்காதவராக இருந்திருந்தால் என்னாகும்?

அவர் குறுந்தொகையை பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக் குச் சொல்லிக் கொடுத்திருப்பார். குறுந்தொகையினுடைய பதவுரை, கருத்துரை, பொழிப்புரை இவையெல்லாம் மிக அழகாக விளக்கிச் சொல்லக்கூடிய அருமையான ஆசிரியராக இருந்திருப்பார். ஆனால், அவருடைய மகன்,

அய்யா நீங்கள் குறுந்தொகை பாடலைச் சொன்னீர்கள்,

யாயும் ஞாயும் யாராகியரோ

என்று.

பெரியார் கொள்கையினுடைய வெற்றி


ஆகவே, அதன்படியே நான் அந்தப் பாடத்தை மட்டும் படிக்கவில்லை. அதையே கடைபிடிக்கின்ற அளவிற்கு ஒரு பெண்ணையும் விரும்பியிருக்கிறேன். அவர் வேற்று மதத்தைச் சார்ந்தது அல்லது வேற்று நாட்டைச் சார்ந்தது என்று சொன்னால்,

கோவிந்தராசு அவர்கள் பழைமைவாதியாக இருந்தால், சனாதனத்தில் ஊறிப் போயிருந்தவராக இருந்திருந்தால், என்னதான் குறுந்தொகைக்கு பதவுரை, கருத்துரை சொன்னாலும், அவர் அசந்து போய், அய்யய்யோ இப்படி செய்துவிட்டாயே! நான் வருந்தொகை பெருந்தொகையாக  இருக்கும் என்றல்லவா காத்துக் கொண்டிருந்தேன் - குறுந்தொகை வகுப்புக்கு மட்டுமே தவிர, அது வாழ்க்கைக்கு கிடையாது என்று சொல்லக்கூடிய பலராய் இல்லாமல், இன்றைக்கு அவரே முன்னின்று, இரு குடும்பத்துக்காரர்களும் முன்னின்று இந்த மணவிழாவினை நடத்துகின்றார்களே, அதுதான் இந்தக் கொள்கையினுடைய வெற்றி என்பது - பலமான, அடித்தளமான அஸ்திவாரத்தைக் கொண்டது என்பதற்கு அடையாளமாகும்.

ஒரு ஆயுதத்தை எடுக்காமல், அறிவாயுதத்தை மட்டுமே எடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்த மணவிழாவில், எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங் களும் இல்லாமல், புகையில்லாமல், புகைச்சல் இல்லாமல் மணமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள்.

இன்னுங்கேட்டால், இந்த மாறுதல்களினால் நாம் மகிழ்ச் சியடைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லையானால், பேசவேண்டிய அவசியமே இருக்காது. மக்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால்தான் இவ்வளவு நேரம் பேசவேண்டி இருக்கிறது.

நாங்கள் பேசுவது உங்களுக்காக - மணமக்களுக்காக அல்ல. அவர்களுக்கு இருக்கிற மனநிலையில், நம்முடைய பேச்சு போய் சேருகிறதா என்பது தெரியாது.

ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்


உங்களுக்கு ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன்,

ஒரு நான்கு ஆண்டுகளுக்குமுன்பாக, ஜெர்மனி நாட்டில் இருக்கக்கூடிய கொலோன் பல்கலைக் கழகத்திற்கு எங்களை அழைத்திருந்தார்கள். அந்த அழைப்பினை ஏற்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்கிற முறையில், சில ஆய்வுச் சொற்பொழிவுகளை நடத்துவதற்காக  நான் சென்றிருந்தேன்.

அந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நாங்கள் செல் வதற்குமுன் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ஏற்பாடுகளை எல்லாம் நாங்கள் செய்து முடித்துவிட்டோம் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இன்னொரு அனுமதியை உங்களிடம் கேட்கிறார்கள், ஈழத்தைச் சார்ந்த இருவர், அவர்கள் சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். மணமகன், மணமகள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். அப்படி இருந்தாலும், சுயமரியாதைத் திருமணத்தை உங்கள் தலைமையில்தான் நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு நேரம் ஒதுக்கித் தர முடியுமா? உங்களிடம் அனுமதி கேட்கச் சொன்னார்கள்'' என்று கேட்டார்.

எங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி. நான் அந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன் என்று சொன்னேன்.

அந்த மணவிழாவிற்கு, மணமக்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள்.

ஈழத்துப் பெண்களுடைய நிலை என்பதைப்பற்றி இங்கே சொன்னாரே அருள்மொழி அவர்கள், அவருடைய அண்ணியே ஈழத்தைச் சார்ந்தவர்தான்.

எதைச் செய்கிறோமோ, அதைப் பேசுவோம்;


எதைப் பேசுகிறோமோ அதைச் செய்வோம்


எனவே, நாங்கள் எதைச் செய்கிறோமோ, அதைப் பேசு வோம்; எதைப் பேசுகிறோமோ அதைச் செய்வோம். இதுதான் மிக முக்கியமான ஒரு சிறப்பான நிலைப்பாடு.

ஆகவே, இந்த மணவிழா என்பது மிகவுச் சிறப்பான மணவிழா. இது மதச்சார்பற்ற திருமணம்.

நம்முடைய அருட்தந்தையார் அவர்கள், கடவுள் நம் பிக்கை, கடவுளை வைத்தெல்லாம் வாழ்த்தினார்.  கடவுள் மறுப்பினுடைய சிறப்புகளையெல்லாம் இங்கே செங்குட்டுவன் சொன்னார்.

இந்த  இரண்டும் ஒருவிதமான வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய அளவிற்கு இருக்கிறது - இந்த மேடையில்தான் முடியுமே தவிர, வேறு எந்த மேடையிலும் முடியாது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பதறிவு

எங்களுக்கு மதம் முக்கியமல்ல; மனம் முக்கியம்!

இன்னுங்கேட்டால், இதுவே வைதீகத் திருமணமாக நடந்திருந்தால், ஒரு கிறித்துவப் பாதிரியார் மேடையில் இங்கே ஏறியிருக்க முடியுமா? என்றால், ஏறியிருக்க முடியாது.

எங்களுக்கு மதம் முக்கியமல்ல; மனம் முக்கியம்.  மனம், ஒன்றிப்போன மனம் மிகவும் முக்கியம்.

இதைத்தான் புரட்சிக்கவிஞர் அவர்கள்,

ஒருமனதாயினர் தோழி

திருமண மக்கள் நன்கு வாழி!

என்று வாழ்த்தினார்.

எனவே, இரண்டு மனங்கள், இரண்டுபேரும் ஒருவராக ஆகக்கூடிய அந்த சூழல் வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அன்றே சொன்னார்


எனவே, இது ஒரு சிறப்பான வெற்றி. ஒரு காலத்தில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார் சொன்னார்,


இன்றைக்கு என்னுடைய இந்த இயக்கம் இங்கே மட்டும் இருப்பதுபோன்று தோன்றலாம்; ஆனால், எதிர்காலத்தில் உலகளாவிய இயக்கமாக இருக்கும்; இந்தக் கொள்கை உலகளாவிய அளவிற்கு வெற்றி பெறும் என்று சொன்னார்கள்.


அதற்கு எடுத்துக்காட்டுத்தான் இந்த அருமையான மணமக்கள், இந்த சிறப்பான திருமணம்.


எனவேதான், இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்பொழுது, இருசாராருடைய பெற்றோர்களையும், குறிப்பாக ஈழத்துப் பெருமக்களையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

மணமக்களுக்கு அறிவுரை என்பதை நாங்கள் சொல்வ தில்லை. ஏனென்றால், இளைஞர்கள் அறிவுரை கேட்பதை விரும்பவில்லை. இவர்களுக்கு அறிவுரை என்பது தேவையும் இல்லை.

அறிவியல் என்பது வாழ்வியலுக்குப் பயன்படவேண்டும்!

ஆகவே, வேண்டுகோளாகத்தான் நாங்கள் சில விஷயங் களைச் சொல்வோம்.

அதில் முதல் வேண்டுகோள், நீங்கள் தலைசிறந்த பகுத்தறி வாளர்களாக வாழுங்கள். அறிவியல் சிந்தனைகளோடு வாழுங்கள்; அறிவியல் படிப்புக்காக மட்டுமல்ல, அது வாழ்வி யலுக்குப் பயன்படவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

இங்கே அருள்மொழி பேசி முடித்துவிட்டு வந்தவுடன், நான் அவரிடம் சொன்னேன், 9 மணிக்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டியை திறங்கள் என்று சொன்னார்கள்; அதற்குப் பிறகுதானே அது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறதே. அதற்கு முன்புவரை மனிதர்கள் நடமாடுகிறார்கள்; 9 மணிக்குப் பிறகு பார்த்தால், தொலைக்காட்சிக்குப் பேய் பிடித்து விடுகிறது. இதுவரையில் மனிதர்களுக்கு மட்டும்தான் பேய் பிடித்தது. இப்பொழுது தொலைக்காட்சியைத் திறந்தால், பேய் வருகிறது, திடீரென்று பாம்பு வருகிறது - பாம்பு மனிதனாகிறது. கிராபிக்ஸ் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

அறிவியலை எப்படி மூடநம்பிக்கைக்குப் பயன்படுத்தலாம் என்பதில் முதல் பரிசு!


உலக நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் வேறுபாடு என்னவென்றால், வெளிநாட்டுக்காரன் அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்தால், அதை எப்படி மூடநம்பிக்கைக்குப் பயன் படுத்தலாம் என்பதில் முதல் பரிசு வாங்குகிற ஆளாக இருக் கிறார்கள். மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவதற்கு அறிவி யல் கருவிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, மணமக்களாகிய நீங்கள் அறிவியல் சிந்தனை உள்ளவர்களாக வாழவேண்டும். அது பெரியாருக்காக அல்ல; எங்களுக்காக அல்ல.

மருந்து சாப்பிடுகிறோம், அது என்ன மருத்துவருக்காகவா? அல்லது மருந்துக் கடைக்காரர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காகவா? இல்லை. நம்முடைய நோய் தீரவேண்டும் என்பதற்காகத்தான்.

கலங்கரை விளக்கமாக இருப்பது பகுத்தறிவுதான்!


அதுபோன்று, நம்முடைய அறியாமை. நாம் தடுமாறுகின்ற நேரத்தில், சரியான கலங்கரை விளக்கமாக இருக்கப் போவது பகுத்தறிவுதான். ஆகவே, பகுத்தறிவு சிந்தனையோடு உங்களு டைய வாழ்க்கையை எளிமையோடு வாழுங்கள்.

பெரியாருடைய சகாப்தத்திற்கு முன் இல்லறம் என்பதற்கு அடுத்ததாக என்ன சொல்வார்கள் என்றால், துறவறம் என்று. திருமண நிகழ்வுகளில்கூட, மத சடங்குகளோடு நடப்பதில், காசிக்கு யாத்திரை போவது - குடை பிடித்துக்கொண்டு மண மகன் போவது - மீண்டும் அவரை அழைத்துக்கொண்டு வருவது போன்ற நிகழ்வுகளை வைத்திருப்பார்கள். இல்லறம் - துறவறம் என்று. ஆனால், தந்தை பெரியார்தான் அதை மாற்றினார்.

இல்லறத்திற்கு அடுத்து துறவறமல்ல - தொண்டறம் என்பதை அருமையாக சொன்னார்.

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை

தனக்காகவும் பிறக்கவில்லை.

சமுதாயத்தில் நாம் ஒரு அங்கம். யார் யாரெல்லாம் உங்களுக்கு உதவினார்களோ, அவர்களுக்கு உதவுங்கள், மற்றவர்களுக்கும் உதவுங்கள். அதன்மூலமாக நீங்கள் வாழ்வில் உயருங்கள். இதுதான் தொண்டறம்.

இல்லறத்தோடு தொண்டறத்தையும் செய்யுங்கள்!


எனவே, அந்தத் தொண்டறத்தைச் செய்யக்கூடிய செம்மல்களாக, இல்லறத்தோடு தொண்டறம் என்பதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

அதைவிட முன்னுரிமை கொடுக்கவேண்டிய செய்தி ஒன்று உண்டு. அது என்னவென்றால், எல்லா மணவிழாக்களிலும் இதை நாங்கள் வலியுறுத்துவோம்.

உங்களுடைய பெற்றோரிடம் நன்றி காட்ட மறக்காதீர்கள்; பாசம் காட்ட மறக்காதீர்கள். ஏனென்றால், நம்முடைய நாட்டில் படிப்பு அதிகமாகிறது; பதவிகள் பெருகுகிறது. ஆனால், பாசம் குறைகிறது. நம் கருத்துள்ள பிள்ளைகள் அப்படியில்லை. இந்தக் கருத்து மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறோம்.

இல்லத்தின் பெயரோ அன்னை இல்லம்; அன்னையோ முதியோர் இல்லத்தில்!


ஒரு எடுத்துக்காட்டை இங்கே சொன்னார்கள்,

சிறப்பான முறையில் ஒருவர் வீடு கட்டி, அந்த வீட்டுத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழைக் கொடுத்தார். இல்லத் திறப்பு விழா அன்று, நண்பர்களிடம் இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சுற்றிக் காட்டுகிறார். அந்த இல்லத்திற்குப் பெயர் அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார். தன்னுடைய தாயின் மீது எவ்வளவு அன்பு இருந்தால், அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறாரே என்று அனைவரும் வியந்தார்கள். ஒரு நண்பர் அவரைப் பார்த்து, சரி, உங்களுடைய தாய் எங்கே, நாங்கள் அவரைப் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டார்.

உடனே அவர், என் தாய் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று சொன்னார்.

வீட்டிற்குப் பெயர் அன்னை இல்லம்; ஆனால், அன்னை இருப்பது முதியோர் இல்லம் என்று சொல்கின்ற நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. குழந்தைகள் இல்லம் பெருகுவதைவிட, முதியோர் இல்லம் பெருகிக் கொண்டிருக்கின்ற ஒரு அவலம் இந்த நாட்டில் இருக்கிறது. ஆனால், பகுத்தறிவாளர்கள் குடும்பத்தைப் பொருத்தவரையில் அப்படி இல்லை என்பதை, எங்கள் அருள்மொழி அவர்கள் இங்கே தெளிவாகச் சொன்னார்.

பெற்றோர்களிடம்  பாசம் காட்ட மறவாதீர்!


எங்களுக்குக் கடமைகள் மிக முக்கியம். எனவேதான், நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், உங்களுடைய வாழ்நாளில், மற்றவர்களை குறிப்பாக பெற்றோர்களை, அவர்கள் காட்டிய தியாகத்தை, அவர்கள் உங்களுக்காகப் பட்ட வேதனைகளை, துன்பங்களையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களிடமிருந்து அவர்கள் பணத்தையோ, மற்றவற்றையோ எதிர்பார்க்க மாட்டார்கள். அன்பை, மரியாதையை, பாசத்தை எதிர்பார்ப்பார்கள். அதை மறக்காமல் நீங்கள் செய்யுங்கள்.

அதோடு, நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றக்கொண்டால், உங்களைவிட வெற்றிகரமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,

விட்டுக் கொடுக்கிறவர்கள் கெட்டுப் போவதில்லை

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

ஆகவே, தன்முனைப்பு என்பதைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று உண்டு.

இருவரில் யார் தோற்பது என்பதில் முந்திக் கொள்ளுங்கள்


அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று இரண்டு வகை உண்டு.

ஆனால், வாழ்க்கை என்பது அதற்கு நேர் வித்தியாசமானது. உங்கள் இரண்டு பேருக்குமிடையே போட்டி என்று வந்தால், யார் முதலில் தோற்பது என்பதில்தான் உங்களுக்கு உண்மையான வெற்றி. அதை நீங்கள் வாழ்நாளில் காட்டுங்கள்.

அதனால் உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்று சொல்லி, நீங்கள் எல்லா வகையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் சிறந்து விளங்குங்கள்.

தொண்டறச் செம்மல்களாக வாழுங்கள்


இன உணர்வோடு, பகுத்தறிவோடு, எளிமையான வாழ்க்கையோடு தொண்டறச் செம்மல்களாக வாழுங்கள் என்று சொல்லி, இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி கூறி,

குறிப்பாக ஈழத்து சகோதரிகளுக்கும், அருட்தந்தையார் அவர்களுக்கும் தெளிவாக எங்களுடைய நன்றியை, பாராட்டை தெரிவித்து, மணமக்கள் வாழ்க, பெரியார் வாழ்க! வருக சுயமரியாதை உலகு! என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 26.8.18

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா



தஞ்சை மாவட்டம் உரத்தநாடு, தென்னமநாடு சி.கோவிந்தராசு - சு.கவுசல்யா ஆகியோரின் மகன் பொறியாளர் கோ.முகிலனுக்கும் , கனடா ஓன்டாரியோ பெடாலி கிரசென்டை சேர்ந்த நினைவில் வாழும் செல்வநாயகம் - -ரெஜினா ஆகியோரின் மகள் செ.மஞ்சுவிற்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்  நடத்தி வைத்தார். உடன்: மணமக்களின் பெற்றோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள். (12.8.2018, வடபழனி)

- விடுதலை நாளேடு, 25.8.18

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

‘விடுதலை’ செய்திப்பிரிவில் பணியாற்றும் பாஸ்கரின் அன்னையார் மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை


சென்னை, செப். 2- ‘விடுதலை’ நாளிதழில் கணினி பிரிவில் பணியாற்றும் ச.பாஸ்கர் அவர்களின் தாயார் ச.அம்சா (வயது 68)  அவர்கள் உடல் நலக்குறை வால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (1.9.2018) இரவு 10.30 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.
மறைவு தகவல் அறிந்ததும் இன்று (2.9.2018) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று மறைவுற்ற அம்மையார் ச.அம்சா அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது துணைவர் சம்பந்தன், மகன்கள் ச.பாஸ்கர், ச.மாறன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் பொது மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன்,  இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்),
செ.ரா.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்), மற்றும் ஈ.குமார்,
மு.முகிலன், தே.சுரேஷ், ரெங்கநாதன், ‘விடுதலை’ செய்திப்பிரிவு தோழர்கள் கி.இராமலிங்கம், வே.சிறீதர், ப.சிவக்குமார்,
மா.கதிரேசன், ப.ஆனந்தன், கா.சிவக்குமார்,  ந.கதிரவன், சரவண ராஜேந்திரன், பா.அருள், இசையின்பன், ஜெ.முருகேசன், சத்யா மற்றும் கலைமணி,  ஜெ.ஆனந்த், சு.விமல், மகேஷ், அசோக், டைசன் மற்றும் பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
மறைந்த ச.அம்சா அவர்களின் உடல் இன்று (2.9.2018) பிற்பகல் 3 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை, எண். 15/6, பாரதியார் தெரு, திருவள்ளுவர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் ஊர்வலமாக செல்லப்பட்டு மயிலாப்பூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


தொடர்புக்கு:9444184762
- விடுதலை நாளேடு, 02.09.18

சனி, 1 செப்டம்பர், 2018

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்



சென்னை, செப். 1 26.8.2018 அன்று மாலை 5 மணி அளவில் சென்னை பெரியார் திடலில், தென் சென்னை மாவட்டத்தின் கலந்துரையாடல் கூட் டம், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தலைமை யிலும் அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகி யோர் முன்னிலையிலும் நடைபெற் றது. தந்தை பெரியாரின் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் விடுதலை சந்தா சேர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வரும் செப்டம்பர் 17ஆம் நாளுக்குள் மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட நூறு விடு தலை சந்தாவை வசூலித்து கொடுப் பதென முடிவு செய்யப்பட்டது.


மாவட்ட துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் மற் றும் அ.பாபு, கு.செல்வேந்திரன், மு.சண்முகப்ரியன், இ குமார் ந.மணித்துரை  ஆகியோர் கருத்துக்களைக் கூறினர். கு.பா. அறிவழகன் நன்றி கூறினார்.

தென் சென்னை மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: வி.விஸ்வாஷ், செய லாளர்: கு.பா.அறிவழகன், அமைப் பாளர்: வி.தமிழ் முரசு, துணைத் தலைவர்: வி.தங்கமணி, துணைச் செயலாளர்: வெ.தா. தமிழ்ச்செல்வி
- விடுதலை நாளேடு, 01.09.18

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - சென்னை

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்




சென்னை, ஆக. 30- சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 26.8.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகிக்க, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் ஈரோடு மண்டல செயலாளர் ப.வெற்றிவேல், மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.அறிவுமணி, கிருட்டிணகிரி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கா.வெற்றி, சென்னை மண்டல மாணவர் கழகச் செயலா ளர் பா.மணியம்மை, திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நா.பார்த்திபன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால். கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கண்மணி மற்றும் மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்திற்கு மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் த.மு.யாழ்திலீபன் வரவேற்புரை ஆற்றினார். கோவை மண்டல மாணவர் கழகச் செயலாளர் இரா.சி. பிரபாகரன் கடவுள் மறுப்புத் தத்துவங்களை கூறினார். இக்கூட்டத்தின் தொடக்க உரையாக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் கொள்கையை விளக்கி கூறினார். மேலும் மநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.அஜிதன், மாநில மாணவர் கழகச் கூட்டுச் செயலாளர் சே.மெ. மதிவதனி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் கோவை ஆ.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.



தீர்மானங்கள்


1. மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாதியாக வாழ்ந்து மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மறைவிற்கு இக்கூட்டம் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

2. அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் பெரு விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், டாக்டர் கலைஞர் அவர்களது முழு உருவச் சிலை திறக்கப்படும் என அறிவித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

3. தாழ்ந்து கிடந்த தமிழனை தட்டியெழுப்பி தன் மான, இனமான, மொழிவுணர்வை ஊட்டிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழாவினை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங் களில் தந்தை பெரியார் படம் அமைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொள்கை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வதென முடிவு செய்யப்பட்டது.

4. அறிவு ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை அனைத்து மாவட்டங்களிலும் கவிய ரங்கம், கருத்தரங்கம், நூல் அறிமுக விழா என நடத்துவ தற்கு முடிவு செய்யப்பட்டது.

இத்தீர்மானங்களை விளக்கி மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற் றினார். அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாணவர் கழகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக உரையாற்றினார். நிறைவு உரையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திராவிட மாணவர் கழகத்தின் சிறப்பினையும், அதை வலுப்படுத் துவதற்கான தேவைகளையும், வழிமுறைகளையும் விளக்கிப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்ப்பாண்டியன் இணைப்புரையாற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:

செய்யாறு மாவட்ட மாணவர் கழக தலைவர் ஆ. தினேஷ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் எஸ். தினேஷ்குமார், மாவட்ட அமைப்பாளர் கோ.பிரசாந்த்.

தென்சென்னை மாவட்ட மாணவர் கழக தலைவர் வி.விஸ்வாஸ், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் வி.தங்கமணி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் கு.பா.அறிவழகன், மாவட்ட மாணவர் கழக துணை செயலளர் வெ.தா.தமிழ்ச்செல்வி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் விடுதலை தமிழ்முரசு.

மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ர.அன்புமதி.

நிறைவாக மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ந.பார்த்திபன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 30.8.18