ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

‘விடுதலை’ செய்திப்பிரிவில் பணியாற்றும் பாஸ்கரின் அன்னையார் மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை


சென்னை, செப். 2- ‘விடுதலை’ நாளிதழில் கணினி பிரிவில் பணியாற்றும் ச.பாஸ்கர் அவர்களின் தாயார் ச.அம்சா (வயது 68)  அவர்கள் உடல் நலக்குறை வால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (1.9.2018) இரவு 10.30 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.
மறைவு தகவல் அறிந்ததும் இன்று (2.9.2018) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று மறைவுற்ற அம்மையார் ச.அம்சா அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது துணைவர் சம்பந்தன், மகன்கள் ச.பாஸ்கர், ச.மாறன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் பொது மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன்,  இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்),
செ.ரா.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்), மற்றும் ஈ.குமார்,
மு.முகிலன், தே.சுரேஷ், ரெங்கநாதன், ‘விடுதலை’ செய்திப்பிரிவு தோழர்கள் கி.இராமலிங்கம், வே.சிறீதர், ப.சிவக்குமார்,
மா.கதிரேசன், ப.ஆனந்தன், கா.சிவக்குமார்,  ந.கதிரவன், சரவண ராஜேந்திரன், பா.அருள், இசையின்பன், ஜெ.முருகேசன், சத்யா மற்றும் கலைமணி,  ஜெ.ஆனந்த், சு.விமல், மகேஷ், அசோக், டைசன் மற்றும் பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
மறைந்த ச.அம்சா அவர்களின் உடல் இன்று (2.9.2018) பிற்பகல் 3 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை, எண். 15/6, பாரதியார் தெரு, திருவள்ளுவர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் ஊர்வலமாக செல்லப்பட்டு மயிலாப்பூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


தொடர்புக்கு:9444184762
- விடுதலை நாளேடு, 02.09.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக