வெள்ளி, 4 அக்டோபர், 2024

தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பை எதிர்த்து ரயில் நிலையம் மற்றும் அஞ்சல் நிலைய இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் ( 10.2.1993)

 10.2.1993 அன்று தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பை எதிர்த்து ரயில் நிலையம் மற்றும் அஞ்சல் நிலைய இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் என் தலைமையில், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள எழுத்துகளை அழிக்க, பெரியார் திடலிலிருந்து கழகத் தோழர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று, எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் உள்ள ‘இந்தி எழுத்துகளை அழிக்கும் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்று புறப்பட்டுச் சென்றேன். பெரியார்

ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றபோது காந்தி இர்வின் பாலம் சாலை சந்திக்கும் இடத்தில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள், நிருவாகிகள் போராட்டம் நடத்தி கைதானார்கள். அதனைத் தொடர்ந்து 11.2.1993 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்புக்கு வழி செய்யும் மத்திய அரசு, அதனைப் பின்வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாடு அமளிக் காடாக மாறும் ஆபத்து உருவாகிவிடும் என்று  எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் பலத்த ஆரவாரத்துடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இயக்க வரலாறான தன் வரலாறு(246) 

மார்ச் 16-31 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக