ஞாயிறு, 10 மார்ச், 2024

ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் – எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க. ஒன்றிய அரசு மக்களிடம் இருக்கும் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது!


விடுதலை நாளேடு 

 கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை

சென்னை. பிப். 10- ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் – எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை வைத்து போட்டி அரசு நடத்துவ தையும், மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய மோடி அரசு’ என்கின்ற தலைப்பில் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் சி.பி.அய்.எம் சார்பில் 8.2.2024 அன்று, சென்னை, சைதாப்பேட்டையில் ”கலைஞர் பொன்விழா வளைவு”க்கு அருகே, மாலை 6 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இரா.வேல் முருகன் தலைமையில், சி.பி.அய்.எம். சைதைப் பகுதிச் செயலாளர் தோழர் ஜி.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினர் தோழர் எம்.சரஸ்வதி, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, ம.தி.மு.க. மாநகராட்சி உறுப்பினரும், தென்சென்னை மாவட்டச் செயலாளருமான ப.சுப்பிரமணி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்
க. பீம்ராவ், மாநில செயற்குழு தோழர் என். குணசேகரன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாள ருமான ச. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். இறுதியாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.
அவர் தனது கண்டன உரையில் கடந்த 2014 இல் ஆட் சிக்கு வந்த பா.ஜ.க. அரசு சட்டப்படியான ஆட்சியை நடத்த வில்லை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக் கூறினார். இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனது 10 ஆண்டு கால சாதனைகளாக சொல்வதற்கு எதுவுமில்லை. ஆகவே, மக்களின் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடு கிறது. I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்து அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று கூறினார். இறுதியாக சைதை பகுதிக்குழு தோழர் கே.மணிகண்டன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மு.ந.மதியழ கன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர்கள் பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.பவானி, திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழகப் பணித் தோழர் க,கலைமணி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர்.

தேனி
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பூ மணிகண்டன் தலைமையில் தேனி மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்க எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன் தலைமையில் தேனி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கரூர்
கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குமாரசாமி, திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் மு க ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சே அன்பு, காப்பாளர் வே, ராஜு, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, ஆகியோர் கரூரில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கரூர் கடைவீதி தலைமை அஞ்சல் அலுவலகம் முன். சிபிஎம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், பிஜேபி அரசு ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து, கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கரூர் மாவட்ட செயலா ளர் ஜோதிபாசு, திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திமுக கரூர் மாநகர செயலாளர்கள் வழக்குரைஞர் சுப்பிரமணி எஸ்.பி கனகராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கொமதேக மாவட்ட செயலாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கரூர் மாவட்ட கழகத் தலைவர் குமாரசாமி, எல் பி எஃப் கரூர் மாவட்ட செயலாளர் அண்ணா வேலு, திமுக கரூர் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, சிபிஅய் மாவட்ட தலைவர் நாட்ராயன், விசிக கரூர் நகர செயலாளர் முரளி என்கிற பாலசிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சக்திவேல், சுப்பிரமணி, ராமமூர்த்தி கோச்மீன் சரவணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஒசூர்
ஒசூரில் சிபிஎம் கட்சி மாநகர செயளாலர் சி.பி.ஜெயராமன் தலைமையில் பிஜேபி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, சிபிஅய் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், திமுக மாவட்ட செயளாலர் ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா, சிபிஅய் மாதையன், மதிமுக ஈழம் குமரேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாநகர மாவட்ட செயளாலர் எம்.ராமசந்திரன், சி.பி.எம் மாவட்ட செயற்குழு ஆர்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை
கோவையில் 8.2.2024 அன்று டாடாபாத் பகுதியில் மாலை 5 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்
ஆர்பாட்டத்தில் கழகத் தோழர்கள் அ.மு.ராஜா வெங்க டேஷ், நா.குரு, ஆவின் சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப் படுவதையும், மாநில அரசுகள் கடன் பெற சீலிங் வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியும், சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை பேரிடரை சரி செய்ய, தமிழ்நாடு அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்பதையும், தமிழ்நாடு, கேரளா, டில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசு ஆளுநர்கள் மூலம் இடையூறுகள் செய்து வருகிறது. மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டியும் உரையாற்றினார்கள்.

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுசி கலையரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி.மணி பாரதி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
ஒன்றிய அரசை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழு விய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில உரிமைகள் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம், ஆளுநரை பயன்படுத்தி மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதா, ணிஞி, மிஜி போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டாதே போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில். திராவிடர் கழகத்தினர் உள்பட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக