ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

மயிலை த.வேலுவின் தாயார் த. கவுரி அம்மாள் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் மரியாதை

 


விடுதலை நாளேடு
சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு அவர்களின் தாயார் த. கவுரி அம்மாள் அவர்கள் நேற்று (24.2.2024) மறைவுற்றார். மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கவுரி அம்மாள் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி மயிலை த. வேலு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மயிலை சேதுராமன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
------------------------------------------------------------
-------------------------------------------------------------
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களின் தாயார் த.கௌரி அம்மாள்(வயது 74) அவர்கள் 24.02.24 முற்பகல் மறைவுற்றார்.
அன்று இரவு 9.00 மணி அளவில்  திராவிடர் கழகத்தின் சார்பில்
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள்   த. கௌரி அம்மாள் உடலுக்கு  மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத்தலைவர்  டி. ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
------------------------------------------------------------
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களின் தாயார் த.கௌரி அம்மாள்(வயது 74) அவர்கள் 24.02.24 முற்பகல் மறைவுற்றார்.
அன்று இரவு 8.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் அன்னாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத்தலைவர்  டி. ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக