ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

தென்சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

 24.12.23 காலை 8.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில்  தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு காலை 8.30 மணி அளவில் மாலை அணிவிக்கப்பட்டது.


 24.12.23 காலை 8.45 மணி அளவில்  தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் அண்ணா மேம்பாலத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளான 24.12.23 முற்பகல் ஆலந்தூர் பகுதி திராவிடர் கழகம் ஏற்பாட்டில் தந்தை பெரியார் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் பங்கேற்றனர்.

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளான 24.12.23 பிற்பகல் மந்தைவெளி பகுதி திராவிடர் கழகம் சார்பில்  மந்தைவெளி, வண்ணியம்பதி குடியிருப்பு பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக