ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா? ( டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா)

 Published January 24, 2024,விடுதலை நாளேடு

கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா?

வருகிற தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்
தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, ஜன. 24- தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (23-01-2024) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தி.மு. கழ கப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய உரிமைக்குரல், ஜி.ஸி.ஙிணீறீu – ஜிலீமீ விணீஸீ ணீஸீபீ விமீssணீரீமீ, விஹ் ஸ்ஷீவீநீமீ யீஷீக்ஷீ tலீமீ ஸ்ஷீவீநீமீறீமீss, பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்து குழுமத் தலைவர் என்.ராம், கவிப்பேரரசு வைரமுத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி. டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,
இன்று, நமது கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் – கழகப் பொருளாளருமான என் னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதியுள்ள ‘பாதை மாறாப் பயணம்‘ புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன்.
பாலு அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை யில் சொல்லவேண்டும் என்றால், சின்சியா ரிட்டி! ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த போனே செய்வார்.

கலை­ஞர் மீது பாலு கொண்ட பற்று!

விருதுநகர் முப்பெரும் விழாவில் நம்முடைய பாலு அவர்களைப் பற்றிநான் பேசியதை, மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன்… ‘கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? என்னவென்று பாலுவைச் சொல்வது? இது எல்லாம் கலந்த கலவைதான் பாலு‘ என்று அன்று நான் சொன்னேன்.

அன்றைக்கு நான் சுருக்கமாகச் சொன்னதற்கு விளக்கவுரையாக தன்னுடைய தன்வரலாற்றை எழுதி இருக்கிறார் நம் முடைய பாலு! 17 வயதில் தலைவர் கலைஞரின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்த பாலுவிற்கு, இப்போது 80 வயது! இன்றைக்கு வரைக்கும், ‘ஒரே கொடி – ஒரே இயக்கம் – ஒரே தலைமை‘ என்று கொள்கைப் பிடிப் போடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

முதல் பாகத்தில், அரசியலில் அவர் வளர்ந் தது பற்றியும், கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றியது பற்றியும் எழுதிய அவர், இரண்டாவது பாகத்தில், அவரால் இந்திய நாடும் – நம்முடைய மாநிலமான தமிழ்நாடும் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தது என் றும் விரிவாக எழுதியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் நாடாளு மன்ற உறுப்பினராக, 12 ஆண்டுகள் ஒன்றியத் தில் அமைச்சராக இருந்திருக்கிறார். நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளிலும் கழகத் தின் குரலை அவர் கம்பீரமாக ஒலித்திருக் கிறார்.

தமிழ்நாட்டில் ஓடும் தங்கநாற்கரச் சாலை யாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்களாக இருந்தாலும், இது அனைத்துமே நம்முடைய பாலு அவர்களின் திறமைக்கான மகுடங்கள்!

12 ஆண்டுகள் ஒன்றிய அமைச்சராக இருந்த பாலு, மூன்று முக்கியமான துறைகளில் முத்திரை பதித்தார். ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட் டிற்கு மட்டும் 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய பெட்ரோலியத் துறை சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.
சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக இருந்தபோது, தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 335 பாலங்களைக் கட்டியது பாலுவின் மாபெரும் சாதனை!

அரசியல் சூழ்ச்சியால் சேது சமுத்திரத் திட்டம் முடக்கம்!

ஆனால், இதையெல்லாம் விடப் பெரிய சாதனையாக வந்திருக்க வேண்டிய ஒன்று இருக்கிறது! அதுதான், அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான சேதுசமுத்திரத் திட்டம்! தலைவர் கலைஞரின் வற்புறுத்தலால் இந்தத் திட்டம் 2004-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கிய மானதாக இன்றைக்கு அமைந்திருக்கும்.
இத்தகைய சாதனைக் களஞ்சியமாக இருக்கிறது டி.ஆர்.பாலு எழுதி இருக்கும் இந்த வாழ்க்கை வரலாறு! அதேபோல ஈழத் தமிழர் விடியலுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய பணிகளையும், அதனால் ஆட்சியையே இழந்த தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. இனப்படுகொலை மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அய்க்கிய நாடுகள் அவையிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக என்னையும், டி.ஆர். பாலுவையும்தான் தலைவர் கலைஞர் அவர் கள் அனுப்பி வைத்தார். அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர் களையும், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களையும் சென்று சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதிட்டோம். இது தொடர்பான முழுமையான செய்திகளை பாலு இந்த நூலில் விளக்கமாக எழுதியிருக் கிறார்.

தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுற்ற பிறகு நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறபோது, அது கழக வரலாறாகவும், என்னுடைய வரலாறாகவும் அமைந்துவிட்டது. கழகத்தை யும் – என்னையும் – பாலுவையும் பிரித்து வரலாற்றை எழுத முடியாது! நெருக்கடிக் காலத்திற்கு முன்பு, கோபாலபுரம் பகுதியில் நான் இளைஞர் தி.மு.க. தொடங்கிய நேரத்தில் எனக்குத் துணையாக இருந்தவர். பின்னாளில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் வழித்தடத்தை விளக்கத்தான் இந்தப் ‘பாதை மாறாப் பயணம்‘! இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழி காட்டும் புத்தகம்!
பா.ஜ.க.வை வீழ்த்தப் போகும் “இந்தியா” கூட்டணியின் உருவாக்கத்தில் நம்முடைய பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண் டும்! ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்!

கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறை வேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப்பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பா.ஜ.க.விற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்து விட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இது மாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி!

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப் பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலு வான கூட்டணியை உறுதி செய்தாக வேண் டும்.

“இந்தியா” கூட்டணிக் கட்சிகள், தங்க ளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த் தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக் களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற் றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உரு வாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழை கிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு அவர்கள் தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த பாதை மாறாப் பயணத் தின் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற் கான வேலைகள் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்களுக்குக் காத்திருக்கிறது. தமிழ்நாட்டு முன்னேற்ற த்தின் வரலாற்றைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து எனது உரையை நிறைவு செய்கிறேன். – இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மக்­க­ளைத் திசை­ தி­ருப்­பப் பார்க்­கி­றது பா.ஜ.க. தலைமை. தேர்­த­லைச் சந்­திக்க இருக்­கும் பா.ஜ.க.விற்கு மக்­க­ளி­டம் சொல்­வ­தற்­குச் சாதனை என்று எது­வும் இல்லை. அத­னால்­தான் முழு­வ­து­மாக கட்டி முடிக்­கப்­ப­டாத கோயிலை, அவ­சர அவ­ர­ச­மா­கத் திறந்து, எதையோ
சாதித்­து­விட்­ட­தா­கக் காட்ட நினைக்­கி­றார்­கள். இது­மா­தி­ரி­யான திசை­தி­ருப்­பும் தந்­தி­ரங்­க­ளுக்கு மக்­கள் சரி­யான பாடம் கொடுப்­பார்­கள். இது உறுதி!

---------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக