ஞாயிறு, 4 ஜூன், 2023

சைதாப்பேட்டையில் நடைபெற்ற தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 03.06.2023 மாலை 6.00 மணி அளவில் சைதாப்பேட்டை கோடம்பாக்கம் சாலையில் உள்ள மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன் அவர்கள் இல்லத்தில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஈரோடு பொதுக்குழு தீர்மானம் மற்றும் சென்னையை சேர்ந்த ஆறு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

தலைமை கழக அமைப்பாளர் தே.செ. கோபால் அவர்கள் வழிகாட்டு கருத்துரைகளை கூறி நோக்க உரையாற்றினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் சா. தாமோதரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தியதுடன் அவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டது.

ம. தமிழ்மதி சைதை க. வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இறுதியாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு தொடர் வண்டி 2.6.23 இரவு ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. மாவட்டப் பகுதிகள் தோறும் கொடிக்கம்பம் மற்றும் அறிவிப்பு  பலகைகளை அமைப்பதெனவும்,
3. முப்பெரும் நூற்றாண்டுகளை விளக்கி, பகுதிகள் தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் என ஒருங்கிணைந்த முறையில் தொடர் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும், கூட்டங்களை ஜூன் மாதம் 15 ஆம் நாள் முதல் தொடங்குவது எனவும்,
4. தெருமுனை கூட்டங்களின் இறுதியில் முப்பெரும் நூற்றாண்டுகளை விளக்கி மூன்று பொதுக்கூட்டங்களை நடத்துவது எனவும்,
5. நோக்கங்களை விளக்கி பொதுவான துண்டறிக்கைகளை தயார் செய்து வழங்குவதெனவும்,
6. பகுதி கழகங்கள் தோறும் புதுப்பித்து புதிய அமைப்புகளை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக