செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தமிழ்நாட்டில் 11 நாள்கள் சூறாவளி சுற்றுப்பயணம்

நீட்', 'புதிய கல்வி'யின் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி

மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சாதனை

தொகுப்பு: இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நேற்றைய விடுதலையில் வெளிவந்ததின் தொடர்ச்சி....

ஆத்தூரில் தோழர்கள் சந்திப்பு

24.01.2020 நண்பகல் 12.30 மணிக்கு ஆத்தூர் ராம கிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந் தனர்.  மதிய உணவுக்குப் பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

ஆத்தூர் தங்கவேல் இல்லம்

மாலை 6.10 க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.

ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.01.2020)

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.20 க்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ. சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர்

த. வானவில் தலைமையேற்றார். பெ. சோமசுந்தரம், சி. சுப்ர மணியன், விடுதலைசந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர்.  உ. செல்வன் நன்றி கூறினார். 7.10 மணி முதல் 8.05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.

எடைக்கு எடை நாணயம்

நீட் எதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணி தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்துக்களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.  நாணயத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8.10 க்கு கல்லக்குறிச்சி நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கல்லக்குறிச்சியில் வரவேற்பு

ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9.05 க்கு மண்டலத் தலைவர் கா.மு. தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தோழர்கள் பயனாடை அணி வித்து மகிழ்ந்தனர்.

கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.01.2020)

கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24-01-2020 இரவு 9.10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச்செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க,மு.தாஸ், குழ. செல்வராசு, த. பெரிய சாமி, து. சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  9.15 மணி முதல் 10 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.

தமிழர் தலைவருக்கு மலர் கிரீடம்

நீட் பரப்புரை மேற்கொண்டு கல்லக்குறிச்சி வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர் கிரீடமும் மலர் மாலையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையர்கண்ணி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அருணாசலம், உலகத் தமிழர் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் . கு,சீத்தா. வழக் குரைஞர் செல்வநாயகம், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சரவணன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் ஏழுமலை, காங் கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய் கணேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர் சி. வெங்கடாசலம், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க மாவட்டச் செயலாளர் தமிழ்மாறன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஆ. பகல்முகமது உள்ளிட்ட தோழமை இயக்கத் தோழர்கள் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து மகிழ்ந்துள்ளனர்.  இரவு 10.10 மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட்டார் ஆசிரியர். வேப்பூர் ஆரியாஸ் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர்.

தோழர்கள் சந்திப்பு

திருச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திருச்சி, லால்குடி மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து சந்தாக்கள் வழங்கி சிறப்பித்தனர். திருச்சி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடினார்.

பெரம்பலூரில் வரவேற்பு

6ஆவது நாள் பரப்புரை பயணம் மேற்கொண்டு 25.01.2020 மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு மாலை 6.50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமை யில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7 மணிக்கு வருகை தந்தார் ஆசிரி யர் அவர்கள், நகரத் தலைவர் அக்கி ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந் தன்  கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.அறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7.15 மணி முதல் 7.55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "நீட்டி"ன் அவலங்களை எடுத்துரைத்து உரையாற் றினார்கள். அனைத்துகட்சி தோழர்கள் பொதுமக்கள் பெருந் திரளாக கூடி நின்று உரையை கேட்டு தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

மாவட்ட தி.மு.க செயலாளர் சி.இராஜேந்திரன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செ.துரைராஜ், சி.பி.அய் (எம்) மாநில விவசாய அணி செயலாளர் ந.செல்லதுரை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் சுல்தான்மொய்தீன் உள்ளிட்ட ஏராள மான அனைத்து இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கு கூடியிருந்த செய்தியா ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் பரப்புரை பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார் அனைவரி டமும் விடைபெற்று இரவு 8 மணிக்கு அரியலூர் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அரியலூரில் வரவேற்பு

அரியலூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு ஊர் எல்லையில் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் தலைமையில் கழகக் கொடியுடன் ஏராளமான தோழர்கள் கூடிநின்று ஒலி முழக்கங்களுடன் வரவேற்று பொதுக் கூட்ட மேடைக்கு அழைத்து சென்றனர்.

அரியலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

25.01.2020 இரண்டாவது கூட்டம் அரியலுர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணி செயலா ளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு மண் டல செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர் இரவு 8.50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9.05 க்கு பேச்சை தொடங்கி 9.55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உட்பட நமது பிள்ளைகளை எத் தனை பேரை இழந்துள்ளோம.; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர். ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருஷ் ணன் நன்றி கூறினார்.

தோழமை கட்சியினர் வரவேற்பு

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா, சி.பி.அய் (எம்) மாவட்டச் செயலாளர் இரா.மணிவேல், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சந்திரசேகர், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இரா.உலகநாதன், எம்.ஜி.ஆர் கழக மாவட்டச் செயலாளர் எம்.ஜி கலைவாணன் உள்ளிட்ட தோழமை கட்சி பொறுப்பா ளர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பரப் புரை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு வல்லத்தில் ஓய்வு

அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு தோழர் களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11.15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர் இரவு உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு (26.01.2020)

26.01.2020 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழக தோழர்ள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆவது ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனை வரிடமும் விடைபெற்று முற்பகல் 11 மணிக்கு மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இராஜகிரி தங்கராசிடம் நலம் விசாரிப்பு

தஞ்சை வல்லத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.45 அளவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி தங்கராசு (96) அவர்களின் இல்லத்திற்கு திடீரென்று சென்று நலம் விசாரித்து ஒளிப்படம் எடுத்து சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார்கள். தங்க.பூவானந்தம் அவரின் வாழ்விணையர் ஆசிரியர் அவர்களை வரவேற்று தங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை வழங்கி மகிழ்ந்தார். அனைவரிடமும் விடைபெற்று மயிலாடுதுறை நோக்கி பயணக்குழுவினர் புறப்பட்டனர்.

மயிலாடுதுறையில் வரவேற்பு

26.01.2020 மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மில்லினியம் விடுதியின் முன் மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை மில்லினியம் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் அவர்களை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கும்பகோணம் மாவட்டக் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து தங்கள் பகுதியில் நடைபெறும் இயக்கப் பணிகள் குறித்து தமிழர் தலைவர் அவர்களிடம் உரையாடி மகிழ்ந் தனர்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.01.2020)

மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 6.40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார்.  மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரை பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதின் அவசியம் குறித்து உரை யாற்றினார்.  இரவு 7 மணி முதல் 7.55 மணி வரை 55 நிமிடங் கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற் றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையை கேட்டு விழிப்புணர்வு பெற்றனர்.  அனைவரிடமும் விடை பெற்று இரவு 8 மணிக்கு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.  கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் நிவேதா எம்.முருகன், தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.இராஜகுமார், சி.பி.அய் மாநிலக்குழு உறுப்பினர் இடும் பையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப் பாளர் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க நகர, ஒன்றிய செய லாளர்கள் முக்கிய பிரமுகர்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.01.2020)

சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டி ருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள்.  மாவட்டச் செயலாளர் அன்பு.  சித்தார்த்தன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர்  பேரா.பூ.சி. இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணி செயலாளர் தி.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர்  நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகி யோர் முன்னிலையேற்றனர். தி.மு,க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி பேசினார். இரவு 9.20 மணி முதல் 10 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழக தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வாழ்த்தும் வரவேற்பும்

கடலூர் மாவட்ட தி,மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் மணிவாசகம், வி.சி.க. மாவட்டச் செயலாளர் பால. அறவாழி, சி.பி.அய்.(எம்) மாவட்டக்குழு எஸ்.ஜி.இரமேஷ்பாபு, இஸ்லாமிய அய்க்கிய ஜமாத் வட்டாரத் தலைவர் முகமது ஜியாவுதீன் உள்ளிட்ட தோழமை இயக்கத்தினரும், கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாக மேடைக்கு வருகை தந்து நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு புதுச்சேரியில் வரவேற்பு

26.01.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணி தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வர வேற்று அழைத்து சென்றார்கள். இரவு 1 மணியளவில் ஓய் வுக்கு சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

27.01.2020 புதுச்சேரியில் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

புதுச்சேரி அண்ணாமலை விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சி, சமுதாய இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் காலை முதல் மாலை வரை சந்தித்து சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகள் புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதி உரிமை பிரச்சினைகள், நீட் புதிய கல்விக் கொள்கை போன்றவற்றின் ஆபத்துக்கள் குறித்து விவாதித்து உரையாடி மகிழ்ந்தனர். வி.சி.க. பொதுச் செயலாளர் பாவ ணன் மீனவர் விடுதலை பேரியக்க நிறுவனர் மங்கையர் செல்வன், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் ராஜாங்கம், மத்திய குழு உறுப்பினர் முருகன், விடுதியின் உரிமையாளர் செண்பக ராஜன், ஏகாம்பரம் சமூக நீதி பேரவை பொறுப்பாளர் தன ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அமைச்சர்

திரா. விசுவநாதன் சி.பி.அய் மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள், புதுச்சேரி கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு

நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அவர் தங்கியிருந்த அண்ணாமலை விடுதிக்கு புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு. வே.நாராயணசாமி அவர்கள் வருகை தந்து சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், மத்திய அரசின் நிலைப்பாடுகள், புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பரிமாறி பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். முதல்வர் அவர்களுக்கு ஆசிரியர் அவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.01.2020)

27.01.2020 அன்று எட்டாவது நாள் பயணமாக மாலை 6.40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார்.  புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார்.  மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  மாலை 7 மணிமுதல் 7.55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள்.  முதுகெலும்புள்ள புதுச் சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டி பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார்.  இளைஞரணி தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

- தொடரும்

நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் எதிர்ப்புப் பெரும் பயணம் நாடெங்கும் மக்கள் பேராதரவு


தொகுப்பு: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

9.2.2020 அன்றைய விடுதலையில்

வெளிவந்ததின் தொடர்ச்சி....

புதுச்சேரி தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு இர.கமலக்கண்ணன், மாநில தி.மு.க தெற்கு அமைப்பாளர் இரா.சிவா, மேனாள் அமைச்சர் இரா.விசுவ நாதன் சி.பி.அய் மாநில செயலாளர் அ.மு.சலீம், சி.பி.அய். எம்.முருகன் சி.பி.அய் (எம்) செயலாளர் இரா. இராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர், இரா.முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்க பொறுப்பாளர் அ.சி.தீனா, த.பெ.தி.க தலைவர் வீர.மோகன் ஆகியோர் நீட்- பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி பரப்புரைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதல்வரும், தமிழர் தலைவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் புதுச்சேரி மாண்புமிகு முதல் வர் அவர்களும் பொதுக்கூட்ட மேடையிலேயே செய்தியா ளர்களை சந்தித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மற்றும் புதுச்சேரி அரசின் மாநில உரிமைகள் குறித்து பேட்டி அளித் தனர்.  8.10க்கு திண்டிவனம் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திண்டிவனம் பொதுக்கூட்டம் (27.1.2020)

எட்டாவது நாள் இரண்டாவது கூட்டமாக திண்டிவனம் காந்தியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு வருகைதந்தார் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள்.  மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி தலைமை யேற்றார்.  குழ.செல்வராசு, கே.பாலசுப்பிரமணியன், இரா.அன் பழகன், சு.பெத்தண்ணன், இரா.சாமிநாதன், விஸ்வநாதன் கோதை, மண்டலத்தலைவர் க.மு.தாஸ், விழுப்புரம் சுப்ராயன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9.15 மணி முதல் 10 மணிவரை 45 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் 'நீட்' தேர்வால் நமது மாணவர்கள் அடையும் துன்பங் களை எடுத்துரைத்து உரையாற்றினார்.  மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பும் வாழ்த்தும்

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.மாசிலாமணி (தி.மு.க) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.மஸ்தான், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் பி.சீத்தாபதிசொக்கலிங்கம், சி.பி.அய் (எம்) தெற்கு பகுதி செயலாளர் ராமதாஸ், சி.பி.அய் வட்டச் செயலாளர் ஆ.இன்பஒளி, ம.தி.மு.க நகரச் செயலாளர், ஜெ.பாஸ்கரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜான்பாஷா, எஸ்.டி.பி.அய் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.ஆர் சையத்ஹசன் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலாளர் எச்.தாஜீதின் எம்.டி.கே மாவட்டச் செயலாளர், ஜெ.முகமதுதில்லன், உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று திண்டிவனம் ஆரியாஸ் தங்கும் விடுதியில் இரவு உணவு முடித்து பிறகு ஓய்வுக்கு சென்றார்.

திண்டிவனத்தில் தீப் பந்த வரவேற்பு

முன்னதாக திண்டிவனம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திண்டிவனம் எல்லையில் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலை மையில் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு கழகத் தோழர்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இளைஞரணி தோழர்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

28.01.2020 திண்டிவனத்தில் தோழர்கள் சந்திப்பு

ஆரியாஸ் தங்கும் விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலை வர் அவர்களை ஆரியாஸ் விடுதி உரிமையாளர் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சந்தித்து பயனாடை, பழங்கள் வழங்கி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.01.2020 முற்பகல் 10.50 மணிக்கு செய்யாறு நோக்கி புறப்பட்டார்.

செய்யாறு தோழர்கள் வரவேற்பு

9ஆவது நாள் பயணத்தை திண்டிவனத்தில் தொடங்கி முற்பகல் 12 மணிக்கு செய்யாறு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கி ருந்து புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

பகல் 12.15 மணிக்கு செய்யாறு பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மதியம் 2 மணி வரை யும்,  மதிய உணவுக்கு பின் 4 மணிமுதல் 6 மணி வரையும் செய்யாறு முக்கிய பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருந்து வணிகர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் (குடும்பத்துடன்) என 100 க்கும் மேற்பட்டவர்கள் சாரைசாரையாக வருகை தந்து ஒளிப்படம் எடுத்து நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.  அனைவரிடமும் விடைபெற்று மாலை 6.10 க்கு கூட்ட மேடை நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு பொதுக்கூட்டம் (28.01.2020)

செய்யாறு ஆரணி கூட்டுரோடு அருகில் அமைக்கபட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 6.20 க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். நகரத்தலைவர் தி.காம ராசன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்றார். பொன்.சுந்தர், ஏ.அசோகன், வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி, நா.வெ.கோவிந்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 6.45 மணிமுதல் இரவு 7.30 மணிவரை 45 நிமிடங்கள் சிறப் புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.  ஏரா ளமான பொதுமக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர்.  நகரச் செயலாளர் தங்கம் பெருமாள் நன்றி கூறினார்.

'பெரியார் 1000' மாணவர்களுக்கு பரிசு

தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா? விடை போட்டியில் செய்யாறு மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூட்ட மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். பெற்றோர்களும் ஆசிரியர் களும் உடன் வருகைதந்து பங்கேற்றனர்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

தி.மு.க. மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வ.அன்பழகன், முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் சி.பி.அய்(எம்), கோவை பழனி, வட்டாரத் தலைவர் பஜ்ராசலம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எச்.கமால் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று இரவு 7.35 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தின் எழுச்சிமிகு வரவேற்பு

28.01.2020 இரவு 8.30 மணியளவில் காஞ்சிபுரம் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு காஞ்சி மக்கள் மன்றத்தி னர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  மாவட்ட கழக தலை வர் டி.ஏ.ஜி.அசோகன் காஞ்சி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் ஜெஸ்சி, மகேஷ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.  பிறகு செங்கொடி ஏந்தி இருசக்கர வாகனங்களில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காஞ்சி நகர வீதிகளில் எழுச்சிமிகு முழக்கங்களுடன் தலைவர் அவர்களை கூட்ட மேடை வரை ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சி காஞ்சிபுரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் (28.01.2020)

ஒன்பதாவது நாள் இரண்டாவது கூட்டமாக  காஞ்சிபுரம், காந்திசாலை, பெரியார் நினைவுத்தூண் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.45 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மாவட்டச் செயலாளர் பூ.சுந்தரம் வரவேற்றார்.  மாவட்டத்தலைவர் டி.ஏ.ஜி அசோ கன் தலைமையேற்றார். இ.இரவீந்திரன், க.வேலாயுதம், பொன்.இராஜேந்திரன், க.தனசேகரன், செ.ரா.முகிலன் உள் ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9 மணி முதல் 10 மணி வரை 60 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுச்சி முழக்கமிட்டார்.

தமிழர் தலைவர் எழுப்பிய ஒலிமுழக்கங்கள்

காஞ்சிபுரம் கூட்டத்தில் உரையை நிறைவு செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திடீர் என்று ஒழிப்போம் ஒழிப் போம் நீட்டை ஒழிப்போம்,  விரட்டுவோம் விரட்டுவோம் புதியக் கல்விக்கொள்கையை விரட்டுவோம்,  போராடுவோம் போராடுவோம் நீட்டை விரட்டும்வரை போராடுவோம் என எழுச்சி முழக்கமிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று எழுச்சி முழக்க மிட்டது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  காஞ்சிபுரம் நகரத் தலைவர் கி.இளையவேல் நன்றி கூறினார்.  கூட்டம் முடித்து காஞ்சிபுரம் பயணியர் மாளிகையில் ஆசிரியர் அவர்களும் பயணக் குழுவினரும் இரவு உணவு அருந்தி முடித்த நிலையில் சோகமான செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வந்தது.  திருச்சி தங்காத்தாள் வாழ்விணையர் சின்னப்பன் மறைவு செய்தி.

பெரியார் மாளிகை தங்காத்தாளின் இணையர் சின்னப்பன் மறைவு திருச்சி விரைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப் பாளர் பெரியார் மாளிகை தங்காத்தாள் அவர்களின் வாழ் விணையர் திருச்சி பதிப்பு விடுதலை பொறுப்பாளர் சின்னப் பன் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி காஞ்சிபுரம் கூட்டம் முடித்து பயணியர் மாளிகை வருகைதந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 10.30 மணிக்கு கிடைத்தது.  உடனடியாக தோழர்களை அழைத்து ஆலோசனை செய்து இரவு 11 மணிக்கு சாலை வழியாக வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் புறப்பட்டார் ஆசிரியர் அவர்கள்.  29.01.2020 அதிகாலை 4.15 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்த ஆசிரியர் அவர்கள் மறைந்த சின்னப்பன் உடலுக்கு தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து தங்காத்தாள், அறிவுமணி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து சில மணித்துளிகள் கழித்து பெரியார் மாளிகையில் தங்கியிருந்தார்.

ஓடும் வாகனத்திலேயே இரங்கல் அறிக்கை எழுதிய ஆசிரியர்

வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் உரையா டியபடி பயணமான ஆசிரியர் அவர்கள் பேனாவையும், பேடையும் எடுத்தார். மளமளவென சின்னப்பன் அவர்க ளுக்கு இரங்கல் அறிக்கையை 15 நிமிடத்தில் எழுதி வண்டி யில் பயணம் செய்த ச.பிரின்சு என்னாரசு பெரியார் அவர் களிடம் இரவு 11.45 மணியளவில் கொடுத்தார்கள். அவர் உட னடியாக தனது செல்பேசியிலேயே டைப் செய்து ஆசிரியர் அவர்களிடம் படித்துக்காட்டி திருத்தம் பெற்று சென்னை விடுதலை அலுவலகத்துக்கு அனுப்பினார். இந்நிகழ்வு உடன் வருகை தந்தோரை வியக்க வைத்தது.

காலை 9.30 மணிக்கு இரங்கல் கூட்டம்

சென்னையிலிருந்து மோகனா அம்மையாரும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் குடும்பத்தினர், கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவரது வாழ்விணையர் ஆகியோர் 29.01.2020 அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அனைவரும் காலை 9.30 மணியளவில் மறைந்த சின்னப்பன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் அவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் இரங்கலுரையாற்றினர். பிறகு அனைவரிடமும் விடைபெற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் காஞ்சிபுரம் நோக்கி சாலை வழியாக புறப்பட்டார் ஆசிரியர்.

திண்டிவனத்தில் மதிய உணவு

29.01.2020 திருச்சியிலிருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்த தமிழர் தலைவர் மற்றும் உடன் வருகை தந்தோருக்கு நண்பகல் 1.15 மணிக்கு திண்டிவனம் க.மு.தாஸ் அவர்கள் ஏற்பாட்டில் திண்டிவனம் ஆரியாஸ் உணவு விடுதியில் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று மதியம் 2 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார். ஆசிரியர் அவர்கள் மாலை 3.30 மணியளவில் காஞ்சிபுரம் பயணியர் மாளிகையை வந்தடைந்தார். ஆசிரியரை காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் வரவேற்று அனைவருக்கும் தேனீர் வழங்கினார்.

அரக்கோணம் பொதுக்கூட்டம் (29.01.2020)

29.01.2020 அன்று மாலை 6.10 மணிக்கு காஞ்சிபுரம் பயணி யர் மாளிகையிலிருந்து தனது 10  ஆவது நாள் பயணத்தை தொடங்கினார் ஆசிரியர். அரக்கோணம்  எஸ்.ஆர்.கேட் அருகில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடைக்கு மாலை 6.55 க்கு வருகை தந்தார்கள். மாவட்ட அமைப்பாளர் கொ.ஜீவன்தாசு வரவேற்றார், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்றார், க.தீனதயாளன், பொன்.வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். இரவு 7 மணி முதல் 7.51 வரை 51 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அரக்கோணம் கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை எதிரே இருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் குறித்தும் பேட்டியளித்தார். இரவு 7.55 மணிக்கு திருத்தணி நோக்கி பயணமானார் அசிரியர்.

அரக்கோணத்தில் வரவேற்பு

அரக்கோணம் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு அரக்கோணம் எல்லையில் வரவேற்றனர்.

திருத்தணி பொதுக்கூட்டம் (29.01.2020)

திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.35 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். மாவட்டச் செய லாளர் அறிவுச்செல்வன் வரவேற்றார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி வரவேற்றார், மோகனவேல், க.எழில், இரா.ஸ்டாலின், சி.வீரமணி ஆகியோர் முன்னிலையேற்றனர். இரவு 8.55 மணி முதல் 9.35 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி தொடக்கத்தில் திருத்தணி பன்னீர் செல்வத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு

திருத்தணிக் கூட்டம் முடித்து ஆசிரியர் அவர்களும் பயணக்குழுவினரும் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு அருந்தி அவர்களிடமிருந்து 10.30 மணியளவில் விடைபெற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திற்கு ஆசிரியர் அவர்களை வழியனுப்பிவிட்டு இரவு 1.15 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் பயணக்குழுவினர்.

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் அவர்கள் பயணக் குழுவினரை சந்திப்பும் - பாராட்டும்

நிறைவு நாள் 30.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார் ஆசிரியர். 10 நாட்களாக தேங்கிக் கிடந்த கடிதங்களை படித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து பகல் 1.00 மணியளவில் பெரியார் அருங்காட்சியகத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் ஏற்பட்ட நிறை குறைகளை கேட்டு, பேச்சாளர்கள், ஓட்டுநர்கள் பொறுப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவரின் உழைப்பையும் பாராட்டியதோடு ஒரு சிறு பிரச்சினைகள் கூட ஏற்படாமல் வெற்றிகரமாக பயணம் முடிந்ததை மகிழ்ச்சியோடு பரிமாறி எதிர்காலத்தில் சரி செய்யப்பட வேண்டிய சில யோசனைகளையும் தெரிவித் தார், அனைவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். பிறகு பயணக்குழுவினர் அனைவரும் ஆசிரி யர் அவர்களோடு குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். தாம்புரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய் யப்பட்டு பரிமாறப்பட்டது.  தமிழர் தலைவர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயணக்குழுவினருடன் மதிய உணவு அருந்தினர்.  மதியம் 2.30 மணியளவில் அனைவரிடமும் விடைபெற்று புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் (30.01.2020)

30.01.2020 மாலை 6.10 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை எம்.ஜி.ஆர் நகர். கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டிருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயண நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 7 மணிக்கு வருகை தந்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார்.  தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையேற்றார்.  தி.இரா.ரத்தினசாமி, செ.கோபால், பழநி.பன்னீர்செல்வம், ப.முத்தை யன், மதியழகன், ராகவன், தாமோதரன், அய்யாத்துரை, சேகர், மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.

நீட் விளக்க புத்தகத்தை பொதுமக்களிடம் விற்பனையில் இறங்கிய தமிழர் தலைவர்

பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒலிபெருக்கியை பிடித்து நீட் தொடர் பான புத்தகங்களை பொதுமக்களிடம் பெருமளவில் கொண்டு செல்லும் நோக்கோடு மேடையில் இருக்கின்ற நமது தலைமைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கி பொதுமக்களிடையே கொண்டு வருவார்கள்.  அனைவரும் வாங்கி மக்களிடையே பரப்ப வேண்டும் என அறிவித்து நானே தொடங்கி வைக்கிறேன் என மேடையிலிருந்து கீழே இறங்கி ரூ.1800 க்கு பொது மக்களிடம் ஆசிரியர் அவர்களே புத்தகங்களை விற்பனை செய்தார்.  மேடையிலிருந்த தலைமைக் கழகப் பொறுப்பா ளர்கள் அனைவரும் பொதுமக்களிடம் சென்று புத்தகங்களை விற்பனை செய்தனர்.  தலைவரே களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டுக் புத்தகங்களை வாங்கினர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்று உரை

11 நாட்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.எச்.ஜவஹருல்லா, சி.பி. அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினார்கள்.  87 வயதிலும் மிகவும் உற் சாகமாக கடந்த 11 நாட்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் அவர்களின் நோக்கம் நிறைவேற எங்களின் ஆதரவு என்றும் உண்டு என வாழ்த்து தெரிவித்து உரை யாற்றினார்.  இரவு 9.40 முதல் 10 மணிவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவு விழா பேருரையாற்றினார். கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், வருகைதந்து கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய தோழமைக்கட்சி தலை வருக்கும் நன்றி தெரிவித்து, நீட்தேர்வின் அவலங்களால் நமது சமுதாய மாணவர்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுவதை எடுத்துரைத்து உரையாற்றினார். இறுதியாக மாவட்டச் செய லாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கிராமப்பிரச்சாரகுழு அமைப் பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் தொடக்கவுரையாற் றினார்கள். கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர்கள் பழனி.பன்னீர்செல்வம், வே.செல்வம், ஊமை.ஜெயராமன், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், மகளிர் பாசறை செயலாளர் மணியம்மை, வழக்கு ரைஞர் வீரமர்த்தினி, பவானி உள்ளிட்ட கழகப் பொறுப்பா ளர்களும், பொதுமக்களும் கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர், நிறைவு விழா பொதுக்கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடுகளை செய்த சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பிரியாவிடை பெற்ற பயணக்குழு தோழர்கள்

சென்னை நிறைவு விழா பொதுக்கூட்டம் முடிந்து தமிழர் தலைவர் அவர்களோடு சென்னை அடையாறு இல்லம் வருகை தந்த பயணக்குழுவினர் அனைவரும் இரவு உணவு முடித்து அவரவர் ஊருக்கு புறப்பட தயாராக இருந்த கழகத் தோழர்களை இரவு உணவு முடித்து ஓய்வுக்கு செல்லாமல் கீழே இறங்கி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பாக ஊர் போய் சேர வேண்டும் என தெரிவித்து நுழைவு வாயில் வரை வந்து அனைவரையும் இரவு 11.30 மணிக்கு வழியனுப்பிவைத்துவிட்டு பிறகு ஓய்வுக்கு சென்றார். பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் தங்கள் தலைவரிடம் பிரியாவிடை பெற்று தங்கள் ஊருக்கு பயணமானார்கள். யாருக்கும் கிடைக் காத நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதி மகிழ்ச்சியுடன் பயணித்தனர். நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணத்தின் அனைத்து கூட்டங்களிலும் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், கிராம பிரச்;சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள்.

சிறப்பான ஏற்பாடுகளை செய்து உபசரித்த மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்

நீட் தேர்வால் ஏற்படும் பேராபத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழர் தலைவர் அவர்கள் 11 நாட்கள் மேற்கொண்ட பரப்புரை பெரும்பயணம் குறுகிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இடையில் பொங்கல்விழா குறுக்கிட் டாலும், தலைவர் இடுகின்ற கட்டளைகளை இராணுவக் கட்ட ளையைவிட மேலாக கருதி உழைத்திடும் நமது மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, மாநிலக்கழக, மண்டலக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் புயல் வேகத்தில் பணிகளை தொடங்கி வசூல்பணி, சுவர் விளம்பரம், சுவ ரொட்டிகள் விளம்பரம் தோழமைக் கட்சிகள் ஒருங்கிணைப்பு, மேடை, ஒலி,ஒளி அமைப்பு உட்பட அனைத்து ஏற்பாடுக ளையும் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தனர்.  பயணக் குழுவில் பங்கேற்று வந்த தோழர்களுக்கு தங்குமிட வசதி, உணவு ஏற்பாடு உபசரிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று உபசரிப்பு உட்பட அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்து முடித்த சுயநலம் கருதாத நமது கழக தோழர்களின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது.  நீட்டை விரட்டும் வரை நமது தலைவர் இடும் எந்த கட்டளையையும் ஏற்று போராட்டத்தில் சிறை செல்ல தயாராவோம் தயாரா வோம்.  நன்றி.

(நிறைவு)

- விடுதலை நாளேடு, 9,11.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக