ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

பெரியார் ஆயிரம் வினா விடை தேர்வில் பரிசு வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு



7.2.2020 பிற்பகல் 3.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பெரியார் ஆயிரம் வினா விடை தேர்வில் பரிசு வென்ற மாணவர்கள்  எஸ்.கிருத்திகா, வி.ஆப்ரகாம், பி.அர்சினிபாமா ஆகியோருக்கு சென்னை அரும்பாக்கம் நேஷனல் ஸ்டார் மேல் நிலைப் பள்ளியில், பள்ளி தாளாளர் ஜி.பி.சாரதி முன்னிலையில் தென்சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
உடன் மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அரும்பாக்கம் பகுதி கழக தோழர் பிரகாசம், அரும்பாக்கம் க.தமிழ்ச் செல்வன், அம்பேத்கர் பேரவை செயல் வீரர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர். பெரியார் ஆயிரம் வினா விடை நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற ஒத்துழைத்த பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கி தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.


- விடுதலை நாளேடு,16.2.20


 
 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக