தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

மயிலையிலும் புரசையிலும் பொழிந்த பொன்மழை!



    February 14, 2023 • Viduthalai

*மின்சாரம்

-[மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகிலும் சென்னைப் புரசைவாக்கம் தாணா தெருவிலும் முறையே தென் சென்னை, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (13.2.2023) நடைபெற்ற பிரச்சாரப் பெரும் பயணப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையில் உதிர்ந்த தரவுகளும், கருத்துகளும் - ஒரு சுருக்கப் பார்வை-].

«  இடையில் ஈராண்டுகள் கரோனா தாக்குதலால் நம் பிரச்சாரம் தடைபட்டு இருந்தது. 

« இந்த நிலையில் கடந்த  ஆண்டிலும் இவ்வாண்டிலும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடர்ந்தோம் - தொடர்கிறோம். 

« கடந்தாண்டு நீட் எதிர்ப்பு. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில சுயாட்சி மீட்பு என்ற அடிப்படையில் பிரச்சாரம் (21 நாட்கள்).

« இப்பொழுது சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரைப் பெரும் பயணம் (40 நாட்கள்) மேற்கொண்டுள்ளோம்.

« ஒரு நூற்றாண்டாக அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி நடத்தியதன் காரணமாக நம் இளைஞர்கள் படித்தார்கள் - வேலை வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.

« பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2  கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.

« அப்படிப் பார்க்கப் போனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 18 கோடி இருபால் இளைஞர்களுக்கும் வேலை கிடைத்திருக்கும் - நாட்டின் பொருளாதாரமும் வளர்ந்திருக்கும்.

« சேது சமுத்திரத் திட்டம் 1860 முதல் பேசப்பட்டு வருகிறது. நமது இனத்தின் அறிஞர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

« இந்தத் திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புக் கிடைத்திருக்குமே - இதனைத் தடுத்தது யார்?

« பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட திட்டம். தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அத்துறை அமைச்சராக இருந்து விரைவாக அத்திட்டத்தை செயல்படுத்தினார். 2000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இன்னும் 23 கிலோ மீட்டர் பணியே முடிக்கப்படவிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையைப் பெற்றவர்கள் யார்?

« ஜெயலலிதா, சோ, இராமசாமி, சுப்பிரமணியசாமி ஆகிய மூவர்தானே!

« என்ன காரணம் - 2009 தேர்தல் நெருங்கும் நேரம் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தச் சாதனைப் பெருமை தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் கிடைத்து விடும் என்ற அரசியல் நோக்கம்தானே!

« ராமன் பாலம் - அதை இடிக்கலாமா என்றார்கள்.

« இராமன் என்ன என்ஜினியரா? எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று கேட்டார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

« அப்பொழுது விசுவ ஹிந்து பரிஷத் தலைவரான ராம் விலாஸ் வேதாந்தி என்ற சாமியார் கலைஞரின் தலையைச் சீவுவேன் என்றார்.

« கலைஞர் அளித்த பதில் என்ன? நான் என் தலையைச் சீவியே பத்து வருஷம் ஆச்சு. இவர் எங்கே சீவப் போகிறார் என்று அவருக்கே உரித்தான முறையில் ஒரு வன்முறையை எளிதில் கடந்தார்.

« இப்பொழுது என்னாயிற்று? நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 22 அன்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் "நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில் வெறும் சுண்ணாம்புக் கற்களும் பவளப் பறைகளும்தான் இருக்கின்றன. எந்தப் பாலமும் கிடையாது என்று பதில் கூறி விட்டாரே!

« இப்பொழுது என்ன செய்யப் போகிறார்கள்?

« 2000 கோடி ரூபாய் நட்டத்திற்கு யார் பொறுப்பு?

« சரி, இராமன் பாலம் இல்லை என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிந்து விட்டபிறகு சேது சமுத்திரத் திட்டப் பணியைத் தொடங்க வேண்டியதுதானே!

« நாடாளுமன்றத்தில் ராமன் பாலம் என்ற ஒன்று கிடையாது என்று அறிவித்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உடனடியாக சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறி, அத்தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதே - இதற்குப் பெயர்தான் "திராவிட மாடல்" அரசு என்பது.

« சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வந் திருந்தால் இந்நேரம் இலங்கையைச் சுற்றிக் கப்பல்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே - பயண நேரம் குறைந்திருக்குமே, எரிபொருள் செலவும் குறைந்திருக்குமே!

« சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய்க்கு நிக ராகப் பேசப்பட்டு இருக்குமே!

« தன்மானம், இனமானம் என்பது நமது பக்கம் - வருமானம் அடமானம் என்பது இன்னொரு பக்கம்  - இதனை எதிர்த்துதான் இப்பொழுது பிரச்சாரம்.

« திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள்.

« நீ சூத்திரன் உனக்குப் படிப்புக் கிடையாது என்று சொன்ன மனுவை எதிர்த்து எரித்துப் போர் புரிந்தது திராவிட இயக்கம்.

« சென்னைக் கடற்கரை சாலையில் ஒரு முறை நடந்து பாருங்கள். எத்தனை எத்தனைக் கல்லூரிகள் பல்கலைக் கழகம் - எந்த ஆட்சிக் காலத்தில் வந்தது?

« சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பன ரல்லாத மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்கே நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டிய நிலை இருந்ததே! (நிளி 636) நாள் 20.5.1922).

« கல்வியில் இடஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தானே - தமிழ்நாடு தானே.

« இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு 76ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தோடு 9ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் திராவிடர் கழகம் இல்லையா?

« என்னைப் பார்க்கும்போது இதோ 31சி வருகிறது என்று சொல்லுவார்களே!

« மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா!

« எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமானம் ரூ.9,000 இருந்தால் இடஒதுக்கீடு கிடையாது என்று பிறப்பித்த ஆணையை எதிர்த்துப் போராட்டங்களையும், மாநாடுகளையும் முன்னெடுத்தது யார்?

« திராவிடர் கழகம் முன்னெடுத்த இந்தப் பணி களுக்கு தி.மு.க., காங்கிரஸ், சி.பி.அய்., இந்திய யூனியன் முசுலிம் லீக், ஜனதா முதலிய கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானவை.

« கடந்த ஞாயிறன்று (12.2.2023) ஆந்திர மாநிலம் குண்டூரில் மண்டல் குழு தலைவர் பி.பி. மண்டல் (பிந்தேஷ்வர் பிரகாஷ் மண்டல்) சிலையைத் திறந்து வைக்க யாரை அழைத்தார்கள்? திராவிடர் கழகம் தானே அவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. நான் சென்று திறந்து வைத்தேன்.

நமது மூன்றாவது துப்பாக்கியாகிய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனை அவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தது ஏன்? தமிழ் மண் சமூகநீதி மண் - பெரியார் மண் என்பதால்தானே!

« கருநாடக மாநிலத்தின் அமைச்சராக இருந்த ரகுராமரெட்டி என்பவர் அவ்விழாவிற்கு நான் சென்று இருந்தபோது என்னைப் பார்த்துக் கேட்டார். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை எப்படி ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் அதிசயத்தை உங்களால் செய்ய முடிந்தது என்று கேட்டார். நடந்தவற்றை எங்கள் போராட்டக் களத்தை விவரித்துச் சொன்னேன்.

« முதல் அமைச்சர் ஜெயலலிதா (தமிழ்நாடு), பிரதமர் பி.வி. நரசிம்மராவ் (ஆந்திரா) குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா (உ.பி.) ஆக மூன்று பார்ப்பனர்களைப் பயன்படுத்தி இதனைச் சாதித்தது பற்றி விளக்கினேன். மிகவும் வியந்து பாராட்டினார்.

« தந்தை பெரியார் மறைந்தபின்னர் அவரின் தொண்டர்களால் இதனை சாதிக்க முடிந்தது.

« படிக்காதே என்பது  ஆரியம் - படி  படி என்றது திராவிடம். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஆயுதம் ஏந்தாமல் சமூகநீதித் துறையிலே இதனை சாதித்து இருக்கிறோம்.

« இப்பொழுது என்ன நடக்கிறது? ஒன்றிய பிஜேபி அரசு நாம் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டைத் கொல்லைப் புறம் வழியாக சூழ்ச்சியாகப் பறித்துக் கொண்டுள்ளது.

« ஒன்றிய அரசு துறைகளில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் நாம் போராடிப் பெற்ற 27 சதவிகித இடஒதுக்கீடு முழுவதுமாக நமக்கு அளிக்கப்படுகிறதா? 13 விழுக்காட்டை இன்னும் தாண்டவில்லையே!

« இன்னொரு சூழ்ச்சி! உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடாம்.

« நாள் ஒன்றுக்கு ரூ.2222 வருவாய்ப் பெறுவோர் ஏழைகளாம்!

« ஏழு லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி கட்டத் தேவையில்லை என்கிறது ஒன்றிய அரசின் பட்ஜெட். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் பெறும் இந்த உயர் ஜாதி பார்ப்பனர்கள் - அதாவது இன்கம்டாக்ஸ் கட்டும் பிச்சைக்காரர்கள்! (பலத்த சிரிப்பு). இவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடாம்!

« பிஜேபி ஆட்சியில் இருந்தாலும் அதன் லகான் ஆர்.எஸ்.எஸிடம் தான் இருக்கிறது. பொம்ம லாட்டம் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். தான். அதற்கு அடமானப் பொருளாகவும் தமிழ்நாட்டில் ஒரு கட்சி கிடைத்திருக்கிறது (சிரிப்பொலி).

« 'குஜராத் மாடல்' 'குஜராத் மாடல்!' என்றனர். 

« அது என்ன குஜராத் மாடல்? 56 இஞ்ச் மார்பளவு என்று தனது மார்பை டேப் எடுத்து அளந்து காட்டுகிறார் நரேந்திரமோடி.

« வளர்ச்சி வளர்ச்சிஎன்று வாய்க்கிழியப் பேசு கிறார்கள்? யாருக்கு வளர்ச்சி?

« கரோனா காலத்தில் மக்கள் எல்லாம் பசியும் பட்டினியுமாக உழன்ற கால கட்டத்தில் அதானி, அம்பானிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.1002 கோடியாம். இது யாரால் வந்த வளர்ச்சி? பிரதமர் மோடிக்குத் தான் வெளிச்சம்!

« இதற்கு முடிவுதான் என்ன? 2024 பொதுத் தேர்தல்தான் அமைதிப் புரட்சி - வாக்குச் சீட்டு மூலம் புரட்சிதான் ஒரே வழி!

« இப்பொழுது நடக்கும் போராட்டம் சமத்துவத் துக்கும் சனாதனத் துக்குமிடையிலான போராட்டமே!

« சமத்துவம் என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பது; சனா தனம் என்பது அனைவருக்கும் அனைத்தும் இல்லை - கிடையாது என்பதாகும்.

« ஸநாதன தர்மம் என்றால் என்ன?

« பனாரஸ் ஹிந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்ட அந்த ஸநாதனம் என்பதற்கு என்ன பொருள் தருகிறது? இதோ ஆதாரம்.

« ஸநாதனம் என்றால் ஆரியம் என்கிறது; ஆரியம் என்றால் மேன்மை பொருந்தியது. ஒழுக்கம் நிறைந்த இந்த ஜாதியார் இந்தியாவின் வடபகுதியில் வந்து குடியேறினர்.

« ஆரியர் வந்தேறிகள் என்று அவர்களின் ஸநாதனம் கூறி விட்டதே - ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்.

இந்தியாவிலேயே பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடாத நாடு தமிழ்நாடுதான். இங்கு ஜாதிக்கட்சியை நடத்துபவர்களே தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடுவதில்லை.

« இதற்குக் காரணம் திராவிட இயக்கம் அல்லவா!

« 1929இல் செங்கற்பட்டு மாநாட்டில் ஜாதி பட்டத்தைத் துறக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மாநாட்டிலேயே, உடனடியாக ஜாதிப் பட்டத்தைத் துறந்தனர் என்பது உன்னதவரலாறு.

« இது திராவிட இயக்கத்தின் சாதனை என்பதை மறுக்க முடியுமா?

தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும்

(தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை ஒப்பிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கூறியவை)

பஞ்சாபில் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்குமாறு அண்ணல் அம்பேத்கர் அழைக்கப்பட்டார்.  அழைத்தவர்கள் லாகூரில் உள்ள ஜாட்- பட்தோடக் மண்டலத்தார் (ஜாதி ஒழிப்புச் சங்கத்தார்) அதற்கு ஒப்புதலும் கொடுத்து மாநாட்டுத் தலைமை உரையையும் எழுதி அனுப்பினார்.

அந்த உரையில் வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள் பற்றி எல்லாம் தம் கருத்தை வெளியிட்டு இருந்தார் டாக்டர் அம்பேத்கர்.

மாநாட்டு வரவேற்புக் குழுவினர் அந்தப் பகுதிகளை நீக்க வேண்டும் என்று கேட்டனர். அம்பேத்கர் அதனை ஏற்கவில்லை. அந்தத் தலைமை உரையை தந்தை பெரியார் அம்பேத்கரிடமிருந்து பெற்று, தமிழில் மொழிபெயர்த்து "ஜாதியை ஒழிக்கும் வழி" என்ற நூலாக வெளியிட்டார் (1936). இதுவரை பல பதிப்புகளுக்கு மேல் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கில் மக்களிடம் பரவி விட்டது.

« சூத்திரர்கள், பஞ்சமர்கள் படிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். இதுபற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். நானும் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று படித்திருக்கிறேன். அங்கும் கறுப்பர், வெள்ளையர் வேறுபாடுகள் உண்டு; ஆனாலும் கறுப்பர்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை; அவர்கள் படிக்க தனி கல்விக் கூடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைதான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். (மனுதர்மத்தை தந்தை பெரியாரும் கொளுத்தினார்; அண்ணல் அம்பேத்கரும் கொளுத்தினார்).

« படிகளே இல்லாத நான்கு மாடி வீடு - இதுதான் ஹிந்து மதத்தின் வருணாசிரமம் என்றார் அம்பேத்கர்.

« ஈரோட்டில் 29 பதவிகளை ஒரே காகிதத்தில் ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் சேர்ந்தவர் பெரியார்.

« காங்கிரஸின் மாநில தலைவராகவும், மாநில செயலாளராகவும் இருந்தவர் பெரியார். சமூகநீதிக்காக அந்தப் பதவிகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார்.

«  நீதிக்கட்சி தலைவராக இருந்தபோது இரண்டு முறை சென்னை மாநில முதல் அமைச்சர் பதவியை வகிக்குமாறு வெள்ளைக்கார கவர்னர்கள் கேட்டுக் கொண்டபோதும்கூட என் பணி அரசியல் பணியல்ல, சமுதாயப் பணி என்று மறுதலித்தார் தந்தை பெரியார்.

அண்ணல் அம்பேத்கரும் அப்படியேதான் இந்துத் திருத்த சட்டம் - பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை செயல்படுத்த அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சித்தபோது, -சனாதனிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டபோது 'எனக்குப் பதவி முக்கியமல்ல - கொள்கைதான் முக்கியம்!" என்று கூறி, அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்து வெளியேறியவர் ஆவார்.

« 95 வயதைக் கடந்து வாழும் மிசோரம் மேனாள் ஆளுநரும் மேனாள் தமிழ்நாடு தலைமைச் செயலாளருமான ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்கள் மாணவராக இருந்தபோது, சக மாணவர்களுடன் அண்ணல் அம்பேத்கர் அவர்களை சென்னை விருந்தினர் மாளி கையில் சந்தித்தபோது, 'எங்களுக்கு வழிகாட்டும் அறிவுரைகளைக் கூறுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு அண்ணல் அம்பேத்கர் சொன்ன பதில்தான் முக்கியம்.

"உங்கள் நாட்டிலேயே ஒரு தலைவர், நானும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். அவரிடம் செல்லுங்கள் அறிவுரையைப் பெறுங்கள் என்று சொன்னவர் அம்பேத்கர். ('உண்மை' இதழில் நேர்முகப் பேட்டியில்).

« இங்கே நாங்கள் கூடியிருப்பது அரசியல் கூட்டணி அல்ல - சமூகநீதி கூட்டணி.

« சமூக நீதிக்காகப் பிச்சை கேட்கவில்லை நாங்கள்.

« உரிமையைத்தான் கேட்கிறோம்.

« உங்களில் எத்தனை எம்.பி.க்கள் இருக்கிறீர்கள் என்று எங் களைக் கேட்பவர்கள் உண்டு.

பெரும்பாலானவர்கள் எங்கள் எம்.பி.க்கள்தான்  - சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் - சமூகநீதிக் கட்சிக்காரர்கள் தான் என்பது - எங்கள் பதிலும் - யதார்த்தமும்!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:52 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பரப்புரை, புரசை, மயிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ▼  பிப்ரவரி (18)
      • ஆயிரம் விளக்கு மு.சேகர் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
      • பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91ஆவது பி...
      • பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91 வது பி...
      • பெருந்தொண்டர் மயிலை சாமிநான் அவர்களின் 75வது பிறந்...
      • சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திருவ...
      • தென் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
      • சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட...
      • நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரி - ஒன்றிய அரச...
      • சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
      • சென்னை மந்தைவெளியில் நடைபாதையில் ஆக்கிரமித்துக்கட்...
      • மயிலாப்பூர் - புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரையி...
      • மயிலையிலும் புரசையிலும் பொழிந்த பொன்மழை!
      • சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி (விசிக), தென் ...
      • மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத் ...
      • அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் திராவிடர் கழக...
      • எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும...
      • திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 1...
      • திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் ...
    • ►  ஜனவரி (13)
  • ►  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.