செவ்வாய், 27 செப்டம்பர், 2022

சி.பா.ஆதித்தனாரின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள்! சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, செப்.27 ‘தினத்தந்தி' நாளிதழின் நிறுவநரும் - தமிழ்நாடு மேனாள் அமைச்சருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.9.2022) காலை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மலர்மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சா.தாமோதரன், அய்ஸ்அவுஸ் அப்துல்லா,  

வே.சிறீதர், பா.சிவகுமார், க.கலைமணி, முத்துலட்சுமி, அன்பரசன், அருள், உடுமலை வடிவேல், மகேஷ், கணேஷ் மற்றும் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக