புதன், 29 மே, 2019

அருந்ததி மக்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்



சென்னை, மே 27 இராம நாதபுரம் மாவட்டம் பாப்பா குடியில் அருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்கு தல் நடத்திய சமூக விரோதி களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப் பாட்டம் சென்னை வள் ளுவர் கோட்டம் அருகே இன்று (27.5.2019) காலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பல் வேறு அமைப்புகளின் சார் பில் பலரும் கலந்து கொண் டனர்.
திராவிடர் கழகம்  சார்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 27. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக