புதன், 29 மே, 2019

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

வல்லம், மே 27 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகழகத்திலுள்ள வள்ளுவர் அரங்கில் 18.05.2019 சனிக்கிழமை மாலை 05.15 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ராஜவேல் "கடவுள் மறுப்பு" கூறினார். திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் அனைவரையும் வரவேற்றார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து கருத்துரையாற் றினார்கள்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தே.காமராஜ், அ.சுரேஷ், ப.வெற்றிச் செல்வன், வெ.ஆசைத்தம்பி, க.கண்ணன், பெரியார் சமுகப் பாதுகாப்பு அணியின் மாநில பொறுப்பாளர் சுரேஷ், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.அன்புராஜா, திண்டுக்கல் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் குணா.அறிவழகன், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் கூ.செல்வம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் ந.பஞ்சமூர்த்தி, வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் வீரைய்யா, புதுச்சேரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.முகேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோ.நீலகண்டன் கூட்டத்தில் வடிக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.

பங்கேற்றோர்


தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் ஜெயராமன், செயலாளர் அய்யனார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் நாத்திக.பொன்முடி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தயாளன், தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ச்சுணன், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், ஒசூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் செ.டார்வின் பேரறிவு, திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் கே.பாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அ.கரிகாலன்,  கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ந.உதயசங்கர், செயலாளர் வேலு, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சேகர், கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.திராவிடமணி, அமைப்பாளர் விவேக், நீலமலை மாவட்ட இளைஞரணி தலைவர் யா.சத்தியநாதன், செயலாளர் சி.இராவணன், தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் நா.மாயவன், செயலாளர் மா.இராமசாமி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.ரமேஷ்,கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.சின்ன துரை, அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, செயலாளர் சி.ராஜமணிகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.வீரத்தமிழன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராஜா, செயலாளர் இரா.யோகராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளிராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.கண்ணன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன், செயலாளர் இரா.பிரபாகரன், விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.சுந்தரமூர்த்தி, தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கோபால் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் 250 பேர்,திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் என 300 பேர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக