திங்கள், 30 ஜூலை, 2018

தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நிறைவு பொதுக்கூட்டத்தை தியாகராயர் நகரில் எழுச்சியுடன் நடத்த முடிவு



சென்னை, ஜூலை 30 தென் சென்னை மாவட்ட சின்மயா நகர் பகுதியில் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் இல்லத்தில் 28.7.2018 அன்று மாலை 6 மணி அளவில் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில்  சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.

தென்சென்னை மாவட்டத்  தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையன் , செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி கழக மாவட்டத்  தலைவர் பா.தென்னரசு, கும் மிடிப்பூண்டி கழக மாவட்டத்  தலைவர் புழல் சி.ஆனந்தன், செயலாளர் இரா.இரமேஷ் ஆகியோர்  முன்னிலையிலும், செப்டம்பர் 11இல் தென் சென்னை தியாகராயர் நகர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பய ணம் நிறைவு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சென்னை மண்டல மாவட்டங்களின் கழகப் பொறுப் பாளர்கள், கழகத் தோழர்கள்,மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் சிறப்பாக நடத்துவது குறித்து கருத்துகளை கூறினர்.

தீர்மானம் இரங்கல் தீர்மானம்


17.7.2018 இல் போரூரில் இறந்த சட்ட எரிப்பு வீரர் மயிலை சி.சாமிநாதன் அவர் களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் ச.இன்பக்கனி, பா.மணி யம்மை, மு.இரா.மாணிக்கம், க.இளவரசன், கு.செல்வி, மு.ந.மதியழகன், டி.ஆர். சேதுராமன், சி.செங்குட்டுவன், கோ.வீ.ராக வன், சா.தாமோதரன், இராமலிங்கம், சு.மோகன்ராஜ், செ.தமிழ்சாக்ரடீசு, பெரு.இளங்கோ, மு.சந்திரா, சோ.சுரேஷ், சு.அன் புச்செல்வன், மு.ராணி, க.தமிழ்ச்செல்வன், ந.இராமச்சந்திரன், ஈ.குமார், கு.செல்வேந் திரன், மு.சண்முகப்பிரியன், கோ.மஞ்ச நாதன், மு.திருமலை, க.ச.க.இரணியன், பர சுராமன், க.ச.பெரியார்மாணாக்கன், மா. இளையராணி, ச.துணைவேந்தன், ப.சக் கரவர்த்தி, வே.அருள், அறிவுமாணன், ந. கஜேந்திரன், எ.அன்பு, ந.ஜனாதிபதி, மா. இளையராணி, மு.ரா.பவதாரணி, மயிலை பாலு அறிவுமதி, ஈக்காட்டுத்தாங்கல் மு. சேகர், கும்மிடிப்பூண்டி உதயகுமார் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.

பிரச்சாரக் கூட்டத்திற்கு நிதி வழங்கியோர்

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ரூ. 10,000, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் ரூ. 5,000,- கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன் ரூ. 2,000,-  தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் ரூ. 2500,- தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி ரூ. 1000, சென்னை மண்டலச் செயலாளர் தி.செ.கோபால் ரூ. 2,000, பொன் னேரி செல்வி ரூ.2000,- ஆகியோர் நன்கொடையினை கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் ஆகியோரிடம் வழங்கினர்.

சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்


சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில், விழிப்புணர்வு நிறைவு பிரச்சாரக் கூட்டத்திற்கு நிதி வழங்கியோர்



தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார நிறைவு விழா பொதுக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளதையொட்டி தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் ரூ.5000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 28.7.2018)

- விடுதலை நாளேடு 30.7 18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக