ஞாயிறு, 8 நவம்பர், 2015

நாமக்கல்லில் ஒரு ‘‘தடபுடல் விருந்து!’’


நாமக்கல்லில் ஒரு ‘‘தடபுடல் விருந்து!’’

மின்சாரம்
நாமக்கல் நகரம் - பெரியார் மன்றத்தில் - கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு (அக்.2, 3, 4) ஆகிய நாள்களில் ஒரு ‘‘தடபுடல் விருந்து’’ நடந்தது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பண்பின் பெட்டகமுமான மான மிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் தலைமையில் மூத்த பெரியார் தொண்டர்களும், நடுத்தர வயது கொண் டவர்களும், இளைஞர்களும் தலைமுறை இடைவெளி இல்லாமல் இந்தப் பெரியாரில் விருந்தினை நடத்தினர்.
இந்த விருந்து நடைபெற்ற வளாகத்திற்கு ‘‘சுயமரி யாதைச் சுடரொளி’’ கருப்புச் சட்டை கருப்பண்ணன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
யாரிந்த கருப்புச் சட்டைக் கருப்பண்ணன்? 1906 ஆம் ஆண்டில் நாமக்கல்லையடுத்த பெரிய பட்டியில் பிறந்தவர்.
1937 இல் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பெரியார் பேசுகிறார் என்று கேள்விப் பட்டு, அந்தக் கூட்டத்தைக் கேட்கச் சென்ற இந்தக் கருப்பண்ணன் கூட்டத்தைக் கேட்டு, திரும்பியபோது புதிய புத்தியைக் கொள்முதல் கொண்டவராகத் திரும் பினார். ஆம், அன்றுமுதல் பெரியார் தொண்டராகவே மாறிவிட்டார்.
தந்தை பெரியார் கருத்துக்களைத் திறந்த மனதுடன் எண்ணுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் கண்டிப் பாகப் பெரியாரின் சீடர்களாக, புதிய பாதையைத் தேர்ந் தெடுத்துக் கொண்ட புத்திமான்களாகத்தான் மாறுவார் கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
கனக சுப்புரத்தினமாக இருந்த ஒரு கவிஞர், காரைக் காலையடுத்த நிரவியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் - மயிலாடுதுறையில் பெரியார் பேசு கிறார் என்று கேள்விப்பட்டு, அக்கூட்டத்திற்குச் சென்ற சுப்பிரமணிய பாரதியின் சீடராக இருந்தவர் - மயிலம் சுப்பிரமணியர் துதி பாடிய அந்தக் கவிஞர் புரட்சிக் கவிஞராகப் பரிணாமம் பெறும் நிலைக்கு ஆளானார் - ஆம், தமிழர்களுக்கு ஒரு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கிடைத்தார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். நாமக்கல் பெரியார் மன்றத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடப்பதற்கு உழைத்த பொத்தனூர் க.சண்முகம், நடராசன், ஈரோடு சண்முகம் ஆகியோருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் (நாமக்கல், 4.10.2015).
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் தந்தை பெரியார் அவர்களின் முழக்கத்தைக் கேட்கின்றவரையிலும் மத ஓடையில் மனப்படகைச் செலுத்திக் கொண்டிருந்தவர்தான்!
அதன்பின், அவரின் எழுதுகோல் வாளில் மின்னித் தெறித்ததோ...
‘‘மத ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே!’’ என்பதுதான்!
ஆம்! அறிவுலக ஆசான் உரையைக் கேட்டாலோ அவர்தம் அறிவுக் கருவூல நூல்களின் தோப்பில் மேய்ந்தாலோ எப்படிப்பட்ட புராணக் குப்பை மேடாகக் கிடக்கும் புத்தியில் கூட புரட்சித் தீ புறப்பட்டே தீரும்!
பீடையாய்க் கிடந்த தமிழ் நானிலம் புரட்சிப் பூமியாகப் பரிணமித்ததற்குக் காரணமே இந்தப் பகுத்தறிவுப் பகலவனின் கதிர் வீச்சுதானே!
நாமக்கல் கருப்பண்ணன் போன்றவர்கள் 1937 களில் இந்த வகையில் இயக்கத்திற்குக் கிடைத்தார்கள்.
நாமக்கல்லில் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் - அவர் பெயரும் இராமசாமிதான் - தீவிர சுயமரியாதைக்காரர் - தந்தை பெரியாரின் சீடர்.
மேசையின்கீழ் ‘குடிஅரசு’ இதழ்களையும், பெரியார் நூல்களையும் வைத்திருப்பார். நோயாளி களுக்கும் இலவசமாகக் கொடுப்பார். அந்த அறிவு வலையில் வீழ்ந்தவர்தான் இந்தக் கருப்புச்சட்டை கருப்பண்ணன்.
எப்படியெப்படியெல்லாம் அந்தக் காலகட்டத்தில் அய்யாவின் கருத்தை ஊட்டியிருக்கிறார்கள் பார்த்தீர் களா?
நாமக்கல்லிலே பெரிய மிராசுதார் ஆர்.முனுசாமி நாயுடுவும், டாக்டர் இராமசாமியிடம் நோயாளியாக வந்தார் - அவ்வளவுதான், விடுவாரா? அவருள் ‘குடிஅரசு’ புகுந்தது.
குழவிக்கல் கோவில்களுக்குக் கொட்டியழும் பணக்காரர்கள் மிராசுதார்கள்தானே நம் நாட்டில். ஆனால், டாக்டரின் அறிவு மணம் முனுசாமி நாயுடு அவர்களையும் ஈர்த்தது. அதன் விளைவு நாமக்கல்லில் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத் திற்கு ஓரிடம் கிடைத்தது.
பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த இடம்தான் பெரியார் மன்றமாக - கருப்புச்சட்டை கருப்பண்ணன் வளாகமாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக் கிறது.
தந்தை பெரியார் நாமக்கல் வழியாக எப்பொழுது சென்றாலும், கழகத் தொண்டர் கருப்புச்சட்டை கருப் பண்ணன் அவர்களின் கடையின் வாசலில் வாகனத்தை நிறுத்தி, அவரை விசாரிக்காமல் சென்றதே இல்லை.
ஒருமுறை அவர் கடையைக் கடந்து சென்றுவிட்ட தந்தை பெரியார், வாகனத்தைத் திருப்பி, அவரைச் சந்தித்துவிட்டுச் சென்றார் என்றால், சாதாரணமா?
ஒரே கொள்கை, ஒரே இயக்கம், ஒரே தலைமை என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர்க்கு ஊரிலே தனி மரியாதை - இதுதானே கருஞ்சட்டைக்காரனின் விலை மதிக்க முடியாத பெரும் சொத்து!
உள்ளே நுழைந்தவுடன் சிலம்பொலி செல்லப்பனார் படிப்பகம் - திருமண மண்டபம் - கருத்தரங்கக் கூடம் என்று பல வகைகளில் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. காரணகர்த்தாவான டாக்டர் இராமசாமி, இடம் வழங்கிய அய்யா முனுசாமி நாயுடு - அவற்றையெல்லாம் கட்டிக் காக்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முதலியவர்களின் பெயர்கள் எல்லாம் அலுவலகங்கள், கூடங்கள் முதலியவற்றிற்குச் சூட்டப்பட்டு, இயக்கத்தின் நன்றி உணர்வு நிலைநாட்டப் பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பெரியார் மன்றம் சீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன் ஒளிர்கிறது.
பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் மானமிகு ப.சுப்பிரமணியம், பொறியாளர் ரகுமான் ஆகியோரின் உழைப்புப் பாராட்டுக்குரியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த வளாகம் மிகவும் கலகலப்பாகவே இருந்தது; இருபால் மாணவர்கள் பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் வந்து கொண்டே இருந்தனர்.
கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் அங்கும் இங்கு மாக ஓடிக்கொண்டே இருந்தனர்.
ஏதோ திருமணம் நடக்கும் மண்டபத்தில் திருமணத் திற்காக வருபவர்களைக் கவனிக்கவும், ஏற்பாடுகளைச் செய்யவும் திருமண வீட்டார் பறந்து பறந்து பணிகளில் ஈடுபடுவதுபோல, அவர்கள் செயல்பட்டார்கள்.
இவ்வளவும் எதற்கு? பெரியாரியல் பயிற்சிப் பட் டறை மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு  நடத்துவதற் குத்தான் இந்த தடபுடல்கள்.
பயிற்சிப் பட்டறை என்பது திராவிடர் கழகத்திற்கே உரித்தான தனி முத்திரைக் கழனி! தந்தை பெரியார் அவர்கள் காலத்திலே கோடை விடுமுறை நாள்களில் ஈரோட்டில் மாணவர்களுக்குப் பல நாள்கள் இத்தகைய பட்டறைகள் நடத்தப்பட்டதுண்டு. தந்தை பெரியார் அவர்களின் மேற்பார்வையிலேயே அது நடக்கும். அந்தப் பட்டறையில் தயாரிக்கப்பட்டவர்கள்தான் - நமது கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உள்பட!
அந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  குற்றாலத்தில் கடந்த 38 ஆண்டு களாகத் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது - அன்னை மணியம்மையார் அவர்களே பட்டறையில் தங்கி நேரடியாக அனைத்தையும் கவனித்தார்கள். ஒகனேக்கல், குமுளி, நாமக்கல் போன்ற இடங்களில் அதேபோல ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில் இத்தகுப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதற்கும் நமது கழகத் தலைவர் அவர்கள் உரிய வகையில் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இவ்வாண்டு நாமக்கல்லில் அதன் தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.
நாமக்கல் மக்களுக்கு ஒரு திருமண மண்டபமும், கருத்தரங்குகளை நடத்துவதற்காக கூடமும் கிடைத்தது - இயக்கத்திற்கு இலட்சிய இளைஞர்களைப் புடம்போட்டு புரட்சிப் போர் வாள்களாக வார்ப்பதற்கும் சிறப்பான ஓர் இடம் - வளாகம் கிடைத்துவிட்டது.
பயிற்சி பெற்றிட பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் (இருபால் மாணவர்) வந்துகொண்டே இருந்தனர்.
என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள் வதற்கும் பார்வையாளர்களும் வந்திருந்தனர். அவர் களுடன் மாணவர்களின் பெற்றோர்களும் அடங்குவர்.
அருமையான தலைப்புகளில், இளைஞர்கள், மாண வர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படைக் கருத்து கள் எடுத்துக் கூறப்பட்டன. பல்வேறு கலாச்சாரப் போதை களில் தங்கள் இளமையைத் தொலைத்துக் கொள்வதற்கான சூழல்கள் நாட்டில் எங்கும் பொங்கி வழிந்துகொண்டி ருக்கும் ஒரு காலகட்டத்தில் -
பகுத்தறிவு - தன்மானம் - இனமானம் - தனியொ ழுக்கம் - பொது ஒழுக்கம் - தொண்டறம் - பெண்ணுரிமை - சமத்துவம் - சமூகநீதி என்கிற வகைகளில் உள்ளங்களில் பயிர் வளர்க்கும் நாற்றாங்கால்கள்தான் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை.
அவர்தாம் பெரியார் - சமூகநீதி - திராவிடர் இயக்கச் சாதனைகள் - திராவிடர் கழகத்தின் அரும்பணிகள் - பெரியார் நேற்று - இன்று - நாளை - திராவிடர் தேசியம் - தமிழ்த் தேசியம் - திராவிடம் வளர்த்த தமிழ் - கழகம் கண்ட களங்கள் - புரட்சிக்கவிஞர், பண்பாட்டுப் படையெடுப்பு - பெண்ணுரிமை - திராவிடர் இயக்க மகளிர் - மூடநம்பிக்கை களும், அறிவியலும் - மூட நம்பிக்கைகள் - கடவுள் தோற்றம்,
வளர்ச்சி - ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் - கழகத்தின் அணுகுமுறை என்று பல்வேறு தலைப்புகளில், மாணவர், இளைஞர் உலகம் அறிந்தே தீரவேண்டிய இன் றியமையாத பொருள்களை உள்ளடக்கிய தலைப்புகளில் பக்குவமும், அனுபவமும் கொண்ட பெரியாரியலில் தேர்ந்த பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர்.
தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பட்டறையில் இரு நாள்கள் தங்கியி ருந்து வகுப்புகளை எடுத்ததோடு, பயிற்சி மாணவர்களின் கேள்விகளுக்கு அய்யப்பாடுகளுக்குத் தக்க விடையளித் தும், விளக்கம் அளித்தும் பட்டறைக்குப் பெருமைச் சேர்த்தார்கள் - பயிற்சியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதினார்கள்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (பட விளக்கத்துடன்), கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் இரா.கவுதமன், பேராசிரியர் ப.காளிமுத்து ஆகியோர் வகுப்புகளை நல்ல முறையில் எடுத்தனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், பயிற்சியாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டது.
முதல் நாள் இரவு பெரியார் திரைப்படம் காண்பிக்கப் பட்டது. மூன்று நாள்களும் பயிற்சியாளர்கள் முகாமிலேயே தங்கி இருந்தனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் தலைமையிலான குழு திறன்பட திட்டமிட்டு நேர்த்தி யாகவே செய்து கொடுத்தது.
அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், கடந்த 15 நாள்களாக நாமக்கல்லில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டார். மண்டலத் தலைவர் மானமிகு நடராசன் (இளைஞராகவே மாறிவிட்டார்), நாமக்கல் மாவட்டச் செயலாளர் மானமிகு ஆ.கு.குமார், நகர தலைவர் வழக் குரைஞர் மானமிகு பெரியசாமி, குமாரபாளையம் தலைவர் மானமிகு சரவணன்,
மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மானமிகு கா.நா. பாலு, குமாரபாளையம் மானமிகு காமராஜ், பள்ளிப் பாளையம் மானமிகு க.பொன்னுச்சாமி, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் மானமிகு சேகர், ஆத்தூர் மண்டல இளை ஞரணிச் செயலாளர் மானமிகு சுரேஷ், ஈரோடு மாவட்ட இளைஞரணித் தலைவர் மானமிகு தமிழ்ச்செல்வன், ஈரோடு மானமிகு த.இராசேசுவரி,
நாமக்கல் நகரச் செய லாளர் மானமிகு மாமாறன், மானமிகு பொறியாளர் செந் தூரபாண்டியன், மானமிகு பொறியாளர் த.பரிதின், மானமிகு நாகப்பட்டினம் பொன்முடி, சமையல் கலைஞர்கள் மானமிகு முருகன், பழனி, சந்திரா, சக்திவேல் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு (டீம்) பட்டறையைப் பொலிவுறச் செய்தது.
இந்தக் குழு பல நாள்களாக வேறு பணிகளில் கவனம் செலுத்தாமல் இதே பணியாகவே இருந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு இரா.குணசேகரன் அவர்களின் ஒருங்கிணைப்பு அபரிதமானது.
தோழர் மானமிகு இளவரசன் அவரோடு இணைந்து ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார். பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப் பினர் பழனி.புள்ளையண்ணன், சேலம் மாவட்ட கழகச் செயலாளர் கடவுள் இல்லை சிவகுமார் மூன்று நாள் பட்டறையிலும் பங்கேற்றனர்.
ஆத்தூர் ஏ.வி.தங்கவேலன் குடும்பத்தினர், சேலம் வைரம், ஆத்தூர் அண்ணாதுரை, ஆத்தூர் வானவில் குடும்பத்தினர் முதலியோர் வருகை தந்திருந்தனர்.
சென்னையிலிருந்து தோழர்கள் இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம் தாமோதரன், க.தமிழ்ச் செல்வன் ஆகியோர் வந்திருந்தனர்.
கருத்து விருந்தான விலை கூற முடியாத கருவூலம் ஒரு பக்கம் என்றாலும், மூன்று நாள்களிலும் மூன்று வேளை உணவு மட்டும் அல்ல - இடை இடையே தேனீர், சிற்றுண்டி என்று ‘‘திக்கு முக்காடச்’’ செய்துவிட்டனர். ‘திகட்டும்’ அளவுக்கு கல்யாண வீட்டு உபசாரமாக அது இருந்தது என்றே சொல்லவேண்டும்.
இதனை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்; பயிற்சி மாணவர்களும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வருகைப் பதிவேடு எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமலேயே மிகவும் ஒழுங்கு முறையுடன் நடந்துகொண்டனர்.
இந்தப் பயிற்சிப் பட்டறை கழகத் தலைவருக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. இனி ஆண்டுதோறும் நாமக்கல்லில் மூன்று நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.
பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இயக்க நூல்கள் 50 சதவிகித கழிவில் அளிக்கப்பட்டன. அந்த வகையில் ரூ.26 ஆயிரத்திற்கு நூல்கள் சென்ற டைந்தன.
பெரியார் வலைக்காட்சிக் குழுவினர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் தோழர்கள் உடுமலை வடிவேல், சிறீராம், அருள் ஆகியோர் மூன்று நாள் பட்டறை நிகழ்வுகளையும் பதிவு செய்து ஆவணப் படுத்தினர்.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் பட்டறை சிறப்பாக நடைபெற பாடுபட்ட, ஒத்துழைத்த அனைவ ருக்கும் கழகத் தலைவர் அவர்களால் பயனாடை அணி விக்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டது.
நாமக்கல் பயிற்சிப் பட்டறை கருத்து வளம் செறிந்த தாக - எடுத்துக்காட்டான பட்டறையாக அமைந்தது. அதற்குக் காரணமான அனைவருக்கும் பாராட்டுகள்! பாராட்டுகள்!!

-விடுதலை,5.10.15

.
நாமக்கல் நகரம் - பெரியார் மன்றத்தில் -  வெள்ளி, சனி, ஞாயிறு (2015,அக்.2, 3, 4) ஆகிய நாள்களில் தடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை


நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 காலை மாணவர்களுக்கு உடற் பயிற்சி கல்வியை மாரியப்பன் அவர்கள் கற்றுத் தந்தபோது...

நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன் மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் பங்கேற்க சென்றபோது...




நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன் மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் பங்கேற்க சென்ற போது அங்குள்ள சிலம்பொலி செல்லப்பனார் படிப்பக அறைக்குள்.
நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயிற்சி எடுத்தபோது....


நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன் மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் அங்குள்ள சிலம்பொலி செல்லப்பனார் படிப்பக அறைக்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தபோது...

நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின் இறுதி நாளான 4.10.15 ம் நாள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயிற்சி எடுத்தபோது....
நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்ற  பயிற்சியாளர்கள் தமிழர் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுடன் உள்ளனர் (4.10.2015)
4.10.15 மாலை நாமக்கல் மலைக்கோட்டை சென்று தென் சென்னை திராவிடர் கழக  தோழர்கள் சுற்றி பார்த்தனர்.



4.10.15 மாலை நாமக்கல் மலைக்கோட்டை முன்பாக தென் சென்னை திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன் மற்றும்க.தமிழ்ச்செல்வன் .


 நாமக்கல் மலைக்கோட்டை மலையேறிச் செல்லும் தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் .மற்றும் கோ.மஞ்சநாதன்.




























நாமக்கல் மலைக்கோட்டை மலையில் உள்ள கோட்டை முன்பாக தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் .

 நாமக்கல் மலைக்கோட்டை மலையில் உள்ள கோட்டை முன்பாக தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் (.பின் புறம் நாமக்கல் 
நகரம்)

நாமக்கல் மலைக்கோட்டை உ்ள்ளே, தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன்




 நாமக்கல் மலைக்கோட்டை உ்ள்ளே, தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் மற்றும் கோ.மஞ்சநாதன்.

 நாமக்கல் மலைக்கோட்டை மேலே உள்ள ஒரே மரமான ''வெப்பாலை'' மரத்தின்(மூலிகை மரம்) கீழே , தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன்




 நாமக்கல் மலைக்கோட்டை மேலே உள்ள நீர்நிலை அருகில் , தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன் மற்றும் கோ.மஞ்சநாதன்.


 
நாமக்கல் மலைக்கோட்டை மேலே உள்ள தூண் அருகில் , தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக