சனி, 28 நவம்பர், 2015

வருந்துகிறோம்

வருந்துகிறோம்
தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் 26.11.2015 நண்பகல் 1 மணியவில் மாரடைப்பால் காலமானார் (வயது 63). அசோக் லைலேண்டு தொழிற் சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தார். அவரது துணைவர் ந.பத்மாவதி அவர்களும் குடும்பத்தினரும் எந்தவிதச் சடங்கும் இன்றி இறுதி நிகழ்ச்சியை நடத்தினர்.
மாலை 5 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் இடுகாடு அடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் மாவட்டத்தலைவர் இரா.வில்வ நாதன், தொழிலாளரணி பொறுப்பாளர் பெ.செல்வராஜ், நுங்கம்பாக்கம் பகுதி செயலாளர் க.வெற்றிவீரன், தரமணி கோ.மஞ்சநாதன், தமிழ்இனியன், மதிவாணன், பகுதி திமுக பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மா.நடராசன் அவர்கள் வீட்டிற்குச் சென்று இரங்கல் கூறினார்.
-விடுதலை,28.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக