சனி, 14 நவம்பர், 2015

தோழர் திருமகள் மறைந்தாரே!


நமது வீர வணக்கம்!
பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையத்தின் இயக்கு நரும், பெரியார் பேரு ரையாளர் இறையன் அவர்களது வாழ்வி ணையரும்,  கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினரும்,
திராவிடர் கழக மகளி ரணியின் மூத்த பொறுப்பாளருமான மானமிகு திருமகள் இறையன் (வயது 77) அவர்கள் இன்று விடியற்காலை (14.11.2015) 2.30 மணிக்குக் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், சொல்லொணா சோகத்தையும் இயக்கத்தவர் அனைவருக்கும், குறிப்பாக நமக்கும் அளித் துள்ள ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
திருமகள் அம்மா அவர்கள் ஆசிரியையாகப் பணியாற்றி, ஆசிரியர் இறையன் அவர்களை ஜாதி மறுப்புத் திருமணம், பல ஆண்டுகளுக்கு முன்பே செய்துகொண்டு, உறவினர்கள், ஜாதிக் காரர்கள் விரோதத்தினைப் பொருட்படுத்தாமல், பெரியார் தொண்டர்களாகவே இருவரும் கொள்கை வாழ்வு வாழ்ந்தனர் - இறுதிவரை!
முழுநேர இயக்கப் பணியை, பணி ஓய்வு பெற்ற பிறகும் இறையனார் அவர்கள் தொடர்ந் ததைப் போலவே, திருமகள் அம்மா அவர்களும் பணி ஓய்வுக்குப் பிறகும் அலுப்பு சலிப்பின்றி பெரியார் திடலிலேயே தங்கி, குடும்பத்துடன் இயக்கப் பணி செய்த ஓர் வீராங்கனையாவார். இயக்கம் நடத்திய அத்துணைப் போராட்டங் களிலும் முன் நிற்க, அவர்கள் தயங்கியதே இல்லை, பிள்ளைகளோடு வருவார்கள்.
அவர் இல்லத்தில் நடைபெற்ற அத்துணைத் திருமணங்களும், ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளாகவே நடத்தப்படுதல் வேண்டும் என்பதில் அம்மையார் மிகவும் குறியாய் இருந்தவர்.
சிறிது காலமாகவே உடல்நலக் குறைவுடன் இருந்த அவருக்குத் தேவையான அத்துணை சிகிச்சைகளும் தரப்பட்டன; என்றாலும், ‘இயற் கையின் கோணல் புத்தி’ அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட கொடுமைக்கு ஆளாக்கிவிட்டது!
பெரியார் திடலில் எமக்கு உதவிய முது பெரும் தோழர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றதை எண்ணும்போது நமக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதற்கு எவரே உள்ளார்?
என்றாலும், பெரியாரின் பெரும்பணி தடை யின்றி தொடர, நாம் துயரத்தை மறந்து, தொண் டூழியத்தைத் தொடர்ந்து, இறையன் களின் இதய வேட்கையைப் பூர்த்தி செய்வதே நாம் அவருக்குக் காட்டும் உண்மையான, சரியான மரியாதை ஆகும்!
வீராங்கனை திருமகளுக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கம்!
அவரது குடும்பத்தவர் அனைவருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை    தலைவர்
14.11.2015    திராவிடர் கழகம்.


கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள் இறையன் அவர்களின் உடலுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மோகனா வீரமணி, வெற்றிச்செல்வி, கு.தங்கமணி, பேராசிரியை இசையமுது, டாக்டர் தேனருவி மற்றும் பலர் உள்ளனர் (சென்னை, 14.11.2015)
திருமகள் இறையன் அவர்களின் மறைவிற்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், கழக மகளிரணியினர், தோழர்கள் (சென்னை, 14.11.2015)

சென்னை, நவ.14_ பெரியார் பேருரையாளர் இறையனாரின் வாழ் விணையரும், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்கு நருமாகிய திருமகள் இறையன்  இன்று (14.11.2015) அதி காலை 2.30 மணி யளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது மறைவை யொட்டி, சென்னை பெரி யார் திடலில் பெரியார் நினைவிட முகப்பில் வீர வணக்க இரங்கல் கூட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று இரங்கல் உரையாற்றினார்கள்.
திராவிடர் கழகத் தணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திராவிடர் கழக வெளியுறவு செய லாளர் வீ.குமரேசன், தலை மைச் செயற்குழு உறுப்பி னர்கள் க.பார்வதி, சாமி. திராவிடமணி, மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் டெய்சி மணி யம்மை, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண் ணன், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் முனை வர் செகதீசன், புதுமை இலக்கியத் தென்றல் வழக் குரைஞர் ஆ.வீர மர்த்தினி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், பாவலர் மறைமலையான், சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர் செல்வம்,  உள்பட பலரும் இரங்கல் உரையாற்றி னார்கள்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  மாநில  மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார்,  ஊடகவி யலாளர் கோவி.லெனின், எழுத்தாளர் வே.மதிமாறன், திமுக மேனாள் மேயர் சா.கணேசன், மோகனா அம்மையார், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் தங்கமணி குண சீலன், சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் தமிழன் பிர சன்னா, மு.கலைவாணன்,  பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை வீரபத்திரன்,  பெரியார் புத்தக நிலைய மே லாளர் த.க.நடராசன், குஞ் சிதம் நடராசன், ச.சிங்காரம், வே.சிறீதர், திராவிடர் இயக்க எழுத் தாளர் மஞ்சை வசந்தன், வடசேரி மீரா செகதீசன், வழக்குரை ஞர் செ.துரை சாமி, அகில இந்திய பிற் படுத்தப்பட்ட வங்கிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் கோ. கருணாநிதி,   வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளி வண்ணன், வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் கோ.வி.கோபால்,  செய லாளர் ஆ.வெங்கடேசன், திருவொற்றியூர் கணேசன், சைதை மதியழகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொழிசை கண்ணன், புழல் ஏழுமலை, புழல் இராசேந் திரன், சா.தாமோதரன், பாலமுரளி, சைதை தென் றல், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, வழக்குரை ஞர் ம.வீ.அருள்மொழி,  திருப்பூர் ஆசிரியை பாலா மணி, ரத்தினாவதி, சந்திரா முனுசாமி, வளர்மதி, பவானி, செந்தமிழ் செல்வி, ஆவடி மோகனப்ரியா, கோ.நாத்திகன், மறை மலைநகர் துரை.முத்து, சிவக்குமார், கருணாகரன், பேராசிரியை இசையமுது, இராஜதுரை,  மருத்து வர்கள் மீனாம்பாள், தேன ருவி, யுனைடெட் இந்தியா காப்பீட்டுக்கழக இரா மலிங்கம், செங்கல்பட்டு நகர தலைவர் சுந்தரம், மஞ்சுளா, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணசிங், பெரி யார் நூலக ஆய்வக நூல கர் கோவிந்தன், செஞ்சி ந.கதிரவன், உடுமலை வடி வேல் உள்பட ஏராள மான வர்கள் பெரியார் திடலில் மறைந்த திருமகள் அமமை யாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெரியார் மணியம்மை மருத்துவ மனை, விடுதலை செய்திப் பிரிவு, அச்சகப்பிரிவு, பெரி யார் புத்தக நிலையம் உள் ளிட்ட பல்வேறு பிரிவு களில் பணியாற்றும் பெரி யார் திடல் பணி யாளர்கள் உள்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். திருமகள் இறையனார் குடும்பத்தினர் பண்பொளி கண்ணப்பன், இறைவி நயினார், மாட்சி ராம மூர்த்தி, இசையின்பன் பசும்பொன், செல்வி பெரி யார் மாணாக்கன் உள் ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலைத் தெரி வித்துக் கொண்டார்கள்.

தொலைபேசி வாயிலாக கழகப் பொருளாளர் மருத் துவர் பிறைநுதல்செல்வி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணை வேந்தர் நல்.இராமச்சந் திரன்,  மாநில மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, திராவிட தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன், பெண்ணியலாளர் ஓவியா, குவைத் உலகத் தலைவர் தந்தை பெரியார் நூலகம் சார்பில் செல்லப் பெருமாள், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், வட மாவட் டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேக ரன் ஆகியோர் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.
-விடுதலை,14.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக