வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

திராவிடர் திருநாள் பெருவிழா

திராவிடர் திருநாள் பெருவிழா பெரியார் திடலில் 16-18.1.15ல் நடைபெற்றது.


13.1.15,விடுதலை விளம்பரம்

திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் இனமானப் பிரகடனம்!
சென்னை, ஜன. 17. பொதுவாகவே தமிழனுக்கு தமிழர் என்ற நினைவு இருப்பதில்லை. தமிழர் என்றால் வெறும் மொழிப்பற்று உள்ளவர்கள். திராவிடன் என்று சொன்னால், மொழியுணர்வோடு சொரணையும் உள்ளவர்கள் என்று திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் பொதுச்செயலாளர்  இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.
இந்தாண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாட் கள் தந்தை பெரியார் முத் தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற நமது பண்பாட்டு திரு விழாவை காடும் காடு சார்ந்த முல்லை நில வாழ்க்கையை நினைவூட்டும் வண்ணம் அமைத்திருந்தது.
இதற்காக, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரங்களின் மேல் ஒரு குடிலும், அதைச் சென்றடைவதற்கான ஒரு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிலுக்கு செல்லும் வழியில் முல்லை நிலச் சூழலை முழுமை செய்வதற்காக காடை, வான்கோழி, கிண்ணிக் கோழி, நாட்டுக்கோழி ஆகிய பறவையினங் களும், முயல் போன்ற விலங்கினங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விழா மேடையும் காட்டை கண்முன்னே நிறுத்தும்படி அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் முல்லை நிலக்காட்சியை நிலைநிறுத்தும் வண்ணம் அரங்கங்களும் அமைக்கப் பட்டிருந்தன. காட்டுப் பறவைகள், விலங்குகள் ஆகிய பற்றிய கானுயிர் கண்காட்சி ஒன்றும், உணவுத் திருவிழாவும் திணை பாயசம், கேழ்வரகு அடை, வாழைப்பூ கோலா, கொத்தமல்லிக் காஃபி, சிவப்புக் காரப்புட்டு என்று இயற்கை உணவு சார்ந்தும்,  இயற்கை மருத்தும் என்று எல்லாமே முல்லை நிலம் சார்ந்தே அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக எண்ணெய்ப் பலகாரம், விருதுநகர் வீச்சுப்பரோட்டா, திரு நெல்வேலி அல்வா, கோவில்பட்டி காரசேவு, மணப்பாறை முறுக்கும் இடம் பெற்றிருந்தன.
முதல்நாள் நிகழ்ச்சி, அன்னை மணியம்மையார் சிலையின் முன் சரியாக மாலை 4:10 க்கு தருமபுரியைச் சேர்ந்த, அன்பு பகுத்தறிவு, கலை இலக்கிய இசைக்குழு மற்றும், கருப்பையா ஒருங்கிணைத்த கண்ணப்பர் ஒயிலாட்டக்குழு இரண்டும் இணைந்தும் தனித் தனியாகவும் வழங்கிய தொல்லிசைக் கருவிகளின் ஜனக்கு ஜக்கா... ஜனக்கு ஜக்கா... ஜன்ஜனக்கு ஜனக்கு ஜக்கா என்ற துள்ளல் இசையோடு தொடங்கியது.
சிறந்த தமிழர்களுக்குப் பெரியார் விருது
திராவிடர் திருநாளில் சூழலியலாளர் யோகநாதன், பெரியாரியல் எழுத்தாளர் வே. மதிமாறன் ஆகியோருக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் முன்னிலையில் பெரியார் விருதினை தமிழர் தலைவர் கி. வீரமணி வழங்கினார். உடன் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் உள்ளனர்.  (சென்னை பெரியார் திடல் - 16.1.2015)
தமது குருநாதர் படத்தைத் திறந்தார் ஆசிரியர்
திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் ஆசிரியரும், கொள்கை வழிக்காட்டியுமான ஆ.திராவிடமணி அவர்களின் உருவப் படத்தினை அவரின் நூற்றாண்டையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார்.  உடன்: திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன், யோகநாதன், மதிமாறன் ஆகியோர்  உள்ளனர்.  (சென்னை பெரியார் திடல் - 16.1.2015)
நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன்  தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, தொல்லிசையின் துள்ளலோடு மக்கள் ஊர்வலமாக பெரியார் திடலுக்கு வந்தனர். தந்தை பெரியாரின் சிலை முன்பாக நின்று வாசித்தனர். இந்த நிகழ்ச்சியை ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, கா. இளங்கோவன் ஆகியோர் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், நா.க. மங்களமுருகேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, கோபால், ராஜதுரை, இசையமுது, சத்தியநாராயண சிங், தமிழ்சாக்ரட்டீசு, கார்வேந்தன், பிரின்சு என்னாரெசுப் பெரியார், பார்வதி, திருமகள் இறையன், ஆ.வெ. நடராஜன், நயினார், இறைவி, மணிமேகலை, மணியம்மை, கண் ணப்பன், பண்பொளி, பசும்பொன்,  பெரியார் மாணாக் கன், வீரமணி, திவாரி  மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
5 மணிக்கு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்  கானுயிர் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பித்தார். இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கவிஞர் கலிபூங்குன்றன், வீ. அன்புராஜ், ஞானசேகரன்,  ஆகியோர் கலந்துகொண்டு கானுயிர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து பொது மக்களும் கானுயிர் கண்காட்சியைக் கண்டுகளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த கண்காட்சியின் மற்றொரு அங்கமான காட்டு விலங்குகள் கண்காட்சியை பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.
உரியடித்திடலில் இசைக்குழுவினரால் சிலம் பாட்டம் நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதில் 68 வயதான ஆ. நாராயணசாமி கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அனைவரையும் கவர்ந்த மரக்குடிலும் தொங்கு பாலமும்
மரங்களின் மீது கட்டப்பட்டிருந்த மரவீடும் அதன் மீது ஏறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து விட்டன. திரும்பத் திரும்ப ஏறி  பயத்துடன் கூடிய அந்த புதுமையான உற்சாகத்தை அனுபவித்தனர். சென்னையைச் சேர்ந்த 4 ஆவது வகுப்பு பயிலும் கோகுலிடம் இதைப்பற்றி கேட்டபோது, முகமெல் லாம் மலர, வித்தியாசமாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது, திரில்லாக இருந்தது.
ஆனாலும் ஜாலியாக இருந்தது என்றான். ஈரோட்டைச் சேர்ந்த எல்.கே.ஜி பயிலும் பாலசந்தர் முகமெல்லாம் பரவச உணர்வுடன் சூப்பரா இருந்துச்சி என்றான். இதைக்கண்டு உடன் வந்த பெற்றோர்களின் அகமும் முகமும் மலர்ந்து போனது.
இத்தோடு முயல், மாடு மற்றும் கன்றுக் குட்டி, பறவைகள், ஆகியவற்றை பார்க்கிறவர்கள் தந்தை பெரியாரின் பொன்மொழி களை படித்தும், அவரது நினைவிடத்தில் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும் தவறவில்லை.
உரியடித்தலில் உடைந்து சிதறிய ஜாதி
மற்ற இடங்களைப் போலல்லாமல் உரியடிக்கும் பானையில் ஜாதி என்று எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டி ருந்தது..  வெற்றி பெறவேண்டுமா னால் ஜாதியை உடைக்க வேண்டும். கண்களைக் கட்டிக்கொண்டு பலரும் முயன்றனர். அந்த ஜாதியை உடைக் கும் வாய்ப்பு பூவிருந்தவல்லியைச் சேர்ந்த எ.ஹெச்.எம். பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயிலும் பாலு என்கிற மாணவனுக்குத்தான் கிடைத்தது.
அவன் அந்த ஜாதியை சில்லு சில்லாக உடைத்து அனைவரின் பாராட் டையும் பெற்றான். குதூகலத்துடன் நடந்த இந்தப்போட்டியில் பெரியவர் களும் கலந்து கொண்டனர். பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் அவர் களும் கலந்து கொண்டு அனைவரின் குதூகலத்தை இன்னமும் பெருக் கினார். ஆட்டம் பாட்டம் கொண் டாட்டமென எங்கு காணினும் உற்சாகம் பொங்க மக்கள் மலர்ந்த முகங்களுடன் பெரியார் திடலினுள் ஊடாடிக்கொண்டிருந்தனர்.
ஆசிரியரும், பேராசிரியரும்
சரியாக 6 மணிக்கு அரங்க நிகழ்ச் சிகள் தொடங்கப்பட்டன. முதலில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒயிலாட் டம் ஆடி  கண்ணப்பர் ஒயிலாட்டக் குழு அனைவரையும் கவர்ந்தனர். அதைத்தொடர்ந்து அன்பு பகுத்தறிவு கலை இலக்கிய இசைக்குழு பகுத்தறிவு வணக்கப் பாடலுடன் தொல்லிசையை இசைத்து மக்களை மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக் கும் போதே திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவராகவும், தி.மு.க. வின் பொதுச்செயலாளருமான,  இன மானப் பேராசிரியர்  க. அன்பழகன் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் வருகை தந்து தொல்லிசையைத் துய்த்தனர்.
ஆசிரியரின் ஆசிரியர்
மாலை நிகழ்ச்சிகள் சரியாக 7 மணிக்குத் தொடங்கின. திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் செய லாளர் முனைவர் நா.க. மங்கள முரு கேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து ஆசிரியரின் ஆசிரியரும், நூற்றாண்டு காணும் சுயமரியாதைச் சுடரொளியுமான ஆ. திராவிடமணி அவர்களின் ஒளிப் படத்தை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அறிமுகவுரை யாற்றினார். அவர் தமது உரையில், திராவிடர் திருநாள் ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, திராவிடர் திருநாள் - தமிழர் திருநாள் இரண்டும் ஒன்றுதான். திராவிடர் திருநாள் என்ற பெயர்தான் பார்ப் பனப் பண்பாட்டுக்கு எதிரானது என்பதை அடையாளப்படுத்தக் கூடியது என்று கூறி விட்டு, சமஸ் கிருதம், அக்ராசனபதி, உபச்சாரம், ஜலம், தீர்த்தம், ஸ்னானம், சாதம் என்பன போன்ற ஏராளமான வட மொழியை நீக்கி தமிழை தமிழாக் கியது திராவிடர் இயக்கம்தான் என்பதை தமிழ்தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்துக்கொண் டார்.
திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல்
கவிஞரைத் தொடர்ந்து பேரா. சுப. வீரபாண்டியன், எது தமிழ்ப்புத் தாண்டு எனும் தலைப்பில் பேசினார். திராவிடர் திருநாள் என்பதை ஆரியத்துக்கான எதிர்ச்சொல்லாக புரிந்து கொள்ளாமல் விளம்பரத்துக் காக பேசுகின்ற தமிழ்த் தேசிய வாதிகளை கண்டிக்கும் விதமாக, ஆயிரம் முறை இவர்களுக்கு பதில் சொல்லியாயிற்று என்றே தொடங் கினார். திராவிடம் என்பது ஆரியத் தின் எதிர்ச்சொல் என்பதைப் புரிந்து கொள்ளாமல், நம்மை தமிழுக்கு எதிரிகள் போல் சித்தரிக்கிறார்கள்.
திராவிடர் திருநாள் இங்கே மட்டும் தான் நடக்கிறது. ஜாதியை உடைக் கின்ற பண்பாடு திராவிடரின் பண் பாடு. வெறும் பானையை உடைக் கின்ற பண்பாடு தமிழர் பண்பாடு. அவ்வளவுதான் இரண்டுக்குள்ள வேறுபாடு என்று ஆயிரத்தொன் றாவது முறையாக விளக்கினார். தொடர்ந்து அவர், பெரியார் விருது பெறவிருக்கும் வே. மதிமாறனைக் குறிப்பிட்டு, திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறைக்கு கிடைத்த அருமையான போர் வீரர் என்று வாழ்த்திப் பேசினார்.
மீண்டும் தலைப்பைத் தொட்ட அவர், நித் திரையில் இருப்பவர்களுக்குத்தான் சித்திரை புத்தாண்டு. தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று கூறிவிட்டு, சங்பரிவாரங்களும், ஜாதிய அமைப் புகளும் இணைந்துள்ள இந்த சூழலில் பிரிந்து கிடக்கின்றவர்கள்  இணைய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தும், மாதொருபாகன் நூலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அறிக்கை விட்டுள்ள தி.மு.க. வின் பொருளாளர் மு.க. ஸ்டாலினை பாராட்டியும் தனது உரையை நிறைவு செய்தார்.
சூழலியலாளருக்கு பெரியார் விருது!
தன் சொந்த பணியோடு சேர்த்து சூழலியலைக் காக்க ஒரு லட்சம் மரங்களை நட்டு பல்வேறு விருது களையும் பெற்ற கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ம. யோகநாதனுக்கு தமிழர் தலைவர் பெரியார் விருதளித்து சிறப்பித்தார். முன்னதாக அவரைப் பற்றிய சிறப்புகள் ஒளி ஒலிக்காட் சியாகத் திரையிடப்பட்டன.
அவருக்கு பெரியார் உலகத்தை நினைவூட்டக் கூடிய பெரியார் சிலையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து யோகநாதன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில் என்.ஜி.ஓ. சங்கங்கள் காசுக்காக செய்து கொண் டிருக்கிற பணியை, தான் நடத்துநராக பணியாற்றிக்கொண்டே தன் சொந்த பணத்தைக்கொண்டு செய்து வரு வதாகவும், இப்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளதாக வும், பள்ளி மாணவர்களுக்கு படக் காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற் படுத்தி வருவதாகவும் கூறி,
இதுவரை தான் பெற்றுள்ள விருதுகளைவிட இந்த பெரியார் விருதை பெரிதும் மதிப்பதாக பெருமிதத்துடன் குறிப் பிட்டார். தொடர்ந்து அவர், மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சூரிய ஒளியை ஈர்க்கின்ற தன்மையை இழந்து வருவதாகக் எச்சரித்து எல்லோரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவி யுங்கள் என்று கூறி தனது ஏற்புரையை முடித்துக்கொண்டார்.
எழுத்துப் போராளிக்கு பெரியார் விருது!
தொடர்ந்து எழுத்தளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தான் எழுத் தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்தான் என்று பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.
பிறகு, பெரியார் மாதிரி பேசினால் திட்டு வரும். கண்ட னங்கள் வரும். இப்பொழுதுதான் விருது வந்திருக்கிறது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையில் கூறிவிட்டு, பெரியாரை எதிர்க்கின்றவர்களை நன்றாக விமரிசனம் செய்.
உங்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதாகத்தான் இந்த விருதை  எனக்கு அளித்ததாக தான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதன்படியே தன் பணி இருக்கும் என்று கூறி, பேராசிரியரிடம் அடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது, தீபாவளிக்கு வழங்கும்  ஊக்கத் தொகையை பொங்கலுக்குத் தரவேண் டும் என்ற வேண்டுகோளோடு தனது உரையை முடித்துக்கொண்டார்.
தமிழ்தேசியவாதிகளுக்கு பாடம் எடுத்த தமிழர் தலைவர்
பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழர் தலைவர் உரையாற் றினார்.  அவர் தனது உரையில் தமிழ்தேசியவாதிகளுக்கு பாடம் எடுத்தார்.
திராவிடர்களுக்குத்தான் திருநாள் உண்டு. மற்றவர்களுக்கு பண் டிகைதான் என்று திராவிடர் திரு நாளுக்கும், தமிழர் திருநாளுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி னார். தொடர்ந்து 15-_01_-2015 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழை எடுத்துக்கொண்டு, அதில் பொங்கல் ஸ்பெசல் மலரை எடுத்துப் படித்து  என்றும் ஏமாந்த தமிழா, கூலிக்கு மாரடிக்கும் தமிழா என்றும் பொங்கலையே மகர சங்கராந்தி என்றும் சூரியன் அவனின் மனைவி யர்,
பிடித்த மொழி சமஸ்கிருதம், தெலுங்கு என்றும் சொல்லப்பட்டிருப் பதை சுட்டிக்காட்டி, தமிழ் தேசியம் என்ற பெயரில் இருப்பவர்கள் இதை கவனிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, திராவிடர் திருநாள் ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு இதைவிட தெளிவான விளக்கம் தேவையா என்று, திராவிடர் என்ற வார்த்தையை எதிர்ப்பவர்கள் இதுவரை பதில் சொல்லாத கேள் வியை மீண்டும் ஒரு முறை எழுப் பினார். தொடர்ந்து அவர் இந்த சல சலப்புக்கெல்லாம் நாங்கள் ஒரு போதும் அஞ்சியதில்லை. காரணம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெரியாரியத்தை அசைக்கமுடியாது என்று பலத்த கைதட்டல்களுக் கிடையே கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆசிரியர் அவர்கள், எந்த ஆண்டு உண்மையான தமிழ்ப்புத்தாண்டு மறுக்கப்பட்டதோ, அதிலிருந்து அடிக்கப்பட்ட பந்து எழுவது போல பெரியார் திடல் திராவிடர் திருநாளை நடத்துகிறது. தமிழன் என்றால் பார்ப்பானும் தமிழனாகி விடுகிறானே. அதுவே திராவிடன் என்று சொன்னால் அவன் உள்ளே நுழைய முடியுமா?
என்று பெரியார் அன்று எழுப்பிய கேள்வியை இன்றும் ஒருமுறை எழுப்பினார்.   60 ஆண்டுகள் பிறந்த ஆபாசத்தையும் கூறி, இதுவா தரணி ஆண்ட தமிழனுக்கு புத் தாண்டு என்ற சுயமரியாதைக் கேள்வியை எழுப்பினார்.
அந்தக் கேள்வியைத் தொடர்ந்து, திராவிடர் திருநாள் என்பது ஆரிய பண்பாட்டை முறியடிக்கும் போரில் ஒரு உத்தி. அவ்வளவுதான். இந்த நீண்ட நெடிய போரில் இறுதி வெற்றி தந்தை பெரியாரின் தத்துவத்திற்குதான் என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
இனமானப் பேராசிரியர் செறிவான உரை!
ஆசிரியரின் தலைமையுரையைத் தொடர்ந்து, பேராசிரியர் சிறப்புரை யாற்றினார். தொடக்கத்திலேயே அவர் அனைவருக்கும்  பொங்கல் வாழ்த்து களைச் சொல்லிக்கொண்டார். பிறகு, தனக்கு உடல் நிலை சரியில்லாததைச் சுட்டிக்காட்டிவிட்டு, இதுபோல கலைஞருடன் கலந்து கொண்ட கூட்டத்தில் பேச முடியாமல் தொடர்ந்து சில நிமிடங்கள் இருமியதையும்,
அதற்குப்பிறகு, இரும முடியாது என்று அமர்ந்து கொண்டதை நகைச்சுவையோடு  நினைவுகூர்ந்துவிட்டு, அப்படிப்பட்ட சூழல் இங்கும் நிலவக்கூடும் என்று தன் உடல் நிலை பற்றிக் கூறி, தான் தந்தை பெரியாரின் வயதை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பில் இருக்கிறேன் என்றும் பலத்த கைதட்டல்களுக் கிடையே கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பொதுவாகவே தமி ழனுக்கு தமிழர் என்ற நினைவு இருப்பதில்லை.
தமிழர் என்றால் வெறும் மொழிப்பற்று உள்ளவர்கள். திராவிடன் என்று சொன்னால், மொழியுணர்வோடு சொரணையும் இனவுணர்வும் உள்ளவர்கள் என்று சொன்னதும் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. கம்பர், சேக்கிழர், பாரதி ஆகியோரை நினைவு கூர்ந்து அவர் களின் மொழிப்பற்று எதற்குப்பயன் பட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார்.மானத்தை விட்டுவிட்டு இவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள்?
அண்ணல் அம்பேத்கர்
தொடர்ந்து பேசிய அவர், டாக்டர். அம்பேத்கர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாம் செத்துப் போயிருப்போம். காரணம் அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் மட்டும் இல்லை யென்றால் என்று எண்ணிப்பாருங்கள் என்று அரங்கத்தினரைச் சிந்திக்க வைத்தார்.
தமிழ்நாட்டில் பெரியார் எப்படி வியப்போ, அதுபோல வடக்கில் அம்பேத்கர் வியப்பு என்று கூறிவிட்டு மானத்தை விட்டுவிட்டு மொழியை, ஜாதியை, மதத்தைப்பற்றி மட்டும் பேசுகிறார்கள் என்று தமிழ் தேசியவாதிகளைப்பற்றி குறிப்பிட்டு விட்டு, மானத்தை விட்டுவிட்டு இவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று கேட்டுவிட்டு, 60 வருஷம் என்பது சாஸ்திரத்தில் உறுதி செய்யப்பட்டன. அது நமது ஆண்டல்ல. நம்முடையது இயற்கை யோடு இயைந்த விழா.
ஆகவே, திராவிடர் திருநாள் நமக்கு எழுச்சி யூட்டுகிறது. நம்பிக்கையூட்டுகிறது என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று முடித்துக்கொண் டார். (முழு உரை பின்னர்)
நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், ச.க. கணேசன், ஞானசேகரன், மு.பி.பாலசுப்பிரமணி யன், பொறியாளர் சுந்தரராஜூலு, பாவலர் மா. செங்குட்டுவன், பொறி யாளர் தமிழ்ச்செல்வன், புலவர். வீரமணி, கா.திருநாவுக்கரசு, மேனாள் நீதிபதி ஏ.கே. ராஜன்,  டாக்டர் ஏ. இராசசேகரன், திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியை தமிழ்சாக்ரட்டீஸ் மிக அருமையாக தொகுத்து வழங்கினார்.
வி. பன்னீர்செல்வம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பெரியார் திடலே மக்கள் வருகையால் நிறைந்த நிறைவான விழாவாக முதல் நாள் நிகழ்ச்சி மலர்ந்து மணம் வீசி திராவிடர் திருவிழாவை திக் கெட்டும் காண வேண்டிய நிகழ்வாக ஆக்கியது.
-விடுதலை,17.1.15
விடுதலை17.1.15

மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள்!
திராவிடர் திருநாள் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் தமிழர்களுக்கு வகுத்தளித்த வரையறை!
திராவிடர் திருநாளில் 2015ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது திரைப்பட இயக்குநர் சுசீந்திரன், திரைப்பட இசையமைப்பாளர் டி. இமான், ஊடகவியலாளர் ப. ரகுமான் ஆகியோர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார். உடன்: இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், ஊடகவியலாளர் கோ.வி. லெனின் ஆகியோர் உள்ளனர். (18.1.2015, பெரியார் திடல்)
சென்னை, ஜன. 19: தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிறைவு நாள் நிகழ்ச்சியில், மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர் கள் என்று தமிழர் தலை வர் கி. வீரமணி அவர்கள் தமிழர்களுக்கான அடை யாளமாகக் குறிப்பிட் டார்.
திராவிடர் திருநாள் கொண்டாட்டங்கள் என்பது, பெரியார் நெடுஞ் சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கி, ஊர்வலமாக வந்து பெரியார் திடலுக்குள் உள்ள சொரணையையும், இன உணர்வையும் கொடுத்த தந்தை பெரியார் சிலை முன்பு நின்று ஆடிப்பாடி களித்துவிட்டு, பிறகு உரியடித்திடலுக்கு வந்து நிலைபெற்று விளையாடு வார்கள். ஒருநாளை மிஞ்சியது அடுத்த நாள் என்பதுபோல, மூன்றாம் நாள் (18.01.2015) நிகழ்ச் சிகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
தந்தை பொரியார் முத்தமிழ் மன்றம், பெரி யார் நூலக வாசகர் வட்டம், பெரியார் பகுத் தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறை மற்றும் திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் ஆகியவை இணைந்து நடத்தும் திராவிடர் திருநாளின் மூன்றாம் நாள்(18-.01.2015) நிகழ்ச் சிகள் சரியாக மாலை 4.45க்குத் தொடங்கியது. நிகழ்ச்சியை அகில இந் திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி, திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர். கலிபூங்குன்றன் ஆகியோர் இணைந்து பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.
எப்படி ஒரு பொத்தானை அழுத்தியதும் வெளிச்சம் வருகிறதோ அது போல, தொடங்கி வைத்ததும், எப்போது எப்போது என்று உள்ளுக்குள் உலவிக் கொண்டிருந்த உற்சாகம், உடனே பற்றிக் கொண்டது. நாம் மறந்து போன மயிலாட்டம், மாடாட்டம், கொக்காலிக் கட்டையாட்டம், கிழவன் கிழவியாட்டம், கரகாட் டம், பறையாட்டம் என்று பெரியார் நெடுஞ்சா லையே ஆட்டம் பாட் டம் கொண்டாட்டத்தால் களைகட்டி விட்டது. தொடக்க நிகழ்ச்சியில் தெற்குநத்தம் சித்தார்த் தன், வீ. பன்னீர்செல்வம், வில்வநாதன், தமிழன் பிரசன்னா, தாம்பரம் முத்தையா, திருவொற்றி யூர் கணேசன், தளபதி பாண்டியன், நயினார், பிரபாகரன், திலீபன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உற்சாக ஊர்வலம்!
சமர் கலைக்குழு வேலு வழங்கிய பறையிசையின் தாளகதியில், தயங்கியவர் கள்கூட மயங்கிப் போய் தானாகவே களத்தில் இறங்கி துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டனர். உற்சாக நதியே உருவெ டுத்தது போல ஆடிப் பாடியபடியே ஊர்வல மாக வந்தனர். தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண் டாக கொண்டாடுகின்ற சுயமரியாதையை நமக்கு ஊட்டிய தந்தை பெரி யாருக்கு நன்றி காட்டும் விதமாக, அவரது சிலை யின் முன்பாக நின்று சின்னஞ் சிறுவர்களிலி ருந்து பெரியவர்கள் வரை ஆடி மகிழ்ந்தனர். ஒவ் வொருவரின் முகங்களும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல ஒளிர்ந்தது.
எல் லோரும் சமத்துவமாக மொத்தமாக ஆடுகின்ற இடமாக தந்தை பெரியா ரின் சிலை இருந்ததென் றால், உரியடித்திடல் வயது வாரியாக, இணை யர்களுக்காகவும் என்று இட ஒதுக்கீடு செய்து, வியர்வை மழையில் நனைந்தபடியே ஆடினர். அப்பப்பா... எங்கேயிருந் தது இந்த உற்சாகம், எங்கேயிருந்தது இந்த ஆனந்தம் என்று நினைப் பதற்கும், கேள்வி கேட்டு பதிலைப்பெறுவதற்கும் நேரம் எங்கேயிருந்தது?
திராவிடர் திருநாளில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் படத்தினை பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் திறந்து வைத்தார். (18.1.2015, பெரியார் திடல்)
சரியாக 6 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் தொடங்கின. மக்கள் வேண்டுமளவுக்கு உற்சா கத்தை வெளிக்காட்டிய பிறகு, அறிவை மாந்துவ தற்கும் நாங்கள் சளைத் தவர்களல்ல என்பதைப் போல விறுவிறுப்பாக எம்.ஆர். ராதா மன்றத் தினுள் வந்து தங்களுக் கான இருக்கையில் அமர்ந்து கொண்டனர். வழக்கம் போல அரங்கமும் மேல் தளமும் நிறைந்தன. சமர் கலைக்குழுவின் பறை யாட்டத்தைத் தொடர்ந்து, செ. கனகா அவர்கள் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். மோகனப் பிரியா சிறப்பானதொரு அறிமுகவுரையை வழங் கினார். டெய்சி மணி யம்மை தலைமையேற்றுப் பேசினார். அவர் தனது உரையில், தமிழ் தேசிய வாதிகள் குழம்பிப் போயி ருப்பதாகக் குற்றம் சாட் டினார். நான் சாகின் றேனே என்று கவலைப் படவில்லை. உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகின் றேனே என்று வருந்திய தந்தை பெரியாரையா கொச்சைப்படுத்துவது என்று சாடினார். எத் தனை இடையூறு வந்த லும் அடிக்க அடிக்க எழும் பந்து போல திரா விடர் கழகம் துடிப்போடு எழுந்து நடைபோடும் என்று பதிலடி கொடுத் தார்.
எஸ்.எஸ்.ஆரின் வரலாறு - திராவிட இயக்கத்தின் வரலாறு!
இலட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ். ராஜேந்திரனின் உருவப் படத்தை திரைப்பட இயக்குநரும், சுயமரியா தைக் குடும்பத்தவருமான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் திறந்து வைத்து, அவரைப்பற்றிய அரிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மொத்தத்தில் எஸ். எஸ்.ஆரின் வரலாறு
திராவிட இயக்கத்தின் வரலாறு என்று பதிவு செய்தார். பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, நிலைகுலைந்து போய் அவர் மருத்துவமனையில் இருந்தபோது, தந்தை பெரியார் அவரைக் கடிந்து தன்னிலையடையச் செய்த வரலாற்று குறிப்புகளை அசைபோட்டார். இவரைப் போல பல திராவிட இயக்கக் கலைஞர்களின் பங்களிப் பையும் தவறாமல் குறிப்பிட்டார். அவரைப்போல லட்சியத்தில் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
திராவிடர் திருநாள் பகுத்தறிவுக் கொம்பாக மாறியிருக்கிறது!
இயக்குநர் முத்துராமன் அவர்களைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் கோவி. லெனின் திராவிடர் திருநாள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவரின் உரை, நடைமுறையில் அர்த்தமில்லாத கொண்டாட்டங்களில் சிக்கியுள்ள இன்றைய தலை முறையினரை, மீட்க இதுபோன்ற ஆக்கபூர்வமான கொண்டாட்டங்களை நாம் கொடுக்க வேண்டியுள் ளது என்று தொடங்கினார். சமத்துவம் இல்லாத வாழ்க்கை முறையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்க, கொம்பைத் தேடும் கொடி போல மனம் அலைபாயும் போது, இந்த திராவிடர் திருநாள் பகுத்த றிவுக் கொம்பாக மாறியிருக்கிறது என்ற பொருளில் பேசினார். திராவிடர் திருநாளில் திதி கிடையாது, நாள் கிடையாது, எந்தப்புராணப் பின்னணியும் கிடையாது. ஆகவே, இதுதான் தமிழ்ப்புத்தாண்டு. இதைத்தான் நாம் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம். மற்ற மற்ற மாநிலங்களில் இதுவே சங்கராந்தி ஆகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் பொங்கல் பொங்கலாக இருக்கிறது என்று நாட்டு நடப்புகளைக் கொண்டு இந்த திராவிடர் திருநாளின் சிறப்புகளை பட்டியலிட்டார். வரலாற்று சாட்டையைச் சொடுக்கி தமிழ்தேசியவாதிகளை சுளுக்கெடுக்கவும் தவறவில்லை அவர்.
தந்தை பெரியார் செய்த புரட்சியைப் போல வேறொன்று உண்டா?
வெள்ளை ஆடைக்குப் பதிலாக கறுப்பு ஆடை யணிந்து வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்திய பேராயர் எஸ்றா. சற்குணம் அவர்கள், இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கும் இறைவி அவர்களை சுட்டிக்காட்டி, கறுப்பு உடையும் அதில் சிவப்பு நிற பொத்தானும் வைத்த ஆடை அணிந்து வந்திருக்கி றேன் என்று சொன்னார். நானும் பெரியாரிஸ்ட்தான் என்று கலகலப்போடு உரையைத் தொடங்கினார். தொடந்து அவர், தனக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்று உரிமை கொண்டாடினார். மேலும் அவர்,  கால்டுவெல் எழுதிய திராவிட ஒப்பிலக்கண நூலை தனது பேச்சுக்கு ஆதாரம் காட்டி திராவிட இயக்கத்துக்கும் பாதிரியார்களுக்கும் இடையே உள்ள உறவை நியாயப்படுத்தினார். பிரெஞ் புரட்சி, மாவோ புரட்சி, ரஷ்ய புரட்சி என்று ஏதேதோ புரட்சிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கத்தியின்றி ரத்தமின்றி தன்னுடைய கருத்துகளை மாத்திரம் பிரச்சாரம் செய்து, இந்த சமூகத்தில் தந்தை பெரியார் செய்த புரட்சியைப் போல வேறொன்று உண்டா? என்று அரங்கத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியிலேயே பதிலும் தொக்கி நின்றதால், அரங்கத்தினரிடமிருந்து அவர் கேள்விக்கு பலத்த கைதட்டல்தான் பதிலாகக் கிடைத்தது.
பெரியார் திடலுக்கு வந்தால் ஆதாரத்தோடு பேசவேண்டும்
தொடர்ந்து அவர், இன்றைய பி.ஜே.பி. அரசின் அவலங்களைச் சுட்டிக்காட்ட சில கருத்துகளை எடுத்து வைத்தார். முதலில் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்பதைப் பற்றி சொல்லும் போது, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய தாத் தன் இந்து மதக்கொடுமையிலிருந்து விலகி கிறித்துவ மதத்திற்குச் சென்ற போது, இந்து மதம் என்ற ஒன்றே இல்லையே; நான் எந்த மதத்திற்குத் திரும்புவது? என்ற அர்த்தமுள்ள கேள்வியை எழுப் பினார். பெரியார் திடலுக்கு வந்தால் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்று மெல்லிய சிரிப்பலையை எழுப்பியவாறே, 1911 இல் ணிகி கெய்ட் என்பவர் எழுதிய நூலை ஆதாரமாகக் காட்டினார். பிறகு, மனுதர்ம புத்தகத்தை படித்துக்காட்டி, அது மனுதர்மமல்ல மனுஅதர்மம் என்று நிறுவினார். பிறகு, நிகழ்ச்சியின் சிறப்பு, பெரியார் விருதின் மதிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால், எனக்கும் ஒருநாள் இந்த கவுரவத்தைக் கொடுங்கள் என்று பலத்த சிரிப்பினூடே சொல்லி உரையை நிறைவு செய்தார்.
சுயமரியாதை குடும்ப விழாவில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். (18.1.2015, பெரியார் திடல்)
பெரியார் விருது வழங்கும் விழா
பேராயரின் உரையைத் தொடர்ந்து பெரியார் விருது வழங்கும் விழா தொடங்கியது. ஊடகவியலா ளர் ப. ரகுமான், இசையமைப்பாளர் டி. இமான், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர்களுக்கு தமிழர் தலைவர் முறைப்படி பெரியார் விருதை அரங் கத்தினரின் பலத்த கரவொலிக்கிடையில் வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாக விருது பெறும் பேராளர்கள் பற்றிய காணொலிக்காட்சி திரையில் காட்டப்பட்டது. ஏற்புரை வழங்க வந்த ப. ரகுமான், நன்றி சொல்ல வார்த் தைகளைத் தேடினார். இறுதியில் பெரியார் திடலில், பெரியார் தொண்டர்களின் மத்தியில் எனக்குப் பெரியார் விருது பெற்றதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன் என்று முடித்தார். பெரியார் ஒரு புத் துலக தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் சொன்னதை அப்படியே சொல்லி, அதுதான் பெரியாரைப்பற்றிய எனது பார்வை என்றார்.
சந்தை அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் 1930களில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் விரட்டி அடிக்கப்பட்ட மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதையும், கோட் சேவால் சுட்டுக்கொல்லப்பட்டு காந்தி இறந்த போது தமிழ்நாடு அமைதியாக இருந்தததையும் சுட்டிக் காட்டி, இன்றுள்ள நிலவரத்தையும் எடுத்துரைத்தார். மேலும் அவர், சந்தை அடிப்படைவாதம், மத அடிப் படைவாதம் இரண்டையும் எதிர்கொள்ள எப் போதையும்விட இப்போதுதான் பெரியார் தேவைப்படு கிறார் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
கருத்துச் சுதந்திரத்திற்கான தலைமையிடம் பெரியார் திடல்!  அவரைத் தொடந்து வந்த திரைப்பட இசையமைப் பாளர் டி. இமான் அவர்கள் பேசும் போது, எல்லா புகழும் இயேசு கிறித்துவுக்கே என்று தொங்கினார். அப்போது, பேராயர்கூட மேடையிலிருந்த தமிழர் தலைவரைத் திரும்பிப் பார்த்தார். அவரோ புன்னகைத்தார். தொடர்ந்து பேசிய இசையமைப் பாளர், தான் வழக்கமாக இப்படித்தான் பேசத்தொடங் குவேன். இங்கே இப்படி பேசலாமா கூடாதா என்று தயங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், இதுதான் எனது அடையாளம் அதனால் அதையே பேசிவிட்டேன் என்று தயக்கத்தோடு கூறினார். இதற்காக அவர் தயங்கியிருக்க வேண்டியதில்லை. இந்த இடமே கருத் துச் சுதந்திரத்திற்கான தலைமையிடம்தான். ஆகை யால், அவருடைய கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரித்த அரங்கம் அதை ஆமோதித்து கைதட்டி வரவேற்றது. இதைத்தான் தமிழர் தலைவரும் புன்னகை மூலம் அங்கீகரித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஏற்புரையாற்ற வந்த இயக்குநர் சுசீந்திரன், இந்த விருது கிடைத்தற்கு தன்னைவிட தனது தந்தை மிகுந்த மகிழ்ச்சியடைந்ததை மிகுந்த நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தான் பணத்திற்காகவும், தன்னுடைய சுயத்திற்காகவும் வேலை செய்கிறேன். அப்படியே தொடர்வேன் என்று கூறி அமர்ந்து கொண்டார்.
நாளுக்கு நாள் சிறப்பு கூடிக்கொண்டே போகிறது!
கருத்துரை, பெரியார் விருது, வாழ்த்துரை முடிந்து தமிழர் தலைவர் நிறைவுரையாற்ற வருகை தந்தார். நாளுக்கு நாள் சிறப்பு கூடிக்கொண்டே போகிறது என்ற ஒற்றை வாக்கியத்தில், இந்த மூன்று நாள் நிகழ்ச்சியின் மாட்சியை ரத்தினச் சுருக்கமாகக்கூறி தனது உரையைத் தொடங்கினார்.  எங்கள் இனத்தில் எல்லா திறமைகளும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இதுவரை அடக்கியடக்கி வைத்திருந்தார்கள். இன்று வெளிவந்திருக்கிறார்கள். மூன்று நாட்களாய் மூன்று மூன்று முத்துக்களாய் 9 பேருக்கு பெரியார் விருதளித்து மகிழ்ந்திருக்கிறோம். முதலில் பெரியார் திடலுக்கு துணிச்சலாக வந்ததற்கே இவர்களைப் பாராட்ட வேண்டும் என்றதும் பலத்த கைதட்டல் எழுந்தது. மேலும் அவர், திரைப்படத்துறையை நாங்கள் நாடுவதில்லை என்று சொல்லிவிட்டு, அது யாருக்கோ பயன்படுகிறது, எப்படியோ பயன்படுகிறது, எதற்கோ பயன்படுகிறது என்று அதற்கான காரணத் தையும் தொடர்ந்து சொன்னார். இதையெல்லாம் மாற் றக்கூடிய வகையிலே, இதோ நாங்கள் இருக்கிறோம். வாய்ப்பு இருந்தால் எங்களை சரியான முறையில் வெளிகட்டத் தயங்கமாட்டோம் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மூவரையும் சுட்டிக்காட்டி, அச்சமின்றி உங்கள் பயணத்தைத் தொட ருங்கள் பெரியார் தொண்டர்கள் உங்கள் பின்னால் இருக் கிறார்கள் என்று ஒரு பிரகடனம் போல சொன்னதும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.
துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!
மேலும் விருது பெற்ற மூவரின் தன்னம்பிக்கையை பெருக்கும் வகையில், துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பது பழமொழி. துணிந்தவனுக்கு தோல்வியில்லை என்பது புதுமொழி என்று பழமையை புதுப்பித்தார். மாட்டுப் பொங்கலைப்பற்றிச் சொல்லும்போது, ஏன் எருமை மாட்டை சொல்ல மறுக்கிறோம் என்று தர்க்க ரீதியிலான ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு மனுதர் மத்திலிருந்தே ஆதாரத்தை எடுத்துக்காட்டினார். கருப்பு-, -கருப்பர்கள், தஸ்யூக்கள், அடிமைகள் என்று ஆக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர் திரைப்படத் தணிக்கைத் துறை பி.ஜே.பி. அரசில் படும்பாட்டை கண்டித்துப்பேசினார். மீண்டும் இவர்கள் மனுதர்மத்தை சட்டமாக கொண்டு வரு வார்கள். அதை வெளிப்படையாகவும் பேசத் தொடங்கி விட்டனர். திலகர் ளிக்ஷீ றீணீஷ் வீ விணீஸீனீவீக்ஷீலீவீ என்று கூறியிருப்பதை புத்தகத்தின் பக்கம் எண், வால்யூம் எண் என்று ஆதாரத்தோடு எடுத்துரைத்தார். இதற் காகவே தான், மனுதர்ம ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று பலத்த கையொலி களுக்கிடையேகூறி, இந்துத்துவ வாதிகளின் அடாவடி களுக்கு அறிவு ஒன்றுதான் பதிலடி என்று சொல்லா மல் சொன்னார்.
மனுதர்மம் என்ன சொல்கிறது? அதேபோல, வைதீகமாக இருப்பினும், லௌகீகமாக இருப்பினும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ அப்படியே ஞானியாக இருந் தாலும், மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான வன் என்று மனுதர்மதின் 317 ஆவது சுலோகத்தில் உள்ளளதை எடுத்துக்காட்டி, தெய்வாதீனம் ஜெகத் சர்வம், மந்திராதீனம் துதெய்வதம், தன்மந்திரம் பிராமணாதீனம் என்ற சமற்கிருத சுலோகத்தை படித்துக்காட்டினார் மனு தர்மத்தில் பிராமணனின் உயர்வு எப்படி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை நிறுவினார். 319 ஆவது சுலோகத்தின்படி பிராமணன் கெட்ட காரியங்களில் பிரவேசித்தாலும் அவனே மேலான தெய்வமல்லவா என்பதையும் எடுத்துக் காட்டியதோடு, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற திராவிட இனத்தின் பண்பாட்டையும் நினைவுபடுத் திடத் தவறவில்லை அவர். மேலும் அவர் மக்களை எச்சரிக்கும் விதத்தில், மீண்டும் பழைய கதை திரும்பும். அதை எதிர்கொள்கின்ற வலிமை பெரியாரியத்திற்கு உண்டு. அதுபோலவே, நம் இனத்திற்கு பயன்படுகிற வகையில் இந்த மூன்று முத்துக்களின் திறமைகள் இன்னும் வளர வேண்டும் என்று வாழ்த்திவிட்டு, மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள் என்று ஒரு வரையறையுடன் தனது உரையை நிறைவு செய்து கொண்டார். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில், துணைத் தலைவரின் ஆலோசனைகளோடு பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், நாராய ணன், பிரின்சு என்னாரெசு பெரியார், இறைவி, ஓவியச் செல்வன், மாணிக்கம், தமிழ்க்குடிமகன், ஆனந்த், கலைமணி, சுரேஷ், வை.கலையரசன், இசையின்பன், மரகதமணி, பழனிகுமார், நா.பார்த்தீபன், சிறீராம், ரேவந்த், உடுமலை வடிவேல், மற்றும் பெரியார் திடலில் பணிபுரியும் தோழர்களும் பின்னணியில் இருந்திருக்கிறார்கள்.
மூன்று நாள் அரங்க நிகழ்ச்சிகளை பெரியார் வலைக்காட்சி இணையம் மூலமாக நேரலை செய்தது குறிப்பிடத்தக்கது.  நிகழ்ச்சியில் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் தவமணி, வழக்குரைஞர்கள் குமாரதேவன், சென்னியப்பன், திருமகள், க. பார்வதி, கு. தங்கமணி, உமா செல்வராஜ், இராணி ரகுபதி, க. வனிதா, பண் பொளி கண்ணப்பன், சு. அன்புச் செல்வன், கு. செல் வேந்திரன், வெ. கார்வேந்தன், சு. நாகராஜ், பாசு. ஓவியச் செல்வன், ஆ.இர. விசசாமி, நா. பார்த்திபன், மு. மாணிக் கம், மீஞ்சூர் ராஜ்குமார், ப. எழிலரசி வீரமர்த்தினி, தென்றல், தமிழ்சாக்ரடிஸ், வெ. ஞானசேகரன், வீ. பன்னீர் செல்வம், சத்ய நாராயணசிங், தமிழ்ச்செல்வன், கோபால், வே. மதிமாறன், பெரியார் மாணாக்கன், செல்வி, மணிமேகலை, விடுதலை புகைப்பட கலைஞர் பா.சிவகுமார், பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள், பொது மக்களும் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு கலந்து கொண்டு கண்டு, உண்டு உய்த்து மகிழ்ந்த தோடு, அரசாங்கம் சித்திரையையே புத்தாண்டாக வைத்துக்கொள் ளட்டும். மானமுள்ள தமிழர்கள் தை முதல்நாளையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி விட்டுப் போகி றோம். அதற்காக இன் னும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண் டியிருக்கிறதே என்ற ஏக்கத் தோடு மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் அசைபோட்டவாறே கலைந்தனர்.
முல்லை திணையை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இவ்விழாவில் காடுகளை நினைவூட்டும் வகையில் ஓசான் நிறுவனம் அமைத்திருந்த மேடை வடிவமைப்பு அமைந்திருந்தது.
விடுதலை19.1.15

விடுதலை19.1.15
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள் - பிஞ்சுகள் தஞ்சமடையும் குடிலாக மாறிய முல்லை வனச் சூழல் தொங்கு பாலமும், மர வீடும்!



-விடுதலை,20.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக