2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஆகஸ்ட் 16-31

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்தது.
உச்சநீதிமன்றம் அதன் எல்லை தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கொள்கை முடிவுகளைக்கூட, தூக்கி எறிவதுபோல் அத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும்; மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினையும் குலைப்பதாகும்.” என்று எமது அறிக்கையில் (15.8.2005) எதிர்ப்புத் தெரிவித்தோம்.

களை எடுக்கிறோம் என்று கூறி பயிர்களை அழித்தால் எவரேனும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? என்று அப்போது நம் கருத்தைத் தெரிவித்தோம்.

நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இத் தீய விளைவுகளை மாற்றியும், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைக்குச் செயல் வடிவம் தந்தும் உடனடியாக தக்கதோர் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதோடு, 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பில் அவை வைக்கப்படுதல் அவசியம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தினோம். தமிழ்நாடு சென்றவுடன் (06.09.2005) அன்று ‘‘உச்சநீதிமன்றம் சமூகநீதியும்’’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தினோம்.

திராவிடர் கழகத்தினர், 22.8.2005 அன்று காலை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரம், ஒன்றியங்களில் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் ஒன்றிய அரசு அலுவலகத்திற்குமுன் நடத்தினர்..

- கட்டுரையின் ஒரு பகுதி