வடசென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தே.பெ.ஜெயராமன் _ கண்ணம்மாள் ஆகியோரது செல்வனும் கொடுங்கையூர் நகர தி.க. தலைவருமான தே.செ.கோபால் அவர்களுக்கும், மறைந்த கன்னியப்பன் _ லட்சுமியம்மாள் ஆகியோரின் செல்வியுமான க.நிர்மலா அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 8.9.1996 அன்று பெரியார் திடலில் தலைமையேற்று நடத்திவைத்தேன். விழாவில் முக்கிய பிரமுகர்களும் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருச்சிக்கு கழகப் பொருளாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள புறப்பட்டேன்.
வாழ்விணையர் தே.செ.கோபால் – க.நிர்மலா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தி வைக்கும் ஆசிரியர்
-கட்டுரையின் ஒரு பகுதி
அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (270)
சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் 23.8.1996 அன்று கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 31சி சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றுள்ளது. 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. வேலியே பயிரை மேய்வது போல, சட்ட விரோதமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணம். அதனைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.
கழகத் தோழர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து “கொளுத்துவோம்! கொளுத்துவோம்! பார்ப்பன நீதிபதிகளின் பொம்மைகளைக் கொளுத்துவோம்!’’ காப்போம்! காப்போம்! வகுப்புரிமையைக் காப்போம்! ஆகிய முழக்கங்களுடன் தோழர்களை வாழ்த்தி பெரியார் திடலிலிருந்து புறப்பட்டோம். காவல் துறையினர் தடுத்ததால், ஈ.வெ.கி.சம்பத் சாலையில் அந்த நீதிபதிகளின் கொடும்பாவிகளுக்கு தீ வைக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த தோழர்களுடன் உரையாற்றுகையில், “இன்றைக்கு வைக்கப்பட்ட தீ சமூக அநீதிக்கு வைக்கப்பட்ட தீயாகும். இந்தத் தீ நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியட்டும். பெரியார் சுடர் உங்கள் கையில் உள்ளது. (சமூக நீதியினை பாதுகாக்கவே இது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்ல).
நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ளட்டும். 1948இல் நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, “நான் இறந்தாலும் ஏனைய திராவிடர் கழகத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள்’’ எனக் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். சிறை வாசம் நமக்குப் புதியதல்ல. அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினோம். அய்யா ஆணைப்படி 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை புகுந்தோம். 16 உயிர்களை பலி கொடுத்தோம். அதற்கு முன்னம் எத்தனை எத்தனைப் போராட்டங்கள். நன்றியுள்ள தமிழ்ப் பெருமக்களே, ஒத்துழைப்பு நல்குங்கள். நாங்கள் எங்களுக்காக _ எங்கள் பிள்ளை குட்டிகளின் வாழ்வுக்காக அல்ல சிறையேகுவது! உங்களுக்காக உங்களின் சந்ததிக்காக’’ எனக் கூறினேன். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டோம். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியோடு நடைபெற்றது. திருவாரூரில் அய்யாயிரம் பேர் பேரணியாகச் சென்று சமூகநீதிப் போராட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். சென்னையில் பட்டாளம் பன்னீர்செல்வம் _ கலைச்செல்வி ஆகியோரும் அவரது 3 வயது பெண் குழந்தை மணியம்மையும் கைது செய்யப்பட்டனர். குடும்பம் குடும்பமாக கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கைது செய்யப்பட்டது. போராட்டத்தின் ஆழத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருந்தது.
நீதிபதிகள் கொடும்பாவி எரிப்பில் கலந்து கொள்ளும் கழகத் தோழர்கள் மற்றும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்
கைது செய்யப்பட்டு கழகத் தோழர்களுடன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருக்கையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக ஒரு நர்சை அழைத்து வந்து இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பின்பு மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு தேவை எனவும், மருத்துவமனையில் சேர்க்கலாம் என்றும் கூறினார்கள். அப்பொழுது அதனை ஏற்க மறுத்து, “நான் சிறைக்குள் சென்று அங்கு செத்தாலும் சாவேனே தவிர, சிறைக்குப் போகாமல் மருத்துவமனையில் சேரமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டேன்.
சென்னை 14ஆவது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு 14 நாள்கள் (செப்டம்பர் 6 வரை) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இடம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது. பின்பு, காவல்துறை வேனிலே இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு வேலூர் சிறையில் விடியற்காலை அடைக்கப்பட்டோம். (இது கலைஞர் முதல்வராக இருந்த தி.மு.க ஆட்சியில் தான் நடைபெற்றது.)
கொடும்பாவி எரிப்பினைத் தொடர்ந்து கைதாகும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கழகத் தொண்டர்களையும், என்னையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வை.கோபால்சாமி, சிங்கப்பூர் வாழ் சுயமரியாதை இயக்கத்தவர்கள், திருநாவுக்கரசு, தமிழ் உணர்வாளர்கள், அமெரிக்கா வாழ் தமிழ் அமைப்புகள், உலகமெங்கும் வாழும் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வாயிலாக எடுத்துக் கூறியிருந்தனர். மாணவர்கள் சில பகுதிகளில் வகுப்புகளைப் புறக்கணித்து கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதினான்கு நாள்கள் வேலூர் சிறை வாசத்தினைத் தொடர்ந்து 6.9.1996 அன்று பகல் 1:00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள 14ஆவது பெருநகரக் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டோம். வழி நெடுக சமூகநீதிக்கு ஆதரவாகவும், சமூகநீதிக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டுக் கொண்டே கழகத் தோழர்கள் இருந்தனர். என்னுடன் சேர்ந்து 175 பேர் ஆஜர்படுத்தப்பட்டு அரசுத் தரப்பில் காவலை நீட்டிக்க வற்புறுத்தாத காரணத்தால், அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட்டோம். கழக வழக்கறிஞர் பாளையங்கோட்டை சண்முகம், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, த.வீரசேகரன், அ.அருள்மொழி மற்றும் இரத்தினகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். சென்¬னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இரு தினங்களுக்குப் பிறகு கழகத் தோழர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்
20.8.1996 அன்று ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து இலங்கை தூதர் அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் காலை முதலே அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பு வரத் தொடங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கொல்லாதே! கொல்லாதே! ஈழத் தமிழர்களைக் கொல்லாதே! என குரல் எழுப்பி முழக்கமிட்டனர். தமிழ் உணர்வாளர்கள் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாது அங்குக் கூடியிருந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “நாம் மிகுந்த வேதனையோடும், கனத்த நெஞ்சத்தோடும் சிங்கள அரசை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழச்சிகளினுடைய கற்பு சூறையாடப்படுகிறது. நம்முடைய தாய்த்திரு நாட்டிற்கு அகதிகளாக வந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதி அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக ஓடி வருகிறார்கள். இனப் படுகொலைக்கு எதிராக அய்.நா. சாசனத்திலேயே விதிமுறை இருக்கிறது. இதைக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. ஆகவே, கேட்கின்றோம்’’ என கூடியிருந்த கழகத்தினர் மத்தியில் உரையாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)
(கட்டுரையின் ஒரு பகுதி)
அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (271)
புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் காட்சி
10.8.1996 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு புதுக்கோட்டையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. நகரமெங்கும் கழகக் கொடித் தோரணம்கூரையில் பொலிவுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் கழகக் குடும்பத்தினர் குவிந்தனர்.
மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக புதுக்கோட்டை எல்லையில் 25 மோட்டார் சைக்கிள்களிலும், வேன்களிலும் ஏராளமான கழகத் தோழர்கள் வரவேற்று முழக்கமிட்டனர். மாநாட்டையொட்டி, அறிவியல் கண்காட்சி, புத்தக விற்பனை, கருத்தரங்கு, சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு என விழாக் கோலம் பூண்டது.
புதுக்கோட்டையைக் குலுக்கும் வகையில் சிறப்பான பேரணி நடைபெற்றது. இளைஞரணி அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் என சிறப்பான வகையில் மாவட்டப் பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் _ கீழ ராஜவீதி, அண்ணாசாலை வழியாக வந்து இரவு 8:00 மணிக்கு மாநாட்டுப் பந்தலை அடைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் என்னை அமர வைத்து கழகத் தோழர்கள் பெரும் ஆரவாரத்துடன் அழைத்துச் சென்றனர்.
மாநாட்டு மேடையில் பெண்களின் அடிமைச் சின்னமெனும் தாலியை நீலமலை மாவட்ட தி.க. செயலாளர் கருணாகரன் அவர்களது துணைவியார் ஜோதி அவர்களும், நீலமலை மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் இரா.தாமோதரன் அவர்களது துணைவியார் மகேஸ்வரி அவர்களும் மேடையிலேயே அகற்றினர்.
மாநாட்டில் நிறைவுரையாற்றுவதற்கு முன்பாக கழகத் தோழர்கள் பெரிய தராசினை மேடையின் மய்யப் பகுதியில் கொண்டு வந்து ஒரு தட்டில் என்னை அமர வைத்து எடைக்கு எடை வெள்ளி வழங்கும் நிகழ்வினை பெரும் மகிழ்ச்சியோடு நிகழ்த்தினர். புது வரலாறு படைத்த மாநாட்டில் உரையாற்றுகையில், “எனக்கு நீங்கள் எடைக்கு எடை வெள்ளி கொடுத்து என்னை பெருமைப்படுத்தினாலும், நான் அமர்ந்திருந்த பொழுது எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அய்யா, அம்மா படத்திற்கே அது காணிக்கை என்பதை நன்றியுணர்ச்சியோடு, அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன். இங்கு எனக்கு மிகுந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த இளைஞரணி மாநாட்டை நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் புட்பநாதன் மற்றும் செயலாளர், இளைஞரணி செயலாளர் என அனைத்து பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பான அளவுக்குப் பணியாற்றி சிறப்பித்திருப்பதைக் காண முடிகிறது. நம்மைப் பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும், நமது இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்க வந்த காலத்திலும் நாம் அவர்களை இலட்சியம் செய்து பதில் சொல்லிக் கொண்டிராமல் நமது இலட்சியத்திலேயே கவலை வைத்துக் கொண்டு, ‘நாம் அப்படித்தான் செய்வோம், இஷ்டமிருந்தால் பின்பற்றி வா, இல்லாவிட்டால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அதன் பேரிலோ நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை! என்று சொல்லிக் கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான் நல்லதோ, கெடுதியோ நமது இயக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் இதனை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது சீரிய முயற்சியால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாம் எப்பொழுதுமே கொள்கை ரீதியாக இருப்போம். கொள்கை ரீதியாக இருந்தால் யாரோடும் இருப்போம். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். இதை எப்பொழுது கையாண்டார்கள் என்பதே பல பேருக்குத் தெரியாது. இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியாரா என்று கேட்கலாம். நான் பெரியார் அல்ல; ஆனால், பெரியாருடைய காலடியில் இருந்த மண்ணுக்குரிய புத்திகூட இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கு அனுபவ சிந்தனை உடையது என்பதைச் சவால் விட்டு என்னால் கூற முடியும். ஆகவேதான், சொல்லுவது, சுட்டிக்காட்டுவது எங்களுடைய கடமை; எங்களுக்குரிய உரிமை. தமிழகத்தில் நாங்கள் எதற்கிருக்கின்றோம்? இந்த இனத்துக்குச் சோதனை வரும்பொழுது, சமூகநீதிக்குக் கேடு வரும்பொழுது, மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும்பொழுது தற்கொலைப் பட்டாளமாக மாறுவோம், மாறித்தான் தீருவோம்!
கூடியிருக்கும் இளைஞர்களே, நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இறுதிமூச்சு அடங்குகிறவரை செய்து கொண்டிருப்பேன். உங்களுடைய நம்பிக்கையைப் பாழாக்க மாட்டேன்’’ என பல்வேறு கருத்துகளை இளைஞர்கள் மனத்தில் படும்படி எடுத்துக் கூறினேன். நெல்லையில் இருந்து சென்னை திரும்பி விடுதலையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.
வளசரவாக்கத்தில் இயங்கிவரும் கோலிக்கிரஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குக் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்தப் பள்ளியில் நமது கழகத் தோழரின் குழந்தையும் படிக்கிறார். அக்குறுஞ்செய்தியில், ‘‘குழந்தைகளின் தாத்தா, பாட்டி இருவரும் இன்று (11.9.2024) பள்ளிக்கு வரவேண்டும்; அவர்களுக்கு அவர்களின் பேரக் குழந்தைகள் ‘பாத பூஜை’ செய்வார்கள்’’ என்ற செய்தி வந்தவுடன், நமது கழகத் தோழரும், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, விருகை செல்வம், சுப்பிரமணி ஆகியோர் கலந்து பேசி, உடனடியாக காவல்துறைக்கும் புகார் ஒன்றை இணைய வழியில் கொடுத்தனர்.
புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியவுடன், அந்தப் பள்ளி ஆசிரியர், தொலைப்பேசியில் நமது கழகத் தோழரைத் தொடர்பு கொண்டு, ‘‘நீங்கள் தயவுசெய்து போராட்டம் செய்ய வேண்டாம்; நாங்கள் குழந்தைகள் நடத்தும் ‘பாத பூஜை’யை நிறுத்தி விடுகிறோம்’’ என்று சொன்னார்.
ஒரு மணி நேரத்தில் அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரின் கைப்பேசிக்கு, ‘‘நாளை பாதபூஜையை நிறுத்தி விட்டோம்’’ என்ற குறுஞ்செய்தியை ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். எல்லா குழந்தைகளின் வீட்டுக்கு மட்டும் அல்ல, நமது கழகத் தோழருக்கும் அந்தக் குறுஞ்செய்தி வந்தது. தோழர்களே, நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து பள்ளியில் மூட நம்பிக்கையை பரப்பும் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு நமது தோழர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது!
சென்னை, ஆக.19- திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.08.2024 அன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை ஏற்று உரையாற்றினார். மேலும் இக்கூட் டத்தில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொண்டறம், பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் அறிவுச்சுடர் ஆகியோர் முன்னிலையேற்றனர். கூட்டத்தில் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கவனிக்கோ இளந்திரையன்,பாரதி, சஞ்சய், யாழ்ஒளி, வெங்கடேஷ், அபினா சுருதி, நிலவரசி மற்றும் சென்னகிருஷ்ணன் ஆகிய தோழர் கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் நாகை மு.இளமாறன் அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டத்தில், பட்டுக்கோட்டை அருகே சிளம்பவேளங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் (20) இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது பேரதிர்ச்சியை தருகிறது. இன்னும் எத்தனை மாணவர்களை இழக்கப் போகிறோம்? இதற்கு பிறகு நீட்டினால் ஒரு மாணவர் உயிரிழந்து விடக் கூடாது, சமூக நீதியும், கல்வி உரிமையும் பறிக்கப்படக்கூடாது, என்ற நோக்கில் நீட்டை ஒழிக்கப் போராடுவோம்.
உயிரிழந்த மாணவர் தனுஷ் அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும், செப்.17 உலகத் தலைவர், அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் – சமூக நீதி நாள் விழாவினைத் திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும், பள்ளி கல்லூரி வாயில்களில் திராவிடர் கழக இலட்சியக் கொடியினை ஏற்றி, தந்தை பெரியார் அவர்களின் படத்தினை வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவது என்றும், மாணவர்கள் மத்தியில் துண்டறிக்கைப் பிரச்சாரத்தைச் செய்வது எனவும், 2024 – 2025 ஆண்டில் திராவிட மாணவர் கழகத்தை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வலுப்படுத்துவது எனவும், கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை செயல்படுத்துவதெனவும், கல்வியை காவி மயமாக்கிட ஒன்றிய மதவாத பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இந்துத்துவ கருத்துக்களை திணிக்கும் ஒன்றிய மதவாத பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு (ம) இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A(h) விளக்கி திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் தொடர் பிரச்சாரக் கூட்டத்தை நடத்து வது எனவும்,சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வினை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையை மீறி பல்கலைக்கழக வேந்தர் என்ற பெயரில் பல்கலைக்கழக செயல் பாடுகளில் ஆளுநர் தலையிடுவதும், இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. கருத்துகளை மாணவர்கள் மத்தியில் திணிக்கச் செய்வதும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை சரியாக வழிநடத்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் கடத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தப் போக்கு ஏற்கத்தக் கதல்ல. கொல்லைப்புற வழியில் ஆளுநர் மாளிகை மூலம் உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யத் துடிக்கும் ஆளுநரின் போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தேவை எனில் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் வழிகாட்டுதலுடன் போராட்டத்தில் ஈடுபடவும் திராவிட மாணவர் கழகம் தயார் என உறுதியேற்கிறது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சென்னை: பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
சென்னை, செப்.10 ‘பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.
கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். முன்னதாக அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் ஆசிரியருக்கு அணியணியாய மேடையேறி ஆடையணிவித்து மரியாதை செய்தனர். அவர் தனது உரையில், குறுகிய அவகாசத்தில் கூட்டம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்காக தலைமை ஏற்றிருந்த கரு.அண்ணாமலை, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என்று வாழ்த்தினார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டையும் முறையே சுகாதரத்துறை, மருத்துவத் துறை ஆகியவற்றுடன் சுவையான பொருள் படும்படியாக உவமித்தார். அதாவது மூடநம்பிக்கை நோய் வருவதற்கு முன் எச்சரிப்பது திராவிடர் கழகத்தின் பணி.
அந்தப்பணி பிரச்சாரத்தின் வாயிலாக நடைபெறும். அதையும் மீறி மூடநம்பிக்கை நோய் வந்துவிட்டால் மருத்துவத்துறையாக இருக்கின்ற தி.மு.க. அரசு அதற்கு மருத்துவம் செய்யும் என்று அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சாளர் பேசியதையும், அதன் எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார். உடனடியாக நடவடிக்கை எடுத்தற்காக தமிழ்நாடு அரசை ஆயிரம் முறை பாராட்டலாம் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார். அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகம் கடந்த மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் 100 மூடநம்பிக்கை ஒழிப்புக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளதையும், தான் நெல்லை வீரவநல்லூரில் கலந்துகொண்டு பேசியதையும் சுட்டிக்காட்டிவிட்டு, 1996 இல் பிள்ளையார் பால் குடித்த புரளி பரவியதற்காக அண்ணா சாலையில் தன்னுடைய கழுத்தில் தமுக்கு கட்டிக்கொண்டு தமுக்கடித்து, பிள்ளையார் பொம்மையை பால் குடிக்க வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்ததையும், இதுவரை எவரும் முன்வரவில்லை என்பதையும் கூறி, திராவிடர் கழகம் மூடநம்பிக்கை ஒழிப்புப் போரில் எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து 51 ஏ(எச்) சட்டப்பிரிவை இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகத்தை படித்துக்காட்டி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்பதை எடுத்துரைத்தார். இதன் மூலம் அந்த மூடநம்பிக்கைப் பேச்சாளர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பேசியுள்ளதை புரிய வைத்தார். மேலும் அவர், ஆத்மா – ஆன்மிகம் – முன் ஜென்மம், மறு ஜென்மம் ஆகியவற்றின் பித்தலாட்டங்களை தந்தை பெரியார் கருத்துகளைச் சொல்லி, மக்கள் இதுபோன்ற கருத்துகளை மற்றவர்களுக்கும் பரப்பி தங்களது கடமைகளைச் செய்யவேண்டும் என்று கேட்டு நிறைவு செய்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வருகை நிகழ்ச்சியின் இடையே, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வருகை தந்தார். ஆசிரியர் தனது உரையை நிறுத்திவிட்டு அவரை எழுந்து நின்று வரவேற்று பிறகு தொடர்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த கரு. அண்ணாமலை தங்கள் குடும்பத்துடன் ஆசிரியருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் கரிகால்வளவன் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தொடக்கத்தில் 'கோபி' கலைக்குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மு.சண்முகப்ரியன், வழக்குரைஞர் சோ.சுரேஷ், பொறியாளர் த.கு.திவாகரன், மாவட்டக் கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், காஞ்சிபுரம் முரளி, சேத்துப்பட்டு நாகராஜ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தளபதிராஜ், பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், திமுக பகுதி செயலாளர் கே.கண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் உதுரைராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் வாசுகி பாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.தங்கராசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச்செயலாளர் கரிகால்வளவன், சின்மயா நகர் லோகு, திமுக வட்டச் செயலாளர் செழியன், பூக்கடை பழனிச்சாமி, கதிரேசன், நிசா, கனிமொழி, சென்னை அரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தோழர்கள் க.சுப்பிரமணி, செயசீலன், வீ.பொற்கோவன், குமணன், ஓவியர் மதிவாணன், பெரியார்மணிமொழியன், கண்ணன், மூவேந்தன், மாசிலாவிநாயகமூர்த்தி, மணி பாரதி, வழக்குரைஞர்கள் சுரேசு, அன்பரசன், கார்த்திக் திருநாவுக்கரசு மற்றும் டைல்ஸ் குமார், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் உ.துரைராஜ், தி.மு.க. பகுதிச் செயலாளர் கே.கண்ணன், தி.மு.க. வட்டச் செயலாளர் செழியன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கார்த்திகேயன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி .பவானி, வி.அஜந்தா (மகளிர் அணி செயலாளர்), மா. சண்முகலட்சுமி, இரா.ரவி, ஈ.குமார், சூளைமேடு நல். இராமச்சந்திரன், சைதை தென்றல், சரவண ராஜேந்திரன், தரமணி ம. ராஜி விசிறிசாமியார்,அறிவுமானன்,மு.சேகர், விடுதலை நகர் ஜெயராமன், பழவந்தாங்கல் தமிழினியன், க. வெற்றி வீரன், கூடுவாஞ்சேரி ம.ராசு, சென்ன கிருஷ்ணன், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் இலட்சுமிபதி, சன் சரவணன், சி.சிவாஜி, தாம்பரம் குணசேகரன், படப்பை சந்திரசேகரன், பா.கோபாலகிருஷ்ணன், மு. திருமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், ஆவடி தமிழ்மணி, அன்பரசன், தனசேகர், கமல், ஹரி, சந்தோஷ், ஷோபனா, வித்யா, லோகேஷ், செ.பெ. தொண்டறம் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்), மு.செல்வி, மு.பாலமுரளி, இளவரசன், மணிமாறன், முகப்பேர் முரளி, சுந்தர்ராஜன், இரணியன், சாலமன், சஞ்சய், நெற்குன்றம் நாகராஜ்.வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், கொடுங்கையூர் பகுதிபொறுப்பாளர் கோ.தங்கமணி,தங்க.தனலட்சுமி, ௧. வெற்றிச்செல்வி, துரை இராவணன், அயன்புரம் துரைராஜ், வேலவன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிறைவாக விருகை செல்வம் நன்றி கூறினார்.
அரும்பாக்கம், செப். 6- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் 03.09.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) விளக்கப் பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையிலும், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது. துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை விளக்க உரையாற்றினார்.
இறுதியாக திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, ஒன்றிய அரசு அரசு பணிகளில் ஏற்படுத்தும் குளறுபடிகளை விளக்கிக் கூறியும், ‘புதிய கல்வி திட்டம்’ என்ற பெயராலே தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காமல் துரோகம் விளைவிக்க நினைக்கும் நிலையை எடுத்துக் கூறியும், ‘புதிய கல்விக் கொள்கையால் கல்வி வளர்ச்சியை 50 விழுக்காடாக உயர்த்துவோம்’ என்று ஒன்றிய பிஜேபி அரசு கூறுகிறது, ஆனால் திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாடு அரசு, எப்பொழுதோ அய்ம்பது விழுக்காட்டை எட்டி விட்டது. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியும் மக்களிடம் பரவிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை விளக்கியும், கொட்டும் மழையிலும் சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார். முன்னதாக ‘அறிவுமானன்’ கொள்கை முழக்க பாடல்களை பாடினார். கூட்டத்தின் முடிவில் அரும்பாக்கம் த.இராஜா நன்றி கூறினார்.
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் சு.அன்புச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், வை.கலையரசன், க.கலைமணி, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் பகுதி பொறுப்பாளர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், வடசென்னை க.செல்லப்பன், க.துரை, மு.வேலவன், மு.செல்வி(ஆவடி மாவட்டம், மகளிர் அணி), க.ச.பெரியார் மாணாக்கன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம், அயன்புரம் சு.துரைராசு, ச.இராசசேகரன், செல்வம், அ.ராஜசேகரன், சஞ்சய் மற்றும் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
சென்னை, செப்.4- தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளை ஞரணி, மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் சிங்காரவேலர் மாளிகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று (3.9.2024) மாலை 4 மணிக்கு திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. பொறி யியல் கல்லூரி திராவிட மாணவர் கழகம் மாநில அமைப்பாளர் வி.தங்கமணி வரவேற்றார். பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பிரச்சாரச் செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரைற்றினார்.
நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது நீட்டை எதிர்த்தார். ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார். இப்போது பிரதமரானதும் ஆர்.எஸ்.எஸ்சின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முனைகிறார். தேசிய கல்வித்திட்டத்தில் அரசுப்பள்ளிகளை குருகுலப் பள்ளிகளுடன் இணைக்க வேண்டுமாம். ஒன்றிய அரசு திணிப்பது புதிய கல்வித் திட்டம் அல்ல அது. ஆர்.எஸ்.எஸ்.சின் வருணாசிரமத்தைப் புகுத்தும் திட்டம்.
1952–களிலேயே ராஜாஜி கொண்டு வந்தபோது தொழிற்கல்வி என்றுதான் சொன்னார். தந்தை பெரியார் தான் அத்திட்டத்தை குலக்கல்வித்திட்டம் என அடையாளம் காட்டி கடுமையாக எதிர்த்தார். அவர்களிடம் இல்லாத ஊடக பலமா? அதிகார பலமா? தந்தைபெரியார் அத்திட்டத்தை முறிய டித்ததைப்போலவே, இப்போதும் தேசிய கல்வி என்கிற பெயரால் குலக்கல்வியைத் திணிக்கின்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து முறி யடிப்போம். இங்கே ஹிந்தி மொழியைத் திணிக்கிறார்களே, உத்தரப்பிரதேசத்தில், குஜராத்தில் தமிழ் மொழியை கற்பிக்கிறார்களா? ஆக, இது ஓர் ஏமாற்று வேலை. இங்கே தமிழ்நாட்டிலே சட்டப்பூர்வமாக இருப்பது இரண்டு மொழிதான். மாநில அரசு சட்டம் நிறைவேற்றியாயிற்று. ஒரு மாநில அரசு சட்டத்தில் கைவைக்க உரிமை எங்கே இருக்கிறது? இது என்ன சர்வாதிகாரமா?
ஒன்றிய பாஜக அரசின் கல்வித்திட்டத்தைத் தயாரித்தவர்களில் ஒரேயொரு ஆள்கூட கல்வியாளர் இல்லை. ஒன்றிய அரசின் செயலாளர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இவர்கள்தான் கல்வித்திட்டத்தை தயாரிக்கிறார்களாம். இது வருணாசிரமத்தின் தொடர்ச்சி! இதனை அலட்சியமாகக் கருதிவிட முடியாது. இதைத் தமிழ்நாடுதான் முதலில் எதிர்க்கிறது. எதற்கெடுத் தாலும் தமிழ்நாடு எதிர்க்கிறதே என்கி றார்கள். எதிர்க்க வேண்டிய தைத்தான் எதிர்க்கிறோம். ஏனென்றால், இது தந்தை பெரியார் மண். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நம்முடைய குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்று கழகத் துணைத் தலைவர் கண்டன உரையில் குறிப்பிட்டார். வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் நன்றி கூறினார். துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
கலந்துகொண்டோர் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், சாமி சமதர்மம், ச.ஆனந்தி, மோகன், எம்ஆர்எப் சேகர், ந.ராஜேந்திரன், சதீஷ், செல்வம், ராமாபுரம் ஜனார்த்தனன், தாம்பரம் இறைவி, மேடவாக்கம் அரங்க.ராஜா, செஞ்சி கதிரவன், வெண்ணிலா கதிரவன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், சரவணன், செல்வம், கொளத்தூர் ராஜேந்திரன், செம்பியம் கோபாலகிருஷ்ணன், காப்பாளர் கி.இராமலிங்கம், சி.வெற்றிச்செல்வி, பெரம்பலூர் வெங்கடேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், ச.சஞ்சய், சிறீதர், கரு.அண்ணாமலை, சின்மயாநகர் செல்வம். வி.தங்கமணி, ந.மணிதுரை, துரை.அருண், மு.பவானி, மு.இரா.மாணிக்கம், ஆவடி மாவட்டம் உடுமலை வடிவேல், பசும்பொன், பெரியார் மாணாக்கன், செ.பெ.தொண்டறம். வடசென்னை மாவட்டம்: துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கோ.தங்கமணி, தங்க.தனலெட்சுமி, ஆ.வெங்கடேசன், ஓட்டேரி பாஸ்கர், யுவராஜ், கலைமணி, பா.மணியம்மை, மகேஸ்வரன், மத்தூர் நிலவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்தது. உச்சநீதிமன்றம் அதன் எல்லை தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கொள்கை முடிவுகளைக்கூட, தூக்கி எறிவதுபோல் அத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும்; மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினையும் குலைப்பதாகும்.” என்று எமது அறிக்கையில் (15.8.2005) எதிர்ப்புத் தெரிவித்தோம்.
களை எடுக்கிறோம் என்று கூறி பயிர்களை அழித்தால் எவரேனும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? என்று அப்போது நம் கருத்தைத் தெரிவித்தோம்.
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இத் தீய விளைவுகளை மாற்றியும், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைக்குச் செயல் வடிவம் தந்தும் உடனடியாக தக்கதோர் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதோடு, 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பில் அவை வைக்கப்படுதல் அவசியம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தினோம். தமிழ்நாடு சென்றவுடன் (06.09.2005) அன்று ‘‘உச்சநீதிமன்றம் சமூகநீதியும்’’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தினோம்.
திராவிடர் கழகத்தினர், 22.8.2005 அன்று காலை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரம், ஒன்றியங்களில் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் ஒன்றிய அரசு அலுவலகத்திற்குமுன் நடத்தினர்..
மயிலை, செப். 1- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் 27.8.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) விளக்கப் பொதுக்கூட்டம்” தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமையிலும், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, இளைஞர் அணி துணைச் செயலாளர் மந்தைவெளி இரா. மாரிமுத்து, மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி. தங்கமணி மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்க உரையாற்றியதற்குப் பின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன் மற்றும் மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா. மணியம்மை ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
இறுதியாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மக்களிடம் மூடநம்பிக்கை மண்டிக் கிடப்பதையும், அதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, சட்டவிரோதமாக மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டித்தும், மதச்சார்பின்மைக்கு எதிராக அரசே! மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விளக்கியும், கண்டித்தும், தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியை விளக்கிக் கூறியும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கழகம் ஆற்றும் பணிகளைக் குறித்து விளக்கிக் கூறியும்’ சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மானமிகு ஆ.ராசா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் "பெரியார் மணியம்மையார் திருமணம்" என்ற நூலை வழங்கி, பயனடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உடன் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர் அப்துல்லா.