திங்கள், 11 செப்டம்பர், 2017

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாவை திருவல்லிக்கேணியில் சிறப்பாக கொண்டாட தென் சென்னை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

செவ்வாய், 05 செப்டம்பர் 2017 16:21
சென்னை, செப்.5 26.8.2017 அன்று பிற்பகல் 6.30 மணி யளவில் திராவிடர் கழக தலைமை நிலைய கட்டிட துரை.சக்ரவர்த்தி அறையில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையிலும், மண்டல செயலாளர வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்  மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையிலும் தென் சென்னை மாவட்ட  கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செய லாளர் கோ.வீ.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார். தந்தை பெரி யாரின் 139ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டா டுவது குறித்து கலந்துரையாடப் பட்டது. மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், இளைஞரணி தலைவர் செ.தமிழ்ச்சாக்ரடீசு, இளைஞரணி  செயலாளர் ச.மகேந்திரன், ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.
பிறகு கீழ்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) இரங்கல் தீர்மானம்: 
கழக பொதுக்குழு உறுப் பினரும் தென் சென்னை மாவட்ட முன்னால் செயலாளருமான பெரியார் பெருந் தொண்டர் எம்.கே. காளத்தி அவர்களின் மறைவிற்கு இரங் கல் தெரிவிக்கப்பட்டது.. (மறைவு- 2.7.2017)
2) தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா
17.9.17 அன்று கிளைக் கழகங்கள் தோறும் கொடி ஏற்றி ஒலிபெருக்கிவைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுவதெனவும், 24.9.2017 அன்று தென் சென்னை முழுக்க இரு சக்கர வண்டியில் பேரணியாக சென்று பரப்புரை செய்வதெனவும், 
3) திறந்தவெளி விழா
17.9.2017 மாலை திருவல் லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை - இருசப்பன் தெரு இணைவில்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும்  தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் வி.ழாவை அனைத்து கட்சி பங்கேற்புடன் சிறப்பாக  நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
4) பகுதி தோறும் தெரு முனைக்  கூட்டங்களை  நடத் துவதெனவும் தீர்மானிக்கப்பட் டது.
தரமணி கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன், ஈ.குமார், அ.பாபு, பா.மணியம்மை, தே.ஒளிவண்ணன், த.லலிதா,  த.அண்ணாதுரை, ஆகியோர் கலந்துகொண்டனர்.
மு.திருமலை கலந்துரை யாடலின் முடிவில் நன்றி கூறினார்.
-விடுதலை,5.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக